Saturday 12 April 2014

தவலை அடை / தவலை தோசை!!!

தவலை அடை / தவலை தோசை



தவலை தோசை________________
1. அரிசி, து.பருப்பு, மிளகு(optional), முதலியவற்றை ஒன்றிரண்டாக உடைத்துக்கொள்ளவும்.

2. தேங்காய்த் துருவல், தயிர், ஜீரகம், பச்சை மிளகாய்(பொடியாய் நறுக்கியது) முதலியவை கலந்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.

3. வாணலியில்(குழிவு வாணலி) சிறிதே எண்ணை விட்டு, ஒரே ஒரு தோசை வார்த்து, அதை மூடி வேக விடவும்(திருப்பிப் போடுதல் வேண்டாம்).

4. சூடான தக்காளி-வெங்காய சட்னி, அல்லது தேங்காய்ச் சட்னியுடன் பறிமாறவும்.

5. பாராட்டைப் பெறவும். (hehe)

தவலை அடை
_____________

செய்முறை ஒன்று
~~~~~~~~~~~~~~
1. அரிசி உப்புமா அல்லது பிடி கொழுக்கட்டைக்கு உள்ள சாமான்களை அரைவேக்காட்டில் வேக வைக்கவும்.

2. குழிவு வாணலியில், சிறிதே எண்ணை விட்டு, வடைபோல் தட்டி, மேல் புறம் மூடி வேக விடவும்.

3. பொட்டுப் பொட்டாய் நீர் மேல் இருந்தால் வெந்து விட்டது என்று அர்த்தம். முறுகலான அடிபாகத்துடனும், மெதுவான மேல்பாகத்துடனும், தேங்காய் சட்னியுடன் சாப்பிட சுவையாய் இருக்கும்.

செய்முறை இரண்டு
~~~~~~~~~~~~~~~
1. அரிசி உப்புமா மாவை, உப்புமா செய்வதற்கு முன்பே எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்

2. அதனுடன் கறிவேப்பிலை சேர்த்து, கடுகு, பெருங்காயம், ஜீரகம் முதலியவை தாளிதம் செய்யவும்.

3. நீர் சேர்த்து சற்றே கரகரப்பாய் கலந்து வைத்துக்கொள்ளவும்

4. குழிவு வாணலியில் ஒன்றொன்றாய் விட்டு, இருபுறமும் *நிறைய எண்ணை விட்டு* shallow fry செய்து எடுக்கவும்.

5. எதையாவது தொட்டுக் கொண்டு சாப்பிடவும். :D