Tuesday 1 April 2014

மைசூர் மெதுபகோடா!!!



தேவையான பொருட்கள்

தேவையானவை:
அரிசிமாவு 1 கப்
கடலைமாவு 1 கப்
நெய் 6 டீஸ்பூன்
சமையல்சோடா 2 சிட்டிகை
முந்திரி பருப்பு 8
பச்சை மிளகாய் 4
இஞ்சி சிறிதளவு

செய்முறை

செய்முறை:
நெய்யை சமையல் சோடாவுடன் சேர்த்து விரல் நுனிகளால் நுரைக்க தேய்க்கவும்.
அரிசிமாவு,கடலைமாவுடன் பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய்,இஞ்சி,வறுத்த
முந்திரிபருப்பு,உப்பு,கருவேப்பிலை ஆகியவற்றை கலக்கவும்.
பின்னர் நெய்,சமயல்சோடா கலவையில் கலக்கவும்.
சிறிது தண்ணீர் விட்டு சப்பாத்திமாவு போல பிசைந்து
சிறு சிறு உருண்டைகளாக உருட்டி எண்ணையில் பொரிக்கவும்.
தொட்டுக்கொள்ள தேங்காய் சட்னி நன்றாக இருக்கும்.