Monday 30 September 2013

உங்களது புகைப்படத்திற்கு பின்ன‍ணி குரல் கொடுக்க‍ உதவும் ஓர் உன்ன‍த தளம்!!!



உங்களது புகைப்படங்களுக்கு மென்மேலும் மெருகூட்ட‍ வருகிறது. ஓர் தளம் ஆம் உங்களது புகைப்பட்ட‍திற்கு ஏற்றதொரு வண்ணமய த்தில் பின்னணி அமைத்து அத்துடன் உங்களது இனிமையான குரலினை அப்புகைப்படங்களுக்கு கொடுத்து உயிரூட்டி உணர்வூ ட்டி உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் Fotobabble என்ற தளம்.முதலில் இந்த தளத்திற்கு சென்று Get started என்பதை கிளிக் செய்து உங்கள் முகநூல் கணக்கில் இந்த செயலியினை சேர்த்துக்கொள் ள வேண்டும். பின்னர் இந்த தளத்தி லும் ஒரு கணக்கினை திறந்து கொ ள்ளவும். இப்போது உருவாகும் Create a fotobabble என்ற பக்கத்தி ல் உங்கள் கணணியில் இருந்தோ அல்லது முக பக்கத்தில் இருந் தோ அல்லது இணையத்தில் இருந்தோ படத்தினை தர விறக்கம் செய்து கொண்டு Create என்பதை கிளிக் செய்யவும்.

இப்போது நீங்கள் தரவிறக்கம் செய்த புகைப்படமும் அதற்கு இணை க்கப்பட வேண்டிய பின்னணியும் தோன்றும். பின்னணியை தெரிவு செ ய்து பின்னணி படத்தில் சேர்த்ததும் படத்தின் கீழே Record என்பதை கிளி க் செய்ததும் பதிவு செய்ய தொடங்கி யதும் உங்கள் குரலினை பதிவு செய் துகொண்டு கீழே save என்பதை கிளி க்செய்து சேமித்து கொள்ளவும். இப் போது உங்கள் குரல் பதிவு செய்யப் ப ட்ட படத்தினை தளத்தில் கொடுக்கப் பட்ட சமூகவலைத்தள இணைப்புக ள் மூலம் பகிர்ந்து கொள்ள முடியும். அத்துடன் உங்கள் இமெயில் மூலம் அனுப்புவதற்கான கோடிங் மற் றும் வலைத்தளங்களில் பகிர் வதற்கான கோடிங் என்பனவும் தரப்ப ட்டுள்ளது.

http://www.fotobabble.com/


இந்த இணையதளம் மின் நூல் தளங்களின் சிகரம்!!!



இணையத்திலேயே புத்தகங்களை படிப்பதற்கு ‘ரீட் எனி புக்‘ தான் சிறந்த இணையதளம் என்று நினைத்து கொண்டிருந்தால் லிட்பை இணையதளம் அதைவிட சிறந்ததாக இருக்கிறது.தோற்றத்திலும் சரி உள்ளடக்கத்திலும் சரி லிட்பை இணையதளம் ஒரு படி மேலானதாக இருக்கிறது.

முழுமையான இணைய புத்தக வாசிப்பு தளம் என்று இதனை தயக்கமே இல்லாமல் பாராட்டலாம்.அந்த அளவுக்கு வாசிப்பு சார்ந்த அம்சங்களை கொண்டிருக்கிறது.

புத்தகங்களை படிக்க விருப்பமா? எங்களிடம் வாருங்கள் என்று அழைப்பு விடுக்கும் இந்த தளம் இபுத்தகங்களை(பெரும்பாலும் நாவல்கள்) இலவசமாக படிக்க தருகிறது.இதுவரை 2 ஆயிரம் புத்தகங்களே இருப்பதாக சொல்லப்பட்டாலும் நாளுக்கு நாள் இந்த எண்ணிக்கை கூடிக்கொண்டே போவதாக இந்த தளம் உற்சாகம் அளிக்கிறது.

நாவல்களை எந்த இடத்திலும் எந்த நேரத்திலும் வாசித்து மகிழலாம்!இதன் பொருள் கம்ப்யூட்டரிலும் வாசிக்கலாம்,லேப்டாப்பிலும் வாசிக்கலாம்,வேரு எந்த வாசிப்பு வசதி கொண்ட சாதனத்திலும் படிக்கலாம் என்பதே.

எந்த புத்தகத்தை படிக்கலாம் என்று தேர்வு செய்து கொள்வது மிகவும் எளிதானது.புத்தகங்கள் பகுதியை கிளிக் செய்தால் புத்தக பட்டியல் அவற்றின் அட்டை படத்தோடு அழகாக தோன்றுகிறது.சமீபத்தில் சேர்க்கப்பட்ட புத்தகம்,அதிகம் படிக்கப்பட்ட புத்தகம் என்னும் தலைப்பிலும் புத்தகங்களை காணலாம்.

புத்தகத்தை தேர்வு செய்து கிளிக் செய்த பின் ஒரு கணம் திக்குமுக்காடி போக நேரலாம். அந்த அளவுக்கு புத்தகம் சார்ந்த தகவல்களும்,வசதிகளும் இருக்கின்றன.அதற்கு காரணம் இந்த தளம் வெறும் வாசிப்பு தளம் அல்ல.படித்ததை பகிர்ந்து கொள்ளவும் விவாதிக்கவும் உதவும் தளம் இது.

புத்தக விற்பனை தளமான அமேசான் தளத்தில் புத்தகங்கள் பற்றிய தகவல்களை தேடும் போது ,புத்தகத்தின் சுருக்கமான அறிமுகம்,அதன் ரகம்,வாசகர்கள் விமர்சனம்,அவர்களின் ரேட்டிங் உள்ளிட்ட அம்சங்களை பார்த்திருக்கலாம்.அதோடு நாமும் விமர்சனம் எழுதி சமர்பிக்கலாம்.

அதே போல தான் இதிலும் புத்தகத்தின் அறிமுக குறிப்பு,அதில் உள்ள அத்தியாயங்கள்,அது எந்த வகையை சார்ந்தது என்ற குறிப்பு,ஏற்கனவே படித்தவர்களின் விமர்சனங்கள்,வாசகர்களின் மதிப்பீடு ஆகிய விவரங்கள் வரவேற்கின்றன.

இவை போதாதென்று குறிப்பிட்ட அந்த எழுத்தாளரின் பிற புத்தகங்கள் மற்றும் அதே போன்ற மற்ற புத்தகங்களின் பட்டியலும் தரப்படுகிறது.புதிய புத்தகங்களை அறிமுக செய்து கொள்ள இதை விட வேறு என்ன வேண்டும்.

புத்தகத்தை பற்றி அப்படியே பேஸ்புக் அல்லது டிவிட்டர் மூலம் நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளலாம்.ஜிமெயில்,வலைப்பதிவு போன்றவற்றிலும் இங்கிருந்தே பகிர்ந்து கொள்ளலாம்.

புத்தகம் நன்றாக இருக்கிறதா ,பிடித்திருக்கிறதா அது பற்றி நண்பர்களோடு கருத்துக்களை பகிர்ந்து கொண்டு விவாதிக்கலாம்.இந்த தளத்தில் உள்ள உறுப்பினர் குழுக்களிலுல் நுழைந்து விவாதத்தில் பங்கேற்கலாம்.அதற்கேற்பவே தளத்தின் முகப்பு பக்கத்தில் தற்போது யாரெல்லாம் என்ன புத்தகங்களை படித்து கொண்டிருக்கின்றனர் என்றும் தெரிந்து கொள்ளலாம்.

விருபினால் வாகர்களே கூட ஒரு புதிய விவாத குழுவை துவக்கி மற்றவர்களை அழைக்கலாம்.ஏதானும் சந்தேக்ம் இருந்தாலும் மற்றவர்களிடம் விளக்கம் கேட்கலாம்.

வாசகர் என்ற முறையில் ஒருவருக்கு பிடித்த சிறந்த புத்தகங்களை பட்டியலிடவும் செய்யலாம்.இப்படி சக வாசகர்கள் பட்டியல் மூலம் புதிய புத்தகங்களை அறிமுகம் செய்து கொள்ளலாம்.

இந்த அமசங்களை எல்லாம் ரசித்து மகிழ்ந்து விட்டு வாசிப்பதற்கான பட்டனை கிளிக் செய்தால்,இன்னொரு முறை அசந்து போக நேரும்.

காரணம் பல தளங்களில் பார்க்க கூடியது போல புத்தக பக்கங்களின் பிடிஎப் வடிவம் வந்து நிற்காமல் அழகான இபுக் ரீடர் தோன்றுகிறது.வரிசையாக ஒவ்வொரு பக்கமாக படித்து கொண்டே போகலாம்.

படிக்கும் போது ஏதாவது தோன்றுகிரதா,உடனே படித்து கொண்டிருக்கும் பக்கத்தின் அருகிலேயே அந்த குறிப்புகளை எழுதி வைக்கலாம்.இதற்கென தனியே இணைய குறிப்பேடு வசதி உள்ளது.மனதை கவர்ந்த் வரிகளை அடிக்கோடிட்டும் வைக்க முடியும்.

பாதி படித்து கொண்டிருக்கும் போதே வேறு வேலை வருகிறதா,அந்த பக்கத்தை அப்படியே புக மார்க் செய்து விட்டும் போய்விடலாம்.அடுத்த முறை படித்து கொண்டிருந்த பக்கத்தை தேடும் தேவையில்லாமல் அதே பக்கத்தில் இருந்து படிக்க துவங்கலாம்.புத்தகத்திற்கான மதிப்புரையும் எழுதி,மதிப்பீட்டையும் அளிக்கலாம்.இவற்றுக்கெல்லாம்உறுப்பினராக பதிவு செய்து கொள்ளுதல் அவசியம்.

ஆக இங்கே புத்தகம் வாசிப்பது என்பது அலுப்புட்டக்கூடிய தனிமையான அனுபவம் அல்ல,நண்பர்களோடு இணைந்து படிக்க கூடிய இனிமையான அனுபவம்.

இதை போன்ற வாசிப்பு அனுபவத்தை செழுமையாக்க கூடிய முழுமையான தளம் வேறில்லை என்றே சொல்ல வேண்டும்.

ஆங்கிலம் மட்டும் அல்லாமல் பிற மொழி புத்தகங்களும் இடம் பெற்றிருப்பது இந்த தளத்தின் கூடுதல் சிறப்பம்சம்.

இணையதள முகவரி:http://www.litfy.com/

உலகில் உள்ள அனைத்து நாளிதழ்களும் ஒரே இணைய பக்கத்தில்!!!

வளர்ந்து வரும் தொழில் நுட்பத்தில் ரேடியோ,தொலைகாட்சி, கணினி இப்படி பல்வேறு சாதனங்கள் செய்திகளை அறிய உதவினாலும் செய்தித்தாள்களை விரும்பி படிக்கும் பழக்கம் இன்னும் அனைவரிடமும் மிகுந்தே உள்ளது. காரணம் உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள முடியாவிட்டாலும் ஒரு செய்தியை பற்றிய அணைத்து தகவல்களையும் இந்த செய்திதாள்களின் மூலம் அறிய முடிகிறது என்பதால் மக்கள் இன்னும் செய்தித்தாள்களை விரும்பி படிக்கிறோம். உலகில் எக்கச்சக்கமான நாளிதழ்கள் உள்ளது. நம் இந்திய நாட்டை எடுத்து கொள்ளுங்கள் இதில் நூற்றுகணக்கான நாளிதழ்கள் உள்ளது.

இவைகள் அனைத்தையும் ஒரே பக்கத்தில் காணமுடியுமா? உலகில் எதனை நாளிதழ்கள் உள்ளது என்பதை ஒரே பகுதியில் காண முடியுமா என்றால் முடியும் என்பதே என் பதில். உலகில் உள்ள அனைத்து நாளிதல்களையும் ஒரே இணைய பக்கத்தில் காண முடியும்.




இந்த இணைய NewspaperMap.com பக்கத்தில் சென்றால் மேப் போன்று காணப்படும். வரைபடத்தில் இருந்து அந்தந்த நாடுகளில் உள்ள நாளிதழ்களை நாம் அறிந்து அந்த தளங்களுக்கு சென்று ஆன்லைனில் அந்த சித்திகளை இலவசமாக படித்து கொள்ளலாம். 

இந்த தலத்தில் பத்தாயிரத்திற்கும் அதிகமான ஆன்லைன் தளங்கள் உள்ளன. இந்த தலத்தில் மேலும் ஒரு பயனுள்ள வசதி இதில் செய்திதாள்களின் மொழிகளை ஒரே கிளிக்கில் கன்வெர்ட் செய்யும் வசதியும் உள்ளது.மற்றும் மொழிவாரியாகவும், இடம் வாரியாகவும் பிரித்து தேடிக்கொள்ளும் வசதியும் இதில் உள்ளது இது கண்டிப்பாக அனைவர்க்கும் பயனுள்ளதாக இருக்கும்.

File Finding Searchengine!!!!!








Go to this Link:Download without waiting from Filesharing sites like 4shared.com, 2shared.com, Mediafire.com etc.,






Saturday 28 September 2013

எந்த நோய்க்கும் மருந்து சாப்பிட தேவையில்லை!!!

நண்பர்களே, நீங்கள் எல்லோரும் சர்க்கரை நோயை பற்றி கவலைபடாதீர்கள். ஏன் என்றால் உலகில் சர்க்கரை நோய் செயற்கையாக மருந்து கம்பனிகளால் ஏற்படுத்தப்பட்டது. நீங்கள் ஒரு ஆறு மணி நேரம் செலவழித்தால் எந்த நோய்க்கும் மருந்து சாப்பிட தேவையில்லை .

நீங்கள் அந்த ஆறு மணி நேரத்திற்கு ஒரு பைசா கூட செலவு செய்ய தேவையில்லை. உங்களின் வேலை ஆறு மணி நேரம் ஒரு வீடியோவை பார்ப்பதுதான். நீங்கள் இன்சுலின் போட்டுகொண்டிருந்தாலும் கூட அடுத்த நிமிடத்தில் இருந்து நீங்கள் இன்சுலின் போட தேவையில்லை. 

நான் ஒரு சர்க்கரை நோயாளி. நான் ஐந்து வருடம் இன்சுலின் போட்டுக்கொண்டேன். ஆனால் இப்பொழுது மூன்று நேரமும் இனிப்பையே சாப்பிடுகிறேன், இன்சுலின் போடாமல் என்கிறார். இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் அவருடைய என்ற வலைதளத்திற்கு சென்று ஒரு ஆறு மணி நேர வீடியோவை பார்பதுதான். 

இது முற்றிலும் இலவசம் . நீங்கள் பார்த்துவிட்டு அந்த தமிழ் பையன் பாஸ்கருக்கு நன்றி சொல்லுங்கள். வாழ்க வளமுடன் . 


நண்பர்களே கடவுள் எவ்வளவு அற்புதமானவன் என்பது அதை பார்த்தவுடன் புரியும். உடனே அந்த பையன் ஒரு சாமியார் என்று நினைத்து விடாதீர்கள். அறிவியல் பூர்வமான விளக்கம் அது . ஒரு தடவை விளங்கி கொண்டீர்களானால் வாழ்நாள் முழுவதும் சந்தோசத்திற்கு குறைவில்லை.

உணவே மருந்து ஹிலர் பாஸ்கர் உரை: கண்டிப்பாக பார்க்க வேண்டியது. இதை காண இங்கே கிளிக்செய்யுங்கள் 

இவருடைய மருத்துவத்தை பற்றிய தினமணியில் வந்த கட்டுரை!! 

நாம் தண்ணீர் குடிக்கிறோம். தண்ணீர் குடிக்கும்போது இது கைக்காக அல்லது கழுத்துக்காக என்று தனியாகத் தண்ணீர் குடிப்பதில்லை. சாப்பிடுகிறோம். உடலின் ஒவ்வோர் உறுப்புக்கும்தனித்தனியாகச் சாப்பிடுவதில்லை. உடல் முழுவதற்கும்தான் சாப்பிடுகிறோம். ஆனால் மருத்துவம் மட்டும் கண்ணுக்கு என்றும், இதயத்துக்கு என்றும், சிறுநீரகத்துக்கு என்றும், தலைக்கு என்றும் தனித்தனியாகப் பார்க்கிறோம். இது எப்படிச் சரியாகும்?'' என்று கேட்கிறார் கோவையைச் சேர்ந்த பாஸ்கர்.

கடந்த ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக "செவி வழி தொடு சிகிச்சை' என்கிற பெயரில் தமிழ்நாடு முழுக்க தனது மருத்துவமுறையைப் பிரசாரம் செய்து வருகிறார் பாஸ்கர். ஹோமியோபதி, கல்கத்தா பல்கலைக்கழகத்தில் மாற்று மருத்துவத்துக்கான பட்டயப் படிப்பு முடித்தவர் பாஸ்கர். 

செவி வழி தொடு சிகிச்சை பற்றி கூட்டங்களில் பேசுவதோடு, அது தொடர்பான டிவிடிகளையும் வெளியிட்டு அச் சிகிச்சை முறையைப் பரப்பி வருகிறார். அவரிடம் செவி வழி தொடு சிகிச்சையைப் பற்றிக் கேட்டோம். 

"நமது உடல் கோடிக்கணக்கான செல்களால் ஆனது. ரத்தநாளங்கள் மூலம் செல்களுக்குத் தேவையான பொருள்கள் சென்று சேர்கின்றன. அதுபோல கழிவுகளும் ரத்தநாளங்கள் மூலமாகவே கழிவு உறுப்புகளுக்குச் சென்று வெளியேறுகின்றன. உடலில் உள்ள எந்த செல்லுக்கு நோய் வந்தாலும், அதற்கு முக்கியமான சில காரணங்கள் இருக்கின்றன.

ரத்தத்தில் உள்ள பொருட்கள் கெட்டுப் போவது ஒரு காரணம். ரத்தத்தில் இருக்க வேண்டிய பொருட்கள் இல்லாமற் போவது இன்னொரு காரணம். நமது உடலுக்குத் தேவையான அளவுக்கு ரத்தம் இல்லாமல் போவது மூன்றாவது காரணம். நமது உடலில் உள்ள செல்கள் குறிப்பிட்ட ஒழுங்குமுறையுடன் செயல்படுகின்றன. அப்படிச் செயற்படாமல் போவது நான்காவது காரணம். நோய் வாய்ப்பட்டவுடன் அல்லது நோயுற்றதாக நினைத்தவுடன் நம் மனம் பாதிக்கப்படுவது ஐந்தாவது காரணம்.

இந்தக் காரணங்களில் முதலில் சொன்ன மூன்று காரணங்களையும் நாம் சரி செய்துவிட்டால் மீதம் உள்ள இரண்டு காரணங்களும் தானாகவே சரியாகிவிடும். அப்படியானால் இதயம் பாதிப்படைந்தால், சிறுநீரகம் பாதிப்படைந்தால், கண்கள் பாதிப்படைந்தால் பாதிக்கப்பட்ட செல்களைச் சரி செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட செல்களைச் சரி செய்ய,  செல்களுக்குத் தேவையான சத்துகளைத் தரும் ரத்தத்தைச் சரி செய்ய வேண்டும்.

அதாவது ரத்தத்தில் உள்ள பொருள் கெட்டுப் போகாமல் இருக்க வேண்டும். ரத்தத்தில் இருக்க வேண்டிய எல்லாப் பொருட்களும் உரிய அளவில் இருக்க வேண்டும். உடலுக்குத் தேவையான அளவு  ரத்தம் இருக்க வேண்டும். தனியாக இதயத்துக்கு என்றும், சிறுநீரகத்துக்கும் என்றும் சிகிச்சை தேவையில்லை. இதுதான் செவி வழி தொடு சிகிச்சையின் அடிப்படை.
அப்படியானால் ரத்தத்துக்குத் தேவையான சத்துகளை எப்படி அளிப்பது?

நாம் உண்ணும் உணவில் இருந்தே ரத்தத்துக்குத் தேவையான சத்துப் பொருட்கள் கிடைக்க முடியும். அப்படியானால் எதை உண்ணுவது? எப்படி உண்ணுவது?

முதலில் பசி வந்த பின்புதான் சாப்பிட வேண்டும். உடலில் உள்ள செல்களுக்குச் சத்துகள் தேவை என்னும்போதுதான் நமக்குப் பசி எடுக்கிறது. எனவே பசிக்காமல் சாப்பிடக் கூடாது.

அடுத்து சாப்பிடும் உணவு நல்லபடியாகச் செரித்து அதிலுள்ள சத்துகள் உடலில் சேர வேண்டும். வாயைத் திறந்து, திறந்து அவசர அவசரமாக உணவை விழுங்குவதைத் தவிர்க்க வேண்டும். வாயைத் திறந்து மூடுவதன் காரணமாக உணவுடன் காற்றும் வயிற்றுக்குள் செல்கிறது. உணவை வாயில் போட்டவுடன், உதட்டை மூடிக் கொண்டு, உணவு கூழ் போல் ஆகும்வரை மென்று, உணவின் சுவையை நாக்கு உணருமாறு செய்து அதற்குப் பின்பு விழுங்க வேண்டும். 

இவ்வாறு செய்வதால் நாக்கில் ஊறும் உமிழ்நீருடன் உணவு கலந்து வயிற்றுக்குள் செல்கிறது. உமிழ்நீர் உணவை நன்கு செரிக்கச் செய்கிறது. எனவே அவசரமாகச் சாப்பிடக் கூடாது.

இரண்டாவதாக, சாப்பிடுவதற்கு முன்பும், சாப்பிடும்போது, சாப்பிட்ட பின்பும் நிறையத் தண்ணீர் குடிப்போம். நல்ல பசி உள்ள வேளையில் வயிற்றில் ஜீரண நீர்கள் சுரக்கின்றன. நாம் தண்ணீர் குடிக்கும்போது, ஜீரண நீர்கள் நீர்த்துப் போகின்றன. இதனால் செரிப்பதில் பிரச்னை ஏற்படுகிறது. அதாவது, நாம் உண்ணும் உணவில் உள்ள சத்துகள் உடலில் முழுமையாகச் சேர்வதில்லை.

மூன்றாவதாக, குளித்தவுடனேயே சாப்பிடக் கூடாது. நீங்கள் வெந்நீரிலோ, தண்ணீரிலோ குளிக்கும்போது நமது உடலின் வெப்பநிலை மாறுபடுகிறது. அப்படி மாறும் வெப்பநிலையை - உடலின் வெப்பநிலைக்கு - அதாவது 37 டிகிரி சென்டிகிரேடு அளவுக்குக் - கொண்டு வர நமது உடலில் உள்ள செல்கள் முழுக்க முயற்சி செய்கின்றன. குளித்து முடித்தவுடன் உடலில் ஏற்பட்ட வெப்பநிலை மாறுதலை சரி செய்வதற்காக, உடலின் செல்கள் செயற்பட்டுக் கொண்டு இருக்கும்போது, நாம் சாப்பிட்டால் உணவு ஜீரணமாவதில் பிரச்னை ஏற்படும். 

அதேபோன்று சாப்பிட்டதும் குளிக்கக் கூடாது. தண்ணீர் குடிப்பதிலும் நமக்குச் சரியான தெளிவில்லாமல் இருக்கிறோம். எவ்வளவு தண்ணீர் குடிப்பது? உடலுக்குத் தண்ணீர் தேவையென்றால் தாகம் எடுக்கும். தாகம் எடுத்தவுடன் தேவைப்படும் அளவுக்குத் தண்ணீர் குடித்தால் போதுமானது.

தேவையான அளவுக்குத் தூங்க வேண்டும். தேவையான அளவு தூக்கம் என்பது மனிதருக்கு மனிதர் மாறுபடும். கடுமையான உடல் உழைப்பாளிக்கு அதிகத் தூக்கம் தேவைப்படும். ஏஸி அறையில் கம்ப்யூட்டர் முன்பு உட்கார்ந்து மூளை உழைப்புச் செய்பவருக்கு அதிகத் தூக்கம் தேவைப்படாது. எனவே தூக்கம் வரவில்லை என்று தூக்க மாத்திரைகளை விழுங்குவதில் அர்த்தமில்லை. தூக்கம் வரவில்லை என்றால் கண்ணை மூடிக் கொண்டு படுத்து ஓய்வு எடுக்க வேண்டும். தூக்கம் வரும்போது தூங்கிக் கொள்ள வேண்டும். போதுமான அளவு தூங்கினால்தான் செல்கள் உடலில் நன்கு செயல்பட முடியும். 

செல்லுக்கு அறிவு உண்டு. தேவையான சத்துப் பொருட்கள் உரிய அளவில் இருந்தால் கெட்டுப் போன செல்கள் தம்மைத் தாமே சரி செய்து கொள்ளும். எவற்றைச் சாப்பிடுவது? உணவு வகைகளில் சமைக்காமல் அப்படியே சாப்பிடும் சுவையுள்ள பழங்கள், வெள்ளரி போன்ற காய்கள் போன்றவற்றுக்கு நாம் முதலிடம் கொடுக்க வேண்டும். அதற்கடுத்து முளைவிட்ட தானியங்களைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். சமைத்த சைவ உணவுக்கு அடுத்த முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அசைவ உணவு வகைகளுக்கு அதற்கு அடுத்த முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். டீ, காப்பி, மது போன்றவற்றைச் சாப்பிடக் கூடாது.

எவற்றை மட்டும் சாப்பிட்டு நாம் மூன்றுநாட்களுக்கு மேல் உயிரோடு இருக்க முடியுமோ, அவையெல்லாம் உணவு. எவற்றை மட்டும் சாப்பிட்டு மூன்று நாட்களுக்கும் மேல் உயிரோடு இருக்க முடியாதோ, அவையெல்லாம் உணவு அல்ல. மது போன்றவை உணவல்ல. உடல் உழைப்பு உள்ளவர்களைத் தவிர, பிறர் உடற் பயிற்சி, நடைப் பயிற்சி, யோகாசனம் போன்றவற்றைச் செய்து வந்தால் நோயின்றி வாழலாம். வந்த நோயையும் சரிப்படுத்திவிடாலாம். 

இதுதான் நான் கூறும் எளிய மருத்துவமுறை. உதாரணமாக என்னையே எடுத்துக் கொள்ளுங்களேன். சிறுவயது முதல் தீராத தலைவலி, உடலெங்கும் புண்கள், வயிற்று வலி, மலச் சிக்கல் போன்றவற்றால் அவதிப்பட்டேன். எல்லாரும் நன்றாக இருக்கிறார்கள்; எனக்கு மட்டும் ஏன் இப்படி? என்று நொந்து தற்கொலை செய்யும் அளவுக்குப் போய்விட்டேன். உடல் நோய் காரணமாக எந்த இடத்திலும் வேலை செய்ய முடியவில்லை. 

பல மருத்துவர்களிடம் சென்று மருந்து, மாத்திரைகள் சாப்பிட்டும் பயனில்லை. அதன் பிறகு, நானே எனக்குச் செய்து கொண்ட மருத்துவம்தான் இது. ஆனால் வெளிப்புறத்திலிருந்து உடலுக்குத் தாக்குதல் ஏற்பட்டால், உதாரணமாக கீழே விழுந்து கால் எலும்பு முறிந்தால் அதை இந்த மருத்துவமுறையின் மூலம் சரி செய்ய முடியாது. அதற்கு மாவுக் கட்டோ, அறுவைச் சிகிச்சையோ செய்துதான் சரி செய்ய முடியும்'' என்றார்.

படங்கள்: கூகிள் & பாஸ்கரின் இணையதள

VLC Player பல புதிய வசதி!!!

VLC Player பல புதிய வசதிகளுடன் 2.1 VLC Player ஐப் பயன்படுத்தி குறிப்பிட்ட வீடியோ பகுதியை மட்டும் எவ்வாறு வெட்டி வெட்டி எடுக்கலாம்!...

இன்று நாம் வீடியோ கோப்புக்களின் ஏராளமான வடிவங்களை அவதானிக்கின்றோம் உதாரணமாக .WMV, .3GP, .MKV, MP4 என பட்டியலிட்டுக்கொண்டே செல்ல முடியும். என்றாலும் இந்த அனைத்து வடிவங்களையும் எமது கணனியில் தரப்பட்டுள்ள Media Player மூலம் இயக்க முடிவதில்லை எனவே நாம் கணனியிலேயே தரப்படும் Media Player இனை விட்டு விட்டு மூன்றாம் நபர் மென்பொருளினை பயன்படுத்துவதுண்டு அந்த வகையில் VLC Media Player ஆனது அநேகமானவர்களின் அபிமானத்தை வென்ற ஒரு Media Player ஆகும்.

மேலும் இதனை சிறுவர் முதல் பெரியோர் வரை அனைத்து தரப்பினராலும் இலகுவாக பயன்படுத்த முடியும் என்பதுடன் பல சுவாரஷ்யமான வசதிகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது. இவைகள் தவிர ஏராளமான வீடியோ கோப்பின் வடிவங்களையும் இதன்மூலம் இயக்க முடிகின்றமை குறிப்பிடத்தக்கது.

பல புதிய வசதிகளுடன் மேம்படுத்தப்பட்ட 2.1 எனும் இதன் பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது இலவசமாகவே தரவிறக்கிக் கொள்ள முடியுமான இதனை நீங்களும் தரவிறக்க விரும்பினால் கீழுள்ள இணைப்பில் செல்லவும்.

http://www.videolan.org/vlc/releases/2.1.0.html

VLC Player ஐப் பயன்படுத்தி காணொளி ஒன்றின் (Video) தேவையான பகுதி ஒன்றை எவ்வாறு வெட்டி எடுக்கலாம் என்று காண்போம்.

VLC Player இல் காணொளி ஒன்றை திறந்து கொள்ளுங்கள். பின் View->Advanced Controls என்பதை தெரிவு செய்யுங்கள்.

நீங்கள் தெரிவு செய்தவுடன் சில பொத்தான்கள் தோன்றும். இப்போது காணொளியின் தேவையான இடத்தில் Record பொத்தானை அழுத்துங்கள்.

பின் வெட்ட வேண்டிய பகுதியின் இறுதிப் பகுதி வந்ததும் மறுபடியும் Record பொத்தானை அழுத்துங்கள்.

இப்போது காணொளியின் வெட்டப்பட்ட பகுதி உங்கள் கணணியில் சேமிக்கப்பட்டுவிடும்.

இயங்கு தளம் Windows 7 எனில், My Videos இல் சேமிக்கப்படும் இந்த வீடியோ பகுதி சேமிக்கப்பட்டு விடும். இந்த முறையைப் பயன்படுத்தி ஒலிக்கோப்புகளில் இருந்தும் தேவையான பகுதியை வெட்டி எடுக்கமுடியும்.


Wednesday 25 September 2013

அறியப்படாத GOOGLE இன் சேவைகள் !!!



அறியப்படாத GOOGLE இன் சேவைகள் !!

1. என்கிரிப்டட் சர்ச் (Encrypted Search):

தேவையானவற்றைத் தேடுவதற்கு இது ஒரு வேகமான தேடுதளம். இந்தத் தளத்தின் முகவரி encrypted.google.com.வங்கிகள் பயன்படுத்தும் Secure Socket Layers (SSL) பாதுகாப்பான கட்டமைப்பினை இந்த தளம் பயன்படுத்துகிறது. 2010 மே மாதம் முதல் இந்த சேவை வாடிக்கையாளர்களுக்குத் தரப்பட்டு வருகிறது.

2. கூகுள் திங்க் (Google Think)

கூகுள் நிறுவனத்திடம் இருந்து, தங்கள் வர்த்தக செயல்பாடுகளுக்கான ஆலோசனையை இந்த சேவை மூலம் அனைவரும், குறிப்பாக விளம்பர பிரிவு மற்றும் அதனைப் போல சேவைத் தளங்களில் இயங்குபவர்கள், பெற்றுக் கொள்ளலாம். இங்கு கிடைக்கும் பல ஆய்வுகள், ஆய்வு முடிவுகள், நேர்காணல்கள் ஆகியவை பலரது வாழ்வில் புதிய திருப்பத்தினைத் தந்ததாகப் பலரும் கூறி உள்ளனர்.

3. கூகுள் மாடரேட்டர் (Google Moderator):

பலவகைத் தலைப்புகள் குறித்து இங்கு இலவசமாகக் கலந்து ஆலோசிக்கலாம். கருத்துக்களை வரவேற்று, எந்த ஒரு வாடிக்கையாளரும், புதிய இழை ஒன்றை உருவாக்கலாம். கேள்விகளைக் கூடப் பதியலாம். இந்த தளத்திற்கு வரும் எவரும் இது குறித்து கருத்து தெரிவிக்கலாம். குறிப்பிட்ட கருத்தை வரவேற்று அதற்கு வாக்களிக்கும் வசதி கூட இதில் உள்ளது. முதல் கேள்விகள், நீல நிறப் பின்னணியில் மையக் கேள்வியாகக் காட்டப்படும். மற்றவர்கள் இது குறித்து தகவல் தெரிவிக்கலாம். ஒரு கருத்துரு அல்லது தலைப்பின் கீழ் துணைப் பிரிவுகளையும் உருவாக்கலாம்.

4. கூகுள் சவுண்ட் சர்ச் (Google Sound search): இது ஒரு விட்ஜெட் எனப்படும் அப்ளிகேஷன். நம்மைச் சுற்றி இசைக்கப்படும் இசை மற்றும் பாடல்களை அறிந்து அடையாளம் கொள்ள இது உதவி புரிகிறது. கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து, அடையாளம் காணப்பட்ட பாடல்களை விலைக்கு வாங்க முடியும். அடையாளம் காணப்படும் பாடல்களின் பட்டியலை உருவாக்கி வைத்து, பின்னொரு நாளில் கேட்கலாம் மற்றும் வாங்கலாம்.

5 . கூகுள் ஸ்கீமர் (Google Schemer):

தாங்கள் மேற்கொள்ள வேண்டிய வேலைகளைப் பகிர்ந்து கொண்டு, அவற்றை மேற்கொள்வதற்கான வழிகளைத் தெரிந்து கொள்ள இந்த தளம் உதவுகிறது. மேற்கொள்ளப்பட இருக்கும் வேலைகள் எது வேண்டுமானதாகவும் இருக்கலாம். ஓர் அருங்காட்சியகம் செல்லுதல், நண்பர்களுடன் கூட்டாகக் கலந்துரையாடல், வார இறுதிக்கான சுற்றுலா செல்ல இடம் தேர்ந்தெடுத்தல் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஏற்கனவே இது போல கலந்துரையாடப்பட்டு வரையறை செய்யப்பட்ட திட்டங்களும் இதில் கிடைக்கும்.

6. பவர் சர்ச்சிங் வித் கூகுள் (Power searching with Google):

தேடுதல் தளம் தான், கூகுள் நிறுவனத்தின் வலிமையே. அந்த வகையில், எப்படி சிறப்பாக நம் தேடுதலை அமைத்துக் கொள்ளலாம் என்று, இந்த தளத்தில், கூகுள் நமக்கு டிப்ஸ் தருகிறது. இணையத்திலேயே பயிற்சியும் தரப்படுகிறது. இதன் மூலம் மேம்படுத்தப்பட்ட வழிகளை, தேடுதலுக்கென நாம் தெரிந்து கொள்கிறோம்.

7. பில்ட் வித் குரோம் (Build with chrome):

ஆஸ்திரேலியா நாட்டு நிறுவனமான லெகோவுடன் இணைந்து கூகுள் அமைத்த தளமே பில்ட் வித் குரோம். இது ஒரு நவீன இணைய தொழில் நுட்பமாகும். இங்கு பிரவுசர் வழியாக, முப்பரிமாணப் படங்களைக் காணலாம். பயனாளர்களும் தங்களின் முப்பரிமாண உருவங்களை அமைக்கலாம். இதில் செயலாற்றுவது மிகவும் வேடிக்கை நிறைந்ததாக உள்ளது.

8. கூகுள் ஆர்ட் ப்ராஜக்ட் (Google Art Project):

இது கூகுள் தரும் ஸ்ட்ரீட் வியூ போன்றதாகும். மியூசியம்,கலை அரங்கங்கள் ஆகியவற்றிற்கு, வாடிக்கையாளர்கள், இணைய வெளியிலேயே சுற்றுலா மேற்கொள்ளலாம். கலைத் துறையில் முன்னணியில் ஈடுபடும், 40 நாடுகளைச் சேர்ந்த 151 வல்லுநர்களுடன் இணைந்து இந்த தளத்தினை கூகுள் அமைத்துள்ளது. மியூசியம் நிர்வாகிகளிடமிருந்து அளப்பரிய தகவல்களும், கூகுள் நிறுவனத்தின் நவீன தொழில் நுட்பமும் இந்த தளத்தில் இணைந்து வாடிக்கையாலர்களுக்கு நல்லதொரு அனுபவத்தினைத் தருகின்றன.

9. கூகுள் ஸ்காலர் (Google Scholar):

இலக்கியம், ஆய்வு கட்டுரைகள், கல்வித் துறை சார்ந்த பதிப்புகள், இணைய வெளி தகவல் சேமிப்புகள், ஆய்வுச் சுருக்கங்கள் மற்றும் நீதிமன்றம் வெளியிடும் கருத்துகள் ஆகியவை குறித்து உரையாட இது ஒரு நல்ல தளம். மிகப் பெரியதாக விரிந்து இருந்தாலும், இதனை அணுகுபவர்கள், தங்களுக்குத் தேவையானதை மிக எளிதாகப் பெற்று இயங்கலாம்.

10. கூகுள் மார்ஸ் (Google Mars):

அரிசோனா பல்கலையில் உள்ள, நாசா விண் வெளி ஆய்வு விஞ்ஞானிகளுடன் கூட்டாக இணைந்து, சிகப்பு கிரகமான மார்ஸ் குறித்த மேப் ஒன்றை கூகுள் தயாரித்துள்ளது. இது ஏறத்தாழ கூகுள் எர்த் போன்றதாகும். அதன் மூலம் நாம் எப்படி பூமியின் அனைத்து பாகங்களுக்கும் சென்று வர முடிகிறதோ, அதே போல மார்ஸ் கிரகத்திற்கு, கூகுள் இதில் பாதை அமைத்துத் தருகிறது. மார்ஸ் எப்படி தோற்றமளிக்கும் என்பதனை நாம் கண்டு கொள்ள அருமையான தளம் இது.

Tuesday 24 September 2013

PDF கோப்புக்களை உருவாக்கிக்கொள்வதற்கான இலவச மென்பொருள்!!!

கணனியில் பயன்படுத்தப்படும் பல்வேறு கோப்பு வகைகளுள் டெக்ஸ் (Text) , மற்றும் புகைப்படங்கள் அடங்கியவற்றினை மிகவும் பாதுகாப்பாக சேமித்து வைப்பதற்கு PDF கோப்புக்கள் அதிகளவில் பயன்படுத்தப்பட்டுவருகின்றன.
இதனால் ஏனைய கோப்புக்களையும் PDF கோப்புக்களாக மாற்றுவதற்கு பல்வேறு மென்பொருட்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. எனினும் இவற்றில் குறைந்தளவு வசதிகள் தரப்பட்டுள்ளதுடன், பணம் செலுத்தி கொள்வனவு செய்யவேண்டிய தேவை காணப்படுகின்றது.

ஆனால் doPDF எனும் மென்பொருளானது விண்டோஸ் இயங்குளங்களில் பயன்படுத்தக்கூடியதாகக் காணப்படுவதுடன் சிறந்த பயனர் இடைமுகத்துடன் கூடியதாக இலவசமாகக் கிடைக்கின்றது.

4 MB கோப்பு அளவுடைய இம்மென்பொருளின் உதவியுடன் பின்வரும் கோப்புக்களை PDF கோப்பாக மாற்றியமைக்க முடியும்.

Word documents

Excel sheets

PowerPoint presentations

AutoCad drawings

Contracts

Workflows

Agreements

Marketing plans

Forms

Products list

Price list

Chart

Email

Web page 

http://www.dopdf.com/download/setup/dopdf-7.exe 

நன்றி லங்கா ஸ்ரீ 

இரசம் !!!

தென்னிந்திய உணவுப் பட்டியலில் (குறிப்பாக தமிழகத்தில்) இரசம் ஓர் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. மதிய உணவு விருந்துகளில் இதன் முக்கியத்துவம் அதிகம். தென்னிந்தியாவில் இரசம் இல்லா மதிய உணவு இல்லை என்றே கூறலாம்.

இதன் செய்முறை பலவகைகளில் செய்யப் படுகிறது. உணவு சமைப்பது என்பது ஒரு கலை. உணவுப் பொருட்களின் சத்துக்கள் பாழாகி விடாமல் கெடுதல் தரும் அம்சங்களை நீக்கி நன்மை தரும் அம்சங்களை மேம்படுத்திடும் வகையிலும் சமையல் செய்யப்படவேண்டும். நாவுச்சுவையை மட்டுமே கருத்தில் கொண்டால் உணவுகளின் நன்மைதரும் தன்மைகளில் பலவற்றை இழக்க நேரிடுகிறது. இவ்வகையில் இரசம் பல்வேறு பக்குவங்களில் தயாரிக்கப் படுகிறது. எனினும் அவற்றில் ஒரு சிறப்பான முறையைப் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

பழைய புளி - ஒரு எலுமிச்சையளவு சீரகம், மிளகு தலா அரை தேக்கரண்டி, பூண்டு 5 பல், பச்சை மிளகாய் இரண்டு, கருவேப்பிலை, பெருங்காயம், கொத்துமல்லி இலை, மஞ்சள் தூள் அரை தேக்கரண்டி, (கரும்பு) வெல்லம் சிறிய துண்டு, தக்காளி இரண்டு (நாட்டுத்தக்காளி சிறப்பானது), உப்பு தேவையான அளவு, முளைக்க வைத்துக் காயவைத்து தூள் செய்யப்பட்ட கொள்ளு தானியப் பொடி 11/2 தேக்கரண்டி.

செய்முறை :

அரிசி கழுவிய நீர் சுமார் 500 மில்லியில் புளியை முப்பது நிமிடங்கள் ஊறவைத்து நன்றாக கரைத்து வடிகட்டி எடுத்த புளிக்கரைசலுடன் சீரகம், மிளகு மற்றும் பச்சை மிளகாயை ஒன்றிரண்டாக அரைத்து, பூண்டுட பல்லை ஒன்றிரண்டாக நசுக்கி, தக்காளியை சிறு துண்டுகளாக அரிந்து (அல்லது பிசைந்து) விதையை நீக்கி சேர்த்து வெல்லம், மஞ்சள் பொடி, உப்பு, கொள்ளுப்பொடி அனைத்தையும் போட்டுக் கலக்கியபின் வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெயில் கடுகு, உளுந்து, பெருங்காயம் சேர்த்து தாளித்து புளிக் கரைசலை ஊற்றிக் கொதிக்கவிடாமல் வெள்ளை நுரை தோன்றியதும் இரசத்தை அடுப்பிலிருந்து இறக்கி சல்லடையில் வடிகட்டியபிறகு கொத்துமல்லி இலை தண்டு வேருடன் நீரில் அலசி இரசத்தில் போடவும். கறிவேப்பிலையை ஈர்க்குடன் அடுப்புத்தணலில் (அல்லது கேஸ் தணலில்) லேசாக வாட்டி இரசத்தில் போட்டு முப்பது நிமிடங்கள் மூடி வைத்தபின் உட்கொள்ளலாம். துவரம்பருப்பு வேகவைத்த நீர் சிறிது சேர்த்தால் இரசத்தின் சுவை அதிகப்படுவதுடன் குடல்கள் பலமடைந்திடவும் உதவுகிறது. இரசத்தைக் கொதிக்கவிடுவதனால் அதன் சுவை குறைந்து விடுகிறது. இந்த முறையில் தயாரிக்கப்படும் இரசத்தில் சேர்க்கப்படும் சிறந்த மருத்துவ குணங்களைத் தன்னகத்தே கொண்ட உணவுப் பொருட்களின் நன்மை தரும் அம்சங்கள் மேம்படுத்தப்படுகின்றன. இது எப்படி எனில்:

சீரகம் :

உடலின் உள் உறுப்புக்களை சீர்படுத்தும் தன்மையை தன்னகத்தே கொண்டது. உடல் உறுப்புக்களின் சீர்கேடுகளை, குறைபாடுகளை சீர்ப்படுத்துகிறது என்னும் காரணமாகவே சீர்-அகம் (அகம் என்றால் உடலின் உள்ளே எனப் பொருள்படும்) என நம் முன்னோர் காரணப் பெயரிட்டார்கள். செரிமான செயல்கள் துரிதமாகவும் முறையாகவும் நடைபெற உதவும் செரிமானச் சாறுகளை சீரகம் இதமாகத் தூண்டுகிறது. உடலின் பித்த அதிகரிப்பை இயல்புநிலைக்கு மாற்றுகிறது.

மிளகு :

மலையில் விளையும் மருந்துப் பொருளான மிளகு சில வகை இயற்கை வேதிப் பொருட்களையும் சிறு அளவில் கொழுப்பும் கொண்ட மருத்துவ உணவுப் பொருளாகவும் மற்றும் சுவையூட்டியாகவும் பயன்படுகிறது. உணவில் நாமறியாமல் சேர்ந்துவிடும் நச்சுக்களை முறித்து உடலை விட்டு வெளியேற்றும் மருந்தாகவும் உதவுகிறது. (பத்து மிளகு கையிலிருந்தால் பகைவன் வீட்டிலும் விருந்துண்ணலாம் என்னும் மருத்துவ பழமொழி உள்ளது) செரிமானச் செயல்பாட்டை இதமாகத் தூண்டுகிறது. குடலில் தேங்கும் அழுக்குகளை நீக்குகிறது.

பூண்டு :

உடலுக்குப் பல நன்மைகளைத் தரும் இயற்கை அமிலங்களைக் கொண்டது. இரைப்பை மற்றும் குடல்களில் தேங்கும் வாயுக்களைக் கலைத்து வெளிப்படுத்துகிறது. இரத்த நாளங் களில் உறைந்த நிலையில் தேங்கிக் கிடக்கும் கெடுதல் தரும் கொழுப்புக்களைக் கரைத்து உடலைவிட்டு வெளிப்படுத்துகிறது. பெருங்குடலில் தேங்கிக் கிடக்கும் உணவுகளின் காரண மாக பெருங்குடலில் புளிப்புத்தன்மை ஏற்படுகிறது என்பதால் அவ்விடத்தில் புழுக்கள் உற்பத்தியா வதைப் பூண்டு தடுத்துவிடுகிறது. இரத்த ஓட்டத் தில் தடையை ஏற்படுத்தும் சிறு இரத்தக்கட்டிகள் மற்றும் கெடுதல் தரும் கொழுப்புக் கட்டிகளையும் படிப்படியாகக் கரைத்து விடுகிறது.

பச்சை மிளகாய் :

மனித உடலில் அடிக்கடி சளி ஏற்படாம லிருக்கவும், சருமத்தில் நோய் தாக்காமல் இருக்கவும் மூட்டுக்களில் நீர் தேங்கி மூட்டுவலி ஏற்படாமலிருக்கவும் உண்ணப்படும் உணவுகளி லிருந்து சுண்ணாம்புச்சத்து (Calcium) உடலில் சேர்க்கப் படவும் அஸ்கார்பிக் அமிலம் என்ற விஞ்ஞானப் பெயரால் அழைக்கப்படும் (விட்டமின் - சி) தேவைப்படுகிறது. இந்த அமிலச் சத்து உடலில் தேக்கப்படுவதில்லை. இச்சத்து அன்றாடம் மனித உடலுக்கு மிகமிகச் சிறு அளவில் தேவைப்படுகிறது. வளரும் குழந்தைகளுக்கு இந்த அமிலம் ஈடில்லா நன்மைகளைச் செய்கிறது.

குறிப்பாக கர்ப்பிணிகளுக்கு இச்சத்து பல்வேறு சிக்கல்கள் ஏற்படாமல் தடுக்கிறது. நாம் உண்ணும் உணவுகள் ஒரு சிலவற்றில் அஸ்கார்விக் அமிலம் சிறு அளவில் உள்ளது, ஆனால் தரமானதாக சமைக்கப்படாத பச்சை மிளகாயில் மட்டும் அதிக அளவில் உள்ளது. சமையல் வெப்பத்தினால் பச்சை மிளகாயில் உள்ள இந்த அமிலம் வெளியேற்றப்பட்டு வீணாகிவிடுகிறது. நம் தமிழகத்தில் தேங்காய் சட்னி தவிர பச்சை மிளகாய் சமையலில் சமைக்கப்பட்டோ, எண்ணெயில் பொரிக்கப்பட்டோ மட்டும் உண்ணப்படுகிறது. வட இந்தியர்களின் உணவுப் பட்டியலில் தவறாமல் பச்சை மிளகாய் இயற்கை நிலையில் வாரத்தில் சில பல நாட்கள் தவறாமல் இடம் பெறுகிறது.

நடைபாதை சிற்றுண்டி சாலைகள் முதல் ஐந்து நட்சத்திர அந்தஸ்துள்ள ஹோட்டல்களிலும் வெஞ்சனமாக (Side dish) பச்சை மிளகாய், சிறு துண்டு, முள்ளங்கி வட்டமாக நறுக்கி நீரில் கழுவப்படாமல் காற்றில் உலர்த்தப்பட்ட வெங்காயம், நறுக்கப்பட்ட எலுமிச்சம் பழம், தக்காளி துண்டுகள் ஆகிய இவையனைத்துமோ அல்லது அவற்றில் ஒன்றிரண்டோ தவறாமல் உணவுகளுடன் வழங்கப்படுகிறது. அல்லது பச்சை மிளகாய், புதினா, உப்பு ஆகியவைகளை ஒன்றிரண்டாக அரைத்த சட்னி வழங்கப்படுகிறது. இவைகளை அடிக்கடி உட்கொள்ளுபவர்களுக்கு சரும நோய்

எளிதில் பற்றுவதில்லை. எலும்புகள், பற்கள் ஆகியவைகளில் வலி மற்றும் சீர்கேடுகள் ஏற்படுமுன்னரே தடுக்கப்பட்டுவிடுகின்றன. செரிமானம் முழுவீச்சில் நடைபெறுகிறது. தசைகள் மற்றும் எலும்புகள் இறுக்கமானவை களாகவும் உறுதியானவைகளாகவும், எடை உயர்ந்த ஆரோக்கியமான கட்டுடல் ஏற்படுகிறது.

சமைக்காமல் இயற்கை நிலையில் உண்ணப்படும் தேங்காய், தக்காளி பழம், (நாட்டுத் தக்காளி, விதை நீக்கி) எலுமிச்சம் பழம் (குடிநீரில் சிறு அளவில் எலுமிச்சம்பழச்சாறு கலந்து உணவுக்கு இடையீடாக பருகுதல் செரிமானம் சிறப்பாக நடைபெற உதவுகிறது) பச்சை மிளகாய், முள்ளங்கி, கொத்துமல்லி இலை, காரட் போன்ற உணவுகளின் சிறப்புச் சத்துக்கள் வீணாகாமல் முழுமையான நன்மைகளைத் தருகின்றன. இவைகளை நெருப்பில் சூடுபடுத்தினாலும் நீரில் கொதிக்க வைத்தாலும்; எண்ணெயில் பொரித்தாலும் இவைகளின் நன்மை தரும் அம்சங்களில் பெருவாரியான சத்துக்கள் அவ்வுணவுப் பொருட்களிலிருந்து வெளியேற்றப் பட்டு வீணாகிவிடுகின்றன. இந்த வரிசையில் பழ வகைகள், நெல்லிக்காய் ஆகியவற்றையும் சேர்க்கலாம்.

இளம் வயதில் அடிக்கடி சளித்தொல்லை கள் (அதாவது சைனஸ் தொல்லை, ஆஸ்த்மா, தும்மல், இருமல் என நீங்கா சளித்தொல்லைகள்) அதனை சீர்ப்படுத்தும் வகைக்காக (Control) இரசாயன மருந்துகளை மாத்திரை வடிவிலும், ஊசியினால் உடலுக்குள் பலவந்தமாகத் திணித்தும், உடலாரோக்கியம் பலமாக சேதமடைந்து இயல்பு நிலையிலிருந்து வேறுபட்டு நோயாளராகவே வாழ்க்கையை ஓட்டும் துர்ப்பாக்கிய நிலை. நடுத்தர வயதான 40 வயதில் எலும்புகள் உடலின் பல பகுதிகளிலும் தேய்ந்து சீர்படுத்திட இயலா மூட்டு நோய், எலும்பு நோய் என நொந்து நூலாகிவிடாமல் இயல்பான ஆரோக்கிய வாழ்வு வாழ்ந்திட இயற்கை உணவுகளை உட்கொள்ள வேண்டும் (Prevention is better then cure)

வடஇந்தியர்களில் பொருளாதாரத்தின் மிக நலிந்த நிலையிலுள்ள (ஏழ்மையான மக்கள், சாலைப் பணியாளர்கள், கல் உடைக்கும் தொழி லாளிகள், கட்டிட வேலை போன்ற) கடின உழைப்பு செய்து வாழ்க்கை நடத்துபவர்களின் உணவுப் பட்டியல் என்பது மிக மிகச் சிறியது. ஆனால், ஆரோக்கியம் மிகுந்தவர்களாக உடல் பருக்காத, விரைவில் களைப்படையாத இறுக்க மான தசைகளுடன் பகல் முழுவதும் கடின உடல் உழைப்பை இச்சமுதாயத்திற்குக் கொடுப்பதன் சூட்சுமம்தான் என்ன?

விலை உயர்ந்த டானிக்குகளா? பட்டியலிடப் பட்ட சிறப்புச் சத்துக்களைக் கொண்ட உணவு களா? எண்ணைக் கலப்பில்லாமல் நேரடியாக நெருப்பினால் வாட்டப்பட்ட கோதுமை சப்பாத்தியும் அதனுடன் பச்சை மிளகாய், துண்டாக நறுக்கப்பட்ட பெரிய வெங்காயம், முள்ளங்கி, உப்பு இவைகள் மட்டுமே. துணை உணவாக (Side dish) உட்கொள்ளுகிறார்கள். கடின உடல் உழைப்பினால் இவ்வுணவுகள் முழுமையாக செரிக்கப்பட்டு உடலாரோக்கியம் சீராகப் பராமரிக்கப்படுகிறது.

இந்த உணவுகளை சமைத்தோ, எண்ணெ யில் பொரித்தோ (நாவுச் சுவையை மட்டும் கருத்தில் கொள்ளுபவர்கள்) உண்ணுபவர்களுக்கு இயற்கை உணவுகளின் நன்மைதரும்ந இன்றியமை யாச் சிறப்புக்களில் பெரும்பகுதி வீணாக்கப்பட்டு சக்கைகளைமட்டுமே உண்டு உடலில் போதுமான ஜீவாதார சத்துக்களில்லா பலவீனமான உடல் நிலை ஏற்பட்டு பல்வேறு (டானிக், சிறப்பு சத்துணவு போன்ற) ஆர்ப்பாட்டங்களை மேற் கொள்ள வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்படுத்தப்படுகின்றன.

சிறுவயது முதலாகவே மேலே குறிப்பிடப் பட்டுள்ள இரசத்தை பகல், இரவு உணவுகளில் வாரத்தில் சில நாட்கள் உண்டு வந்தால் பற்பல நன்மைகளை எளிதில் படிப்படியாக அடைந்து ஆரோக்கியத்தை தக்கவைக்கலாம்.

வியர்வையின் வழியாக உடலின் கழிவுகள் தினசரி 300 கிராம் அளவு கெடுதல் தரும் உப்புக்கள் (நச்சுக்கள்) வெளியேற்றப்படுகின்றன என நவீன ஆய்வறிக்கை பேசுகிறது.

உடல் உழைப்பு குறைவானவர்கள், மற்றும் வியர்வை வெளியேறுவது கூடாது என்ற எண்ணம் கொண்டவர்கள் (?) மின் விசிறி மற்றும் குளிர்சாதனப் பெட்டியின் அருகில் அமருபவர்கள் (Air Condition) உடலின் மிகப்பெரிய ஜன்னலான சருமத்தின் வியர்வை நாளங்களின் வழியாக (வியர்வையின் வழியாக) தேவையற்ற கழிவுகளான உப்புக்கள் வெளியேற்றப்படாமல் மறுக்கப் படுகிறது என்பதின் காரணமாக அவ்வகைக் கழிவுகளை சிறுநீரகங்கள் (Kidney) வெளியேற்று கிறது. தனது வேலைப் பளுவுடன் அதிகப்படியான இக்கழிவுகளையும் உடலை விட்டு நீக்கிட சிறுநீரகங்கள் வரம்புமீறி (தனது சக்திக்கும் அதிகப்படியாக) வேலை செய்து விரைவில் சோர்வடைந்து முடிவில் செயலிழப்பு ஏற்பட்டு, உயிராபத்தாகிவிடும் வாய்ப்பாகிறது.

இவ்வகையில் வியர்வை ஏற்படாமல் சொகுசு வாழ்க்கை வாழ்பவர்களின் வியர்வை நாளங்கள் படிப்படியாக செயல்திறனை இழந்து விடுகின்றன. அவ்வாறான வியர்வை நாளங்களை இதமாகத் தூண்டி செயல்படச் செய்யும் இயற்கை வேதிப் பொருட்கள் சமைக்கப்படாத பச்சை மிளகாயில் உள்ளன.

புளி-மிளகாய் வற்றல் ஆகிய உணவுகள் மேலை நாடுகளில் குறிப்பாக இங்கிலாந்தில் உண்ணப்படுவதில்லை. அந்நாடுகளில் மூட்டு வலி - சிறுநீரகச் செயல் இழப்பு ஆகியவை அதிக அளவில் உள்ளன என புள்ளிவிபரம் கூறுகிறது.

பலமில்லா உடல்பருமன் கோளாறு இன்றைய நாட்களில் சிறுகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏற்பட்டு பல்வேறு சிகிச்சை முறைகளிலும் உடல் பருமனைக் குறைத்திட முடிவதில்லை. மேலே குறிப்பிட்ட இரசத்தில் இயற்கை நிலையில் பல்வேறு உணவுப் பொருட்கள் பச்சை மிளகாயுடன் கூட்டுப் பொருளாக இருப்பதன் காரணமாக, வாரத்தில் பல வேளைகள் இந்த இரசத்தை உண்டு வந்தால் வாழ்நாள் முழுவதும் உடல் பருமன் நோய் ஏற்படாமல் தடுக்கலாம். விஞ்ஞான மருத்துவங் கள் தேவையில்லாதவைகளாகிவிடும்.

அமெரிக்க “ட்யூக்” பல்கலைக்கழக ஆய்வறிக்கையில் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில் சிவப்பு மிளகாய் குறித்த ஆய்வு முடிவுகள் விஞ்ஞானிகளிடையே பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நாள் வரையிலும் (காலங்காலமாக) மிளகாய் குடலுக்குக் கேடு தரும் என அறிவியலார் நம்பிவந்தனர். ஆனால் ஆய்வில் மிளகாய் குடலில் ஏற்படும் பல்வேறு வகையிலான சீர்கேடுகளை சீர்ப்படுத்துகிறது என ஆய்வில் அறியவந்துள்ளது.

பண்டைய காலம் முதல் நம் முன்னோர் பட்டறிவில் பதிவு செய்த பற்பல ஆய்வுகளை அறிவியல் உலகம் மிகமிகத் தாமதமாக (மிகச் சிறு அளவில்) கண்டுபிடித்து வியக்கிறது.

மேலும் இதய நோய்கள் - குறிப்பாக மாரடைப்பு நோய் ஏற்படு முன்னரே மிளகாய் அதைத் தடுத்துவிடுகிறது. குடலில் தேங்கும் பூச்சி புழுக்களை அங்கு சேரவிடாமல் தடுத்துவிடுகிறது. சிவப்பு மிளகாயிலுள்ள “கேப்சாய்ஸ்” எனப்படும் இயற்கை வேதிப்பொருளை புற்றுநோயாளியின் உடலின் செலுத்தியதில் புற்றுநோயின் வீரியம் குறைகிறது என ஆய்வறிக்கையில் கூறப்பட் டுள்ளது.

கருவேப்பிலை :

வாசனைப் பொருளாகவும், உடலைக் காக்கும் மருந்தாகவும் செயல்படுகிறது. வாய் முதல் ஆசனவாய் வரையிலுள்ள உடலின் உள் உறுப்புகளில் புண்கள் ஏற்படாமலும், அவை இருந்தாலும் விரைவில் அவற்றை கருவேப்பிலையில் உள்ள இயற்கை வேதிப் பொருள் ஆற்றுகிறது. மூளையை சுறு சுறுப்பாக செயல்படத் தூண்டு கிறது. கறிவேப்பிலையில் விட்டமின் - அசத்து அதிக அளவில் உள்ளதாக நவீன மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன. கண்களைப் பாதுகாக்கும் இந்த உயிர்ச்சத்து சில உணவுப் பொருட்களில் இருந்தாலும் தரமானதாகவும் போதிய அளவிலும் கறிவேப்பிலையில் உள்ளது.

கொத்துமல்லி இலை :

சமையல் சூட்டினால் பெருவாரியான சத்துக்களை இழந்துவிடுகிறது. இயற்கை நிலையில் பல்வேறு நன்மைகளைச் செய்கிறது. மனநிலை சீர்கேட்டை சீர்படுத்துகிறது. உடலில் சேரும் அதிகப்படியான பித்தத்தை சமனப்படுத்து கிறது. குறிப்பாக குழப்பமான மனநிலையைத் தெளிவுபடுத்துகிறது.

மஞ்சள் பொடி :

சக்திவாய்ந்த கிருமிநாசினி, உடலின் எந்தப் பகுதியிலும் சேர்ந்துவிடும். தீமை தரும் கிருமிகளை அழித்துவிடுகிறது. குடலில், இரைப்பையில் புண் போன்ற குறைபாடுகளை நீக்குகிறது. உள் உறுப்புகள் முறையாகச் செயல்பட உதவுகிறது. இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது. தமிழகத்தில் மழைக்கால தொற்றுநோய்கள் பரவி வருகின்றன.

எனினும் இந்தியர்களுக்கு இயல்பாகவே நோய் எதிர்ப்பு சக்தி ஐரோப்பிய நாடுகளில் உள்ளவர்களை விட அதிகமாக உள்ளது. இதற்கு இந்தியர்கள் வாழும் சூழலே அவர்களது உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்துகிறது என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். இந்தியர்களின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதற்கு அவர்கள் சமையலில் பயன்படுத்தும்; வாசனைப் பொருளான மஞ்சளும் ஒரு காரண மாக இருக்கலாம் என்ற கோணத்திலும் ஆய்வுகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

மஞ்சளுக்குத் தொற்றுநோய்கள் மட்டுமன்றி கேன்சரை குணப்படுத்தும் ஆற்றலும் உள்ளது என வெப்செஸ்டர் பல்கலைக்கழக மருத்துவ விஞ்ஞா னிகள் கண்டுபிடித்துள்ளனர். மஞ்சளை பயன்படுத்தி நோய் எதிர்ப்புசக்தி தரும் மருந்துகள் எதிர்காலத்தில் பரவலாகப் பயன்படுத்தப்படும் என இந்த ஆய்வு முடிவுகள் நம்புகின்றன.

(கரும்பு) வெல்லம் :

புளி நீருடன் சேர்ந்து, செரிமான அமிலங் களின் சுரப்புகளை ஒழுங்குபடுத்தி, செரிமான செயல்பாட்டினை தீவிரத்தை விரைவு படுத்து கிறது. உடலில் தேங்கும் அதிகப்படியான பித்தத்தின் கெடுதல் தரும் தன்மையை மாற்றி, பித்தத்தின் அளவை இயல்பு நிலைக்கு மாற்று கிறது.

பண்டைய காலம் முதல் கடந்த 30, 40 ஆண்டுகளுக்கு முன்பு வரை கோடை நாட்களில் நடைபெறும் கோவில் விசேஷங்களின் போது “பானகம்” எனப்படும் பானம் அனைவருக்கும் இலவசமாக கொடுக்கும் வழக்கமிருந்தது. (இன்றைய நாட்களில் அப்பழக்கம் மறைந்து விட்டது) நீராகக் கரைக்கப்பட்ட பழைய புளியின் கரைசல் நீரில் சரியளவாக நாட்டுச் சர்க்கரை மற்றும் சிறுஅளவில் ஏலக்காய் சேர்த்து தயாரிக்கப்பட்ட பானம்தான் “பானகம்” என அழைக்கப்பட்டது. கோடை வெப்பத் தாக்குதல் காரணமாக பலருக்கும் குடல் வறட்சி ஏற்படும். இதன் காரணமாக வாந்தி, வயிற்றுப்போக்கு, அடிவயிற்றில் வலி (சூட்டுவலி), வாய் உலர்வு மற்றும் உதடுகளில் வறட்சி காரணமாக அடங்கா நீர்த்தாகம் - உதடுகள் உரிந்து - வெடித்து இரத்தக் கசிவு போன்ற சீர்கேடுகளில் ஒன்றிரண்டோ அல்லது அனைத்துமோ ஏற்படும்.

குடலில் ஏற்படும் வறட்சியைப் போக்கி அவைகளின் செயல் மேம்பாடுகள் மேம்பட பானகம் உதவுகிறது. பழைய புளியின் கரைசலும் நாட்டுச்சர்க்கரையும் (அல்லது மண்டவெல்லம் எனப்படும் கரும்பு வெல்லம்) சமஅளவில் சேர்க்கப்பட்டால் இவை இரண்டும் சேர்ந்து வேதியியல் மாற்றங்களை ஏற்படுத்தி விடும் காரணமாக மேலே கண்ட நன்மைகளை அடையலாம். இயற்கையை நமக்கு சாதகமாக்கி வாழ்வியல் நடைமுறைகளை மற்றும் (நமது அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்திடும் நடைமுறை) உணவே மருந்தாகும் தந்திரத்தை உலகிலுள்ள எந்த நாட்டிலும் இல்லை. நம் கலாச்சாரத்தில் மட்டுமே பரந்து விரிந்து வாழ்க்கை முறையாயிற்று. எலும்பு மஜ்ஜைகளில் வரம்புமீறிய வெப்பம் தாக்கப்பட்டால் அம்மை ஏற்பட்டு விடும் வாய்ப்பாகிறது. கடுமையான வெயில் காலங்களில் இத்தகைய பாதிப்புகள் ஏற்பட்டுவிடுமுன்னரே தவிர்க்கப்பட்டுவிடும் வாய்ப்பாகிறது மழை மற்றும் குளிர்காலங்களில்; இத்தகைய பானங்களை பருகலாகாது.

பெருங்காயம் :

பசியைத் தூண்டுகிறது. வயிற்றிலும் குடலிலும் சேரும் வாயுக்களைக் கலைத்து, உடலை விட்டு வெளியேற்றி செரிமானம் முறையாக நடைபெற உதவுகிறது. இதன் மணம் உணவுச் சுவையை அதிகப்படுத்துகிறது. நரம்பு மண்டலத் தில் வாயு தேங்கினால் மட்டுமே பக்கவாத நோய் ஏற்படும். அவ்வகை வாயுக்களைக் கலைத்து வெளி யேற்றுகிறது.

புளி :

பழைய புளி மட்டுமே உட்கொள்ளச் சிறந்தது. (சுவை மிகுந்தது. அதிக நன்மை தருகிறது) புதிய புளி சுவை குறைவானது. ஒரு சில பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. புதிய புளி செரிமான அமிலங்களை வரம்புமீறி சுரக்கத் தூண்டுகிறது. பழைய புளி செரிமான அமிலங் களின் சுரப்புகளில் ஏற்படும் ஏற்றக் குறைவுகளை ஒழுங்குபடுத்தி, அளவாக சுரக்கச் செய்து, செரிமானச் செயலின் குறைபாட்டை சீர்படுத்து கிறது. (காட்டில் புலி “வீட்டில் புளி” என கிராமப் புறங்களில் கூறுவதுண்டு. இதன் பொருள், வரம்பு மீறி உட்கொள்ளப்படும் புளி உடல்நலத்தைக் கெடுக்கிறது எனக் கொள்ளலாம்).

நம் உடலின் சிறு தொழிற்சாலை எனக் கூறப்படும் கல்லீரலின் செயல்திறனை இதமாகத் தூண்டி அதனை சிறப்பாக முழுத்திறனுடன் இயக்க நீராகக் கரைக்கப்பட்ட புளி உதவுகிறது. மேலும் நீராகக் கரைக்கப்பட்ட புளியுடன் (கரும்பு) வெல்லம் சேர்க்கப்பட்டால் கல்லீரலின் செயல்பாடுகள் மேம்படும். கெட்டியான புளிக்கரைசல் கல்லீரலை வரம்பு மீறி தூண்டுகிறது என்பதன் காரணமாக கல்லீரல் வரம்புமீறி செயல்பட்டு அதன் செயல்திறன் படிப்படியாக குறைவுபட நேரிடுகிறது. புளி மட்டுமல்ல, (அதிகப்படியான புளிப்புச்சுவை கல்லீரலை பாதிக்கிறது. அதிகப்படியாக புளிக்க வைத்த தயிர், மோர், வரம்புமீறிய புளிச்சுவை கொண்ட பழங்கள், பழச்சாறுகள் போன்றவை) தயிர் மற்றும் மோருடன் சூடான சாதத்தை இணைத்து உண்டால், அவ்வுணவு வயிற்றில் வரம்புமீறிய புளிப்புச் சுவையை ஏற்படுத்திவிடுகிறது.

இதன் காரணமாக கல்லீரல் பலமாகத் தாக்கப்பட்டு மஞ்சள் காமாலை போன்ற உயிராபத்தான நோய்கள் ஏற்படும் வாய்ப்பாகிறது. சாதம் ஆறிய பின்னர் தயிர் மற்றும் மோர் இணைத்து உண்பது சிறந்தது. சாம்பார், இரசம் போன்றவற்றில் நீராகக் கரைக்கப்பட்ட பழைய புளி சேர்க்கவேண்டும். இது கல்லீரலை இதமாகத் தூண்டி அதன் செயலாற்றல் மேம்பட உதவுகிறது. அதிகப்படியான அடர்த்தியான புளி ரத்தத்தின் அடர்த்தியை அதிகப்படுத்துகிறது. இரத்த நாளங்களில் இரத்த ஓட்டம் விரைந்து நடைபெற அடர்த்தி குறைந்த இரத்தம் உதவும். அடர்த்தி அதிகம் கொண்ட ரத்தம் ரத்த ஓட்டத்தை மந்தப்படுத்தும். உடலிலுள்ள சன்னமான ரத்த நாளங்களில் அடர்த்தி அதிகமுள்ள ரத்தம் பாய்ந்தால் ரத்தம் அழுத்தம் அதிகப்படுகிறது. (High Blood Pressure) இரத்தம் இயல்புக்கும் குறைவான வேகத்தில் ஓட்டம் நடைபெற்றால் (Low Blood Pressure) குறைந்த இரத்த அழுத்தம் எனக் கூறப்படுகிறது.

இவை இரண்டுமே இயற்கை நிலைக்கு முரண்பட்டவைகளாகும். இரத்தத்தின் அடர்த்தி குறைவானதாக இருந்தால் உடலின் பொது ஆரோக்கியம் பாதிக்கப்படவில்லை என நம்பலாம். நம் உடல் முழுவதும் உள்ள இரத்த நாளங்களில் கண்கள் மற்றும் ஆண் பெண் இன உறுப்புக்களில் மிகமிக சன்னமான இரத்த நாளங்களுள்ளன. இரத்தத்தின் அடர்த்தி இயல்பு நிலையிலிருந்தால் - இவ்வுறுப்புக்களில் அமையப் பெற்றுள்ள மிகமிக சன்னமான இரத்த நாளங்களில் இடைவிடாமல் ரத்த ஓட்டம் பாய்ந்து அவ்வுறுப்புகளின் செயல்திறன் இயல்பாக செயல்படும் வாய்ப்புண்டாகிறது. மாறாக இரத்தத்தின் அடர்த்தி அதிகமானால் இவ்விரு உறுப்புக்களிலும் இரத்த ஓட்டம் குறைந்து விடுவதன் காரணமாக கண்களிலும் இன உறுப்பு களிலும் அனைத்து வகைகளிலான குறைபாடு களும் படிப்படியாக (சிறுவயது முதலாகவே) ஏற்படுகின்றன.

கெட்டியான புளியினால் மட்டுமே இரத்தத்தின் அடர்த்தி அதிகப்படும் என்பதல்ல. பல்வேறுவகைக் காரணங்களினால் இந்நிலை ஏற்படுகிறது. அவற்றில் ஒரு காரணியாக கெட்டிக் கரைசலான புளியும் உள்ளது என்பதே கருத்தாகும். உடல் உழைப்பில்லாமல் சத்தான உணவுகளை மட்டுமே உண்ணுதலை வழக்கமாக்கிக் கொண்டவர்கள் உடலில் வியர்வை ஏற்படாத சொகுசான வாழ்க்கை வாழ்பவர்கள், எண்ணெயினால் பொரிக்கப்பட்ட அல்லது வறுக்கப்பட்ட உணவுகளை அடிக்கடி உண்ணு பவர்கள், குறைபாடான (அதாவது அரைகுறை யான செரிமான செயல்திறன் கொண்டவர்கள்) சிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள் ஆகியோருக்கு உடலில் இரத்தத்தின் அடர்த்தி அதிகப்பட்டு விடும் வாய்ப்பாகிறது.


நன்றி -கீற்று.காம்

Monday 23 September 2013

முடி கொட்டுவது நிற்க சில குறிப்புகள்!!!

முடி கொட்டுவது நிற்க சில குறிப்புகள்

* முடி கொட்டிய இடத்தில் ஐஸ் கட்டியை தடவினால் முடி வளரும்

* கசகசாவை பாலில் ஊரவைத்து அரைத்து அத்துடன் பாசிபருப்பு மாவை கலந்து தேய்த்து வர முடி உதிர்தல் நிற்க்கும்.

* நன்கு வளர கற்றாழை சாறில் தேங்காய் எண்ணெய் கலந்து தேய்த்தால் முடி உதிராது அடர்த்தியாகும் நன்றாக வளரும். அத்துடன் தலையும் குளிர்ச்சியாகும்.

* சிறிய வெங்காயத்தின் சாறை எடுத்து தலையில் தேய்த்து ஊறவைத்து குளித்தால் முடி உதிராது.

* செம்பருத்தி பூவுடன் தேங்காய் எண்ணெய் கலந்து தலையில் தேய்த்தால் முடி உதிராது அத்துடன் கூந்தல் கருமையாகவும் மாறும்.

* முட்டை வெள்ளை கருவை தலையில் தேய்த்து 10 நிமிடம் கழித்து சிகைகாய் போட்டு குளித்தால் தலைமுடி உதிர்வது சுத்தமாக நின்று விடும்.

* வாரம் ஒரு முறை முடக்கத்தான் கீரையை அரைத்து தலையில் தேய்த்து 5 நிமிடம் ஊறியதும் குளிக்கவும். இதுபோல் தொடர்ந்து மூன்று மாத காலம் குளித்து பர்க்கவும். முடி கொட்டுவது நின்று விடும் அதுமட்டும் அல்ல இந்த கீரை நரை விழுவதை தடுக்கும். கருகருவென முடி வளர தொடங்கும்.

Sunday 22 September 2013

அழகு குறிப்பு – கூந்தலை பராமரிப்பது எப்படி!!!



அழகு என்பதில் கூந்தல் முக்கியப் பங்கு வகிக்கிறது. பிறக்கும் போது ஒருவரின் தலையில் சராசரியாக 1,20,000 முடிகள் இருக்கும். தினம் 100 முடிகள் வரை உதிர்வது சகஜமானது தான். கூந்தலை பராமரிப்பதற்கான எளி ய முறைகளை காணலாம்.
கூந்தல் உதிர்வதற்கான காரணங்கள்
*ஆரோக்கியமற்ற உணவு மற்றும் இரும் பு சத்து குறைவான உணவு பழக்க வழக் கம்.
* மன உளைச்சல், கோபம், படபடப்பு.
* கூந்தலுக்கு அடிக்கடி செய்கிற கலரிங், ஸ்ட்ரெயிட்டனிங், பெர்மிங் சிகிச்சைகள்.
* கூரிய முனைகள் கொண்ட சீப்பினால் தலை சீவுவது மற்றும் அழுக்கடைந்த சீப்பை பயன்படுத்துவது.
* அளவுக்கதிகமான வெயில், உப்புக் காற்று, குளோரின் கலந்த நீர் மற்றும் சுற்றுப்புற மாசு.
முடி உதிர்வது நிற்க வேண்டுமா?
பெண்களுக்கு முடி கொட்டுவது தீராத பிரச் னையாக உள்ளது. முடி நன்கு வளர வேண் டுமானால், புரோட்டீன் சத்து அதிகம் உள்ள பொரு ட்களை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். இச்சத்து குறைவதால் தான் முடி உதிர்கிறது.
முடி உதிர்வதை தடுக்க சில எளிய முறை கள்:
*வாரம் ஒருமுறை முடக்கத்தான் கீரையை அரைத்து தலையில் தேய்த்து 5 நிமிடம் ஊறியதும் குளிக்கவும். இதுபோல் தொடர்ந்து மூன்று மாதகாலம் செய்து வந்தால், எந்த காரணத்தால் முடி கொட்டினாலும் நின்றுவிடும். அதோடு, இக்கீரை நரை விழுவ தையும் தடுக்கும். முடியும் கருகருவென வளரும்.
*இரவில் நெல்லிக்காய்களை தண்ணீ ரில் ஊறப்போட்டு, காலையில் அந்நீ ரில் எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து த லையில் தேய்த்து குளித்து வந்தால் முடி உதிர்வது நிற்கும். செம்பட்டை முடியும் நிறம் மாறும்.
*தலைமுடி நன்றாக வளர கற்றாழைச் சாறில் எண்ணெய் கலந்து தலையில் தேய்க்கலாம். இப்படி செய்து வந்தால் முடி உதிராது, அடர்த்தியாகவும் வள ரும். தலையும் குளிர்ச்சியாக இருக் கும்.
நரைமுடி கருப்பாக வேண்டுமா?
பெரும்பாலானவர்களுக்கு சிறுவயதிலேயே நரை முடி தோன்றி விடுகிறது. சிலருக்கு வம்சா வளியாக வும் நரை வருவதுண்டு. கவலை, மனச்சோர்வு, டீ, காபி அதிகம் குடித்தல் போன்றவற்றால் பித்த நரை உண்டாகும். வைட்டமின் பி12 நரையை போக்க வல் லது.
* மருதாணி இலையை நன்கு மைபோல் அரைத்து, அதில் எலு மிச்சம் பழச்சாறையும், வெந்தயம் பவுடர் இரண்டு ஸ்பூன் கலந்து கொள்ள வேண்டும். இக்கலவையை முதல் நாள் இரவே செய்து கொள்ள வேண்டும். காலையில் எழுந்ததும், இக்கலவையை அனை த்து முடிகளிலும் படும்படி நன்றாக தேய்த்து இரண்டு அல்லது மூன்று மணிநேரம் ஊறவைத்து பிறகு சிகைக் காய்த்தூள் தேய்த்து நல்ல தண்ணீ ரில் கழுவ வேண்டும். குறிப்பாக ம ருதாணியை போடு வதற்கு முன், தலையில் எண்ணெய் பசை இல் லாதவாறு பார்த்து கொள்ள வேண் டும்.
* கறிவேப்பிலையை ஒருநாள் வி ட்டு ஒருநாள் துவையல் அரை த்து சாப்பிட வேண்டும். காபி, டீ குடிக்கும் பழக்கம் இருந்தால், படிப் படி யாக குறைத்து அறவே நிறுத்தி விடவேண்டும்.
பொடுகு தொல்லையா?
பொடுகு தானே என அலட்சியமாக இரு ந்து விடாதீர்கள். தலைக்கு குளித்தபின் முடியை உலர்த்தாமல் இருந்தாலோ, அழுக்கான தலை முடியுடன் இருந்தா லோ மற்றும் அதிக உஷ்ணத்தி னாலோ பொடுகு தோன்றுகிறது. பொடுகு வரா மல் தவிர்க்க ஒருவர் பயன்படுத்திய சீப் பு, தலையணை, டவல் போன் றவற்றை கண்டிப்பாக பயன்படுத்தக் கூ டாது.
* நெல்லிமுள்ளி, வெந்தயம், சிறிது மிள கு இவற்றை ஊறவைத்து மைபோல அரைத்து தலையில் தடவி ஒரு மணிநே ரம் ஊறிய பிறகு, நன்கு அலசினால் பொடுகு தொல்லை மறையும்.
* நீலகிரி தைலத்தை சூடாக்கி தலையில் தடவி, வெந்நீரில் ஒரு பெரிய துவாலை யை நனைத்து தலையில் கட்டி விடுங்கள். பிறகு நன்கு அலசி விடவும்.
* தேங்காய் எண்ணெயுடன் சிறிது கற்பூ ரத்தை போட்டு வைத்து, அந்த எண்ணெ யை தொடர்ந்து தேய்த்து வந்தால் பொடு கு மறைந் து விடும்.
பேன் தொல்லை நீங்க வேண்டுமா?

முடியில் அழுக்குகள் சேர்வதாலும், வியர் வை பெருக்கத்தாலும், பேன் உள்ளவர்கள் பயன்படுத்தும் சீப்பை உபயோகிப்பதன் மூலமும் பேன் தோன்றுகிறது. இதனு டைய முக்கியமான உணவுத் தலை யில் உள்ள ரத்தம் தான்.
*வசம்பை தண்ணீர் விட்டு அரைத்து, தலை யில் நன்றாக தேய்த்து ஊறியதும் அலசினால் பேன் போகும். வேப்பிலை போட்டு கொதி க்க வைத்த தண்ணீரில் தலைமுடியை அலசினா லும் பேன் தொல் லை நீங்கும்.
*கருந்துளசி இலைகளை தலையணையின் மே லே நன்றாக பரப்பி வைக்கவும். அதன்மேல் மெல்லிய துணியைப் போர்த்தி அத்துணி யின் மேல் படுத்து உறங்கவும். இவ்வாறு செய்து வந் தால், எல்லா பேன்களும் இறங்கி ஓடி மறைந்து விடும். சத்தான உணவு இல்லா மல், எப்படிப் பட்ட விலை உயர்ந்த ஷாம்பு மற்றும் ஆயில்களை பயன்படுத் தினாலும் கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்க முடியாது. எனவே, உண வு பழக்கவழக்கத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள்.
நன்றி: சிவா