Tuesday 18 November 2014

வரவு – செலவு கணக்கு… கைகொடுக்கும் ஃபைனான்ஷியல் ஆப்ஸ்!!!

தினசரி நாம் செய்யும் செலவு களைக் குறித்து வைக்கும் பழக்கம் இன்றைக்கு பெரும்பாலா னவர்களுக்குக் கிடையாது. இதனால் என்னதான் நாம் சம்பாதித்தாலும், மாத கடைசியில் சம்பளம் அத்தனை யும் எப்படி செலவானது, எதற்காக எவ்வளவு செய்தோம் என்று தெரியாமல் முழிப்போம். நம் தினப்படி செலவுகளை யாராவது குறித்து வைத்துச் சொன்னால் நன்றாக இருக்குமே! அதனோடு நாம் சேமிக்க வேண்டிய தொகை என்ன, கட்ட வேண்டிய கடன் எவ்வளவு என்பதையெல்லாம் கண்டுபிடித்துச் சொன்னால் நன்றாக இருக்குமே என்று நினைக்கத் தோன்றுகிறது அல்லவா? இந்த மாதிரியான ஒரு வேலையைத்தான் இன்றைய பல ஃபைனான்ஷியல் ஆப்ஸ்கள் செய்கின்றன. அவற்றுள் ஒரு சில ஆஃப்ஸ்களைப் பற்றி இப்போது பார்ப்போம்.

மை பட்ஜெட் புக்!
Rating   4.6
இந்த ஆப்ஸ் ஒருவரது செலவு மற்றும் வருமானம் ஆகியவற்றைப் பதிவு செய்து, அதன் மூலம் அவரது நிதித் திட்டமிடலுக்கு உதவுகிறது. இதில் உங்களின் வருமானம் மற்றும் தினசரி செலவை பதிவு செய்துவந்தாலே போதும்; இந்த மாதத்தில் உங்கள் செலவு எப்படி இருக்கும், நீங்கள் இன்னமும் எவ்வளவு தொகையைச் சேமிக்க வேண்டும் என்பது போன்ற விவரங்களை இந்த ஆப்ஸ் தானாகவே திரட்டி, திட்டம் போட்டுத் தந்துவிடும். அதற்கேற்ப உங்கள் செலவுகளை நீங்கள் மாற்றியமைத்துக் கொள்ளலாம்.
இந்த ஆப்ஸைப் பயன்படுத்த இன்டர்நெட் வசதி தேவையில்லை. இதனை ஆங்கிலம் உள்பட 11 மொழிகளில் பயன்படுத்திக் கொள்ளலாம். எந்த நாட்டின் பணமாக இருந்தாலும், அதற்கேற்ப இந்த பட்ஜெட் புக் சரியான திட்டமிடலைச் செய்யும் திறன்கொண்டதாக இருக்கிறது.
இதில் நீங்கள் உங்கள் வங்கிக் கணக்கையும் இணைத்துக் கொள்ளலாம் என்பதால் அதிகப் பாதுகாப்புடன் இந்த ஆப்ஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் உங்கள் வங்கிப் பரிவர்த்தனைகள் மற்றும் தினசரி செலவுகள் ஆகியவற்றை எக்ஸ்எல் படிவங்களாகத் தரவிறக்கம் செய்துகொள்ளும் வசதியும் உள்ளது.
இந்த ஆப்ஸை கூகுள் ப்ளே ஸ்டோரில் வாங்கலாம். இந்த ஆப்ஸின் விலை 212 ரூபாய் மட்டுமே. புதிய அப்டேட்களும் அடிக்கடி இலவசமாகவே கிடைக்கின்றன. 5-க்கு 4.6 ரிவியூ பெற்றிருக்கும் இந்த ஆப்ஸ் நிதித் திட்டமிடலுக்கான சிறந்த ஆப்ஸாக உள்ளதாக இதைப் பயன்படுத்துபவர்கள் சொல்கிறார்கள். இதுவரை 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்துள்ளனர். இதன் கடைசி அப்டேட் ஆகஸ்ட் 2014-ல் வெளிவந்துள்ளது.
ஃபைனான்ஷியல் கால்குலேட்டர்!
Rating 4.3 
சிலர் மூன்று, நான்கு இடங்களில் கடன் வாங்கியிருப்பார்கள். எவ்வளவு அசல் கட்டியிருக்கிறோம், எவ்வளவு தொகை கடன் பாக்கியுள்ளது, இஎம்ஐ தொகை இந்த மாதம் எவ்வளவு செலுத்த வேண்டும் என்பதெல்லாம் தெரியாமலே மாய்ந்து மாய்ந்து கடனைக் கட்டிக் கொண்டிருப்பார்கள்.  இந்தப் பிரச்னையைத் தீர்க்க இப்போது பல ஆப்ஸ்கள் ஸ்மார்ட் போன்களில் வரத் துவங்கிவிட்டன. ஃபைனான்ஷியல் கால்குலேட்டர் எனும் இந்த ஆப்ஸ் ஒருவரது அனைத்து ஃபைனான்ஷியல் கணக்குகளையும் கணக்கிட்டுச் சொல்லும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதில் நமது முதலீடுகளில் இருந்து நமக்கு வரவேண்டிய தொகை மற்றும் நாம் வாங்கியுள்ள கடனுக்குச் செலுத்த வேண்டிய வட்டி ஆகியவற்றுக்கான தகவல்களை அளித்தால் அதுவே கணக்கிட்டுச் சொல்லிவிடுகிறது.
இந்த ஆப்ஸ் கூகுள் ப்ளே ஸ்டோரில் இலவசமாகக் கிடைக்கிறது. இந்த ஆப்ஸ் 5-க்கு 4.3 ரிவியூ பெற்றிருக்கிறது. இந்த ஆப்ஸ் ஃபைனான்ஷியல் கணக்கீடுகளுக்கு உதவும் சிறந்த ஆப்ஸ் என பயன்பாட்டாளர்கள் கூறியிருக்கின்றனர். இதுவரை 50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்துள்ளனர். புதிய அப்டேட்களும் அடிக்கடி இலவசமாகவே கிடைக்கின்றன.
தினசரி செலவுகளைச் சமாளிக்கும் ‘டெய்லி எக்ஸ்பென்ஸ்’!
Rating    4.5
தினசரி நாம் எவ்வளவு செலவு செய்கிறோம் என்பது தெரியாமலே செலவு செய்கிறவர்களுக்குத் தடுப்புக்கட்டை போடுகிற ஆப்ஸ்தான் இது. இதன்மூலம் ஒருவர் தனது மாத வருமானத்தில் ஒரு நாளைக்கு எவ்வளவு செலவு செய்திருக்கிறார், அதன் மூலம் மாத வருமானம் எப்படி குறைந்திருக்கிறது, இந்த விகிதத்தில் செலவழித்தால், இந்த மாதம் அவரது வருமானத்தில் எவ்வளவு பணம் மிச்சம் இருக்கும் என்பதைக் கணித்துத் தரும் வகையில் இந்த ஆப்ஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த ஆப்ஸை பயன்படுத்தி தினசரிக் கணக்குகளுக்கான வார, மாத விவரங்களை கிராபிக்ஸ் படங்களாக பெற முடியும். இதில் நாம் பயன்படுத்தும் நாட்டின் பணத்துக்கேற்ப விவரங்களை மாற்றிக்கொள்ள முடியும். இந்த ஆப்ஸ் கூகுள் ப்ளே ஸ்டோரில் இலவசமாக கிடைக்கிறது. இதற்கு 5-க்கு 4.5 ரிவியூ பெற்றிருக்கிறது.
தினசரி வரவு – செலவுகளைக் கணக்கிட இது மிகவும் உதவியாக இருப்பதாக இதைப் பயன்படுத்துபவர்கள் சொல்கிறார்கள்.  இதுவரை 10 லட்சத்துக்கும் அதிகமானவர்கள்  இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்துள்ளனர். புதிய அப்டேட்களும் அடிக்கடி இலவசமாகவே கிடைக்கின்றன.
வருமான வரி கணக்கிட இன்கம் டாக்ஸ் அசிஸ்டென்ட்!
Rating   4.4
பலருக்கும் வருமான வரி என்றாலே வேப்பங் காய்தான். ஆனால், வருமான வரியை வருட ஆரம்பம் முதலே எப்படியெல்லாம் திட்டமிடலாம் என்பதை அழகாக எடுத்துச் சொல்கிறது இந்த ஆப்ஸ். நமது சேமிப்புக் கணக்குத் தொடர்பான விவரங்களையும், பிஎஃப் தொகை பங்களிப்பு மற்ற முதலீடுகளின் பங்களிப்பு என அனைத்துக்கும் ஏற்றவாறு கணக்கிட்டு நம் வருமான வரியை எப்படித் திட்டமிட வேன்டும் என்பதையும் எக்ஸ்எல் படிவங்களாக தந்துவிடுகிறது.
இந்த ஆப்ஸ் கூகுள் ப்ளே ஸ்டோரில் இலவசமாகக் கிடைக்கிறது. இந்த ஆப்ஸ் 5-க்கு 4.4 ரிவியூ பெற்றிருக்கிறது. இந்த ஆப்ஸ் வருமான வரித் திட்டமிடலுக்கு உதவும் வகையில் சிறப்பான ஆப்ஸாக கருதப்படுகிறது என்கின்றனர் இதைப் பயன்படுத்துகிறவர்கள்.
கடந்த ஜூலை மாதம் வெளியான இந்த ஆப்ஸை இதுவரை 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தரவிறக்கம் செய்துள்ளனர். புதிய அப்டேட்களும் அடிக்கடி இலவசமாகவே கிடைக்கின்றன

பார்கோடு!!!

வர்த்தகப் பயன்பாட்டில் தற்போது அதிக அளவில் பயன்படுத்தப்படுவது பார்கோடு முறையாகும். இன்று பல்பொருள் அங்காடிகள், துணிக் கடைகள் எனப் பல இடங்களிலும் பார்கோட் (Barcode) கள்  பயன்படுத்தப்படுகின்றன.

 பார்கோட் வடிவில் நதிக்கரை

பேக்கிங் செய்யப்பட்ட உணவுப் பொருட்கள், எலக்ட்ரிக், எலக்ட்ரானிக் சாதனங்கள், புத்தகங்கள், வாழ்த்து அட்டைகள் என்று பலவற்றிலும் இக்கோடுகள் அச்சிடப்பட்டிருப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.
கீழே எண்களுடன், தடிமனான கோடு, மெல்லிய கோடு என்று பலவிதமான வடிவங்களில் செங்குத்து வரிசையில் கோடுகள்  சிறு இடைவெளியுடன் அமைக்கப்பட்டிருக்கும். இக் கோடுகளின் தொகுப்பையே பார்கோட்(Barcode) என்கின்றனர். இது ஒரு சர்வதேச குறியீட்டு முறையாகும்.

இம்முறை முதன்முதலில் ரயில் போக்குவரத்திற்காக 1949களில் அமெரிக்காவைச் சேர்ந்த பெர்னார்ட் சில்வர் மற்றும் ஜோசப் உட்லேண்ட் ஆகியோரால் உருவாக்கப்பட்டது. அதில் மேலும் பல மாற்றங்கள் செய்யப்பட்டு இன்றுள்ள பார்கோட் முறை உருவாக்கப்பட்டது.

PDF417 வடிவில் நதிக்கரை

ஒரு பொருளில் பதியப்படும் பார்கோடை வைத்து அப்பொருளைத் தயாரித்தவர், தயாரிப்பு தேதி, அதன் விலை, பொருள் எந்த வகையைச் சார்ந்தது, வரிசை எண் ஆகிய விபரங் களை எளிதில் தெரிந்து கொள்ளமுடியும்.

இக்குறியீட்டைப் படிக்க பார்கோட்ஸ்கேனர் என்ற கருவி பயன்படுத்தப்படுகிறது. பார்கோடுகளின் மீது லேசர் ஒளிக் கற்றையை செலுத்திய விநாடி யில் அப்பொருள் குறித்த விபரம் கணினியில் காட்டும் வகையில் இது உருவாக்கப்பட்டிருக்கும்.

பார்கோட்களின் கீழாக கொடுக்கப்பட்டிருக்கும் எண்கள் நான்கு பிரிவு
களாக பிரிக்கப்பட்டிருக்கும். இதில் முதல் பிரிவு விற்கப்படும் பொருளின் வகையைக் குறிப்பதாகவும், இரண்டா வது பிரிவு தயாரிப்பாளரைக் குறிப்பதா கவும், மூன்றாவது பிரிவு பொருளின் தனித்த விபரத்தைக் குறிப்பதாகவும், நான்காவது பிரிவு மேற்கண்ட மூன்று பிரிவு விபரங்களும் சரிதானா என்பதை உறுதிப்படுத்துவதாகவும் அமைந்திருக்கும்.

பல வகையான பார்கோட் முறைகள் தற்போது பயன்பாட்டில் உள்ளன. பார்கோட்கள் பொதுவாக வர்த்தகப் பயன்பாட்டிற்கே அதிகம் பயன்படுத்துவதாகத் தோன்றினாலும், வேறு பல வகையிலும் அவை பயன்படுத்தப்படுகின்றன.

பார்கோட் முறையில் சாதாரண நேரோட்ட பார்கோட் மற்றும் 2டி பார்கோட் என இருவகை உண்டு.

வர்த்தகப் பயன்பாட்டில் உள்ள பார்கோட்கள் பொதுவாக யூ.பி.சி. என்ற வகை சார்ந்ததாக இருக்கும். மருத்துவமனைகளில் நோயாளிகள் குறித்த விபரம், நோய் மற்றும் சிகிச்சை தகவல்களைப் பதிந்து வைக்கவும், வங்கிகள், நூலகங்கள் ஆகிய இடங்களில் கோட்பார் என்ற பழைய பார்கோட் குறியீட்டு முறை சில இடங்களில் பயன்படுத்தப்படுகிறது.

பார்கோடில் இன்டர் லீவ்ட் 2 என்ற ஒரு வகை உண்டு. இது நூலகங்கள், மொத்த விற்பனை நிலையங்களில் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது.

நான் இன்டர்லீவ்ட் 2 எனப்படும் மற்றொரு முறையை தொழில் துறையில் பின்பற்றுகின்றனர்.  இவை யனைத்தும் நேரோட்ட பார்கோடு வகை சார்ந்தவை.
QR Code வடிவில் நதிக்கரை

இதுபோல க்யூ.ஆர். குறியீடு (Q.R. Code) வகை ஒன்று உண்டு. இது டெயோட்டா நிறுவனத்தால் கார் பாகங்களை பிரித்துணர உருவாக்கப்பட்டது. தற்போது எவரும் பயன்படுத்திக் கொள்ள பொதுப் பயன்பாட்டில் உள்ளது.

க்யூ.ஆர்.கோடில் பெயர், முகவரி, தொலைபேசி எண், வசிக்கும் பகுதிக்கான பாகை அளவு எனப் பல விபரங்களைப் பதிந்திட முடியும். க்யூ.ஆர்.கோடில் அமைக்கப்பட்ட தகவலை அறிய மற்ற பார்கோடுகளுக்கு உள்ளதுபோல தனியாக ஸ்கேனர் கருவிகள் தேவையில்லை. நாம் பயன்படுத்தும் கேமராவுடன் கூடிய ஸ்மார்ட் போன்களே போதும். பயன்பாட்டில் இருக்கும் ஆண்ட்ராய்ட் மற்றும் ஆப்பிள் போன்களுக்கான க்யூ.ஆர். கோடு ரீடர் மென்பொருள்கள் இணையத்தில் கிடைக்கின்றன.

யூ.பி.சி., க்யூ.ஆர். உள்ளிட்ட பார் கோடுகளை எளிதாக உருவாக்க இலவச இணையதளங்களும் உள்ளன.

பார்கோடு, கியூ.ஆர்.கோட் உருவாக்க
http://www.barcode-generator.org/
http://www.barcoding.com/upc/ 
http://zxing.appspot.com/generator/
http://barcode.tec-it.com/ 
http://www.racoindustries.com/barcodegenerator/2d/qr-code.aspx 

பார்கோடு, கியூ.ஆர்.கோட் தகவல்களைப் படிக்கும் இணையதளங்கள்
http://www.onlinebarcodereader.com/ 
http://zxing.org/w/decode.jspx 

மேற்கண்டவை அல்லாமல் மேலும் பல வகை பார்கோடு குறியீட்டு முறைகளும் பயன்பாட்டில் உள்ளன.
பார்கோடுகள் பற்றி மேலும் அறிந்துகொள்ள

en.wikipedia.org/wiki/Barcodeen.wikipedia.org/wiki/QR_code 
www.barcodesinc.com 
en.wikipedia.org/wiki/Barcode_reader 

ஞான கரையினி லே!!!

ஞான கரையினி லே ...............................
ஒருமுறை குரு தன்னுடைய சீடர்களுடன் பயணப் பட்டுக் கொண்டிருந்தார்.
ஒரு ஏரியை எதிர் கொண்டபோது, அங்கிருந்த பெரிய ஆலமர நிழலில் அனைவரும் சற்று ஓய்வெடுக்கும் எண்ணத்துடன் தங்கினார்கள்....
குரு தன்னுடைய சீடர்களில் ஒருவரை அனுப்பி ஏரியில் இருந்து குடிப்பதற்கு நீர்கொண்டு வரச் சொன்னார். சீடரும் தங்களிடம் இருந்த பானை ஒன்றை எடுத்துக் கொண்டு நீர்நிலையை நோக்கி நடந்தார்.
அந்த நேரத்தில், மாட்டு வண்டிக்காரர் ஒருவர், ஏரிக்குள் இறங்கி ஏறியைக் கடந்து சென்றார். ஏரி கலங்கி விட்டது. அத்துடன் ஏரியின் கீழ்ப் பகுதியில் இருந்த சேறும் சகதியும் மேலே வந்து நீரை அசுத்தப் படுத்தி பார்ப்பதற்கே உபயோகமற்றதாகக் காட்சியளித்தது.
இந்தக் கலங்கிய நீர் எப்படிக் குடிப்பதற்குப் பயன்படும்? இதை எப்படிக் குருவிற்குக் கொண்டுபோய்க் கொடுப்பது? என்று தண்ணீரில்லாமல் திரும்பிவிட்டார்.
அத்துடன் தன் குருவிடமும் அதைத் தெரிவித்தார்.
ஒரு மணி நேரம் சென்ற பிறகு,குரு தன்னுடைய சீடரை மீண்டும் ஏரிக்குச் சென்று வரப் பணித்தார். நீர்நிலையருகே சென்று சீடன் பார்த்தான். இப்போது நீர் தெளிந்திருந்தது . சகதி நீரின் அடியிற்சென்று பதிந்திருந்தது.
ஒரு பானையின் தண்ணீரை முகர்ந்து கொண்டு சீடன் திரும்பினான். குரு தண்ணீரைப் பார்த்தார். சீடனையும் பார்த்தார். பிறகு மெல்லிய குரலில் சொல்லலானார்.
தண்ணீர் சுத்தமாவதற்கு என்ன செய்தாய்..?
நான் ஒன்றும் செய்யவில்லை சுவாமி! அதை அப்படியே விட்டுவிட்டு வந்தேன். அது தானாகவே சுத்தமாயிற்று!
நீ அதை அதன் போக்கிலேயே விட்டாய். அது தானாகவே சுத்தமாயிற்று. அத்துடன் உனக்கு தெளிந்த நீரும் கிடைத்தது இல்லையா?
ஆமாம் சுவாமி!
நம் மனமும் அப்படிப்பட்டதுதான்..
மனம் குழப்பத்தில் இருக்கும்போது நாம் ஒன்றும் செய்ய வேண்டாம். அதை அப்படியே விட்டு விட வேண்டும். சிறிது கால அவகாசம் கொடுக்க வேண்டும்.
அது தனக்குத்தானே சரியாகிவிடும். நாம் எந்தவித முயற்சியும் செய்ய வேண்டாம். மனதை சமாதானப் படுத்தும் விதத்தைப் பற்றி சிந்திக்கவும் வேண்டாம். அது அமைதியாகிவிடும் . அது தன்னிச்சையாக நடக்கும். அத்துடன் நம்முடைய முயற்சியின்றி அது நடக்கும்.
ஞான கரையினி லே ...............................

ஒருமுறை குரு தன்னுடைய சீடர்களுடன் பயணப் பட்டுக் கொண்டிருந்தார்.

ஒரு ஏரியை எதிர் கொண்டபோது, அங்கிருந்த பெரிய ஆலமர நிழலில் அனைவரும் சற்று ஓய்வெடுக்கும் எண்ணத்துடன் தங்கினார்கள்....

குரு தன்னுடைய சீடர்களில் ஒருவரை அனுப்பி ஏரியில் இருந்து குடிப்பதற்கு நீர்கொண்டு வரச் சொன்னார். சீடரும் தங்களிடம் இருந்த பானை ஒன்றை எடுத்துக் கொண்டு நீர்நிலையை நோக்கி நடந்தார்.

அந்த நேரத்தில், மாட்டு வண்டிக்காரர் ஒருவர், ஏரிக்குள் இறங்கி ஏறியைக் கடந்து சென்றார். ஏரி கலங்கி விட்டது. அத்துடன் ஏரியின் கீழ்ப் பகுதியில் இருந்த சேறும் சகதியும் மேலே வந்து நீரை அசுத்தப் படுத்தி பார்ப்பதற்கே உபயோகமற்றதாகக் காட்சியளித்தது.

இந்தக் கலங்கிய நீர் எப்படிக் குடிப்பதற்குப் பயன்படும்? இதை எப்படிக் குருவிற்குக் கொண்டுபோய்க் கொடுப்பது? என்று தண்ணீரில்லாமல் திரும்பிவிட்டார்.

அத்துடன் தன் குருவிடமும் அதைத் தெரிவித்தார்.

ஒரு மணி நேரம் சென்ற பிறகு,குரு தன்னுடைய சீடரை மீண்டும் ஏரிக்குச் சென்று வரப் பணித்தார். நீர்நிலையருகே சென்று சீடன் பார்த்தான். இப்போது நீர் தெளிந்திருந்தது . சகதி நீரின் அடியிற்சென்று பதிந்திருந்தது.

ஒரு பானையின் தண்ணீரை முகர்ந்து கொண்டு சீடன் திரும்பினான். குரு தண்ணீரைப் பார்த்தார். சீடனையும் பார்த்தார். பிறகு மெல்லிய குரலில் சொல்லலானார்.

தண்ணீர் சுத்தமாவதற்கு என்ன செய்தாய்..?

நான் ஒன்றும் செய்யவில்லை சுவாமி! அதை அப்படியே விட்டுவிட்டு வந்தேன். அது தானாகவே சுத்தமாயிற்று!

நீ அதை அதன் போக்கிலேயே விட்டாய். அது தானாகவே சுத்தமாயிற்று. அத்துடன் உனக்கு தெளிந்த நீரும் கிடைத்தது இல்லையா?

ஆமாம் சுவாமி!

நம் மனமும் அப்படிப்பட்டதுதான்..

மனம் குழப்பத்தில் இருக்கும்போது நாம் ஒன்றும் செய்ய வேண்டாம். அதை அப்படியே விட்டு விட வேண்டும். சிறிது கால அவகாசம் கொடுக்க வேண்டும்.

அது தனக்குத்தானே சரியாகிவிடும். நாம் எந்தவித முயற்சியும் செய்ய வேண்டாம். மனதை சமாதானப் படுத்தும் விதத்தைப் பற்றி சிந்திக்கவும் வேண்டாம். அது அமைதியாகிவிடும் . அது தன்னிச்சையாக நடக்கும். அத்துடன் நம்முடைய முயற்சியின்றி அது நடக்கும்.
L

ரூம் போட்டு யோசிப்பாங்களோ!!!

Thinking Outside The Box


Just a little something to keep your mind active:
The first 4 images are the questions and the answers are given at the end.
Please do not look at the answers first, these are really good.  Try it.
Question 1 :
q1
Question 2 :q2
Question 3 :
q3
Question 4 :
q4
—   Select Inside The lines below to see the Answer  —
==================================================================
1. The last person took the basket with the egg in it.
2. All the other card players were women.
3. Pour the juice from the second glass into the fifth.
4. The recluse lived in a lighthouse.
==================================================================
…DEMENTIA  QUIZ  (or) How To Feel Really Stupid Fast…
FIRST QUESTION:

YOU ARE A PARTICIPANT IN A RACE. YOU OVERTAKE THE SECOND PERSON. WHAT POSITION ARE YOU IN?

 ANSWER :

IF YOU ANSWERED THAT YOU ARE FIRST, THEN YOU ARE ABSOLUTELY WRONG! IF YOU OVERTAKE THE SECOND PERSON AND YOU TAKE HIS PLACE, YOU ARE IN SECOND PLACE!
TRY TO DO BETTER NEXT TIME.
NOW ANSWER THE SECOND QUESTION,  BUT DON’T  TAKE AS MUCH TIME AS
YOU TOOK FOR THE FIRST QUESTION,  
OK …
~~~~~~~~~~~
SECOND QUESTION:
IF YOU OVERTAKE THE LAST PERSON, THEN YOU ARE…..?
 ANSWER:
IF YOU ANSWERED THAT YOU ARE SECOND TO LAST, THEN YOU ARE WRONG AGAIN. TELL ME SUNSHINE, HOW CAN YOU OVERTAKE THE LAST PERSON??
YOU’RE  NOT VERY GOOD AT THIS, ARE YOU?
~~~~~~~~~~~
THIRD QUESTION:
VERY TRICKY ARITHMETIC! NOTE: ( THIS MUST BE DONE IN YOUR HEAD ONLY.
DO NOT USE PAPER AND PENCIL OR A CALCULATOR. TRY IT. )
TAKE 1000 AND ADD 40 TO IT.. NOW ADD ANOTHER 1000 NOW ADD 30.
ADD ANOTHER 1000. NOW ADD 20 .. NOW ADD ANOTHER 1000.
NOW ADD 10. WHAT IS THE TOTAL?
DID YOU GET 5000?
THE  CORRECT ANSWER  IS ACTUALLY 4100 
IF YOU DON’T BELIEVE IT, CHECK IT WITH A CALCULATOR!TODAY IS DEFINITELY NOT YOUR DAY, IS IT ?
MAYBE YOU’LL GET THE LAST QUESTION RIGHT… MAYBE…
~~~~~~~~~~~
FOURTH QUESTION:
MARY’S FATHER HAS FIVE DAUGHTERS:
1.        NANA, 2. NENE, 3. NINI, 4. NONO, AND ???
2.        WHAT IS THE NAME OF THE FIFTH DAUGHTER?

DID YOU ANSWER  NUNU? NO! OF COURSE IT ISN’T.
HER NAME IS MARY! READ THE QUESTION AGAIN!
~~~~~~~~~~~
OKAY, NOW THE BONUS ROUND,  I.E., A FINAL CHANCE TO REDEEM YOURSELF :
A MUTE PERSON GOES INTO A SHOP AND WANTS TO BUY A TOOTHBRUSH.
BY IMITATING THE ACTION OF BRUSHING HIS TEETH HE
SUCCESSFULLY EXPRESSES HIMSELF TO THE SHOPKEEPER AND THE  PURCHASE IS DONE.
NEXT, A BLIND MAN COMES INTO THE SHOP WHO WANTS TO BUY A
PAIR OF SUNGLASSES; HOW DOES  HE INDICATE WHAT HE WANTS?
IT’S REALLY VERY SIMPLE
HE OPENS HIS MOUTH AND ASKS FOR IT…
…HAVE A NICE DAY…

Cooking!!!

பேசின் கி கிரேவி சப்ஜி - பீஹார் ஸ்பெஷல்

  
இது பீஹார் பக்கம் ஒரு பாபுலர் சைடு டிஷ். நாம் இதை செய்து பார்க்கலாமா?
ரொட்டி சப்பாத்தி இவற்றுக்கு தொட்டுக்கொள்ள  இதை செய்யலாம்.

கடலை மாவு இரண்டு கப், தனியா பொடி ஒரு டீ  ஸ்பூன், மிளகாய் பொடி ஒரு   டீ ஸ்பூன், உப்பு, மஞ்சள்பொடி ,ஒரு வெங்காயம், தக்காளி பழம் ஒன்று, எண்ணெய் ஒரு டீ ஸ்பூன். 
கடலை மாவுடன் தனியா பொடி, மிளகாய் பொடி, உப்பு ஒரு சிட்டிகை மஞ்சள் பொடி சேர்த்து நன்றாக பிசையவும். சப்பாத்தி மாவு போல் இது  இருக்க வேண்டும். இந்த மாவை நீளமாக , கயிறு போல்  உருட்டவும். ஒரு குக்கரில் தண்ணீர் வைத்து தட்டில் இந்த மாவு கயிற்றை ஒரு விசில் வரும் வரை வேக வைக்கவும். இந்த மாவு கயிற்றை வெளியே எடுத்து ஒரு கத்தியால் வட்டம் வட்டமாக நறுக்கிக் கொள்ளவும். 

ஒரு கடாயில் எண்ணெய் வைத்து காய்ந்ததும் சீரகம் ஒரு ஸ்பூன் ,   வெங்காயம், தக்காளி இவற்றை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கடாயில் போட்டு கிளறவும். இத்துடன் அரை டீ ஸ்பூன் மஞ்சள் தூள் , ஒன்றரை டீ ஸ்பூன் மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்  பச்சை வாசனை போனதும் ஒரு டம்ப்ளர் தண்ணீரை ஊற்றி அதில் நறுக்கி வைத்துள்ள மாவு துண்டங்களை போடவும். சற்று உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். இறக்கி வைத்து கொத்த மல்லி  கிள்ளிப்போடவும். 

சுவையான பேசன் கி சப்ஜி ரெடி  - 

சொம்பு கொழுக்கட்டை தமிழ் ரெசிபி

ஒரு மாறுதலுக்கு இப்போ ஒரு தமிழ்நாட்டு டிபன் பார்ப்போமா? 


.   நிச்சயம்  புதுமையானது நீங்களும் தான் செய்து பாருங்களேன் 

ஒரு டம்பளர் பச்சரிசி அரை டம்பளர் புழுங்கரிசி ஒரு டேபிள் ஸ்பூன் கடலைபருப்பு ஒரு டேபிள் ஸ்பூன் துவரம்பருப்பு நிறைய பச்ச மிளகாய்  நிறைய மிளகாய் வற்றல் , உப்பு , கடுகு ஒருஸ்பூன் எண்ணெய் (தாளிக்க), ஒரு மூடி தேங்காய் (துருவியது) 



அரிசி பருப்பு மிளகாய்  இவற்றை தண்ணீரில் ஒரு மணி நேரம் ஊற வைக்கவும் பிறகு உப்பு பெருங்காயம் , தேங்காய் (துருவியது) சேர்த்து ,கிரைண்டரில் தண்ணீர் ஊற்றி அரைக்கவும் - மிகவும் நைசாகவும் இருக்க கூடாது - மிகவும் பெரிசாகவும் இருக்க கூடாது - அடைக்கும் தோசைக்கும் இடைப்பட்ட பதத்தில் கெட்டியாக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும் 


ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும் - குக்கர் பாத்திரமாக இருக்கலாம்.


தண்ணீர் கொதிக்கும் போது அரைத்து வைத்த மாவை சிறு சிறு உருண்டைகளாக்கி தண்ணீரில் போடவும் அவை நன்றாக வெந்ததும் தண்ணீரில் மிதந்து வரும் இவற்றை தனியே எடுத்து வைத்து கொள்ளவும் - தண்ணீர் போதாவிட்டால் இன்னும் தண்ணீர் ஊற்றிக்கொள்ளவும் ஒரு டம்பளர் மாவை தனியே எடுத்து வைத்துக்கொள்ளவும்


இலுப்பசட்டியில் சிறிது எண்ணை வைத்து சுட்டதும் சிறிது கடுகை வெடிக்கவிட்டு தண்ணீரை ஊற்றி கொதிவந்ததும் வேகவைத்த உருண்டைகளையும் எடுத்து வைத்த மாவையும் போட்டு, சிறிது உப்பு போட்டு மூடிவிடவும் நன்றாக வெந்ததும் இறக்கி வைத்து விடவும் நன்றாக ஆறியவுடன் சாப்பிட்டால் சொர்கம்தான் 












சுரிதார் தெரியும் தரிதார் தெரியுமா?


இது ஒரு உருளை கிழங்கு கூட்டு பஞ்சாப் பக்கம் ரொம்ப பேமசானது நாமும் செய்து பாக்கலாமா?
உருளை கிழங்கை தோல் உரித்து , நறுக்கி வைத்துக்கொள்ளவும்
வெங்காயம், தக்காளி, தனியா, மஞ்சள்பொடி, சாதா மிளகாய் பொடி, உப்பு இவற்றை mixi யில் போட்டு நன்றாக அரைத்துக்கொள்ளவும் குக்கரில் ஒரு ஸ்பூன் எண்ணை விட்டு சீரகத்தை பொரித்துக்கொள்ளவும் ,பிறகு அரைத்த மசாலாவை அதில் போட்டு நன்றாக வதக்கவும் . பச்சை வாசனை போன பிறகு நறுக்கிய கிழங்கை அதில் போட்டு தண்ணீர் சேர்க்கவும் (இது கொஞ்சம் நீர்க்க இருந்தால் நன்றாக இருக்கும்)
குக்கரில் இரண்டு விசில் வரும் வரை வேகவைக்கவும்
பிறகு இறக்கி பரிமாறவும்
சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிட்டால் ......பலே பலே ....

மோ மோ செய்து பாருங்க

ஸாரி இவர் மா மா இல்லீங்க மோ மோ.
இது நார்த் ஈஸ்ட்ல பண்ணற டிபன்க
இது நம்ம ஊர் கொழுக்கட்டை மாதிரி சமாசரங்க
சரி இதை செய்வது எப்புடி?

ஒரு கப் பச்சரிசிய இருபது நிமிடங்கள் தண்ணீரில் ஊற வைத்து grinder ல் தோசை மாவு போல் அரைத்து கொள்ளவும் அடுப்பை பற்றவைத்து கடாயில் ஒரு டீ ஸ்பூன் எண்ணெய்
விட்டு அரைத்த மாவில் இன்னும் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து கடாயில் நன்றாக கிளறி , மாவு ஒரு பந்து போல வந்ததும் அடுப்பை அணைக்கவும்
மாவை ஒரு தட்டு போட்டு மூடி வைக்கவும்.

காரெட் , பச்சை பட்டாணி, குடை மிளகாய் ஆகியவற்றை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ளவும் கால் டீஸ்பூன் மஞ்சள் பொடி, மிளகாய் பொடி, தனியா பொடி கரம் மசாலா சேர்த்து , தேவையான அளவு அளவு உப்பும் சேர்த்து வதக்கவும் , இப்பொழுது அடுப்பு சிம் ல் இருக்க வேண்டும்.
வேக வைத்த மாவை சிறு உருண்டைகளாக செய்து கொள்ளவும். பிறகு உருண்டைகளை
தட்டையாக செய்து கொள்ளவும் (கொழுகட்டைக்கு செய்வது போல்) இதற்குள் வதக்கி வைத்த காய் கறியை வைத்து மூடி . உருண்டையாக செய்து கொள்ளவும். இவற்றை குக்கரில்v ஏழு அல்லது எட்டு நிமிடம் வேக வைத்து இறக்கினால் மோ மோ தயார் .

இதை தொட்டுக்கொள்ள கொத்துமல்லி கார சட்னி அல்லது சாசுடனும் சாப்பிடலாம்.

மணல் சிற்பங்கள்!!!

அருமையான மணல் சிற்பங்கள்


















பெரியதாக பார்க்க படத்தை க்ளிக்கிங்கள்