Sunday 30 June 2013

இருதய இரத்தக் குழாய் அடைப்புகளை திறக்க!!!!

இது உண்மைச் சம்பவம்....இச்செய்தியை அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தயவு செய்து கவனியுங்கள். உங்கள் ரத்த குழாய் அடைப்பு திறந்து கொள்ளும். ஆஞ்சியோவுக்கோ, பைபாஸ் அறுவை சிகிச்சைக்கோ செல்லுமுன் நம்பிக்கையுடன் இதனைச் செய்யுங்கள்.
நீங்கள் குணமடைவீர்கள்!

தன் இதய வலிக்காக சிகிச்சைக்குச் சென்ற நோயாளி ஒருவர்-பைபாஸ் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டார்.

இந்நிலையில் நோயாளி ஆயுர்வேத டாக்டர் சையது சாகிப்பை சந்தித்தார்.

தன்னுடைய ஆஞ்சியோ சோதனையில்,இருதய இரத்த குழாயில் மூன்று அடைப்புகள் இருப்பதாகவும், பைபாஸ் அறுவை சிகிச்சைக்கு நாள் குறிப்பிட்டுவிட்டதாகவும் தெரிவித்தார்.

ஒரு மாதத்திற்கு அடியிற்கண்ட பானத்தை அருந்தும்படி ஆயுர்வேத டாக்டர் நோயளிக்கு பரிந்துரைத்தார்.
மும்பையில் உள்ள இருதய மருத்துவமனையில்

பைபாஸ் அறுவை ஆப்ரசேனுக்கு முதல்நாள்ரூ2,25,000த்தை டெபாசிட் செய்தார்.

நோயாளியை பரிசோதனை செய்த டாக்டர் அவருடைய முந்தைய பரிசோதனையை சரிபார்த்து வியந்தார்.

ஆச்சரியப்பட்டார். தன்னுடைய முந்தைய பரிசோதனைக்குப் பிறகு ஏதாவது மருந்து சாப்பீட்டீர்களா? என்று டாக்டர் வினவினார்.

இதனை கவனமுடன் படியுங்கள், நீங்களும் குணமடையலாம்.

இருதய இரத்தக் குழாய் அடைப்புகளை திறக்க அருந்தும் பானத்திற்கு உரிய மூலப்பொருள்கள்.
1 கப் எலுமிச்சை சாறு
1 கப் இஞ்சிச் சாறு
1 கப் புண்டு சாறு
1 கப் ஆப்பிள் சைடர் விநிகர்.
எல்லாச் சாறுகளையும் ஒன்றாக கலக்குங்கள். இலேசான இளஞ்சூட்டில் (சிம்மரில்) 60 நிமிடம் கொதிக்க வையுங்கள். நான்கு கப் மூன்றாக குறையும். சூடு ஆறியவுடன் சாறு இருக்கும் அளவுக்கு சம அளவு இயற்கைத் தேனை கலந்து ஜாரில் வைத்துக் கொள்ளுங்கள்.
நாள்தோறும் காலை உணவுக்கு முன் ஒரு டீ ஸ்புன் பானத்தை அருந்துங்கள்.
மகிழ்ச்சியுடன் பானத்தை அருதுங்கள்....சுவையாகவும் இருக்கும்.
நீங்களே உங்களை பைபாஸ் அறுவை சிகிச்சையிலிருந்து காப்பாற்றிக் கொள்ளுங்கள்.

- ஸ்ரீ சமஸ்கிருத ஆயுர்வேத சர்வதேச ஆய்வு இதழ்



சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் இன்சுலின் செடி..!!!!

இன்சுலின் செடி.

1) மூலிகையின் பெயர் -: இன்சுலின் செடி.

2) தாவரப்பெயர் -: காஸ்டஸ் பிக்டஸ்

3) தமிழ் பெயர் -: கோஷ்டம் (Kostam)

(ரொம்ப கஷ்ட்ட பட்டு கண்டுபிடித்தேன் நீங்கள் அறிந்த வேறு பெயர் இருப்பின் பதியவும்)

4) PLANT FAMILY: Costaceae

5) BOTANICAL NAME: Costus இக்நேஉஸ்

6) பயன் தரும் பாகம் -: இலை.

7) வளரியல்பு -:
இந்தச் செடி வளமான ஈரப் பதம் உள்ள இடங்களில் நன்கு வளரக் கூடியது. இந்தத் தாவரம் ஈஞ்சி குடும்பத்தைச் சேர்ந்த தாவரம். மெக்சிகோ மற்றும் கோஸ்டாரிகா நாடுகளில் முக்கியத்துவம் வாய்ந்தது. இதன் தாயகம் அமரிக்காவின் புளோரிடா மாகாணம். இது பற்றி அறிந்த ஐரோப்பியர்கள் தற்போது இதன் பயனை முழுமையாக அனுபவித்து வருகின்றனர். கொச்சியிலும் தமிழகத்திலும் கன்னியாகுமரி யிலும் இந்த தாவரத்துக்கான நர்சரிகள் உள்ளன. நாம் இதை வீட்டுத் தோட்டங்களிலும் தொட்டிகளிலும் கூட வளர்க்கலாம். இது மலைக் காடுகளிலும் நீர் நிலைப் பகுதிகளிலும் 10 அடி உயரத்திற்கு மேல் வளரக்கூடியது. இதை இனப் பெருக்கம் செய்ய 3 கணுவுகளை உடைய முதிர்ந்த குச்சிகளை கரும்பு நடுவது போல் நட்டால் வளர்ந்து விடும். ஆரம்பத்தில் அடிக்கடி தண்ணீர் விட வேண்டும். இதன் இலைகள் மா இலை போன்று இருக்கும். ஆனால் இலைகள் அடுக்காக விசிறி போல் சுற்றிக் கொண்டு மேல் நோக்கி வளரும். சுவை சிறிது புளிப்பு கலந்திருக்கும்.

8) மருத்துவப் பயன்கள் -:

சர்க்கரை நோயாளிகளுக்கு காஸ்டஸ் பிக்டஸ் என்ற தாவர இலை அதிக பயன்களைத் தருகிறது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் இன்சுலின் மருந்து பயன் படுத்த வேண்டும் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. முதல் நிலை சர்க்கரை நோயாளிகளை தவிர்த்து 2 ம் நிலை சர்க்கரை நோயாளிகள் இன்சுலின் ஊசி போட்டுக் கொள்வதைத் தவிர்க்கக் கூடிய சூழிநிலைதற்போது ஏற்பட்டுள்ளது. காஸ்டஸ் பிக்டஸ் என்ற இன்சுலின் தாவரத்தின் இலை ஒன்றை தினந்தோறும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டாலே போதுமானது என்று கூறுகிறார்கள். இந்த தாவரத்தை தொடர்ந்து சாப்பிடுவதால் ஏற்படக் கூடிய மாற்றங்கள் குறித்து முழுமையாக ஆராய்ச்சி செய்து வரும் ஐரோப்பியா மற்றும் அமெரிக்க விஞ்ஞானிகள் இன்சுலின் மருந்து விலங்கிலிருந்தும், சின்தடிக் முறையிலும் தான் தயாரிக்கப் படுகிறது. சர்க்கரை நோயாளிகளுக்கு இதைவிட மாற்று மருந்து ஏதும் இல்லை. இன்சுலின் மருந்து மாத்திரை வடிவிலோ, திரவ மருந்தாகவோ இன்னும் கண்டு பிடிக்க வில்லை. ஊசிமட்டுமே ஒரே வழியாகும். ஆனால் சர்க்கரை நோய் ஆரம்ப நிலையில் உள்ளவர்களுக்கு காஸ்டஸ்பிக்டஸ் அதிக பலன்களைத் தருகிறது என தங்கள் ஆய்வில் குறிப்பிட்டுள்ளனர். ஆய்வுக் கட்டுரை-Pharmacology Study
தாவரத்தின் இலைகளிலிருந்து பெறப் படும் சாறு இரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப் படுத்துவதோடு இனிப்பு சாப்பிட வேண்டும் என்ற ஆவலையும் படிப்படியாக்க் குறைக்கிறது.ANTI_Diabetic herb.


பல்லாண்டு பயிரான காஸ்டஸ் பிக்டஸ் தாவரத்தின் இலை சாப்பிட்டால் எத்தகைய பின் விளைவிகளும் ஏற்படுவது இல்லை என்று ஆராய்ச்சியில் நிரூபிக்கப் பட்டுள்ளது. இதன் மூலம் இன்சுலின் ஊசி போடுவது கட்டாயமில்லை என்ற நிலையில் சர்கரை நோயாளிகள் பயன் அடைவார்கள். 

Call எந்த இடத்திலிருந்து வருகிறது என்பதை கண்டறிய!!!

மொபைல் டிரேஸ் அல்லது போன் டிரேஸ் என்று சைபர்கிரைமில் உள்ளவர்கள் கண்டுபிடிக்க உபயோகப்படுத்தும் அதே தொழில்நுட்பம் தான் இப்போது இதிலும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
ஆனால் நாம் இருக்கும் இடத்தை துல்லியமாக கூறாவிட்டாலும் ஓரளவு சரியாக தான் தெரிவிக்கிறது. உதாரணமாக நமக்கு ஒரு போன் நம்பரிலிருந்து அடிக்கடி தொந்தரவு வந்தால் இந்த இணையதளத்திற்கு சென்று நாம் அந்த மொபைல் நம்பர் அல்லது போன் நம்பரை கொடுத்து எந்த பகுதி என்று தேடினால் ஒரே நொடியில் விடை கிடைக்கும்.
அதுமட்டுமின்றி மேப்பும் சேர்த்தே கொடுக்கின்றனர். இந்த இணையதளத்திற்கு சென்று உங்கள் போன் நம்பர் அல்லது மொபைல் எண்ணை கொடுத்து US or International என்ற பட்டனை அழுத்தவும்.
இப்போது நமக்கு அந்த மொபைல் நம்பரின் விபரங்கள் சில நொடிகளிலே தெரிந்து விடும். அதே போன் நம்பரின் மேப்பை பார்ப்பதற்கு map+ என்ற பட்டனை அழுத்தி மொபைல் நம்பரின் மேப்பயும் பார்க்கலாம்.

இணையதள முகவரி செல்ல


ஆன்லைன் மூலம் புகைப்படங்களை அழகுப்படுத்த..!!!

நம்மிடம் இருக்கும் புகைப்படங்களை எளிதாக ஓன்லைன் மூலம் தேவையான பகுதியை வெட்டி எடுக்கலாம், கலர் திருத்தம் செய்யலாம், இதற்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.
ஓன்லைன் மூலம் புகைப்படங்கள் வைத்து வேலை செய்ய நாளும் ஒரு தளம் வந்து கொண்டிருக்கும் நிலையில் புதிதாக மேம்படுத்தப்பட்ட சேவைகளுடன் புகைப்படத்தை வைத்து பல அழகான வேலைகள் செய்ய ஒரு தளம் உதவுகிறது.
இத்தளத்திற்கு சென்று நாம் Start Editing என்பதை சொடுக்கி வரும் திரையில் Upload Photo From Pc என்பதை சொடுக்கி நம்மிடம் இருக்கும் புகைப்படத்தை பதிவேற்றம் செய்யவும்.
இனி இடது பக்கம் இருக்கும் டூல்களின் உதவியுடன் புகைப்படத்தில் என்னவெல்லாம் மாற்றம் செய்ய வேண்டுமோ அத்தனையையும் நாம் எளிதாக ஒரே சொடுக்கில் செய்யலாம்.
கார்டூனாக மாற்றுவதில் இருந்து பென்சில் டிராயிங், ஆர்டிஸ்ட் பெயிண்டிங், பாப் ஆர்ட் இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம் அந்த அளவிற்கு புதிதாக அழகாக பல சேவைகளை இத்தளம் கொடுக்கிறது.
புகைப்படத்தை அழகுபடுத்தியபின் Save and Share என்ற பொத்தானை சொடுக்கி சேமிக்கலாம். நம் நண்பர்களுடனும் ஆன்லைன் மூலம் பகிர்ந்து கொள்ளலாம். புகைப்படத்தை அழகுபடுத்த நினைப்பவர்கள் இனி எந்த மென்பொருள் உதவியும் இன்றி எளிதாக ஓன்லைன் மூலம் அதுவும் சில நிமிடங்களில் நம் புகைப்படத்தை அழகுபடுத்தலாம்.




உயர்கல்விக்கான நூல்கள் இலவசமாகப் பெற!!!

உயர்கல்விக்கான நூல்கள் இலவசமாகப் பெற




கல்லூரிகளில் தேர்வுகள் படு வேகமாக நடந்து கொண்டிருக்கின்றன. பல மாணவர்கள் அடுத்த ஆண்டுக்கு தங்களைத் தயார் செய்து கொள்ளும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கு நூல்களை வழங்க, கல்லூரி மற்றும் தனியார் நூலகங்கள் இருந்தாலும், தங்களுக்கென எடுத்து வைத்து, விரும்பும் நேரத்தில் படிப்பதனையே இவர்கள் விரும்புவார்கள். இவர்களுக்கு உதவிடும் வகையில் பல இணைய தளங்கள் உள்ளன. அவற்றில் சிறப்பான ஒன்றை அண்மையில் காண நேர்ந்தது. அதன் இணைய தள முகவரி

http://bookboon.com.

இந்த தளத்தில், நமக்குத் தேவைப்படும் நூலின் பெயர் அல்லது எழுதிய ஆசிரியர் அல்லது பொருள் குறித்து தேடல் கட்டத்தில் டைப் செய்தால், நாம் தேடும் பொருள் குறித்த அனைத்து நூல்களும் வரிசையாகப் பட்டியலிடப்படும். தேவையான நூல் தலைப்பு அருகே, டபுள் கிளிக் செய்தால், உடன் நாம் எந்த நாட்டில் இருந்து இந்த நூலினைத் தரவிறக்கம் செய்ய இருக்கிறோம் என்ற தகவலைத் தர வேண்டும். 
உடனே அந்நூல் பி.டி.எப். வடிவில், கம்ப்யூட்டரில் தரவிறக்கம் செய்யப்படும். நம் பெயரைப் பதிவு செய்வதோ, அக்கவுண்ட் உருவாக்குவதோ இதில் தேவை இல்லை. கல்லூரி மாணவர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் என உயர்கல்வி பயில்வோருக்கு இந்த தளம் மிகவும் உதவி செய்வதாய் அமைந்துள்ளது. கற்க விரும்பும் அனைவரும் சென்று பார்க்க வேண்டிய தளம் இது.


இன்றய சமையல் தகவல்கள்!!!



1. தினசரி ஒரு வெங்காயத்தை பச்சையாக உண்டு வந்தால் இரத்தம் சுத்தமாகும். இருமல், சளி நீங்கும். 

2. சுண்டைக்காயில் இரும்புச்சத்து அதிகமாக உள்ளது. இந்தக்காய் ஆஸ்துமா, ஜீரம் முதலியவற்றை நீக்கும். 

3. கர்ப்பிணிப் பெண்கள் தினமும் ஒரு முறை கேழ்வரகில் செய்த உணவுப்பொருளை சாப்பிட வேண்டும். இதில் இரும்புச்சத்து, கால்சியம் உள்ளது. 

4. வேப்பம்பூவை ரசம் வைத்துச் சாப்பிட்டால் உடம்பில் உள்ள கிருமிகள் அழியும். பித்தம் குறையும். 

5. தினமும் முருங்கைக் கீரையைச் சாப்பிட்டால் நீரழிவு நோய் கட்டுப்படும். கண் பார்வை தெளிவு பெறும். 

6. அதிக இருமல் ஏற்படும் போது ஒரு ஸ்பூன் தேன் சாப்பிட்டால் இருமல் குறையும். 

7. சாதாரண வாய்வுப் பிடிப்பிற்கு சுக்கையும், பனை வெல்லத்தையும் கலந்து சாப்பிட்டால் போதும். 

8. அடிக்கடி காபி, டீ ஆகியவற்றை அளவுக்கு அதிகமாக குடிப்பதும், அடிக்கடி பட்டனி கிடப்பதும், சிகரெட், மது குடிப்பதாலும் குடற்புண் விரைவில் ஏற்படும். 

9. கூடுமான வரையில் தாளிப்பு இல்லாமல் உணவு உண்பதே நல்லது. 

10. மைதா மாவினால் செய்த உணவுகளைக் குறைத்தாலும் அல்லது நீக்கினாலும் உடல் பருமன் குறையும். 

11. நாம் நம் உடம்பிற்கு ஒரே சோப்பையே எப்போதும் பயன்படுத்த வேண்டும். சோப்பை அடிக்கடி மாற்றுவதால் சரும வியாதிகள் ஏற்படும். 

12. நெய்க்காக வெண்ணையைக் காய்ச்சும் போது அரை ஸ்பூன் வெந்தையத்தைப் போட்டு இறக்கினால் நெய் மணமாக இருக்கும். 

13. மணத்தக்காளிக் கீரையை பருப்புடன் சேர்த்து தினமும் சாப்பிட்டு வந்தால் ஆசனக்கடுப்பு, மூல நோய் குணமாகும். 

14. கறிவேப்பிலை, இஞ்சி, சீரகம் மூன்றையும் சிறிதளவு எடுத்து ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்துக் குடித்தால் அஜீரணம் சரியாகிவிடும்.

15. முள்ளங்கி கீரையில் வைட்டமின் சத்து உள்ளது. இக்கீரை தொற்று நோய்களை விரட்டி அடிக்கும். 

16. உடல் எடை குறைந்தவர்கள் வாழைப்பழம் தினமும் இரவில் உண்டு வந்தால் எடை கூடும். 

17. எலுமிச்சை, ஆரஞ்சு தோல்களை அலமாரியில் வைத்தால் சிறிய பூச்சிகள் நெருங்காது. 

18. குளிக்கும் சோப்பைத் தலைக்கு தேய்கக் கூடாது. முடி கொட்டி, விரைவில் நரைத்து விடும். 

19. இட்லிக்கு மாவு அரைக்கும் போது உளுந்துக்குப்பதில் சோயா மொச்சையை பயன்படுத்தினால் அதிக சத்தான இட்லி கிடைக்கிறது. 

20. டிவி, குளிர்சாதனப்பெட்டி, ட்யூப் லைட் இவற்றை உபயோகத்திற்குப்பின் அணைத்து விட்டு மீண்டும் உடனே போடக்கூடாது. ரெஃப்ரிஜிரேட்டரில் கம்ப்ரெஸ்ஸரும், டிவியில் பிக்சர் ட்யூபும் ட்யூப் லைட்டில் பாலண்டும் பழுதாகி விடும். நிறுத்திய பின் உள்ளே மாற்றங்கள் நிகழ்ந்து பூர்த்தியாக சில நிமிடங்கள் பிடிக்கும். சில நிமிடங்கள் விட்டு மறுபடியும் போடுவது நல்லது.

21. குளிர்சாதனப்பெட்டியைத் துடைக்கும்போது பச்சைக்கற்பூரம் கலந்த நீரினால் துடைத்தால் பூச்சிகள், சிறு வன்டுகள் உள்ளே நுழையாது.

22. கறுத்துப்போன வெள்ளி சாமான்களை தாம்பூல சுண்ணாம்பு கொண்டு தேய்த்தால் பளபளவென்று ஆகி விடும்.

23. சர்க்கரை வைத்திருக்கும் பாட்டிலில் சில ஏலக்காய்களைப் போட்டு வைத்தால் எறும்புகள் சீனியை மொய்க்காது.

24. சில வகை தண்ணீரில் துணிகள் துவைக்கும்போது துணிகள் பழுப்பாகி விடுகின்றன. இதற்கு அவற்றை சோப் பவுடரில் ஊறவைக்கும்போது 2 மேசைக்கரண்டி கல் உப்பும் சேர்த்து ஊறவைத்தால் துணிகள் பழுப்பு நிறம் நீங்கி பளிச்சென்றாகி விடும்.

25. ம‌ர‌ச்சாமான்க‌ளை பாலீஷ் செய்வ‌த‌ற்கு, முத‌லில் அவற்றை வினீகர் கலந்த நீரால் கழுவி, துடைத்து காய வைத்து பிற‌குதான் பாலீஷ் பூச வேண்டும்.

26. மூட்டைப்பூச்சி தொந்தரவிற்கு, கட்டிலின் நான்கு கால்களிலும் சூடம் அல்லது புரசம் பூவை வைத்து கட்டி வைக்க வேண்டும். தலையணை, மெத்தை இவற்றில் கற்பூரத்தைத் தூள் செய்து தூவலாம்.

27. தோல் பொருள்க‌ளின் நிற‌ம் ம‌ங்காதிருக்க‌, அவ‌ற்றின் மீது லின்ஸிட் ஆயில் என‌ப்ப‌டும் ஆளி விதை எண்ணையைப் பூசி துடைக்க‌வேண்டும்.

28. ஈக்க‌ள் அதிக‌ம் உள்ள‌‌இட‌த்தில் தூவக்காலில் நெருப்பிட்டு கிராம்புத்தூளைத் தூவினால் ஈக்கள் பறந்து விடும். 

29. மெழுகுவ‌ர்த்தி அதிக‌வெளிச்ச்ச‌ம் த‌ர‌, அதை ஒரு பாத்திரத்தில் நிற்க வைத்து அதன் அடியில் தண்ணீர் ஊற்றி எரிய விடவும். உப்பில் புதைத்து வைத்தும் எரிய விடலாம்.
தகவல் தமிழ் கருத்து களம்

Saturday 29 June 2013

சித்த வைத்தியம்!!!(Mylanchi.weebly.com)

மூலிகைப் பொடிகளின் பெயர்களும், அதன் பயன்களும். .

Picture
*அருகம்புல் பவுடர் :- அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி

*நெல்லிக்காய் பவுடர் :- பற்கள் எல
ும்புகள் பலப்படும். வைட்டமின் "சி" உள்ளது

*கடுக்காய் பவுடர் :- குடல் புண் ஆற்றும், சிறந்த மலமிளக்கியாகும்.

*வில்வம் பவுடர் :- அதிகமான கொழுப்பை குறைக்கும். இரத்த கொதிப்பிற்கு சிறந்தது

*அமுக்கலா பவுடர் :- தாது புஷ்டி, ஆண்மை குறைபாடுக்கு சிறந்தது.

*சிறுகுறிஞான் பவுடர் :- சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த மூலிகையாகும்.

*நவால் பவுடர் :- சர்க்கரை நோய், தலைசுற்றுக்கு சிறந்தது.

*வல்லாரை பவுடர் :- நினைவாற்றலுக்கும், நரம்பு தளர்ச்சிக்கும் சிறந்தது.

*தூதுவளை பவுடர் :- நாட்பட்ட சளி, ஆஸ்துமா, வரட்டு இருமலுக்கு சிறந்தது.

*துளசி பவுடர் :- மூக்கடைப்பு, சுவாச கோளாருக்கு சிறந்தது.

*ஆவரம்பூ பவுடர் :- இதயம் பலப்படும், உடல் பொன்னிறமாகும்.

*கண்டங்கத்திரி பவுடர் :- மார்பு சளி, இரைப்பு நோய்க்கு சிறந்தது.

*ரோஜாபூ பவுடர் :- இரத்த கொதிப்புக்கு சிறந்தது, உடல் குளிர்ச்சியாகும்.

*ஓரிதழ் தாமரை பவுடர் :- ஆண்மை குறைபாடு, மலட்டுத்தன்மை நீங்கும்.வெள்ளைபடுதல் நீங்கும், இது மூலிகை வயாகரா

*ஜாதிக்காய் பவுடர் :- நரம்பு தளர்ச்சி நீங்கும், ஆண்மை சக்தி பெருகும்.

*திப்பிலி பவுடர் :- உடல் வலி, அலுப்பு, சளி, இருமலுக்கு சிறந்தது.

*வெந்தய பவுடர் :- வாய் புண், வயிற்றுபுண் ஆறும். சர்க்கரை நோய்க்கு சிறந்தது.

*நிலவாகை பவுடர் :- மிகச் சிறந்த மலமிளக்கி, குடல்புண் நீக்கும்.

*நாயுருவி பவுடர் :- உள், வெளி, நவமூலத்திற்க்கும் சிறந்தது.

*கறிவேப்பிலை பவுடர் :- கூந்தல் கருமையாகும். கண்பார்வைக்கும் சிறந்தது.

*வேப்பிலை பவுடர் :- குடல்வால் புழு, அரிப்பு, சர்க்கரை நோய்க்கு சிறந்தது.

*திரிபலா பவுடர் :- வயிற்றுபுண் ஆற்றும், அல்சரை கட்டுப்படுத்தும்.

*அதிமதுரம் பவுடர் :- தொண்டை கமறல், வரட்டு இருமல் நீங்கும், குரல் இனிமையாகும்.

*துத்தி இலை பவுடர் :- உடல் உஷ்ணம், உள், வெளி மூல நோய்க்கு சிறந்த்து.

*செம்பருத்திபூ பவுடர் :- அனைத்து இருதய நோய்க்கும் சிறந்தது.

*கரிசலாங்கண்ணி பவுடர் :- காமாலை, ஈரல் நோய், கூந்தல் வளர்ச்சிக்கு சிறந்தது.

*சிறியாநங்கை பவுடர் :- அனைத்து விஷக்கடிக்கும், சர்க்கரை நோய்க்கும் சிறந்தது.

*கீழாநெல்லி பவுடர் :- மஞ்சள் காமாலை, சோகை நோய்க்கு சிறந்தது.

*முடக்கத்தான் பவுடர் :- மூட்டு வலி, முழங்கால்வலி, வாததுக்கு நல்லது.

*கோரைகிழங்கு பவுடர் :- தாதுபுஷ்டி, உடல் பொலிவு, சரும பாதுகாப்பிற்கு சிறந்தது.

*குப்பைமேனி பவுடர் :- சொறிசிரங்கு, தோல் வியாதிக்கு சிறந்தது.

*பொன்னாங்கண்ணி பவுடர் :- உடல் சூடு, கண்நோய்க்கும் சிறந்தது.

*முருஙகைவிதை பவுடர் :- ஆண்மை சக்தி கூடும்.

*லவங்கபட்டை பவுடர் :- கொழுப்புசத்தை குறைக்கும். மூட்டுவலிக்கு சிறந்தது.

*வாதநாராயணன் பவுடர் :- பக்கவாதம், கை, கால் மூட்டு வலி நீங்கும்.

*பாகற்காய் பவுட்ர் :- குடல்வால் புழுக்கள் அழிக்கும். சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.

*வாழைத்தண்டு பவுடர் :- சிருநீரக கோளாறு, கல் அடைப்புக்கு மிகச் சிறந்தது.

*மணத்தக்காளி பவுடர் :- குடல் புண், வாய்புண், தொண்டைபுண் நீங்கும்.

*சித்தரத்தை பவுடர் :- சளி, இருமல், வாயு கோளாறுகளுக்கு நல்லது.

*பொடுதலை பவுடர் :- பேன் உதிரும், முடி உதிரிவதை தடுக்கும்.

*சுக்கு பவுடர் :- ஜீரண கோளாறுகளுக்கு சிறந்தது.

*ஆடாதொடை பவுடர் :- சுவாச கோளாறு, ஆஸ்துமாவிற்கு சிறந்தது.

*கருஞ்சீரகப்பவுடர் :- சக்கரை, குடல் புண் நீங்கும், நஞ்சு வெளிப்படும்.

*வெட்டி வேர் பவுடர் :- நீரில் கலந்து குடித்துவர சூடு குறையும், முகம் பொலிவு பெறும்.

*வெள்ளருக்கு பவுடர் :- இரத்த சுத்தி, வெள்ளைப்படுதல், அடிவயிறு வலி நீங்கும்.

*நன்னாரி பவுடர் :- உடல் குளிர்ச்சி தரும், சிறுநீர் பெறுக்கி, நா வறட்சிக்கு சிறந்தது.

*நெருஞ்சில் பவுடர் :- சிறுநீரக கோளாறு, காந்தல் ஆகியவற்றை நீக்கும்.

*பிரசவ சாமான் பவுடர் :- பிரசவத்தினால் ஏற்படும் அதிகப்படியான இழப்பை சரி செய்யும், உடல் வலிமை பெறும். தாய்பாலுக்கு சிறந்தது.

*கஸ்தூரி மஞ்சள் பவுடர் :- தினசரி பூசி வர முகம் பொலிவு பெறும்.

*பூலாங்கிழங்கு பவுடர் :- குளித்து வர நாள் முழுவதும் நறுமணம் கமழும்.

*வசம்பு பவுடர் :- பால் வாடை நீங்கும், வாந்தி, குமட்டல் நீங்கும்.

*சோற்று கற்றாலை பவுடர் :- உடல் குளிர்ச்சி, முகப்பொலிவிற்கு பயன்படும்.

*மருதாணி பவுடர் :- கை , கால்களில் பூசி வர பித்தம், கபம் குணமாகும்.

*கருவேலம்பட்டை பவுடர் :- பல்கறை, பல்சொத்தை, பூச்சிபல், பல்வலி குணமாகும்.

சிறுநீரகக் கல் நோயாளிகளுக்கான உணவுகள்:

Picture
சிறுநீரக கற்கள் உள்ளவர்களுக்கான பொதுவான உணவு முறைகள் அதிகம் எடுத்துக் கொள்ளவேண்டிய உணவுகள் :

இளநீர்

இதில் பொட்டாசியம், மெக்னீஷியமும் அதிகம் உள்ளன. இவை சிறுசீரகக் கற்களின் முன்னோடிகளான படிகங்களைக் கரைத்து படிய விடாமல் தடுக்க வல்லவை.

காரட், பாகற்காய்

இவற்றில் சிறுநீரகக் கற் களின் படிகங் களை தடுக்கும் பலவித தாது உப்புக்கள் உள்ள தாக கண்டறியப் பட்டுள்ளது.

பழங்கள், பழச்சாறுகள் :

வாழைப்பழம், எலுமிச்சை

இவற்றில் விட்டமின் B6 சத்தும், சிட்ரேட் (citrate) சத்தும் அதிகம் உள்ளன. இவை சிறுநீரகக் கற்களின் ஒரு முக்கிய அங்கமான ஆக்சலேட் (Oxalate) என்ற இரசாயனத்துடன் சேர்த்து அதைச் சிதைத்து படிய விடாமல் தடுத்து சிறுநீரகக் கற்கள் உருவாகாமல் தடுக்க வல்லவை.

னபானப்பிள் சாறு

இதில் சிறுநீரக கற்களின் கருவாக இருக்கும் ஃபைப்ரின்(Fibrin) எனப்படும் சத்தை சிதைக்கும் நொதிகள் (Enzymes) உள்ளன.

கொள்ளு

இதில் உள்ள சில நீர்ப் பொருட்கள் சிறுநீரகக் கற்கள் உருவாவதை தடுக்கும் திறன் கொண்டவை. நார்ச்சத்து உள்ள உணவுகள்.

பாதாம் பருப்பு, பார்லி ஓட்ஸ்

போன்றவற்றில் சிறுநீரக கற்கள் வராமல் தடுக்கும் பலவித சத்துகள் உள்ளன. பொதுவாக சில காய்கறிகள், பழங்களைத் தவிர தினமும் உணவில் நார்சத்து உள்ள காய்கறிகள், பழங்கள், முழு தானியங்களை அதிகமாக சேர்த்துக் கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.கற்கள் வருவதையும் தடுக்கும்.

உப்பு

உணவில் உப்பையும் பெருமளவு குறைத்துக் கொள்வது சிறுநீரில் கால்சியம் சத்து வெளியா வதை தடுத்து சிறுநீரகக் கற்கள் வரும் வாய்ப்பை குறைப்பதாக இப்போது கண்டறியப்பட்டுள்ளது.

தவிர்க்க வேண்டிய உணவுப் பொருட்கள் :

காய்கறிகள்

தக்காளி விதைகள் (விதை நீக்கப்பட்ட தக்காளி சேர்த்துக்கொள்ளலாம்.) பாலக் கீரை, பசலைக் கீரை இவற்றில் ஆக்சலேட் சத்து அதிகம் உள்ளது.

கத்திரிக்காய், காளான், காலிஃப்ளவர் இவற்றில் சிறுநீரக கற்களின் மற்றொரு அங்கமான யூரிக் அமிலம் (Uric Acid) அதிகம் உள்ளது. பரங்கிக்காய் இதில் யூரிக் அமிலமும் அதன் மூலப் பொருளான ப்யூரின்களும் அதிகம் (Purines) உள்ளன. இந்தக் காய்கறிகளைத் தவிர்க்கவும்.

பழங்கள்

சப்போட்டா, திராட்சை இவற்றில் ஆக்சலேட் அதிகம்.

எள்

இதில் அதிக ஆக்சலேட் உள்ளது. அதிகம் எடுத்துக் கொள்வதை தவிர்க்கவும்.

அசைவ உணவுகள்

ஆட்டிறைச்சி (Mutton), மாட்டிறைச்சி (Beef), கோழிக் கறி (Chicken), முட்டை (Egg), மீன் (Fish) இவை அனைத்திலும் ப்யூரின்களும், யூரிக் அமில மும் அதிகம். யூரிக் அமில வகைக் கற்கள் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டும்.

முந்திரிப்பருப்பு

இதில் அதிக ஆக்சலேட் உள்ளது. சிறுநீரகக் கற்கள் பெரும்பாலும் கால்சியம் மற்றும் ஆக்சலேட் கலந்தவை ஆகும். இதனைத் தவிர்க்கவும்.

சாக்லேட், சாக்லேட் கலந்த தின்பண்டங்கள், காபி, டீ ஆகியவற்றிலும் ஆக்சலேட் உள்ளது. எச்சரிக்கை தேவை.

தினமும் 12 டம்ளர் நீர் அருந்தவும், கடினத்தன்மை உள்ள நீராய் இருந்தால் காய்ச்சி வடிகட்டி குடிக்கவும்.

கற்களின் வகைகளுக்கேற்ற சிறப்பு உணவு முறைகள்

கால்சியம் மற்றும் ஆக்சலேட் கலந்த வகை

கற்கள் : தினமும் 12 டம்ளர் நீர் அருந்தவும். அதிக கால்சியம் உள்ள பால், பால் பொருட்கள் மற்றும் வேர்க்கடலை, ஆக்சலேட் அதிகம் உள்ள சாக்லேட், கோலா கலந்த பானங்கள் மேற்கூறிய மற்ற உணவுகளை குறைத்துக் கொள் ளவும். வயிறு அல்சருக்கு சில சமயம் எடுத்துக் கொள்ளும் ஜெலுசில் போன்ற கால்சியம் கலந்த ஆன்டா சிட் மருந்துகளைத் தவிர்க்கவும். உணவில் உப்பையும் குறைத்துக் கொள்ளவும்.

யூரிக் அமில வகை கற்கள் : தினமும் 12 டம்ளர் நீர் அருந்தவும். ப்யூரின்கள் அதிக உள்ள மட்டன், சிக்கன், முட்டை, மீன், பால் போன்ற உணவு வகைகளைத் தவிர்க்கவும்.

ஸ்ட்ரூவைட் வகை கற்கள் :

இந்த வகை கற்கள் சிறுநீரகங்களில் கிருமி தாக்கத்தால் வருகின்றன. மருத்துவர் பரிந்துரைக்கும் கிருமிக் கொல்லி மருந்துகள் (ஆன்டி பையாடிக்ஸ் -Antibiotics) மருந்துகளை தவறாமல் எடுத்துக் கொள்ளவும் தினம் குறைந்தது 12 டம்ளர் நீர் அருந்தவும்.

சிஸ்டின் வகைக் கற்கள் :

இவை மிக அபூர்வமானவை. மீன் உணவை தவிர்க்கவும். தினமும் 12 டம்ளர் நீர் அருந்தவும்.

நாட்டு வைத்தியத்தின் பயன்கள் !!

Picture



தேள் கடி!!!!

தேள் கடிவாயில் வெங்காயத்தை இரண்டாக அரிந்து அதில் ஒரு பகுதியை கடிவாயில் வைத்து அழுத்தித் தேய்க்க வேண்டும். வலி நிற்க வில்லை என்றால் அடுத்த பகுதியையும் தேய்க்க வேண்டும்.
• எலுமிச்சம்பழ விதையுடன் சிறிது உப்பையும் வைத்து அரைத்து தண்ணீரில் கலந்து குடிக்க தேலின் விஷம் இறங்கும்.
• நவச்சாரத்தில் சிறிது சுண்ணாம்பை சேர்த்தால் அது நீராகக் கரைந்து விடும். அந்த நீரை தேள் கொட்டிய இடத்தில் வைத்தால் விஷம் இறங்கி விடும். கடுப்பும் குறையும்.

ஆண்மைக் குறைவு!!!!!!!!!!!!!!!!!

• மகிழம்பூவை சுத்தம் செய்து நீர் விட்டுக் காய்ச்சி அந்த நீரை 1-டம்ளர் பால் சேர்த்து சாப்பிட ஆண்மை வீரிய உணர்வு உண்டாகும்.

• தேங்காய்ப்பால் எடுத்து அரை டம்ளர் அருந்தி வர தாது விருத்தியாகும்.

• அரசம்பழம், வேர்ப்பட்டை இவைகளை இடித்து தூள் செய்து பாலில் கலந்து குடிக்கவும்.

• அமுக்கராங் கிழங்கு பொடியுடன் தேனும் நெய்யும் கலந்து சாப்பிட்டு வரவும்.

• படுக்கைக்கு செல்ல 3-மணி நேரத்திற்கு முன்பே 1-முழு மாதுளம்பழம் சாப்பிடவும்.
தாது விருந்தி

• முருங்கைப்பூவை நீர் விட்டுக் காய்ச்சி எடுத்து 1-அவுன்ஸ் பசும்பாலுடன் கலந்து குடித்து வரவும்.

• நெய், மிளகு,உப்பு, பொன்னாங்கண்ணிக்கீரை, அரைக்கீரை, பசலை கீரை, நறுந்தாலி, நலமுருங்கை இவைகளை சேர்த்து துவையலாக்கி சாப்பிடவும்.

• கருவேலமரத்தின் பிசினை எடுத்து சுத்தம் செய்து காயவைத்து லேசாக வறுத்து தூளாக்கி சாப்பிட்டு வர பழைய நிலைமைக்கு வரலாம்.

• அரசம்பழத்தை இடித்து தூளாக்கி தினமும் 1-ஸ்பூன் சாப்பிட உடன் 1-டம்ளர் பசும்பால் சாப்பிட தாது பலம் பெறும்.

• வால் முளகு, வாதுமைப்பருப்பு, கற்கண்டு, கசகசா இவற்றை சம அளவு எடுத்து அரைத்து நெய்யையும் சேர்த்து அடுப்பில் வைத்து பதமாக வேகவைத்து தினமும் இரு வேளை சாப்பிட்டு வர தாது வலிமை பெறும்.

உடல் மெலிய !!!!!!!!!!!!!!!

• 100-கிராம் கொள்ளை சுத்தம் செய்து ரசம் வைத்து அதனுடன் இந்துப்பு கலந்து குடித்துவர சொல்லிக்கொள்ளும்படி உடல் மெலியும். உடல் பலமும் கிடைக்கும்.

• இலந்தை இலைகளை எடுத்து சுத்தம் செய்து மைபோல அரைத்து, அரிசி களைந்த நீரில் கலந்து கஞ்சி போல காய்ச்சி உள்ளுக்கு அருந்தி வரவும்.

• கல்யாண முருங்கை இலைச் சாறு இரண்டு டீஸ்பூன் காலை மாலை சாப்பிட உடல் எடை குறையும்.

• 25-கிராம் சோம்பு, 5-கிராம் கடுக்காய் தூள் சேர்த்து மண் சட்டியில் கால் லிட்டர் தண்ணீர் விட்டு 50-மில்லியாகும் வரை காய்ச்சி வடிகட்டி 50-மில்லி சுத்தமான தேன் கலந்து காலை மாலை குடித்துவர ஊளைச் சதை குறையும்.

• நில ஆவரை இலையை நிழலில் உலர்த்தி இடித்துத் தூளாக்கி துணியில் சலித்து ஒரு ஜாடியில் போட்டு வைத்துக்கொண்டு தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் எடை குறையும்.

கை நடுக்கம் !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

• காலையில் வெறும் வயிற்றில் ஒரு தேக்கரண்டி அளவு தேனும் அதே அளவு இஞ்சிச்சாறும் கலந்து சாப்பிட்டு வரவும்.

• வெள்ளைத்தாமரை இதழ்களை மட்டும் எடுத்து கசாயம் வைத்து வடிகட்டி பாலுடன் கலந்து காலை மாலை வெறும் வயிற்றில் சாப்பிடவும்.

கருத்தரித்த பெண்களுக்கு !!!!!!!!!!!!!!!

• கருவுற்றிருக்கும் தாய்மார்கள் மாம்பழம் சாப்பிட்டு வர பிறக்கும் குழந்தை ஊட்டச் சத்துடன் இருக்கும். உடல் பலவீனம், கைகால் நடுக்கம், மயக்கம் முதலிய தொல்லைகள் வராது.

• குழந்தைக்கு சத்தாக பேரிக்காயை அடிக்கடி சாப்பிட்டு வர வேண்டும். அதனால் குழந்தை நல்ல வளர்ச்சி பெறும்.

• நெல்லிக்காய் முருங்கைக்காய், முள்ளங்கி இவைகளை உணவில் சேர்த்து வந்தால்
• கைகால் வீக்கம் வராமலிருக்கும்.

• அமுக்கராங் கிழங்கை இடித்து 200-மில்லி நல்ல தண்ணீரில் கொதிக்கவைத்து 100-மில்லியாக சுண்டியதும் எடுத்து ஆறவைத்து பாட்டிலில் ஊற்றி வைத்துக்கொண்டு காலை மாலை 2-வேளையும் தேன் கலந்து சாப்பிட்டு வர தேக பலம் கிடைக்கும்.

மாதவிடாய் வலி தீர !!!!!!!!!!

• மாதவிடாய் நாளில் எலுமிச்சம் பழச்சாறு சாப்பிட்டு வர வலி நீங்கும்.
• மலைவேம்பு இலையை இடித்து சாறு பிழிந்து சாப்பிட்டு வர வலி தீரும்.

கருப்பை கோளாறுகள் நீங்க !!!!!!!

• நெல்லிக்கனியை தினசரி சேர்த்து வர கருப்பை நோய் குணமாவதோடு தாய்க்கும் குழந்தைக்கும் சிறந்த டானிக்காக பயன்படுகிறது.
• அருகம்புல்லை அரைத்து உட்கொண்டால் பெண்களுக்கு மாதவிடாய் தடை ஏற்படாது.
• முருங்கைக்காயை சமைத்து சாப்பிட்டு வர கருப்பையின் பலவீனம் மறைந்து பலம் பெறும்.
• அரசமரத்தின் இலையை மைய அரைத்து காலையில் வெறும் வயிற்றில் 1-உருண்டை சாப்பிட்டு வர குழந்தை பாக்கியம் கிடைக்கும்
.
குழந்தை பாக்கியம் பெற !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

• வாரத்தில் 3-நாட்கள் அகத்திக்கீரை சாப்பிட்டு வருவதுடன் தினசரி செவ்வாழைப் பழம் 1-வீதம் ஒரு மாதம் சாப்பிட்டு வர விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
தாய்ப்பால் சுத்தமாக
• தேன் 15-பங்கும், அமுக்கராங்கிழங்கின் ரசம் 10-பங்கும், மிளகுரசம் 15-பங்கும்,மணத்தக்காளி ரசம் 25-பங்கும் கலந்து சாப்பிட்டு வர தாய்ப்பால் தூய்மையடையும்.

நன்றாக ஜீரணமாக !!!!!!!!!!!

• வெள்ளரிப்பிஞ்சு, சிறிது எலுமிச்சம்பழம், சிறிது உப்பு சேர்த்து சாலட் போல் செய்து சாப்பிடவும்.

• எலுமிச்சம்பழ ரசத்தில் சிறிது இஞ்சியும், சீரகமும் சேர்த்து தினமும் 2-வேளை சாப்பிடவும்.

• தினமும் 4-பேரிட்சம்பழம் சாப்பிடவும்.

• எலுமிச்சம்பழத் தோலை சாப்பிடவும் அல்லது ஊறுகாய் சாப்பிடவும்.

• ஓம வள்ளி இலையை இடித்துச் சாறெடுத்துச் சாப்பிடவும்.

Tatkal Seat Availability.

Tatkal Seat Availability:

'via Blog this'

Home | Indian Railways.

Home | Indian Railways:

'via Blog this'

Friday 28 June 2013

சீராசனம் ---ஆசனம்!!!!





கீழே உட்கார்ந்து கொண்டு இடது காலை நேராக நீட்டவும். கால் இடையிலோ, மூட்டுப் பக்கமமோ மடியலாகாது. குதிகால் தரையில் நன்கு பதிய, கால் விரல்கள் மேலே நோக்கி இருக்க (வான் நோக்கி) சாய்வே இல்லாமல் உங்கள் உடல் நிமிர்ந்து இருக்க வேண்டும்.

வலது காலை உட்புறமாக மடித்திட வேண்டும். வலது காலின் குதிகால், லிங்கத்தின் (ஆண்குறி) பக்கமாக வரும்படி செய்திட வேண்டும். அல்லது அதன் பக்கமாக வந்து இடது தொடையைத் தொடும் விதத்திலும் இருக்கலாம்.

சுருக்கமாக சொன்னால், மடித்த வலது காலும் நீட்டிய இடது காலும் பார்க்கும் போது ஆங்கில எழுத்தான L வடிவில் இருக்க வேண்டும். இப்படி வலது காலை மடித்து அழுத்தியவாறே, இரண்டு கைகளாலும் நீட்டி இருக்கும் இடது காலின் நடுப்பாதத்தை கெட்டியாகப் பிடித்து தலையைச் சற்று மேலே தூக்கியிருக்கும்படிச் செய்க.

பின்பு தலையைக் குனிந்து, முகத்தை நீட்டியுள்ள முழங் காலின் (மூட்டின்) மீது வைத்திடுக. இச்சமயத்தில் மூச்சை இழுக்க வேண்டாம். வெளியே விடும் நிலை இது.

பிறகு மூச்சை உள்ளே இழுத்தவாறே மெதுவாக தலையைத் தூக்கி நிமிர வேண்டும் ( மேலே முகத்தை தூக்கும் போதும், இரு கைகளும் நடுப்பாதத்தை பிடித்து இருக்க வேண்டும்) பின்பு குனிந்து மூச்சை விட வேண்டும். இதேப் போல வலது காலை நேராக நீட்டி, இடது காலை லிங்கம் பக்கமாகத் தொட்டு, மடித்து, முன்போல் செய்ய வேண்டும்.

குனியும் பேது மூச்சை வெளியே விட்டவாறே மெதுவாகத் குனிந்திடுக. முகம் நிமிரும்போது மூச்சை உள்ளே இழுத்தவாறே நிமிர்க.

சிலர் குனியும்போது நீட்டிய காலை சற்று மேலே தூக்கு வார்கள். இது தவறு. முதலில் சிரமமாக இருந்தாலும் பிறகு போகப் போக, தலைதான் மூட்டை நோக்கி குனிய வேண்டுமே தவிர நீட்டிய கால் விறைப்பாகத் தான் (தரையை தொட்டவாறு இருக்க வேண்டும்) அதுவே ஆசன நிலை. பாதங்களும் மேலே நிமிர்ந்த வாறு இருக்க வேண்டும்.

பலன்கள்

தினசரி மூன்று நிமிடம் இரு கால்களையும் மாற்றி மாற்றி செய்தால் அற்புதமான பலன் கிடைக்கும்.

காய்ச்சலே வராது. சளிநோய் வந்தாலும் விரைவில் குணமாகும் ஆசனம் இது. காய்ச்சல் காரணமாகத் தோன்றும் சுரப்பி வீக்கங்கள் சட்டென்று குணமாகி விடும்.

வயிற்று உப்புசம், இருமல் குணமாகும். சயத்ரோகத்தின் முதல் நிலை அறிகுறிகளையும், இவ்வாசனம் மூலம் நீக்கி விடலாம்.

விந்து கெட்டிப்படும். விலாப்புறம் பலப்படும்.

வாயு தொந்தரவு நீங்கும். உடல் நல்ல நெகிழ்ச்சி நிலை அடையும்.

வயிற்றுப் பகுதியின் ரத்த ஓட்டம் அதிகப் படும். சிறுகுடலும், பெருங்குடலும் (தசை நாண்கள்) இழுக்கப்பட்டு நன்கு வேலை செய்யும். அதனால் எந்தவித மலச்சிக்கலும் தீரும். கணையம், மண்ணீரல், கல்லீரல் முதலியன நன்கு வேலை செய்யும்.

அடிவயிறு இழுப்பதால் தொந்தி நன்கு கரைந்து விடும். முதுகு, இடுப்புப் பகுதியில் வலிகள் இருந்தால் மறைந்து விடும்.

சரிர பலவீனத்தையும், கண் எரிச்சலையும், சிறு நீரகத்தில் ஏற்படும் நோய்களையும் தீர்த்து விடும் சக்தி கொண்டது.


நன்றி http://thamilinimai.phpbb3now.net

இணையத்தில் தினந்தோறும் கற்றுக் கொள்ள!!!!

இணையம் ஒரு விண்ணளாவிய தகவல் சுரங்கம். அது மட்டுமின்றி, இருபக்கமும் கூர்மையான கத்தி போன்ற சாதனமாகும்.
இணையத்தைக் கொண்டு, அன்றைய பொழுதை வீணாகவும் கழிக்கலாம் அதே நேரத்தில், நல்ல பயனுள்ள தகவல்களையும் கற்றுக் கொள்ளலாம். கற்றுக் கொள்ள சில நிமிடங்களே போதும். நீங்கள் என்ன விரும்புகிறீர்களோ, அதனை நீங்களே வியக்கும் வகையில் கற்றுக் கொள்ளலாம்.’
இணையத்தில் கற்றுக் கொடுக்கும் தளங்கள் பல இருந்தாலும், கீழே மிக அதிகமானோர் பயன்படுத்தும் தளங்களாக ஆறு தரப்பட்டுள்ளன.
நீங்கள், இதுவரை இவற்றைப் பயன்படுத்தாமல் இருந்தால், உடனடியாக இவற்றைக் கண்டு, தொடர்ந்து பயன்படுத்துவீர்கள் என்பது உறுதி. அவற்றை இங்கு பார்ப்போம்.
1. ஐ ட்யூன்ஸ் (iTunes):
இணையத்தில், தகவல்களைப் படிப்பதைக் காட்டிலும், கேட்பதனை நீங்கள் விரும்பினால், உங்களுக்கேற்ற தளம் ஐ ட்யூன்ஸ். இங்கு பலவகையான கற்றுக் கொள்ளும் கல்வி சார்ந்த பாட்காஸ்ட் (podcast) எனப்படும் கல்வி வீடியோக்கள் உள்ளன.
ஒரு புதிய மொழி கற்றுக் கொள்ள வேண்டுமா, தற்காப்புக் கலை குறித்து தெரிந்து கொள்ள வேண்டுமா, புகைப்படக் கலை, நிதி நிர்வாகம் — இப்படிப் பல வகையான பாட வீடியோக்கள் இங்கு கிடைக்கின்றன.
இவை எல்லாமே கல்வி என்பதன் கீழ் தரப்படவில்லை. எனவே நீங்கள் விரும்புபவற்றைத் தேடல் மூலம் தெரிந்து கொண்டு, பயன்படுத்துவது எளிதாக அமையும். ஆர்வமூட்டி நம்மை அசத்தும் பல விஷயங்கள் iTunes U என்ற பிரிவில் பார்க்கலாம்.
இந்த கல்வி வீடியோக்கள் அனைத்தும் இலவசமே. இவற்றை ஸ்டான்போர்ட், யேல், ஹார்வேர்ட் போன்ற உலகப் புகழ் பெற்ற பல்கலைக் கழகங்கள் தயாரித்து வழங்கியுள்ளன. உங்களிடம் ஐபோன், ஐபாட் அல்லது ஐபேட் இருந்தால், இவற்றைப் போகிற போக்கில் பெற்று, பயன்படுத்தலாம்.
https://itunes.apple.com/us/genre/podcastseducation/id1304?mt=2
2. ரெட்டிட் (Reddit):
புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்ள, வெகு எளிதான வகையில், வழியில் விஷயங்களைத் தரும் தளமாக ரெட்டிட் இயங்குகிறது. அனைத்து விஷயங்களையும் கொண்டுள்ள ஓர் இணைய தளம் இது என அறிவித்து, உலகின் பல்வேறுமுனைத் தகவல்களை இத்தளம் தருகிறது.
இங்கு கிடைக்கும் தகவல்கள் அடங்கிய வீடியோ பைல்களைப் போல வேறு எங்கும், ஹார்ட்வேர்ட் பல்கலை தளம் உட்பட, கிடைக்காது. ஆர்வமூட்டி, பொழுது போக்கும் வகையில் அரிய தகவல்களைக் கற்றுத் தருவது, இந்த தளத்தில் உள்ள பல வீடியோ பைல்கள், சிந்தனையைத் தூண்டுவதாகவும் அமைந்துள்ளன.
http://www.reddit.com/
3. விக்கிபீடியா:
இணையத்தில் கற்றுக் கொள்ளுதல் என்றால், அந்த கட்டுரையோ, பட்டியலோ, விக்கிபீடியாவினைக் குறிக்காமல் முழுமை பெறாது. பல அரிய தகவல்களின் கட்டற்ற கலைக் களஞ்சியமாக இது இயங்கி வருகிறது.
யார் வேண்டுமானாலும், தங்களுக்குத் தெரிந்த தகவல்களைப் பிறர் அறியவும், கற்றுக் கொள்ளவும் இதில் பதிந்து வைக்கலாம். இந்த தளத்தில் கற்றுக் கொள்வதற்கான வழிகள் எனச் சிலர் கட்டுரை அமைக்கும் அளவிற்கு, இதில் அளப்பரிய தகவல்கள், வெவ்வேறு வழிகளில் தரப்பட்டுள்ளன.
www.wikipedia.org/
4. ஹவ் ஸ்டப் ஒர்க்ஸ் (HowStuffWorks):
வழக்கமான ஒன்றாக இல்லாமல், புதுமையான வகையில் ஒன்ற அறிந்து கொள்ள நீங்கள் விரும்பினால், நீங்கள் செல்ல வேண்டிய இணைய தளம் HowStuffWorks ஆகும். “”இதெல்லாமா!” என்று நாம் எண்ணிப் பார்த்து மலைக்கவைக்கும் விஷயங்கள் குறித்து, மிக முழுமையாகத் தகவல்களைத் தருவது இத் தளத்தின் சிறப்பு.
ஏதேனும் ஒன்றைப் பற்றி அறிந்து கொள்ள இதனைப் படிக்கையில், அது தொடர்பானவை குறித்து, அதே தளத்தில் சொல்லப்பட்டிருந்தால், அவற்றிற்கு லிங்க் தரப்படுவது இதன் சிறப்பு. அத்துடன், கட்டுரையின் இறுதியில், நாம் மேலும் பார்க்க வேண்டிய இணையதளங்களையும் பட்டியல் இட்டு, நம் கற்றலை ஒரு தொடர்கதையாக இந்த தளம் நீட்டிக்கிறது. நாம் தேடிப் பெறும் வகையில் இது பல பிரிவுகளாக அமைக்கப்பட்டுள்ளது.
www.howstuffworks.com
5. இன்ஸ்ட்ரக்டபிள்ஸ் (Instructables)
:
உங்கள் கரங்களை அழுக்காக்கிக் கொண்டு ஒன்றைக் கற்றுக் கொள்ள வேண்டுமா? நீங்கள் செல்ல வேண்டிய தளம் இது. செயல்முறைகளை நேரடியாக இந்தத் தளம் கற்றுக் கொடுக்கிறது. உணவு தயாரிக்கும் முறை, சிறிய கலைப் பொருள் தயாரித்தல், ஆபரணங்களை வடிவமைத்தல், கைவினைப் பொருள் தயாரித்தல், தோட்டக்கலை என இந்த தளம் தரும் வகை வகையான செயல்பிரிவுகள் நீள்கிறது.
உங்கள் கற்றலைத் தூண்டும் வகையில், பல போட்டிகளையும் இந்த தளம் தருகிறது. இந்த போட்டிகளில் வெற்றிகரமாகப் பங்கு பெற்றால், பரிசுகளும் தரப்படுகின்றன.
www.instructables.com/
6. கான் அகடமி (Khan Academy):
விக்கிபீடியா தளத்தைப் போல அரிய பல தகவல்களைக் கொண்டு இந்த தளம் இயங்குகிறது. இதில் 4,100 வீடியோக்களுக்கு மேலாகப் பதியப்பட்டுக் கிடைக்கின்றன. எல்லாவகை கல்விப் பிரிவுகளிலும் வீடியோக்கள் கிடைக்கின்றன.
மேத்ஸ், பிசிக்ஸ், நிதி, சரித்திரம் என வகை வகையான பிரிவுகளில், இவை அமைக்கப்பட்டுள்ளன. நூறு வகையான திறமைகளை வளர்த்துக் கொள்ளும் வகையில் வீடியோக்கள் தயாரிக்கப்பட்டு பதியப்பட்டுள்ளன. உங்களுக்கு எந்த கல்வி அல்லது திறன் பிரிவில் தகவல் வேண்டுமோ, அதனைக் குறிப்பிட்டு பதிவு செய்தால், உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு, அவை குறித்த தகவல் சுருக்கமாக அனுப்பப்படும்.
www.khanacademy.org
மேலே குறிப்பிட்ட தளங்களுடன், இன்னும் பல தளங்கள் இது போல தகவல் களஞ்சியங்களாகவும், கற்றலுக்குப் பயன் தரும் வகையில் செயல்படுபவையாகவும் உள்ளன. இவற்றைத் தேடிப் பார்த்து நம் கற்றலை விரித்துக் கொள்வது நமக்கு நல்லதாக அமையும்.
From: www.tcnntech.com

Thursday 27 June 2013

ஆன்லைனில் முதலமைச்சர்!!!!



















தமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணயதளம் புதிதாக துவங்கப்பட்டுள்ளது. இந்த இணையத்தளம் மூலம்  இனி புகார்களை ஆன்லைனிலேயே பதிவு செய்ய இயலும். இதுவரை தமிழக முதல்வர் தனி பிரிவிற்கு ஏதேனும் துப்பு அல்லது புகார் தரவேண்டுமெனில் அவற்றை நேரடியாகவோ, தொலைபேசி  மற்றும் கடிதம் வாயிலாகவோ தான் அனுப்ப இயலும். அதுவும் அவற்றின் நிலை குறித்து நிம்மால் அறிய இயலாது.

முதல்வரின் தனி பிரிவிற்கு புகார்களை அனுப்ப உங்களுக்கென ஒரு மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைப்பேசி இருந்தால் போதுமானது. முதல்வரின் தனிப்பிரிவு தளமான  http://cmcell.tn.gov.in/ என்ற தளத்திற்கு சென்று உமது பெயர் மற்றும் கடவு சொல் பதிவு செய்து பின் புகார்களை அனுப்ப இயலும். புகார்களை அனுப்பிய உடன் உமது மின்னஞ்சலுக்கு புகாருக்கான சான்று அனுப்பப்படும். உமது புகாரின் நிலை குறித்தும் அவ்வப்போது அறிந்து கொள்ள இயலும்.

தமிழ்நாடு வேலைவாய்ப்பு இணையதளம்!!!!!!

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மைய பணிகளை முற்றிலும் இணையமயமாகப்பட்டுள்ளது.

http://tnvelaivaaippu.gov.in

இணையதளத்தின் மூலம் கிடைக்கும் வசதிகள்:

புதிதாக பதிவு செய்தல் - New Registration.
பதிவை புதுப்பித்தல் - Renewel.

புதிய கல்வித் தகுதியை இணைத்தல் - Additional.
நகலெடுத்தல் - Printouts.
பதிவு மூப்பு அறிந்து கொள்ளுதல் - Seniority Dates.

போன்ற செயல்பாடுகளை இருந்த இடத்தில இருந்தே இணையம் மூலமாக செய்து கொள்ள இயலும். இனி எதற்கு வேலைவாய்ப்பு அலுவலகம் செல்ல வேண்டும் .

தமிழ் தொலைகாட்சிகள் நேரடியாக இணையத்தில்!!!

தமிழில் எண்ணற்ற தொலைக்காட்சி அலைவரிசைகள் உள்ளன அவற்றில் சில இணையத்தில் இலவசமாக காணக் கிடைக்கிறது. அவ்வாறு இலவசாமாக இணையம் மூலம் காணக் கிடைகின்ற அலைவரிசைகளை இங்கு பட்டியல் இட்டுள்ளோம்.


புதிய தலைமுறை - http://puthiyathalaimurai.tv/new/

சன் நியூஸ் - http://www.dinakaran.com/Video_Index_sun.asp?cat=49

 தந்தி டிவி - http://www.thanthitv.com/

வின் டிவி - http://www.wintvindia.com/livetv.php

சத்தியம் டிவி - http://www.sathiyam.tv/


ஆங்கில தொலைக்காட்சிகள் நேரடியாக இணையத்தில்!!!

NDTV -  http://www.ndtv.com/video/live/channel/ndtv24x7




TIMES NOW / HEADLINES TODAY / ET NOW - http://live.indiatimes.com/

நன்றி: சிந்திக்கலாம் 

Wednesday 26 June 2013

பித்தத்திலிருந்து விடுதலை பெற....!!!!


விருப்பமான உணவுகள், மசாலா உணவுகள் பேன்றவற்றைப் பார்த்தால் சாப்பிடலாமா, வேண்டாமா என்ற அச்சம். அதிகம் சாப்பிடலமா சாப்பிட்டால் ஜீரணமாகுமா நெஞ்சு கறிக்குமா எதுக்கிக்கெண்டே இருக்குமா இதுபேன்ற கேள்விகளுக்கெல்லாம் முக்கிய காரணமாக விளங்குவது பித்தம். இந்த பித்தம் தெடர்பான பிரச்சினைகளையும், அதனை பேக்கும் எளிய இயற்கை மருத்துவ முறைகளையும் இப்போது பார்ப்பேம்...

* இஞ்சித் துண்டு தேனில் ஊறவைத்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் தெளிந்து ஆயுள் பெருகும்.

* இஞ்சிச் சாறு, வெங்காயச் சாறு தேன் கலந்து குடித்தால் பித்த மயக்கம் தீரும்.

* பழுத்த மாம்பழத்தை சாறு பிழிந்து அந்தச் சாறை அடுப்பில் லேசாக சூடேற்றி பின் ஆறவைத்து சாப்பிட்டு வந்தால் பித்தம் குறையும்.

* எலுமிச்சை சாதம் வாரத்தில் மூன்று நாள் காலையில் சாப்பிட்டால் பித்தத்தை தணிக்கும்.

* ரோஜாப்பூ கஷாயம் பால் சர்க்கரை கூட்டி சாப்பிட்டால் பித்த நீர் மலத்துடன் வெளியேறும்.

* பொன்னாவரை வேர், சுக்கு, மிளகு, சீரகம் கஷாயம் குடித்தால் பித்தபாண்டு தீரும்.

* விளாம்பழம் கிடைக்கும் காலங்களில் தினசரி ஒன்று சாப்பிட்டு வந்தால் பித்தத்தை குறைக்கலாம்.

* அகத்திக்கீரை சாப்பிட்டு வந்தால் பித்தக் கோளாறுகள் அகலும்.

* பனங்கிழங்கு சாப்பிட்டால் பித்தம் நீக்கி உடல் பலம் பெருகும்.

* கமலா பழம் (ஆரஞ்சு) சாப்பிட்டால் உடல் உஷ்ணத்தை தணிக்கும்.

* நத்தைசூரி விதையை வறுத்து பொடித்து காய்ச்சி கற்கண்டு சேர்த்து சாப்பிட்டு வர கல்லடைப்பு தீரும்.

* எலுமிச்சை இலையை மோரில் ஊறவைத்து அந்த மோரை உணவில் பயன்படுத்தி வந்தால் பித்த சூடு தணியும்.

* அரச மரக் குச்சியை சிறு துண்டுகளாக வெட்டி சட்டியில் போட்டு காய்ச்சி ஆறவைத்து, அந்த நீரில் தேன் கலந்து குடித்தால் ரத்தத்தில் உள்ள பித்தம் குறையும்

உணவே மருந்து

வயிற்றுப் பிரச்சனைகள் தீர அங்காயப் பொடி!!!!


வயிற்றுப் பிரச்சனைகள் தீர அங்காயப் பொடி!

சின்னக் குழந்தைகள் மட்டுமல்ல பெரியவர்களும் கூட வாயை வயிற்றைக் கட்டுப்படுத்துவது மிகக் குறைவுதான். ஆசைப்பட்டதெல்லாம் சாப்பிட்டு விட வேண்டியது. பிறகு அவதிப்பட வேண்டியது.

வயதுக்கேற்ற தன்மையில் உணவு, உணவின் அளவு, உணவில் சேர்த்துக்கொள்ளும் பொருள் இவற்றில் கவனம் செலுத்தினால் வயிற்று உபாதைகளைக் கட்டுப்படுத்த முடியும் ஆனால் இதில் கவனம் பிசகுகிறபோது என்ன செய்யறது...?

ஒன்னும் கவலைப்படாதீங்க இதுக்காகவே இருக்கு அங்காயப் பொடி, அதென்ன அங்காயப்பொடி?

சுக்கு ஒரு துண்டு, மிளகு இருபது, சீரகம் கால் கரண்டி, வெந்தயம் கால் கரண்டி, வேப்பம்பூ அரைக் கரண்டி எடுத்துக்கணும்.

முதலில் இவைகளை மிதமாக வறுத்துப்பொடி செய்யணும். அத்துடன் நல்லெண்ணெயில் பொறித்த கருவேப்பிலைப் பொடி கால் பிடி எடுத்து மேலே சொன்னவற்றுடன் கலந்து பகல் உணவில் சாதத்துடன் உப்பு சேர்த்து பிசைந்து சாப்பிடலாம் அல்லது மோருடன் கலந்து பருகலாம்.

இப்படியே மூன்று அல்லது நான்கு நாட்கள் தொடர்ந்து செய்யணும். வாந்தி, குமட்டல், உணவு செரிக்காமை போன்ற வயிற்று உபாதைகள் எல்லாமே கட்டுப்படும்.

பொதுவாக இதனை எல்லோரும் சாப்பிடலாம். பிரசவித்த தாய்மார்கள் பகல் உணவில் ஐந்து துளி நெய்யுடன் அங்காயப் பொடியை சோற்றில் கலந்து சாப்பிட்டால் வயிற்றில் ஏற்படும் கிருமித் தொற்றுகள் கட்டுபடும்.

அடிக்கடி பயணம் செய்யறவங்க, வெளியிடங்களில் சாப்பிடவேண்டிய கட்டாயம் இருக்கறவங்க அங்காயப் பொடியை சாப்பாட்டில் சேர்த்துகிட்டா நல்லது. வாயுத்தொல்லை, வயிற்று உப்புசம் இவைகளைக் கட்டுப்படுத்தும்.

உணவே மருந்து

Tamil Astrology:Free tamil 40 page detailed horoscope ( ஜோதிடம் )

Tamil Astrology:Free tamil 40 page detailed horoscope ( ஜோதிடம் ):

'via Blog this'

4Shared, Mediafire போன்றவற்றில் உள்ள கோப்புகளை ஒரே இடத்தில எளிதாக தேட!!!!


  பல பைல் ஹோஸ்ட் தளங்கள் இலவச சேவையை வழங்குவதால் நாம் அனைவரும் நமக்கு பிடித்த கோப்புகளை நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ள இந்த தளங்களை பயன் படுத்துவோம் .இதற்கென்று பல தளங்கள் இருந்தாலும் ,Rapidshare, Megaupload, 4Shared, Hotfile, Mediafire, Netload, Filesonic போன்ற தளங்களை தான் அதிகம் பயன்படுத்துவோம் .
இந்த தளங்களில் நாம் பதிவேற்றியவுடன்  அதன் URL - ஐ நமக்கு கொடுப்பார்கள் . அதனை நாம் நம் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்வோம் . 
இது போன்ற தளங்களில் தேடி கோப்புகளை தரவிறக்க முடியாது . இந்த குறையை போக்குவதற்கு தான் நமக்கு உதவும் தளம் இது . ஐம்பதுக்கும் மேற்பட்ட தளங்களில் உங்களுக்கு தேவையான கோப்புகளை தேடி நொடியில்  வரிசைப்படுத்துகிறது .

29wscnl 


மேலும் ஒரு சொல்லை தட்டி தேடினோம் என்றால் ஐம்பது தளங்களின் முடிவை காட்டுகிறது . இது தளம் வாரியாக பிரிக்கப்பட்டு அந்த URL உங்களுக்கு கொடுக்கப்படுகிறது .
மேலும் பல பார்மெட்களில்( MP3, PDF, RAR, ZIP, MP4, MPEG) தேடித்தரக்கூடிய ஒரு தளமாக உள்ளது .
தினமும் இந்த தளங்களில் பல கோடி கோப்புகளை உங்களுக்கு தருகிறது .

விரும்பிய காட்சிகளை வெட்ட!!!!











நாம் வீடியோ காட்சிகளைப் பார்த்துக் கொண்டிருக்கையில் அல்லது திரைப்படங்களை ரசிக்கையில், சில காட்சிகளை மட்டும் தனியே ஒரு பைலாக எடுத்து வைத்தால் நல்லது என்று எண்ணுவோம். குறிப்பாக ஒரு நடனக் காட்சி அல்லது காமெடி நம்மைக் கவரலாம். அப்போது எப்படி ஒரு குறிப்பிட்ட அளவில் உள்ள காட்சியை மட்டும் தனியே பிரித்து பைலாகக் கொள்வது என்ற பிரச்சினை உங்களுக்கு ஏற்படும். இந்த பிரச்சினயைத் தீர்க்க வீடியோ கட்டர் http://www.freevideocutter.com/ என்ற புரோகிராம் இலவசமாக என்ற முகவரியில் உள்ள தளத்தில் கிடைக்கிறது. 

இந்த புரோகிராமினை இன்ஸ்டால் செய்த பின் புரோகிராமினை இயக்கவும். பின் "Open Video" என்ற கட்டளையைக் கிளிக் செய்து, நீங்கள் விரும்பும் வீடியோ பைலைத் தேர்ந்தெடுக்கவும். இந்த புரோகிராம் அந்த வீடியோவின் பார்மட், பிட் ரேட், பிளே ஆக எடுத்துக் கொள்ளும் நேரம் ஆகியவற்றைப் படித்தறிந்து, வீடியோ தம்ப்நெயில் படங்களை ஸ்லைடுகளாக உருவாக்கும். ட்ரேக் பாரில் இடது பக்கம் எந்த ஸ்லைடிலிருந்து கட் செய்திட வேண்டும் என்பதனைக் குறிக்கவும். வலது பக்கம் முடிந்திடும் ஸ்லைடைத் தேர்ந்தெடுக்கவும். பின் சேவ் செய்திட விரும்பும் பார்மட்டைத் தேர்ந்தெடுக்கவும். பின் சேவ் வீடியோ கட்டளை கொடுக்கவும். MPEG4, DivX, MP3, FLV, WMV என்ற பார்மட்கள் அனைத்தையும் இது கையாள்கிறது. நீங்கள் பதிய விரும்பும் பார்மட்டினையும் இதில் முடிவு செய்திடலாம். 

பின் நீங்கள் குறிப்பிடும் பைல் பெயரில், தேர்ந்தெடுத்த பார்மட்டில் வெட்டப்பட்ட வீடியோ காட்சி பைலாகக் கிடைக்கும். ஆடியோ மட்டும் வேண்டும் என்றாலும், அதனை எம்பி3 பைலாக சேவ் செய்திடலாம்.

Tuesday 25 June 2013

தமிழ்: தெய்வத்தின் குரல், கட்டுரைகள், வேத தர்ம சாஸ்த்ர பரிபாலன சபா வெளியீடுகள், ஆயுர்வேதம், அருளுரை, ... : kamakoti.org:

தமிழ்: தெய்வத்தின் குரல், கட்டுரைகள், வேத தர்ம சாஸ்த்ர பரிபாலன சபா வெளியீடுகள், ஆயுர்வேதம், அருளுரை, ... : kamakoti.org::

'via Blog this'

Templenet - The Comprehensive Indian Temple website.

Templenet - The Comprehensive Indian Temple website:

'via Blog this'

Sanskrit Documents Collection-Useful site to learn and study Sanskrit

Sanskrit Documents Collection:

'via Blog this'

உபயோகமான தகவல்கள் from Kamakoti.org

கண்களைக் குளிர்ச்சியாக வைத்திருக்கவும் பாதுகாக்கவும் உங்கள் ஆலோசனை என்ன?
நமது உறுப்புகளில் புலன்களும், புலன்களில் கண்களும் மிக முக்கியத்துவம் பெற்றவை. கண்களின் பார்வை குன்றாமல், அவை எளிதில் சோர்வடையாமல் இருக்கக் கீழ்க்கண்டவற்றைப் பின்பற்ற வேண்டும்.
பண்ணைக் கீரை, சிறு கீரை இவற்றைத் தினமும் சாப்பிடுதல். பொன்னாங்கண்ணிக் கீரையைப் புளி சேர்க்காமல் சமைத்து உண்ணல். இரவு நேரங்களில் இரு உள்ளங்கால்களின் நடுவிலும் பசுவின் நெய்யைத் தேய்த்துக் கொள்ளுதல். உணவில் நெய் சேர்த்துக் கொள்ளுதல், பௌர்ணமியன்று இரவு சந்திரனைப் பார்த்துக் கொண்டிருத்தல். பற்களை முறைப்படித் துலக்குதல்.
வாய் நிறையத் தண்ணீர் ஊற்றிக் கொண்டு, கண்களை நன்கு திறந்து சுத்தமான தண்ணீரினால் கண்களில் தெளித்துக் கொள்ளுதல்.
இரவில் படுக்கும் முன் திரிபலா சூர்ணம் (கடுக்காய் - நெல்லிக்காய் - தான்றிக்காய் அடங்கிய இது ஆயுர்வேத மருந்துக் கடைகளில் கிடைக்கும்) 5 கிராம் அளவில் எடுத்து ஒன்றரை ஸ்பூன் (7.5 I.L) த்ரைபல கிருதம் என்னும் நெய்யை லேசாக உருக்கிப் பொடியுடன் குழைத்து, பிறகு அரை ஸ்பூன் தேன்விட்டுக் குழைத்து நக்கிச் சாப்பிடக் கண் குளிர்ச்சியாகும். கண்நோய் எதுவும் வராமல் பாதுகாக்க இது உதவும்.
வாரந்தோறும் எண்ணெய்க் குளியல் அவசியமா? தேவையற்றதா?
வாரம் இருமுறை - புதன் - சனிக் கிழமைகளில் ஆடவர்களும், செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் பெண்டிரும் நல்லெண்ணெய் தேய்த்துக் குளிப்பது என்ற நல்ல பழக்கம் நம்முன் தலைமுறை வரை ஒழுங்காக நடந்துவந்தது. தற்போது சூழ்நிலை, தொழில், ஆகிய காரணங்களைக் காட்டியும், வீண் செலவு என்ற ஆதாரமற்ற கருத்துக்கு ஆட்பட்டும் இந்த நல்ல பழக்கம் புறக்கணிப்பட்டுள்ளது. உடல் உழைப்பு மிகுதி, உணர்ச்சிக் கொந்தளிப்பு இவைகளால் உடல் தசைகளும் மனமும் இறுகி அயர்ச்சியாக இருக்கும். தூக்கத்துக்கப் பிறகும்ட உடல், மனக் களைப்பு நீங்காமல் மறு நாள் விழித்து எழும்போதும் தொடரும். இதைத் தவிர்க்க சிறந்த உபாயம் எண்ணெய் தேய்த்துக் குளித்தல்தான். இப்படிக் குளித்த அன்று மனத்திற்கும் உடலுக்கும் ஒய்வு கிடைக்கிறது. ஆகவே இதைத் தினமும் செய்ய ஆயுர் வேதம் வலியுறுத்துகின்றது.
உடல் முழுவதும் எண்ணெய் தேய்த்துக் கொள்ள முடியாமல் போனாலும் குளிக்கும் முன் தலை, காது, கால் இம்மூன்று இடங்களிலும் எண்ணெய் தேயத்து விடுவது அவசியம். தலைக்கு எண்ணெய் தடவுவதால் தலையில் நீர் கோர்த்துக் கொள்ளாது. சளி, ஜலதோஷம், மண்டைக் கனம், வரட்சி, பொடுகு, மயிர்க்கால்களில் அழுக்கு தங்கல், அதிக உடற்சூடு இவை நீங்கி கண் தெளிவடையும். கேசம் நன்கு வளரும். நல்ல தூக்கம் வரும்.
எண்ணெயைக் காய்ச்சி ஆறவைத்து இளஞ்சூடான நிலையில் காதில் விட்டுக் கொள்ளலாம். பஞ்சில் எண்ணெயை நனைத்து அதிகமான எண்ணெயைப் பிழிந்து விட்டுக் காதில் செருகிக் கொள்வது அதிக நல்லது. குளித்தபிறகு பஞ்சு சுற்றிய குச்சியால் புண்படாதவாறு காதினுள் துடைத்து விடுவது அவசியம்.
குளிக்கும் முன் உள்ளங்கால் கால்விரலிடுக்குகள், நகங்கள், கணுக்கால் பூட்டு, குதிகால் சதை இவற்றில் எண்ணெய் தடவித் தேய்த்துவிடுவது அவசியம். உடலின் பாரத்தைத் தாங்கும் எலும்புகளும், தசைகளும் உள்ள இடம் இவை. உள்ளங்காலிலிருந்து இரு நரம்புகள் மூளைக்கும் அதிலுள்ள கண்களுக்கான நரம்பு மண்டலத்துடனும் தொடர்பு கொள்பவையாகச் செல்கின்றன. காலில் எண்ணெய் தடவித் தேய்க்க கண்கள் தெளியும்.
அலர்ஜி, தும்மல், சளிக்கு நல்ல நிவாரணம் தரக்கூடிய மருந்து என்ன? இவை உள்ளவர்கள் என்ன உணவு சாப்பிடலாம்? எவற்றைச் சாப்பிடக் கூடாது?
ஏலத்தையும் கிராம்பையும் வெற்றிலைச் சாறு விட்டு அரைத்து லேசாகச் சூடாக்கி நெற்றியில் பற்றுப் போடலாம். நீர்க்கோர்வை மிகவும் அதிகமாகித் தலைப் பாரம் மிகுந்திருந்தால் இந்தப் பற்றுப் பொருள்களுடன் புழுங்கலரிசி அல்லது அவலைச் சேர்த்து ஒன்றிரண்டு மிளகு கூட்டியும் பற்றுப் போடலாம்.
ராஸ்னாதி சூர்ணத்தை (ஆயுர்வேத மருந்துக் கடைகளில் கிடைக்கும்) இஞ்சி அல்லது வெற்றிலைச் சாறுடன் குழைத்துச் சிறிது சூடாக நெற்றியில் பற்று இடலாம். வெறும் பொடியை உச்சந்தலையில் தேய்ப்பதும் நல்லது.
மிளகை ஊசியில் குத்தி அதை நெருப்பில் காட்ட வரும் புகையை மூக்கு வழியாக உறிஞ்சினாலும் தலைக்கனம் குறையும்.
தூங்கும்போது தலையணைக்குப் பதில் புழுங்கலரிசி, துவரம் பருப்பு இவைகளைத் துணிப்பையில் அடைத்து வைத்துக்கொண்டு படுப்பதினால் தலைப் பாரம் குறையும்.
கொம்பரக்கு, தும்பைப் பூ, மஞ்சள், மிளகு, காய்ந்த மிளகாய், ஓமம், வில்வ இலை, வெற்றிலை ஆகியவற்றை ஒன்றாகப் போட்டுக் காய்ச்சிய நல்லெண்ணெயை தலைக்குத் தேய்த்துக் கொள்வதும் வெந்நீரில் குளித்து உடன் தலையைத் துவட்டி சாம்பிராணியைத் தணலில் போட்டுப் புகைபிடிப்பதும் நல்லது.
தூதுவளையை, அன்றாடம் உணவில் சேர்க்கவும். தூதுவளை இலையைக் கூட்டு, பச்சடி, துவையல் போன்றவை செய்து சாப்பிடலாம். நெஞ்சு சளி, இருமல், நீர்க் கோர்வை உடல் வலி, புளியேப்பம் முதலியவற்றுக்குத் தூதுவளையை ஒரு பிடி ஆய்ந்து சிறிது பசு நெய்விட்டு வதக்கிச் சாப்பிடலாம். இம் மூலிகையின் முக்கிய குணம் இது. ஷயரோகம், இருமல், ஆஸ்த்துமா, நமைச்சல், மதமதப்பு, சீதளநாடி முதலியவைகளை நீக்கி நுரையிரல்களுக்கு நல்ல பாதுகாப்பும், பலமும் கொடுத்துத் தாதுவைப் பலப்படுத்தும்.
காரம், கசப்பு, துவர்ப்புச் சுவை கொண்ட உணவுகளை அதிகம் சேர்க்க வேண்டும். சீரக ரசம், மிளகு ரசம் சூடாக சாதத்துடன் கலந்து உண்ணலாம். மோரைச் சூடாக்கி, மஞ்சள் பொடி, கடுகு, கறிவேப்பிலை தாளித்து சாதத்தில்
பிசைந்து சூடாகச் சாப்பிடவும். சுக்கு, மிளகு, திப்பிலியை சம அளவில் நன்கு பொடித்து அரை ஸ்பூன் பொடியில் ஒரு ஸ்பூன் தேன் குழைத்துப் படுக்கும்முன் சாப்பிடவும்.
இனிப்பு, புளிப்பு, உப்புச் சுவையைக் குறைக்கவும். வெண்டை, பூசணி, பரங்கி, புடலை, வெள்ளரி, சுரைக்காய் ஆகிய காய்களைத் தவிர்க்கவும். குளிர்ச்சியான பழ ரசங்களையும் பானங்களையும் தவிர்க்கவும்.
நோயைக் குணப்படுத்துவதில் ஆங்கில மருந்தைவிட ஆயுர்வேதம் எந்த விதத்தில் வித்தியாசப்பட்டிருக்கிறது?
ஆயுஷோ வேத: ஆயுர் வேத : வேதம் போலவே ஈசுவரன் மூச்சுக் காற்றிலிருந்து வேதத்துடன் சேர்ந்து வெளி வந்துள்ளதால் ஆயுர்வேதம் எனப்படுகிறது.
ஆயுர்வேதம் என்ற வசனத்தில் ஆயுஸ்ஸின் அர்த்தம் என்ன என்று பார்ப்போம்.
சூட்சமம், ஸ்தூலம் என்று ஸகல ஜீவராசிகளடைய உடல் இரு விதம். சூட்சம சரீரத்தை நம்மால் பார்க்க இயலாது. ஸ்தூல சரீரம் நாம் அனுபவிக்கும் பெரிய சரீரம். சரீர - இந்திரியம் (ஐம்புலன்கள்) - மனஸ் - ஆத்மா ஆகிய நான்கு திரவியங்களுடைய கர்மவசத்தினால் ஏற்பட்டுள்ள சேர்க்கையானது ஆயுஸ் எனப்படுகின்றது. இந்த ஸ்தூல தேகத்தைவிட்டு ஜீவாத்மா வெளியேறுவதைத்தான் மனிதன் மரித்தான் என்று நினைக்கிறார்கள். உண்மையில் மனிதப் பிறவியை அடைந்துள்ள ஜீவாத்மா மரணம் அடையவில்லை. அவன் எடுத்துக் கொண்ட ஸ்தூல சரீரம்தான் மரித்தது. கிழிந்த வேஷ்டியை எறிந்துவிட்டு வேறு வேஷ்டியை எடுத்துக் கொள்வது போல வயதாகிப் போன ஸ்தூல உடலைவிட்டு வேறு ஸ்தூல உடலை ஜீவன் அடைகிறான். இதைத்தான் மறுபிறவி, புனர்ஜன்மம் என்று பேசுகிறோம். வேறு ஒரு ஸ்தூல உடலை அடையும் வரை ஜீவாத்மா சூட்சும சரீரத்துடன் சேர்ந்தே இருக்கிறான். ஆதலால், ஆயுஸ் எனப்படும் சரீர - ஆத்மாவின் சேர்க்கை ஞானம் ஏற்பட்டு ஆத்மாவிற்கு ஸம்ஸாரததிலிருந்து மோட்சம் சித்திக்கும் வரையில் வரும் எல்லா ஜன்மங்களிலும் தொடர்ந்து ஆத்ம சரீரங்களுடைய சம்பந்தம் ஸ்தூல சூட்சும ரூபமாகத் தொடர்கிறது.
ஆயுஸின் அர்த்தம் வரும் பிறவிகளுக்கும் என்று நிரூபிக்கப்பட்டது. இந்த சித்தாந்தப்படி, ஆயுஸ்ஸுக்கு வந்த வியாதிகளைப் போக்கும் சிகிச்சையையும், வராமல் காப்பாற்றும் வழிகளையும் போதிக்கும் சாஸ்திரம் ஆயுர்வேதம். இந்தக் கொள்கை கொண்டுள்ள ஆயுர்வேதமானது. மனிதரின் இந்தப் பிறவியில் உள்ள சரீரத்தின் பாதுகாப்பையும், வியாதி சிகித்சைகளை போதிப்பதுடன் மட்டும் நிற்கவில்லை. இந்த மனிதனுக்கு வரும் பிறவிகளிலும் நோய்கள் ஏற்படாமலிருக்கும்படியாக இந்தப் பிறவியிலேயே இதே ஸ்தூல சரீரத்திலேயே செய்கிறது என்ற ஆயுர்வேதத்தின் விசேஷப் பெருமையை விளக்குகின்றது ஆயுர்வேதத்தின் பெயர். மற்ற மருத்துவ முறைகள் எதுவும்ட மனிதனுக்கு புனர்ஜன்மம் உண்டு என்பதையே அறியவில்லை. அப்படியிருக்க, அடுத்த ஜன்ம சரீரத்தின் பாதுகாப்பைப் பற்றி கேள்வி ஏதுமில்லை. இந்த சரீரத்திலேயே வரும்
ஜன்மாவிற்கும் நோய்கள் வராமல் காப்பாற்ற முடியும் என்றறிந்து அதையும் உபதேசிக்கின்றது ஆயுர்வேதம். ஸ்தூல சரீர சிகித்ஸையில் ஆயுர்வேதம் சூட்சமமாக உள்ள வாத பித்த கபங்களையும் கருத்தில் கொண்டு சிகித்சை அளிக்கின்றது.
அதிக வியர்வை வருகிறபொழுது அரிப்புப்போல தடிப்புடன் அரிப்பு ஏற்படும். சிலருக்கு குளிரி காலத்தில் அரிப்பு தோன்றிவிடும். அதை போக்குவதற்கான வழிகள்.
உடல் பலத்திற்குத் தக்கபடி முதலில் லங்கணம் (பட்டினி) இருக்க வேண்டும். பசி ஏற்பட்டதும்ட ஒன்றிரண்டு வேளை கெட்டியான முழு அளவு உணவு சாப்பிடாமல் கஞ்சி, புளிக்காத மோர் சேர்த்துச் சாப்பிடுவது நல்லது. வியாதி நன்றாய் குணமடையும் வரையில் காரம், புளி, உப்பு குறைத்து புளிக்காத மோர், ஆடை நீக்கிய பால், பழைய அரிசி சாதம் சாப்பிடவும். தானியம், மாவுப் பண்டம், எண்ணெய்ப் பண்டங்களை அறவே அகற்ற வேண்டும். கொஞ்சம் அதிக அளவில் சுத்தமான தண்ணீரைக் குடிப்பதும், இளநீர் பருகுவதும் மிக நல்லது.
பச்சையாக அருகம்புல், பச்சை மஞ்சள் கிழங்கு இரண்டையும் சேர்த்து அரைத்து தோலில் தடவி, அந்தப் பூச்சு உலரத் தொடங்கும்போது, சுத்தமான நீரினால் அலம்பும். சோப்பு ஒன்றும் தேயக்கூடாது.
ஸர்ஜிகா க்ஷ£ரம் (Soda bicarb) , இந்துப்பு இரண்டையும் தேங்காய் எண்ணெயில் குழப்பித் தடவவும். ஒரு மணி நேரம் ஊறிய பிறகு பயிறு அல்லது கடலை மாவை, வடித்த கஞ்சியில் அல்லது சிறிது புளித்த தயிரில் குழைத்து அலம்பவும்.
தனி ஸர்ஜிகா க்ஷ£ரம் ஒன்றை மட்டும் தண்ணீரில் எவ்வளவு பூர்ணமாய்க் கரையுமோ அவ்வளவு கனமாய்க் கரைத்து (Saturated solution) அந்தத் திரவத்தை உடலில் பூசி ஒரு மணி நேரம் இருந்து குளிக்கவும். இந்தப் பூச்சுகள் அனைத்தும் தோல் அரிப்பு, எரிச்சல் எல்லாவற்றையும் நன்றாய் சீக்கிரம் போக்கும். தூர்வாதி தைலம், மஹாதிக்தககிருதம் இவற்றை வியாதி குறைந்த பின்பு சில நாள்கள் பூசிக் குளிப்பது மிகவும் நன்மை பயக்கும்.
உள் மருந்துகள் - முதலில் குடல் சுத்திக்குச் சிறு பேதிக்குச் சாப்பிட வேண்டும். இதற்குக் கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் காய்களின் கஷாயம் (திரிபலா கஷாயம்) காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடலாம்.
அதிமதுரம், இலுப்பைப்பூ, சித்தரத்தை, வெள்ளைச் சந்தனம், செஞ் சந்தனம், நொச்சியின் பட்டை, திப்பிலி இந்த ஏழும் சேர்த்துக் கஷாயம். நன்னாரி வேர், வெட்டிவேர், விளாமிச்சம் வேர், அதிமதுரம், சீந்தில்ª £கடி இந்த ஐந்தும் சேர்த்துக் கஷாயம்.
இவைகளில் ஏதாவது ஒரு கஷாயத்தைத் தினம் மூன்று வேளை - வேளைக்கு 3-4 அவுன்ஸ் (ஓர் அவுன்ஸ் 25 I.L.) வீதம் வெறும் வயிற்றில் சாப்பிடவும். நோயின் சீற்றம் நன்கு குறைந்தவுடன் மஹாதிக்தககிருதம் காலை, மாலையிலும் ஹரித்ராகண்டம் லேகியம் இரண்டு வேளை உணவிற்குப் பிறகும் சாப்பிடவும்.
வயிற்றுப் புண், குடல்வாயு, மலச் சிக்கல், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் மருந்து என்ன?
பச்சைக் கீரைகள் - அகத்தி, வல்லாரை, வெந்தயம், கொத்துமல்லி, சோம்பு, அரைக்கீரை இவைகள் உத்தமம்.
மணத்தக்காளி, முட்டைக்கோஸ், காலிப்ளவர், பருப்புக் கீரைகள் தள்ளுபடியல்ல, சாப்பிடலாம்.
பச்சைக் காய்கள் - பாகல், புடல், முத்தின பூசணிக்காய், சுரைக்காய், வாழைத்தண்டு, வாழைப்பூ இதமானவை. கிழங்குகள், வெங்காயம், பூண்டு அபத்தியம், தவிர்க்கவும்.
பழங்கள் - மாதுளை நல்லது. நெல்லிக்காய் - பிஞ்சு, முத்தியது, பழுத்தது, உலர்ந்த வத்தல் எல்லா விதத்திலும் மிகவும் நல்லது.
தானியங்கள் - சுமார் ஒரு வருஷம் பழசான நெல்லு புழுங்கிய அரிசி உத்தமம். கோதுமை தள்ளுபடி அல்ல. பாசிப்பருப்பு, மஜூர்டால் நல்லது. கடலை வகைகள், உளுந்து, மொச்சை, பட்டாணி வகைகள் அபத்தியமென்பதால் தவிர்க்கவும். அது போல கேழ்வரகு, கம்பு ,சோளங்கள், முளைக்க வைத்தவை எல்லாம் அபத்தியம்.
ருசி தருபவை - சோம்பு, ஜீரகம்ட, தனியா, மாங்காய், இஞ்சி தாராளமாய்ச் சேர்க்கலாம். இஞ்சிப் பிஞ்சும், மிளகு நெய்யில் வறுத்ததும் மிதமாய்ச் சேர்க்கலாம்.
குடிநீர் - காய்ச்சி ஆறின தண்ணீர், மாமிச உணவுகளை சூப்பாகச் செய்து சாப்பிடவும்.
அபத்தியங்கள் - புதிய அரிசி, எள்ளு, உளுந்து, மொச்சை, கொள்ளு, தயிர், இட்லி தோசை, வடை. எண்ணெய்ப் பட்ஷணங்கள், பழைய புளி, புளித்த பண்டங்கள், பிரெட், பிஸ்கெட் வகைகள், மதுபானம், கருவாடு, மலமூத்திர வேகங்களை அடக்குதல் முதலியன.
குடுல்வாயு மற்றும் மலச் சிக்கலை நீக்க -
பேய்ப்புடல் இலை, சுக்கு, கொத்தமல்லி விதை இவைகளுடைய கஷாயம்.
பேய்ப்புடல், சுக்கு, சீந்தில், கடுகு, ரோஹிணி இவைகளின் கஷாயம்.
ஆடாதோடை இலை, பர்பாடகப்புல், வேப்பிலை, நிலவேம்பு, மையாந்துரை, பேய்ப்புடல், கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் இந்த 9 சரக்குகளுடைய கஷாயம். ஏதேனும் ஒன்றை இளம் சூடாக ஒரே நாளில் 3 வேளை உணவிற்கு முன் சாப்பிடவும். அளவு 1-4 அவுன்ஸ் தனி நெல்லிக்காய் சூர்ணம் 3-6 கிராம் 3 வேளை உணவு சாப்பிட்ட உடனே சுத்தமான தண்ணீருடன் சாப்பிடவும்.
அடி முதுகில் வலி எல்4எல்5 Disk bulging மருந்து என்ன?
முதலில் நல்ல ஒய்வு, கம்பளி போன்ற உஷ்ணப் பாங்கான விரிப்பு கொண்ட
படுக்கையில் உடலை அசைக்காமல் படுத்திருப்பதும் (மல்லாந்து கால்களை நீட்டி) நல்லது. தசைகள் விறைத்திருப்பதும் தசைகளை இயக்கும் நரம்பு மண்டலத்தில் ஏற்பட்டுள்ள அழுத்தமும்தான் இந் நோய்க்குக் காரணம்.
தத்தூராதி தைலம் - மிக எளிய முறை. கருஊமத்தை இலை அல்லது சாதாரண ஊமத்தையை இடித்துப் பிழிந்த சாறு 200 IL. நல்லெண்ணெய் 400 IL ஆகிய இரண்டையும் அடுப்பிலேற்றிச் சாறு சுண்டிக் கசண்டாகும் வரை காய்ச்சி வடிகட்டிக் கொள்ளவும். சற்று ஆறியதும் கட்டிச் சூடம் 10 கிராம்ட தூளாக்கிப் போட்டு கலக்கி விடவும். இந்தத் தைலத்தை வலியுள்ள பகுதிகளில் தடவிக் கோதுமைத் தவிட்டை வறுத்து ஒத்தடம் கொடுக்கவும். தினம் மூன்று வேளை ஒத்தடம் கொடுக்கவும். ஒத்தடம் கொடுத்த பின் ஏற்படும் வியர்வையையும் எண்ணெய் பிசுக்கையும் துணியால் துடைத்துவிட்டு ஓய்வு தரவும். பிறகு மெல்லிய பூச்சாக இம் மருந்தைத் தடவி விடுவதும் நல்லதே. சிலருக்குச் சூடான நமைச்சல் தரும். அவர்களது தேகவாகு அப்படி. அப்போது இதை நிறுத்தவும்.
சசிஸார தைலம் - ஓமம் 400 கிராம், 4 லிட்டர் தண்ணீரில் கஷாயமிட்டு 1 லிட்டர் மிதமாகக் காய்ச்சி முன் போல எண்ணெய்யுடன் காய்ச்சி எடுத்துக் கற்பூரம் கலந்து கொள்ளவும். தத்துராதி தைலம் ஒத்துக் கொள்ளாதவர்களுக்கு இது நல்லது.
உள் மருந்துகள் மருத்துவர் ஆலோசனைப்படிதான் சாப்பிட வேண்டும்.
சத்துள்ள உணவு, சத்தில்லாத உணவு என்று நாம் எப்படி அறிவது? சில உணவுப் பொருள்கள் சிலருக்கு அலர்ஜியாவது ஏன்?
சரீரத்தின் சுபாவத்தினால் உணவு சத்துள்ளதாகவும், சத்தில்லாததாகவும், அலர்ஜியாகவும் ஆகிறது. வாதப் பிரகிருதி, பித்தப் பிரகிருதி, கபப் பிரகிருதி என்று மூன்று விதங்களாக நமக்கு உடல் அமைகிறது. ஆரோக்கியநிலை, நோய் நிலை இரண்டிலும் பிரகிருதிக்குத் தனிப்பட்ட பத்தியங்களை உபயோகிக்க வேண்டும்.
வாதப் பிரகிருதி உள்ளவருக்கு உடல் வறட்சி, தொட்டால் குளிர்ச்சி, சொரசொரப்பு, கல்லுக் குடல் வாகு (மலம் இறுக்கமதிகம்) . இவருக்குக் காரணம், துவர்ப்பு, கசப்புச் சுவை கொண்ட மிளகு, மிளகாய், பாகல், சுண்டைக்காய் முதலியவை அபத்தியம். பொதுவாய் இனிப்பு, புளிப்பு, உப்புச் சுவை, பால், தயிர், வெண்ணெய், பலா, இனிப்பு மாதுளை, வாழை, மா, திராட்சைப் பழங்கள், அரிசி, கோதுமை, உளுந்து, குடலுக்கு எண்ணெய்ப் பசையைத் தரும் நெய் போன்றவை சத்துள்ள உணவாகும். அதிக உடற்பயிற்சி, புணர்ச்சி, இரவு கண்விழித்தல் போன்றவை அபத்தியம். மாமிசம், மீன், முட்டை நல்லதே.
பித்தப் பிரகிருதியில் உடல்சூடு, மிருதுவான குடல், செம்பட்டை முடி, நல்ல உடல்நிறம் கொண்டவராக இருப்பார். துவர்ப்பு, கசப்பு, இனிப்புச் சுவை கொண்ட காய்கறிகள், பழங்கள், கீரைகள் பத்தியம், புளிப்பு, காரம், உப்புச் சுவை அபத்தியம், மாதுளை, நெல்லிக்காய், வெல்லத்துடன் கலந்த எலுமிச்சைச் சாறு, கரும்புச் சாறு, கடைந்த புதிய மோர் ஆகியவை சத்துள்ள உணவாகும்.
சுப பிரகிருதியில் உடல்குளிர்ச்சி, தோலில் எண்ணெய்ப் பசை அதிகம். உடல் வழவழப்பு, நல்ல குரல்வளம் கொண்டவராக இருப்பார். கப வியாதிகள் அதிகம் அடிக்கடி பீடிக்கும், சீக்கிரம் உடல் பருமனாகி விடும். கசப்பு, துவர்ப்பு, காரச்சுவையுள்ள காய்கறிகள் பத்தியம், நெய், வெண்ணெய், ஆடைத்தயிர், வெல்லம், கறும்புச்சாறு அபத்தியம் வெறும் வயிற்றில் ஆறிய தண்ணீரில் தேன்கலந்து குடிக்க உடல் இளைக்கும். பகல் தூக்கம் மிகக் கெடுதல், உணவில் கேழ்வரகு, சோளம், கம்பு, கொள்ளு, வரகு தானியங்கள் பத்தியம். அரிசி, கோதுமைகளை விட யவம் என்னும் வார் கோதுமை பத்தியம். இவை அனைத்தும் சத்தான உணவாகும். மாமிசத்தை மிதமாய் உண்ணலாம். மீன், முட்டையைத் தள்ளுபடி செய்ய வேண்டும்.
ஆக, பிரகிருதிகளால்தான் உணவு சத்தாகிறது. அல்லது சத்தில்லாமல் போகிறது அல்லது அலர்ஜி ஆகிறது.
நெஞ்சுவலி வந்தவர்கள் அதிகம் கோபப்படுவது ஏன்? உடல் ஆரோக்கியம் பற்றிய குறிப்பு என்ன?
நெஞ்சுவலி எதனால் ஏற்பட்டது என்பதை முதலில் தெரிந்துகொள்ளவேண்டும். காரணமில்லாமல் காரியமில்லை என்பது நோய்க்கும் பொருந்தும். காரியமாகிற நோய்க்கு மருந்தைச் சாப்பிட்டுக் காரணத்தைத் தொடராமலிருத்தல் நலம். ஆரோக்கியம் மேம்படக் போதுமான காலம் உறக்கம் தேவையானது. இவர்களுக்குத் தூங்கி எழும்போது உடல் சுறுசுறுப்புடன் மனமும் தெளிவடைந்திருந்தால் அனாவசியமாகக் கோபம் வராது. மேலும் ஆரோக்கியமானதும், எளிதில் ஜீரணமாவதுமான உணவை அளவுடன் மிதமாக உண்ணுவதும், மனத்தில் திருப்தியுடனும் சந்தோஷத்துடனும் அமைதியாகவும் சுவைத்துச் சாப்பிடுவதும், முன் உண்ட உணவு ஜீரணமான பிறகே அடுத்த வேளை சாப்பிடுவது என்ற உறுதியும் கொண்டவர்களாகத் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். மலம், மூத்திரம் முதலியவைகளின் உந்துதல் ஏற்பட்டதும் அனாவசியமாகக் கட்டுப்படுத்தாமல் அவைகளைக் கழித்தலும் உடலாலும் மனத்தாலும் செய்ய வேண்டிய பணிகளை அவை களைப்புறும் அளவிற்கு அதிகமாகச் செய்யாமலும் சோம்பலுக்கு இடம் கொடுக்காமலும் இவர்கள் பழகினால் ஆரோக்கியம் நல்ல நிலையில் இருக்கும்.
ரத்தக் குழாய் விரிவடைகிறது. தடுக்க என்ன வழி?
ஆடாதோடை என்னும் பச்சிலை பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். தொண்டை, நுரையீரல் இவைகளில் அழற்சி, நீர்க்கோர்வை, ரத்தக் கொதிப்பு சம்பந்தப்பட்ட நோய்களில் இது மிகவும் பழக்கத்திலுள்ளது. இதன் வேர்ப்பட்டை, இலை, பூ மூன்றும் மருந்தாகக் கூடியவை. இதன் வெள்ளை நிறமள்ள பூ சிற்சில மாதங்களில்தான் கிடைக்கும். தூதுவளை, இம்பூறா, கண்டங்கத்திரி, முகமுசுக்கை, ஆடாதோடை இவ்வைந்தும் நுரையீரல் நோய்களில் பயன் தரும் மூலிகைகள் புண்ணை ஆற்றும் சக்தியும் ரத்தம் பெருகுவதைத் தடை செய்யும் சக்தியும் இருப்பதால் ரத்தமாகக் காறி உமிழ்வதும் குறைகிறது. இலை, வேர்ப்பட்டை, பூ
இந்த மூன்றும் ரத்தத்திலுள்ள கொதிப்பைக் குறைத்து, வியர்வையையும் சிறு நீரையும் அதிகமாக்கி ஜ்வரதாபத்தை அடக்குபவை.
இலையைத் தண்ணீர் விட்டு இடித்த சாறு அரை அல்லது ஒரு அவுன்ஸ் (25 I.L.) , தேன், பனங்கல்கண்டு, சர்க்கரை சேர்த்துச் சாப்பிடலாம். வேரையும், இலையையும் சிறு துண்டுகளாக நறுக்கி இட்டிலித் தட்டில் வைத்து அவித்து வெந்ததும் கசக்கிப் பிழிந்து எடுத்த சாறு 8 அவுன்ஸ், பனங்கல்கண்டு, சீனாக் கல்கண்டு 250 கிராம் சேர்த்து நன்றாகத் தேன் பதம் வரும் வரை இளம் தீயில் காய்ச்சி ஸிரப்பாக (பானகமாக) எடுத்து வைத்துக் கொள்ளலாம். இந்தப் பானகம் சிறு குழந்தைகள், பெரியோர்கள் எல்லோருக்கும் வரும் உஷ்ண இருமல், புகைந்த இருமல், சளிக்கட்டின் போது இருமியும் சளி வெளிவராத நிலை. நுரையீரல்களில் புண் ஏற்பட்டு இருமும் போதும் காறித் துப்பும் போது ரத்தம் வருதல் இவைகளில் அரை டீஸ்பூன் அளவு சப்பிச் சாப்பிட நல்ல குணம் கிடைக்கும். மயிர் போன்ற மெல்லிய ரத்தக் கசிவுகளை இந்தப் பானகம் உடனே நிறுத்தும். அதனால் சீத ரத்த பேதி, ரத்த மூலம், மாதவிடாயில் அதிக உதிரப் போக்கு இவைகளிலும் இதைச் சாப்பிடலாம்.
இலைகளை உலர்த்திப் பெருந்தூளாக்கிக் கொண்டு, பீடி இலையில் சுற்றிப் புகை குடிக்க, சளிக்கட்டு, ஆஸ்துமா என்னும் மூச்சுத் திணறல் இவை குறையும்.
உடல் எடையைக் குறைக்க என்ன வழி?
நீங்கள் உணவில் கொள்ளு, காராமணி, கம்பு, மொச்சை, பயறு போன்ற தானியங்களை அதிகம் பயன்படுத்த வேண்டும்.
வராதி (Varadi) என்றொரு கஷாயம் ஆயுர்வேத மருந்துக் கடைகளில் கிடைக்கும். இவை 200 IL அளவில் கிடைக்கும். 3 ஸ்பூன் மருந்து + 12 ஸ்பூன் (60 IL) கொதித்து ஆறிய தண்ணீர் + கால் ஸ்பூன் தேன் கலந்து காலை, மாலை 6 மணிக்கு வெறும் வயிற்றில் சாப்பிடவும். காலையில் மருந்தைச் சாப்பிட்டதும் அரை மணி நேரம் இடது பக்கமாகச் சரிந்து படுத்திருக்கவும். பின்னர் 15 நிமிடங்கள் கழித்து வாய் கழுவி, சூடாகத் தண்ணீரைக் குடிக்கவும். உடல் பருமனைக் குறைக்க இது நல்ல கஷாயம்.
ஆயுர்வேத மருந்துக் கடைகளில் லோத்ராஸவம் (Lodhrasavam) எனும் மருந்து 450 IL அளவில் கிடைக்கும். அதை 5 ஸ்பூன் அதாவது 25 IL - 30 IL வரை உணவிற்குப் பிறகு காலை, இரவு சாப்பிடவும்.
தயிரைத் தவிர்த்து தெளிந்த மோர் அருந்தவும். தேன் கால் ஸ்பூன் சிறிது தண்ணீரில் கலந்து அல்லது 'திரிபலா' எனும் கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் சூர்ணம் 1 ஸ்பூன் (5 கிராம்) 80 IL தண்ணீரில் சிறிது கொதிக்கவிட்டு வடிகட்டி ஆறிய பிறகு, கால் ஸ்பூன் தேன் கலந்து காலை, இரவு உணவிற்குப் பிறகு உடனே அருந்த வேண்டும். அதன் பிறகு முன் குறிப்பிட்ட மருந்தைச் சாப்பிடலாம்.
உடற்பயிற்சி மிகவும் அவசியம். காலையில் கஷாயம் குடித்து ஒரு மணி நேரத்துக்குப் பிறகு 40 முதல் 45 நிமிடங்கள் வரை நடைப்பயிற்சியை மேற்கொள்ளவும். நன்கு வியர்வை வரும்படி நடந்தால்தான் எடை, குறையும். பகல் தூக்கம் தவிர்க்கவும்.
கோடைக் காலத்தின் சூடு தணிந்த பிறகு, கொள்ளு தானியத்தை நன்கு கழுவி உலர்த்தி மாவாக அரைத்து வைத்துக் கொள்ளவும். புளித்த மோரைச் சிறிது சூடாக்கி 70-100 கிராம் வரை கொள்ளு மாவை அதில் குழைத்து உடலில் கூடுதல் சதை உள்ள இடங்களில் கீழிருந்து மேலாக சூடு பறக்கத் தேய்த்து அரை மணி நேரம் ஊறிய பிறகு சுடு தண்ணீரில் குளிக்கவும். கொள்ளு சதையை உருக்கிவிடும். சோப்புக்கு பதிலாக 'ஏலாதி சூர்ணம்' கடையில் கிடைக்கும், அதை வெந்நீருடன் குழைத்து மேல் தேய்த்துக் குளிக்க நல்ல நிறத்தைப் பெறவும், உடல் எடையைக் குறைக்கவும் முடியும். 'இளைத்தவனுக்கு எள்ளு, கொழுத்தவனுக்குக் கொள்ளு' என்பது பழமொழி.
புலால் உணவை முழுவதுமாக நிறுத்தி விடவும். நீங்கள் குடலைச் சுத்தமாக வைத்திருத்தல் மிக அவசியம். திரிபலா சூர்ணம் 1 ஸ்பூன் அளவில் இரவில் படுக்கும் முன் தேனுடன் குழைத்துச் சாப்பிட்டால் மலச் சிக்ல் இல்லாமல் குடல் சுத்தமாக இருக்கும்.
வலது குதி காலில் வலி நீங்க என்ன வழி?
குதி காலில் எலும்பின் வளர்ச்சி ஏதேனும் ஏற்பட்டடுள்ளதாக என்பதை நீங்கள் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். எக்ஸ்ரே மூலம் இதைத் தெரிந்து கொள்ளலாம். பொதுவாகவே, குதிகால் சதை, கணுக்கால் பூட்டு, உள்ளங்கால்
ஆகியவை உடலின் பாரத்தைத் தாங்கும் எலும்புகளும் சதைகளும் அதிகமாக உள்ள இடங்களாகும். உள்ளங்கால் மற்றும் கணுக்கால் தசைகள் வலுவிழுந்தால் நடக்க முடியாது. நிற்க முடியாது. குதிகால் வலி, இடுப்பு வலி ஆகியவை ஏற்படும். இவை வராமல் தடுக்க இரவு படுக்கும் முன்னும் காலையல் குளிப்பதற்கு முன்னும் உள்ளங்கால்களுக்கு எண்ணெய் தடவிக் கொள்ளுதல் அவசியம்.
சஹசராதி தைலம் 100 மி.லி.யும் கர்ப்பூராதி தைலம் 100 மி.லி.யும் கலந்து ஒரு இரும்புக் கரண்டியில் சிறிது எண்ணெயை (10 I.L.) . சூடு செய்து இரவில் படுக்கும் முன் வலது கணுக்கால் பூட்டு, குதிகால் சதை ஆகிய இடங்களில் மசாஜ் செய்து (20 நிமிடங்கள் வரை ) வெந்நீர்ப் நிரப்பிய பாத்திரத்தில் கால் முழ்குமளவு 5-10 நிமிடம் வரை வைத்திருந்து பிறகு துணியால் காலைத் துடைத்துவிட்டுப் படுக்கச் செல்லவும. காலையில் குளிப்பதற்கு முன்பும் இதுபோலச் செய்யலாம். கடினமான காலணியைத் தவிர்த்து மிருதுவான காலணியை உபேயாகிக்கவும். கால்களைத் தரையில் அதிகமாக அழுத்தி நடப்பதைத் தவிர்த்து மென்மையாக நடந்து செல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளவும்.
சித்த மருந்துகளுக்கும் ஆயுர்வேத மருந்துகளுக்கும் என்ன விச்த்தியாசம் உள்ளது?
'லோகா சமஸ்தா சுகினோ பவந்து' உலக மக்கள் அனைவரும் இன்புற்றிருக்க வேண்டும் என்ற ஒர் உயர்ந்த எண்ணத்தை மட்டுமே கொண்டிருந்த மகான்களான முனிவர்களால் எழுதப்பட்ட மருத்துவ முறைகள்தான் சித்தமும், ஆயுர்வேதமும். பூத உடலை ஜிவாத்மா அணிந்த கொண்டிருப்பதன் லட்சியம் அறம்- பொருள் - இன்பம் - வீடு (மோட்சம்) ஆகியவற்றைப் பெறுவதற்காகத்தான் இந்த நான்கிற்கும் இடையூறு விளைவிக்கின்ற நோய்களால் மக்கள் துன்புற்றிருக்க, அதைக் கண்டு வருந்திய முனிவர்கள் மூலிகைகளை முக்கியமாகக் கொண்ட நோய் தீர்க்கும் மருந்துகளை நமக்கு உபதேசித்தனர். எத்தனை யுகங்கள் வந்தாலும் ஆதியும் அந்தமுமில்லாத இந்த சித்த ஆயுர்வேதம் என்னும் அமுதத்தை தன்னலம் ஏதுமின்றி மக்களின் மேன்மைக்காக நமக்கு எடுத்துரைத்த முனிவர்களுக்கு நாம் என்றென்றும் நன்றிக் கடன்பட்டிருக்கிறோம். இந்த இரு வைத்திய முறைகளுமே சாதாரண மனிதர்களால் இயற்றப்படாததால் இவை இரண்டுமே மிகச் சிறிந்த மருத்துவ முறைகள்தான் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை