Sunday 27 December 2015

வயிறு பசி!!!

தானென்ற நாயுருவி வித்து தன்னை
தன்மையினால் முலைப்பாலில் உரைத்து மைந்தா
பானென்ற பசுப்பாலில் கரைத்துக் கொண்டு
பாங்கான எட்டிவிரை உரைத்துக் கொண்டு
தேனென்றே தியானித்துக் கொண்டாயாகில்
செவ்வியை வயிறு பசி எடுப்பதில்லை
நானென்று எத்தனை நாள் இருந்தாலுந்தான்
நளினமுடன் பசியாது மைந்தா பாரே"

- அகத்தியர் -

நாயுருவி வித்து எடுத்து முலைப்பால் விட்டு அரைத்து எடுத்துக் கொண்டு, எட்டி விதை ஒன்றையும் அரைத்து எடுத்து இரண்டையும் பசும்பாலில் கரைத்து இறைவனை வணங்கிக் கொண்டு அருந்தினால் வயிறு பசி எடுக்காது என்று சொல்லும் அகத்தியர் எத்தனை நாள் சென்றாலும் பசி எடுக்காது என்கிறார்.


"பாரப்பா பசிஎளுப்ப வேண்டுமென்றால்
பண்பாக சொல்லுகிறேன் மைந்தா கேளு
வீரப்ப எலும்பியதோர் மஞ்சளிஞ்சி
விரும்பியே தின்றிடவே வேகம் கொண்டு
காரப்ப மூல அக்கினியே நீறும்
கடும்பசிதா னெடுக்குமாடா கருவாய்ப்பாரு
தெறப்பா மனந்தேறி கருவாய்ப் பார்த்தால்
சித்து வித்தை அநேகமுண்டு தெளிந்து காணே"

- அகத்தியர் -

மீண்டும் பசி எடுக்க வேண்டும் என்றால் ஒரு மஞ்சள் இஞ்சியை தின்ன வேண்டும் என்று சொல்வதோடு மஞ்சள் இஞ்சி தின்றால் கடும் பசி உண்டாகும் அத்துடன் தூய, நல்ல மனதுடன் தேடுபவர்களுக்கு இதுபோல பல சித்துமுறை தெரியவரும் என்கிறார்TEXT TEXT

Thursday 10 December 2015

பொடுகு (Dandruff) தொல்லையா? ஒரு தீர்வு..

பொடுகு (Dandruff) தொல்லையா? ஒரு தீர்வு..




பொடுகு தோன்றுவதற்குப் பெயரும் காரணம் தோலில் எண்ணெய்த் தன்மை இருப்பதால் PO VALE எனப்படும் பூசண பீடிப்பு(பங்கஸ்)கிருமிகள் உண்டாகி அவை வளர்ந்தது பொடுகு உண்டாகும். இது அதிகமாக நெற்றி, மூக்கு மடிப்பு, காது பின்புறம் மற்றும் தலையில் அதிகமாக தலையில் வெள்ளைச் செதில்களாக ஏற்படும். இதற்கு Seborrhea dermatitis. என்று பெயர்.


பொடுகு என்றால் என்ன?
தலையின் மேற்புற தோலில் உள்ள இறந்த போன உயிரணுக்கள் மொத்த மொத்தமாக செதில் செதிலாக உதிரும். இதைதான் நாம் பொடுகு என்கிறோம்.

பொடுகு ஏன் வருகிறது?
1. வரட்சியான சருமத்தினால் வரும்

2. அவசரமாக தலைக்கு குளிப்பது. நல்லா தலையை துவட்டுவது கிடையாது. இதனால் தண்ணீர்,சோ்பபு தண்ணீர் ஆகியன தலையில் தங்கிவிடும். இதனால் இந்தபொடுகு உற்பத்தியாகிறது..

3. எப்பொழுதும் எண்ணெய் பசை மிகுந்த தலையுடன் இருப்பது, அழுக்கு தலையுடன் இருப்பது

4. ஒழுங்காக தினசரி குளிப்பதில்லை, இத்தகைய தலையில் வியர்வை உற்பத்தியாகி அந்த வியர்வை தண்ணி தலையில் தங்க நேரிடும். இதனாலும் இப்பொடுகு வருகிறது

5. "பிடி ரோஸ்போரம் ஓவல்" என்ற நுண்ணியிர் கிருமியினாலும் இந்தபொடுகு நோய் வரலாம்.

6. எக்ஸீமா(Eczema), சொறாஸிஸ்(Psoriasis) போன்ற தோல் நொய்களாளும் பொடுகு வரலாம்

7. அதிகமாக சாம்பு பயன்படுத்தினாலும் வரலாம். க்ண்ட கண்ட செல்களை தலையில் தேய்ப்பதனாலும் இது வரலாம்.

8. மனஅழுத்தம் கவலையாலும் இது வரலாம்

பொடுகு வருவதை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

1. ஒருவர் பயன்படுத்திய சீப்பு தலையாணை துண்டு போண்றவற்றை அடுத்தவர் பயன்படுத்தக்கூடாது

2. தலையை எப்பொழுதும் சுத்தமாக வைத்ததிருக்க வேண்டும்

3. கொழுப்பு சத்துள்ள நெய், பால், வெண்ணெய் முதலிய உணவுகளை சேர்க்க வேண்டும். இதனால் தோலுக்கு தேவையான எண்ணெய் பசை கிடைக்கும். இதன் மூலம் பொடுகுக்கு காரணமான கிருமிகளிடமிருந்து நமது தலையை பாதுகாக்க முடியும்

பொடுகு தொல்லை நீங்க என்ன செய்யலாம்?

1. தலையில் புண் அல்லது வெட்டுகாயம் இல்லாமல் இருந்தால் செலெனியம் சல்ஃபைடு அல்லது ஜிங்க் பைரிதியோன் என்ற மருந்துள்ள சாம்பை பய்னபடுத்தி தலையை சுத்தம் செய்யலாம். இது பொடுகுபெருகுவதை தடுக்கும். புண் இருந்தால் இதை பயன்படுத்தக்கூடாது.

2. சாலிசிலிக் அமிலம் சல்பர் கலந்த சாம்புகளை பயன்படுத்தலாம்.
"பிடிரோஸ்போரம் ஓவல்" என்ற நுண்னுயிர் கிருமியால் ஏற்படும் பொடுகுதொல்லைக்கு டாக்டரை பார்கவும்.

3. சாம்பார் வெங்காயம் (சின்ன வெங்காயம்) கொஞ்சம் எடுத்து அரைத்து தலையில் தேய்க்கனும். அப்புறம் 15நிமிஷம் கழித்து குளிக்கனும்

4. பாலுடன் மிளகு பவுடரை சேர்த்து தலையில் தேய்க்கவும். 15 நிமிஷம் கழித்து குளிக்கவும்.

5. தலையில் தயிர் தேய்த்து குளிக்கலாம்

6. வாரம் ஒரு முறையாவது நல்லண்ணை தேய்த்து குளிக்கனும்.

7. பசலை கீரையை அரைத்து தலையில் தேய்த்து குளிச்சால் பொடுகுக்கு ரெம்ப நல்லது

8. வெந்தய பவுடரை தலையில் தேய்த்து குளித்தால் பொடுகுதொல்லையும் தீரும் உஷ்ணமும் குறையும்.

9. அருகம்புல் சாறு எடுத்து தேங்காய் எண்ணையுடன் சேர்த்து நல்லா காய்ச்சி அப்புறம் ஆறவைத்து தினசரி இதனை தலையில் தேய்த்தால் பொடுகு மறையும்

10. வேப்பிலைசாறும் துளசி சாறும் கலந்து தலையில் தேய்கலாம்

11. வசம்பு பவுடரை தேங்காய் எண்யெயில் ஊறவைத்து தேய்கலாம்

12. தலைக்கு குளித்தபின்பு தலையை துவட்டாமல் கொஞ்சம் வினிகரை தண்ணீரில் கலந்து தலைக்கு குளித்து அதன்பின்பு துவட்டி கொள்ளலாம்.

13. மருதாணி இலையை அரைக்கனும். அதனுடன் கொஞ்சம் தயிர், எழுமிச்சை சாறு கொஞ்சம் சேர்கனும். இந்த கலவையை தலையில் தேய்கனும்.

14. வேப்பிலை கொஞ்சமும் அதனுடன் கொஞ்சம் மிளகையும் சேர்த்து நல்லா அரைத்து தலையில் தேய்த்து 1மணி நேரம் ஊரவைத்து பின்பு குளிக்கனும்.


பேன் தொல்லை நீங்க என்ன செய்ய வேண்டும்?

1. வசம்பை தண்ணீர் சேர்த்து அரைத்து தலையில் தேய்த்து கொஞ்சநேரம் ஊறவைத்து அப்புறம் குளிக்கனும்

2. வேப்பிலையை அரைத்து தலையில் தேய்த்து கொஞ்ச நேரம் ஊறவைத்து அப்புறம் குளிக்கனும்.

இப்படி செய்தால் பேன் செத்து போகும்.

முடி நீளமாகவும் ஸ்ராங்காகவும் வளர என்ன செய்ய வேண்டும்?

1. முட்டை வெள்ளை கருவை தனியாக எடுக்கனும் இதனுடன் நல்லண்ணெய் கொஞசம் கலக்கனும் தலையில் தேய்த்து ஊற வைக்கனும் அப்புறம் கொஞ்ச நேரம் கழித்து குளிக்கனும்

2. பாசிப்பருப்பு வெந்தயம் இரண்டையும் தண்ணீரில் ஊறவைத்து பின்பு மாவாக அரைத்து கொள்ளவும். தலையில் நல்லெண்ய் தேய்த்து அரை மணிநேரம் கழித்து அரைத்த மாவை தலையில் தேய்த்து குளிக்கவும். இதனால் கூந்தல் அழகாககும் பளபளப்பாகவும் இருக்கும்.



கூந்தல் மிருதுவாக இருக்க…
1.வாரம் ஒரு முறை மருதாணி இலையை அரைத்து தலையில் தேய்த்து குளித்து வந்தால், கூந்தல் மிருதுவாகவும், பளபளப்பாகவும் இருக்கும்.

2.நெல்லிக்காயை பாலில் வேகவைத்து, கொட்டை நீக்கிவிட்டு மசித்து தலையில் தேய்த்து சில நிமிடங்கள் கழித்து குளித்தால், கூந்தல் மிருதுவாக இருக்கும்.

3.டீ டிகாஷனில் சிறிதளவு எலுமிச்சம்பழச்சாறு கலந்து தலையில் தேய்த்து குளித்தால், கூந்தல் மிருதுவாகவும் பளபளப்பாகவும் இருக்கும்.TEXT TEXT

Wednesday 9 December 2015

General Info.!!!

இரு பொருள்களுக்கிடையே உள்ள கோணத் தொலைவுகளை அளக்க - செக்ஸ்டாண்ட்
2.மிகத்தொலைவிலுள்ள இடத்தின் வெப்பநிலையை அறிய - பைரோ மீட்டர்
3.வெப்பத்தை அளக்க - கலோரி மீட்டர்
4.கடல் பயணத்தில் நேரத்தைத் துல்லியமாக அளக்க - குரோனோ மீட்டர்
5.நீருக்கடியில் சப்தத்தை அளவிட - ஹைட்ரோபோன்
6.வெப்பநிலைப்படுத்தி - தெர்மோஸ்டாட்
7.மனித உடலின் உள் உறுப்புகளை காண - எண்டோஸ்கோப்
8.கடல் மட்டத்திலிருந்து உயரம் காண - ஆல்டி மீட்டர்
9.7.உயர் வெப்பநிலையை அளக்க - பைரோ மீட்டர்
10.மின்னோட்டத்தை அளக்க - அம்மீட்டர்
11.காற்றின் திசைவேகம் காண - அனிமோ மீட்டர்
12.வளிமண்டல அழுத்தம் காண - பாரோ மீட்டர்
13.நீரின் ஆழத்தை அளவிட - ஃபேத்தோ மீட்டர்
14.திரவங்களின் ஒப்படர்த்தி தனமையை அறிய - ஹைட்ரோ மீட்டர்
15.பாலின் தூய்மையை அறிய - லாக்டோ மாட்டர்
16.சக்கர வாகனங்களின் தூரத்தை அறிய - ஓடோ மீட்டர்
17.பூகம்ப உக்கிரம் அளக்க - சீஸ்மோ மீட்டர்
18.ஒரு பொருளின் முப்பரிமாண படத்தைக் காட்டுவது - ஸ்டிரியோ ஸ்கோப்
19.செவிப்பறையை பரிசோதிக்க - ஓடோஸ்கோப்
20.காகிதத்தின் கனத்தை அளவிட - கார்புரேட்டர்
21.காற்றுடன் பெட்ரோலைக் கலக்க - கார்புரேட்டர்
22.நிறமாலைமானி - ஸ்பெக்ட்ராஸ்கோப்
23.முட்டை குஞ்சு பொறிக்க - இன்குபேட்டர்
24.நுரையீரலில் இருந்து சுவாசிப்பதை காண - ஸ்கோப் ட்ராங்கோ
25.கப்பல் மூழ்கும் ஆழத்தை அளவிட - பிலிம்சால் கோடு
26.மூலக்கூறு அமைப்பை அறிய - எலக்ட்ரான் நுண்ணோக்கி
27.மாலிமிகள் திசை அறிய - காம்பஸ்
28.தானியங்கி மூலம் செய்திகளை அனுப்பவும் தந்தி தகவல்களை செலுத்தவும் பயன்படும் கருவி - டெலி பிரிண்டர்
29.புற்றுநோய் சிகிச்சைக்கு பயன்படுவது - லெசர் (LASER )
30.எதிரி விமானத்தை அறிய - ரேடார் (RADER)
31.இருதயத் துடிப்பை அளவிட - E.C.G (Electro Cardio Gram)
32.நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து மேலே பார்க்க, பதுங்கு குழியிலிருந்து எதிரிகளின் நடமாட்டம் காண - ஸ்டெத்தாஸ்கோப்
33.மழையளவை அளக்க - ரெயின் காஜ்
34.இதய துடிப்பு மற்றும் நுரையீரலின் இயக்கம் காண - ஸ்டெத்தாஸ்கோப்
35.நுண்ணிய பொருட்களை பெரிதுபடுத்தி பார்க்க - மைக்ரோஸ்கோப்
36.தூரத்திலுள்ள பொருட்களை தெளிவாகப் பார்க்க - பைனாகுலர், டெலஸ்கோப்
37.சமபரப்பை அளக்க உதவும் கருவி - ஸ்பிரிட் லெவல்
38.காந்தப் புலங்களை அறிய - மாக்னடோ மீட்டர்
39.இரத்த அணுக்களின் எண்ணிக்கையை அறிய - ஹிமோசைட்டோ மீட்டர்
40.நீராவிப் போக்கின் வீதத்தை அளவிட - கானாங்கின் போட்டோ மீட்டர்
41.ஒளிவிலகல் எண்ணை அளக்க - ஸ்பெக்ட்ரோ மீட்டர்
42.மின்காந்த அலைவரிசையை பிரிக்கும் கருவி - ஸ்பெக்ட்ரோஸ்கோப்
43.கோளக வடிவப் பொருட்களின் வளைவினை அளக்க -ஸ்பியரோ மீட்டர்
44.உடலின் வெப்ப நிலையைக் கணக்கிட -தெர்மோ மீட்டர்
45.திரவங்களின் அடர்த்தியை அளவிட உதவும் கருவி - பைக்கோமீட்டர்
46.படிகங்களின் கோணங்களை அளக்க - கோனியோ மீட்டர்
47.ஸ்பிரிட்டுகளிலுள்ள ஆல்கஹாலின் அளவை அளக்க - ஆல்கஹாலோ மீட்டர்
48.ஒளியின் அளவை அறிய போட்டோ மீட்டர்
49.நீராவி அழுத்தத்தை அளக்க - மானோ மீட்டர்
50.சிறு அளவு மின்னோட்டத்தை அளக்க - கால்வனா மீட்டர்
51.மின்னழுத்த வேறுபாட்டை அளக்க - வோல்ட் மீட்டர்
52.கடலின் ஆழம் அறிய - சோனா மீட்டர்
53.விமானங்களின் வேகத்தை அறிய - டேக்கோ மீட்டர்
54.கார் ஒடும் வேகத்தை அறிய - ஸ்பீடோ மீட்டர்
55.இரத்த அழுத்தத்தை அளக்க - பிக்மோ மானோ மீட்டர் =============================================================================


பதிவு பிடித்திருந்தால் நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள். உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. மறவாமல் பகிருங்கள்.

Tuesday 24 November 2015

ஆதிவாசி மருத்துவம் !!!
வயிற்றுவலிக்கு:
முருங்கைக் கீரையை ஒரு கைப்பிடி எடுத்துச் சுத்தமான தண்ணீரில் கழுவி, உரலில் போட்டு நன்றாக இடித்துச் சாறு பிழிந்துகொண்டு, காலை, பகல், மாலையில் கொஞ்சம் சர்க்கரையுடன் அதைக் கலந்து உணவுக்குமுன் 1/4 ஆழாக்குச் சாப்பிட்டு வந்தால் வயிற்றுவலி குணமாகும்.
இடுப்பில் வரும் வண்ணார் புண்:
இது சாதாரணமாய் எங்கே வாழ்ந்தாலும் சரி, சிலருக்கு உண்டாகும். இந்தப் புண் இருப்பவர்கள் இடுப்பைச் சுத்தமாகக் கழுவிக்கொண்ட பின், வாழைப் பழத்தோலின் உள் பக்கத்தைப் புண்ணின்மேல் வைத்து கட்டிக் கொள்ள வேண்டும். அப்பொழுது தாங்க முடியாத எரிச்சல் உண்டாகும். சில நாட்களில் முற்றும் குணம் அடைந்து விடும்.
கண்நோய்:
கடுமையான கண் நோய் இருப்பவரகளுக்கு நீலகிரியில் வாழும் ஆதிவாசிகள், வெங்காயத்தை வெள்ளைத் துணியில் மூட்டை கட்டிப் பிறகு நசுக்கிக் கண்ணில் பிறிவார்கள். சில மணி நேரங்களில் நோய் குணமாகிறது.
டான்சில்ஸ்:
சுத்தமான குங்குமப் பூவை இரண்டு கீற்று எடுத்து வெற்றிலையில் வைத்து வியாதியுள்ளவர்களுக்கு காலை, மாலை கொடுக்க, இரண்டே நாட்களில் குணம் காணலாம்.
தேள் கொட்டினால்:
கேரள நாட்டு ஆதிவாசிகள் தேள் கொட்டினால் உடலின் எந்தப் பக்கத்தில் கொட்டுகிறதோ. அதற்கு எதிர்ப்பக்கத்துக் கண்ணில் ஒரு சொட்டு சுத்தமான உப்புத் தண்ணீரை விடுகிறார்கள். உப்பு நீரால் தேள் கொட்டிய இடத்தில் கீழ்பக்கமாக உருவிக் கழுவ வேண்டும். 5 நிமிடத்தில் விஷம் இறங்கி விடுகிறது.
வயிற்றில் உள்ள நாக்குபூச்சி போக:
வயிற்றில் நாக்குப் பூச்சி இருப்போர் கண்ட மருந்தும் சாப்பிடக்கூடாது. வயதுக்குத் தகுந்தாற்போல் நல்ல சிற்றாமணக்கெண்ணெய் ஒரு கிண்ணத்தில் ஊற்றி, அதே எண்ணெயின் அளவுக்கு நாட்டுச் சர்க்கரையைப் போட்டு நன்றாகக் கலக்கிய பிறகு அதிகாலையில் சுமார் ஆறு மணிக்குக் குடித்துவிட வேண்டும். வயிற்றில் இருக்கும் பூச்சிகள் இந்த வெல்லத்தைச் சாப்பிட வரும். அந்த வேகத்தில் பேதியுடன் கலந்து பூச்சிகள் வெளியில் வந்து விடும். அன்று மிளகு ரசம் மட்டுமே சாப்பிட வேண்டும். குளிக்கக்கூடாது..பப்பாளிப் பாலுடன் சுத்தமான தேன் கலந்து சாப்பிட்டாலும் வயிற்றிலுள்ள நாக்குப் பூச்சி இறந்துவிடும். பிறகு கொஞ்சம் ஆமணக்கு எண்ணெய் சாப்பிட்டால் பூச்சிகள் வெளியே வந்துவிடும். வயதுக்குத் தக்கபடி அளவுகள் வைத்துக் கொள்ள வேண்டும்.
தொண்டைக் கம்மலுக்கு:
சித்தரத்தை, அதிமதுரம், அரிசித்திப்பிலி வாங்கி ஒன்றாக இடித்து, அதை இரு பாகமாக்கி ஒரு பாகத்தில் எண்ணூறு மில்லியளவுத் தண்ணீரை ஊற்றி அடுப்பில் வைக்க வேண்டும். அந்த கஷாயம் இருநூறு மில்லியளவுத் தண்ணீராகச் சுண்டியதும், அதை ஒரு நாளைக்கு மூன்று வேளையாகப் பிரித்துச் சாப்பிட வேண்டும். மீதிப் பாதி மருந்தை மறு நாளைக்கு அதைப்போலவே செய்து மூன்று வேளை சாப்பிட வேண்டும். இதைப்போல் நான்கு நாட்களுக்கு சாப்பிட்டால் தொண்டைக் கம்மல் குணமாகும்.
ஒற்றைத் தலைவலி :
மருதோன்றி (மருதாணி)யை “அழவான இலை’ என்றும் சொல்வார்கள். அந்த இலையை அரைத்து எந்தப் பக்கத்தில் தலைவலி இருக்கிறதோ, அந்தப் பக்கத்துக் காலின் அடிப்பாகத்தில், பாதத்தில் புதிய பத்துக் காசு அளவு வட்டமாக வைத்து, துணியால் கட்டிக் கொண்டு இரவில் படுத்துவிட வேண்டும். ஒரு தடவை செய்தால் போதும். உடனே ஒற்றைத் தலைவலி நின்றுவிடும். மறுபடி தலைவலி வரும்போது இப்படிச் செய்யலாம்.
அஜீரணம்:
அடிக்கடி அஜீரணத்தால் துன்பப்படும் நண்பர்கள் தினமும் பப்பாளிப் பழத்தை ஒரு துண்டு சாப்பிட்டு வந்தால் எப்படிப்பட்ட அஜீரணமும் போகும்.
கல்லீரல் வீக்கம்:
கல்லீரல் வீக்கமும் காய்ச்சல் கட்டியும் உள்ள குழந்தைகளுக்குப் பப்பாளிப் பழத்தைச் சாப்பிடக் கொடுத்தால் சில நாட்களில் கட்டாயம் குணமாகும். பழத்தை அல்வா, ஜாம் முதலியவை செய்தும் சாப்பிடலாம்.
கக்குவான் இருமல்:
அதிமதுர வேரை வாயில் அடக்கி வைத்துக் கொண்டு அதன் நீரை விழுங்கும்படி செய்யலாம். மக்காச் சோளக் கதிர்த் தண்டைக் கஷாயம் வைத்துச் சாப்பிடலாம்.இவற்றைக் கொடுத்தால் கக்குவான் இருமல் அடியோடு நீங்கி விடும் என்று நினைக்க வேண்டாம். கொஞ்சம் குறையும். குழந்தைகளுக்கு வாந்தி அதிகம் இராது. எப்படியும் மூன்று மாதம் இருந்த பின்தான் இருமல் போகும“.
குடல் வாதம்:
முள்ளங்கியின் விதையைக் கஷாயமிட்டுச் சாப்பிடக் குடல் வாதம் அறவே நீங்கும்.
தாது விருத்தியாக:
முள்ளங்கி விதையையும், முள்ளங்கிக் கிழங்கையும் அதிகமாக உடயோகித்து வந்தால் தாகு விருத்தியாகும்.
ஜலதோஷம்:
பகலில் சாப்பாட்டின் போது ஒரு பச்சை வெங்காயத்தைத் துண்டு துண்டாக்கி உணவுடன் மூன்று வேளை சாப்பிட்டால் ஜலதோஷம் நீங்கும்.
வயிற்றில் கட்டி:
வெள்ளை முள்ளங்கியின் சாற்றை எடுத்து அரை அவுன்சு வீதம் 90 நாட்கள் சாப்பிட வேண்டும். 91ம் நாள் குணம் தெரியும். காலையில் ஆகாரத்துக்கு முன் சாப்பிட வேண்டும். அரை மணிக்குப் பிறகு எதையும் சாப்பிடலாம்.
தலையில் புழு வெட்டு :
1. ஆற்றுத் தும்மட்டிக்காயை நான்காக வெட்டி அதில் ஒரு பகுதியைத் தலையில் தேய்க்க வேண்டும். இதன் கசப்புத் தன்மையைத் தாங்காத பூச்சி, உடலில் இறங்கி ரத்தத்தின் வேகத்தில் இறந்துவிடும். தும்மட்டிக்காயைச் சுமார் 90 நாட்கள் தேய்க்க வேண்டும். 2. வெங்காயத்தையும் மூக்குப் பொடியையும் ஒன்றாக இடித்துத் தலையில் எப்பகுதியில் சொட்டை இருக்கிறதோ, அப்பகுதியில் எரிச்சலைப் பாராமல் சுமார் 15 நாட்கள் தேய்க்க வேண்டும்.
பாதத்தில் பித்த வெடிப்பு: ஐந்து நாட்களுக்கு விடாமல் வேப்ப எண்ணெயைத் தடவினால் பித்த வெடிப்பு மறைந்துவிடும். ஆறு மாதத்துக்கு இந்தத் தொல்லை இராது.
வெண்குஷ்டம் :
மருதாணி வேர். அதாவது அழவான இøல் செடிவேர் சிறிது எடுத்து உலர்த்தி வைத்துக் கொள்ளவும். அதில் கொஞ்சம் எடுத்துப் பசும்பால் விட்டு நன்றாக அரைத்துக் கொண்டு வெண்மையாக இருக்கும் தோலின்மேல் பூசவும். நாளடைவில் தோலின் வெண்ணிறம் மாறிவிடும்.
காலராவைத் தடுக்க:
காலை, மாலை ஒரு தேக்கரண்டி தேன் குடித்தால் வாந்திபேதி வராமல் தடுத்துக் கொள்ளலாம்.
மூலம், வாய்ப்புண், வயிற்றுப்புண்: இந்த வியாதிகளுக்குத் துத்தி இலைக் கீரையைச் சமைத்துச் சாப்பிட வேண்டும். புளி ஊற்றக் கூடாது. பகல் உணவுடன் ஒரு வேளை மட்டும் சாப்பிட வேண்டும். இந்தக் கீரை சாப்பிடும்போது மற்றக் கீரைகளை உண்ணக்கூடாது.
கடுமையான சுளுக்கு:
சுளுக்குப் பிடித்த இடத்தில் துத்தி இலையை மெதுவாகத் தேய்த்துவிட வேண்டும். மேலிருந்து கீழ்நோக்கிக் காலையில் தேய்த்த ஒரு மணி நேரத்துக்குப்பின், தாங்கக்கூடிய சூட்டில் வெந்நீரை ஐந்து நாட்களுக்கு விட வேண்டும். பிறகு குணமாகும்.
காதில் சீழ் வடிதல்: எட்டிக் கொட்டையை வேப்பெண்ணெயில் ஒரு வாரம் ஊற வைக்க வேண்டும். ஒரு வாரம் கழித்து “ஒரு கோணி ஊசியில் குத்திக் கொள்ள வேண்டும். எட்டிக் கொட்டையைக் கொளுத்தியதும் கொட்டையிலிருந்து எண்ணெய் சொட்டும். அதுதான் எட்டித் தைலம். மூன்று சொட்டு ஆற வைத்து, காதில் விட வேண்டும். சீழ் குணமாகும். (5 வயதுக்குள் இருக்கும் குழந்தைகளுக்கு இதைத் தரக்கூடாது)
காலில் ஆணி:
ஊறுகாய்க்கு ஊற்றும் காடியைப் பஞ்சில் எடுத்துக் கொண்டு அணி இருக்கும் காலில் ஒரு நாளைக்குப் பலமுறை தடவிக் கொண்டே வரவேண்டும். 45 நாட்களில் குணம் தெரியும் ஆணி மறைந்துவிடும்.
பல்வலி : 1. கீழாநெல்லி இலையைக் காலையில் நன்றாக மென்று அப்படியே பல் துலக்க வேண்டும். மூன்று நாட்களுக்குப் பல் துலக்கினால் போதும். குணம் தெரியும். 2. தென்னை மரத்தின் வேரை நன்றாக மென்று மூன்று நாட்களுக்குப் பல் துலக்க வேண்டும். குணம் தெரியும்.
வழுக்கைத் தலையில் முடி வளர:
காலையிலும், இரவிலும் சாதாரண வெங்காயத்தைத் தலை நிறையத் தேய்த்து வந்தால் இரண்டு மூன்று மாதங்களில் கருகருவென்று முடி வளர்ந்துவிடும்.

Wednesday 18 November 2015

Kitchen Tips!!!

சமையலில் செய்யக்கூடாதவை... ....செய்ய வேண்டியவை.... சமையலில் செய்யக்கூடாதவை... * ரசம் அதிகமாக கொதிக்ககூடாது. * காபிக்கு பால் நன்றாக காயக்கூடாது. * மோர்க்குழம்பு ஆறும் வரை மூடக்கூடாது. * கீரைகளை மூடிப்போட்டு சமைக்கக்கூடாது. * காய்கறிகளை ரொம்பவும் பொடியாக நறுக்கக்கூடாது. * சூடாக இருக்கும் போது, எலுமிச்சம்பழம் பிழியக்கூடாது. * தக்காளியையும், வெங்காயத்தையும் ஒன்றாக வதக்கக்கூடாது. * பிரிட்ஜில் வாழைப்பழமும், உருளைக்கிழங்கும் வைக்கக் கூடாது. * பெருங்காயம் தாளிக்கும் போது, எண்ணெய் நன்றாக காயக்கூடாது. * தேங்காய்ப்பால் சேர்த்தவுடன், குழம்பு அதிகமாக கொதிக்கக்கூடாது. * குலோப்ஜாமூன் பொரித்தெடுக்க நெய்யோ, எண்ணெயோ நன்றாக காயக்கூடாது. * குழம்போ, பொரியலோ, அடுப்பில் இருக்கும் போது கொத்தமல்லி இலையை போடக்கூடாது. ....செய்ய வேண்டியவை.... * மாவு பிசைந்தவுடனேயே பூரி போட வேண்டும். * புளி காய்ச்சலுக்கு, புளியை கெட்டியாக கரைக்க வேண்டும். * ஜவ்வரிசி வற்றலுக்கு, அரை உப்பு போட்டு காய்ச்ச வேண்டும். * போளிக்கு மாவு, கிட்டத்தட்ட ஆறு மணிநேரம் ஊறவேண்டும். *குருமாவை இறக்கும் போது, கரம் மசாலாவை சேர்க்க வேண்டும். * பச்சை கற்பூரம் டப்பாவில், நான்கு மிளகை போட்டு வைக்க வேண்டும். * குறைந்தது இரண்டு மணி நேரமாவது சப்பாத்திக்கு மாவு ஊற வேண்டும். * வாழைப்பூவை, முதல் நாள் இரவே நறுக்கி, தண்ணீரில் போட வேண்டும். * கடலை உருண்டைக்கு, வெல்லப்பாகு, முத்தின பாகாக இருக்க வேண்டும். *வற்றல் குழம்பை, தாளித்த எண்ணெய், மேலே வரும் வரை கொதிக்க விட வேண்டும்

Tuesday 17 November 2015

வீட்டுக் குறிப்புகள்

-
எளிமையான வீட்டுக் குறிப்புகள் !

*வெங்காயம், பூண்டின் தோல் உரித்தப்பின் கைகளில் வெங்காய வாசனை போகவில்லையா? ஒரு ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் ஸ்பூனில் கைகளை நன்றாக தடவுங்கள். *உங்கள் வீட்டில் எறும்பு தொல்லை அதிகமாக உள்ளதா, அவை எந்த வழியாக வருகின்றன என்பதை பார்த்து, அங்கு பெட்ரோலியம் ஜெல்லியை பூசிவிடுங்கள்

*மீன் தொட்டியை நீங்கள் சுத்தம் செய்து வேறு நீர் மாற்றும் போது, பழைய நீரை கீழே ஊற்றுவதற்கு பதிலாக உங்கள் வீட்டு செடிகளுக்கு ஊற்றலாம். வெள்ளி பாத்திரங்கள் கருப்பாகிவிட்டதா, உங்கள் டூத்பேஸ்டை வைத்து தேய்த்தால், அந்த நிறம் மறைந்துவிடும

் *பிஸ்கெட்டுகள் நமுத்துப்போகாமல் இருக்க, அவற்றை வைக்கும் பாட்டிலுக்கு அடியில் டிஷ்யூ பேப்பரை வைத்துவிடுங்கள்.

*உப்பு ஜாடியில், உப்பு கட்டியாக மாறியிருந்தால், அந்த ஜாடியில் சிறிதளவு அரிசியை சேர்த்துவிட்டால் போதும். வாழைக்காய் வறுவல் செய்யும்போது, ஒரு சிறிய ஸ்பூனில், நீர்மோரை எண்ணெய்யில் விட்டால் வாழைக்காய் கருக்காமல் வறுபடும். ஏதாவது விசேஷத்திற்கு சாப்பிட போகும்முன், ஒரு ஸ்பூன் தேனுடன்,ஒருசிறிய மேசைகரண்டி பட்டைபொடி சேர்த்து நன்றாக குழைத்து சாப்பிட்டால், சாப்பிட்டவுடன் அஜீரண கோளாறு எதுவும் ஏற்படாது. படிக்கிற மாணவர், மாணவிகள், மற்றும் ஆசிரியர் வேல பார்ப்பவர்களுக்கு தொண்டைப் புண் அடிக்கடி ஏற்படும். அதற்கு அவர்கள் ஒரு டம்ளர் வெந்நீரில், ஒருசிட்டிகை மஞ்சள், ஒருஸ்பூன் தேன் சேர்த்து நன்றாக கலக்கி, அரைமணிக்கு ஒருதடவை குடித்தால் தொண்டைப் புண் சரியாகிவிடும். சளி அதிகமாக இருந்தால் பத்து துளசி இலைகளை தொடர்ந்த்து வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர, சளி அனைத்தும் வந்துவிடும். தொண்டை வேக்காளாம் வந்து வயிறும் புண்ணாகி, காதில் உள்ளே அரிக்கும். அதற்கு ஒரு சிறிய குழிக்கரண்டி பச்சரிசாதம் சூடாக எடுக்கவும். அதனுடன் அதற்குத் தேவையான சுடுகிற பாலையும் சேர்க்கவும். ஆறியவுடன் ஒரு துளி தயிர் சேர்க்கவும். மறுநாள் காலை பல்விளக்கியவுடன் இந்த சாதக்கலவையை சாப்பிடவும். இந்த மாதிரி தொடர்ந்து மூன்று நாள் சாப்பிட்டால் வயிற்று,தொண்டை வேக்காளம் இல்லாமல் போய்விடும். வயிற்று வேக்காளத்திற்கு மணத்தக்காளி கீரையைக் கூட்டு வைத்து வெறும் வயிற்றில் சாப்பிட்டால் வேக்காளம் இருந்த இடம் தெரியாமல் போய்விடும். குழம்போ, ரசமோ செய்யும் பொழுது உப்பு போட்டு இருக்கிறோமா, இல்லையா என்பதை கண்டுபிடிக்க ஒரு சிறிய வழி. உப்பு போடவில்லை என்றால் ஒரத்தில் நுரையுடன் கொதித்துக் கொண்டு இருக்கும். உப்பு போட்டு இருந்தால் நடுவில் நுரையுடன் கொதிக்கும். குழந்தைகள் கறிவேப்பில்லை சாப்பிட மாட்டார்கள். எனவே சமையலில் தாளிக்கும் போது, பதினைந்து இலைகளைப் பொடியாக நறுக்கி அதனுடன் சேர்த்தால் சத்து சேரும். பொரித்த கூட்டிற்கு தேங்காய் இல்லை என்றால் கவலைப்பட வேண்டாம். காய்கறி வேகும் பொழுதே சிறிது சீரகம் சேர்க்கவும். அனைத்தும் வெந்தவுடன், அரை டம்ளர் பாலில், ஒரு ஸ்பூன் கடலை மாவை நன்றாகக் கரைத்து, கூட்டில் சேர்க்கவும். தேங்காய் போட்ட ருசி கிடைக்கும். கிரைண்டர் பாதுகாப்பு டிப்ஸ் ! மாவு அரைப்பதற்கு நாம் பயன்படுத்தும் சாதனம் கிரைண்டர். தானியங்கள் அதிகம் போடாமல், சிறிதளவு தானியங்கள் போட்டோ அரைப்பதால் கூட கிரைண்டர் வீணாக தேய்வு அடையும். முதலில் சிறிதளவு தானியங்களைப் போட்டு கிரைண்டரை சில வினாடிகள் ஓடவிட வேண்டும். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக மீதமிருக்கும் தானியங்களைச் சேர்க்க வேண்டும் அரைத்துக் கொள்ளலாம். கிரைண்டர் வாங்கும் போது அரைக்கும் கல் வெள்ளையாக இல்லாமல் கருப்புக் கல்லாக வாங்க வேண்டும். கிரைண்டரில் உளுந்து அரைத்த பிறகு அரிசியை அரைக்கலாம் ஏனெனில் கல்லின் வழவழப்பு நீங்கும். உளுந்தும் கணிசமாக இருக்கும். இட்லியும் பூப்போல இருக்கும். கிரைண்டரில் உட்பகுதியில் மாவு தள்ளும் பலகை டிரம்மில் ஒட்டாதபடியும், வட்டையில் உள்ள கல்லிலும் படாதபடியும் சிறிதளவு இடைவெளி விட்டு மாட்டி இருக்க வேண்டும். இல்லையெல் பலகை விரைவில் தேய்ந்துவிடக்கூடும். குழவியல் உள்ள கட்டை தண்ணீரில் ஊறி இற்றுப் போய்விட்டால் உடனே மாற்ற வேண்டும். கிரைண்டர் வீட்டின் மூலையில் இருந்தால், எலி சில சமயங்களில் ஒயர்களைக் கடித்துவிடும். இதனால் சமயங்களில் கிரைண்டர் ஷாக் அடிக்கும் அபாயம் ஏற்படும். ஆதலால் கிரைண்டர் இருக்குமிடம் தனியாக இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். கிரைண்டரில் உள்ள தள்ளு பலகை இறுக்கமாக மாட்டப்பட்டு இருக்க வேண்டும். லூசாக இருந்தால் மாவு சரியாக அரைபடாது. கிரைண்டரில் உள்ள கல்லும், குழவியும் வழ வழ என்று வழவழப்பாக இருந்தால் மாவு அரைக்க அதிக நேரமாகும். இதைத் தவிர்க்க இரண்டுக் கல்லையும் கொத்திக் கொள்ள வேண்டும். கிரைண்டர் குழவி மாட்டும் ஸ்டாண்டில் இன்சுலேஷன் டேப்பைச் சுற்றி விட்டால் துருப்பிடிக்காமல் இருக்கும். கொர, கொர என்ற சத்தம் அதிகம் வந்தால் பேரிங் பழுதடைந்து இருக்க நேரிடும். உடனே பேரிங்க்கை மாற்ற வேண்டும். மோட்டார் சுழன்று டிரம் சுழவில்லை எனில் பெல்ட் பழுது அடைந்து இருக்கும். இதற்கு புதிய பெல்ட் மாற்ற வேண்டும்.
எளிதான வீட்டு குறிப்புகள் !!!

1.வாழைக்காய் நறுக்கும்போது கையில் ஏற்படும் பிசுக்கு நீங்க சிறிது தயிரால் கையைக் கழுவலாம்.
2.காலிபிளவர், கீரை இவற்றை சமைப்பதற்கு முன்பு வெந்நீரில் சிறிது உப்பு சேர்த்து அதில் சிறிது நேரம் போட்டு வைத்தால் அவற்றில் உள்ள புழு, மண் அடியில் தங்கிவிடும். 3.குருமா, தேங்காய் சட்னி இவற்றிற்கு அரைக்கும்போது முந்திரி பருப்பு சில சேர்த்து அரைத்தால் சுவையாக இருக்கும்.
4.அடைக்கு அரைத்த மாவில் சிறிது மஞ்சள் பொடி சேர்த்து இட்லி தட்டில் ஊற்றி வேகவைத்துச் சாப்பிட்டால் எளிதில் ஜீரணமாகும்.
5.ஜவ்வரிசியை வறுத்து பொடி செய்து வைத்துக்கொண்டு அடை, வடை, தோசை செய்யும்போது சிறிது ஜவ்வரிசி மாவு சேர்த்து செய்தால் மொறுமொறுவென்றிருக்கும்.
6.அடை, பக்கோடா செய்யும்போது புதினா இலை சேர்த்து செய்தால் வாசனையாக இருக்கும். உடலுக்கும் நல்லது.
7.தக்காளியின் தோல் நீக்க தக்காளியின் மேல்பக்கமும் கீழ்ப்பக்கமும் கத்தியால் சிறிது கீறிவிட்டு 10 நொடிகள் சுடுநீரில் போட்டு எடுத்தால் தோல் சுலபமாகக் கழன்று விடும்.
8.சப்பாத்தி மாவுடன் சோயா மாவும் சேர்த்து சப்பாத்தி செய்தால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். புரோட்டின் சத்தும் கிடைக்கும். 9.சேமியா பாயசம் செய்யும்போது குழைந்து போய்விட்டால் இரண்டு சொட்டு எலுமிச்சை சாறு அதில் சேர்த்தால் சேமியா தனித்தனியாகிவிடும். 10.குலோப்ஜாமூன் செய்யும்போது உருண்டை கல் போலாகிவிட்டால் ஜீராவுடன் சேர்த்து சிறிது நேரம் அடுப்பில் வைத்துவிட்டால் மென்மையாகிவிடும்.
11.கட்லெட் செய்ய 'பிரெட் கிரம்ப்ஸ்' கிடைக்கவில்லையெனில் ரவையை மிக்சியில் அரைத்து பயன்படுத்தலாம். 12.கூடையில் வைத்திருக்கும் உருளைக்கிழங்கு முளை விடாமல் இருக்க, கூடவே, கூடையில் ஒரு ஆப்பிள் பழத்தையும் போட்டு வையுங்கள்.

முக்கியமான வீட்டு குறிப்புகள் !!!

1. இஞ்சியை ஒரு கிண்ணத்தில் தண்ணீர் ஊற்றி பிரிட்ஜில் வையுங்கள். தண்ணீரை இர்ண்டு நாள்களுக்கு ஒருமுறை மாற்றிக் கொண்டே வாருங்கள். நீங்கள் வைத்திருக்கும் இஞ்சி நீண்ட நாள் கெடாமல் இருக்கும். 2. ஒரு டப்பாவில் சிறிதளவு சர்க்கரை தூவி அதனுள் பிஸ்கட் வையுங்கள். பிஸ்கட் நீண்ட நாள் கெடாமல் இருக்கும். 3. சப்பாத்திக்கு மாவு பிசைவதற்கு முன்னாள் சிறிதளவு உப்பை தடவிக் கொண்டால் கையில் சப்பாத்தி மாவு ஒட்டாது.
4. ஸ்கெட்ச் பென் கறையை போக்க அசிடோன் ( நெயில் பாலிஷ் ரிமூவர்) தடவினால் போதும். கறை மறைந்து விடும் .
5. வீட்டில் புகை அதிகமாக காணப்படுகிறதா? அறையில் ஈரத் துணியை தொங்க விட்டால் புகை காணமல் போய்விடும்.
6. மிளகாய் நீண்ட நாட்கள் இருக்க வேண்டுமானால் அதனை எடுத்து பேப்பரில் சுற்றி பிரிட்ஜில் வையுங்கள் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும்.
7. அரிசி மற்றும் காய் கறிகள் கழுவிய தண்ணீரை வீணாக்காமல் அதனை செடிகளுக்கு கொட்டினால் செடிகள் செழிப்பாய் வளரும்.
8. ஒரு கைப்பிடி கல் உப்பை சின்ன மூட்டையாகக் கட்டி அரிசி மூட்டைக்கு அருகில் வைத்தால் பூச்சிகள் எதுவும் அரிசியை அண்டாது.
9. மிதியடிக்கு அடியில் அதே அளவில் பழைய நியூஸ் பேப்பரை வைத்து விட்டால், மிதியடிகள் அழுக்கு எல்லாம் பேப்பரில் போய்விடும்.
10. பச்சை வெங்காயம் சாப்பிட்ட நாற்றத்தை போக்க உப்பு கலந்த நீரில் வெங்காயத்தை ஊற வைத்து எடுத்து சாப்பிட்டால் காரம், நாற்றம் இருக்காது. 11. காலிபளவர் சமைக்கும் போது ஒரு துளி பால் சேர்த்தால் பூ போன்ற வெள்ளை கலர் மாறாமல் இருக்கும். பச்சை வாடையும் வராது.
12. இட்லி மாவு புளிக்காமல் இருக்க,வெற்றிலையை காம்பு கில்லாமல் மாவுப் பாத்திரத்தில் குப்புற இருப்பது போல இரண்டு வெற்றிலையைப் போடவும். இரண்டு நாட்களுக்கு பொங்காமலும், புளிக்காமலும் இருக்கும்.
13. வெயில் காலத்தில் பெருங்காயம் கட்டிபோலாகிவிடும் . இப்படி ஆகாமளிருக்க பெருங்காய டப்பாவில் பச்சை மிளகாயை காம்பு எடுக்காமல் போடுங்கள். பெருங்காயம் அப்படியே இளகி பஞ்சு போல் ஆகிவிடும்.
14. ரவா, மைதா, அரிசி ஆகியவற்றில் பூச்சி புழுக்கள் வராமல் இருப்பதற்கு கொஞ்சம் வசம்பு தட்டி இந்த பொருள்கள் உள்ள பாத்திரத்தில் போட்டு வைத்தால் பூச்சி, புழுக்கள் தலை காட்டாது.
15. பிரிட்ஜே, ஸ்டோர் ரூம், பாத்ரூம், என கரப்பான் பூச்சி தொல்லை இருந்தால் ஆஸ்ப்ரின் மாத்திரைகளை அங்கங்கு வைத்தால் கரப்பான் தொல்லை இருக்காது.
16. காய்ந்த எலுமிச்சை தோளை அலமாரியில் போட்டு வைத்தால் பூச்சி வராது. http://tamilbay.co

For Diabetic Patients(Oil for Sore)!!!

சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு படும் காயங்கள் விரைவில் ஆறிட அரளி எண்ணெய் ! 100 மில்லி தேங்காய் எண்ணெயில் ஒரு கைபிடி அளவு சிகப்பு அரளிப் பூவை போட்டு ஒரு கண்ணாடி பாட்டிலில் 3-5 நாள் வெயிலில் வைக்கவும் நன்றாக சாரு எண்ணெயில் இறங்கிவிடும் .பிறகு ஒரு மெல்லிய துணியில் வடிகட்டி பூவை பிழிந்து எடுத்துவிடவும் .இப்போது பாட்டிலில் எண்ணெய்யை பத்திரமாக வைத்துக்கொண்டு மேல் பூச்சாக உபயோகப்படுத்தவும் .நாள்பட்ட பெரிய புண்ணையும் எந்நிலையில் ஆற்றிடும் தன்மை வாய்ந்தது இது கடுமையான விஷம் ,மிகவும் கவனமாக மேல் பூச்சாக மட்டும் உபயோகப்படுத்தவும் .குழந்தைகளுக்கு எட்டாத இடத்தில் வைக்கவும்

Monday 16 November 2015

சின்ன சின்ன வீட்டுக் குறிப்புகள் !!!

குழந்தைகளூக்கு ஏற்படும் சளிக்கு (இஞ்சி சாறு) சளி சேர்ந்தால் முதலில் இஞ்சி சாறு முன்று நாட்களுக்கு தொடர்ந்து மாலை 5 மணி வாக்குல எடுத்து கொடுக்கவும். இது இரண்டு வயதிலிருந்து உள்ள பிள்ளைகளுக்கு இரண்டு ஸ்பூன் அளவுக்கு கொடுக்கலாம். குழந்தைகள் என்றில்லை எல்லோருக்கும் குடிக்கலாம். பெரியவர்களுக்கு ஒரு மேசைகரண்டி அளவு இஞ்சி சாறில் தேன் கலந்து கொடுக்கனும் , தேன் இல்லை என்றால் சர்க்கரை கலந்து கொடுக்கவும்.சைட் எஃபக்ட் எதுவும் வராது, இந்த சாறு குடித்த்தும் ஒன்றுசளி வாமிட் மூலம் வெளியாகும், இல்லை மோஷன் மூலமாக வெளியாகும். இஞ்சி சாறு செய்யும் முறை  இரண்டு அங்குல நீளம் உள்ள இஞ்சியை தோலை நீக்கி கழுவி ஆறிய வெண்ணீர் விட்டு அரைக்கவும் பட்டு போல் வேண்டாம் மிக்சியின் பஸ்ஸில் இரண்டு முன்று சுற்று சுற்றினால் போதும். அதை எடுத்து டீ வடிக்கட்டும் ஸ்ட்ரெயினரில் தேங்காய் பால் எடுப்பது போல் பிழியவும். அந்த சக்கையை தூர போட வேண்டாம் ஒரு சின்ன கண்டெயினரில் வைத்தால் இரண்டு முன்று நாட்களுக்கு டீ போட உதவும். மிக்சியில் அரைக்கனும் என்றில்லை கேரட் துருவும் கிரேட்டரிலும் செதுக்கி பிழியலாம். பிழிந்த சாறை பத்து நிமிடம் அப்படியே வைக்கவும், பத்து நிமிடம் கழித்து மேலோடு இருக்கும் சாற்றை மட்டும் வேறு டம்ளரில் தெளிந்தார் போல ஊற்றவும் வடிக்கட்டியதும் அடியில் வெள்ளை நிற படிவம் படிந்த்து இருக்கும் அதை பயன் படுத்த கூடாது அது நஞ்சு. / எடுத்து வைத்துள்ள சாற்றில் தேன் கலந்து குழந்தைகளுக்கு கொடுக்கவும். அதிக காரம் நாக்கில் தட்டாமல் நீங்கள் குடித்து பார்த்து விட்டு கொடுக்கவும். இது முன்று நாள் தொடர்ந்து ஒரு முறை கொடுத்தால் போதும். இதை விட ஒரு சிறந்த மருந்து. அக்கரா (இதுக்கு ஆங்கில பெயர் தெரிந்தால் யாராவது சொல்லவும்) இது இஞ்சி சாறுக்கு அண்ணன் தொண்டையில் உள்ள சளியை அரவே அறுத்து எடுத்துடும், அக்கரா கிடைத்தால் அதில் நிறைய தேன் கலந்து ஒரு ஸ்பூன் முழுவது சாப்பிட கொடுக்கலாம். இது என் கிரான்மாவின் அம்மா வைத்தியம், மொத்தமா திரித்து வைத்து கொள்வோம், எத்தனை வருடம் ஆனாலும் கெடாது. ( பச்ச குழந்தைக்ளுக்கு ஆறு மாத்த்திலிருந்து கொடுக்க கால் டீஸ்பூன் அக்கராவில் வெண்ணீர் ஊற்றி ஊறவைத்து அதை வெள்ளை மல் துணியில் வடிக்கட்டி அதில் தேன் கலந்து கொடுக்கவும்.) சளிதொல்லைக்க்கு என்ன என்ன சாப்பிடலாம் 1. சூப் சிக்கன் (அ) மட்டன் சூப் கொடுக்கவும் ( செய்முறை பின்பு போடுகீறேன் 2. இஞ்சி சாறு 3. உணவில் மிளகு சேர்த்து தயாரித்து கொடுத்தல் 4. ஒரு டம்ளர் பாலை காய்ச்சி அதில் முன்று இதழ் சாப்ரான் ( குங்குமப்பூ) உரைத்து கொடுக்கலாம். 5. இஞ்சி ரசம், வாரம் ஒரு முறை கொடுக்கலாம்.( இது நான் சொல்லி நிறைய் பேருக்கு கேட்டு இருக்கு) இது ஏற்கனவே குறிப்பில் இருக்கு மறுபடி ரீ போஸ்ட் செய்கிறேன்/ 6. சூடாக வெண்ணிர் குடிக்கும் பக்குவத்தில் அடிக்கடி குடிக்க கொடுக்கவும் 7. அக்கரா தேன் கலந்து சாப்பிடலாம். 8. மிளகு பால் காய்ச்சி சிட்டிக்கை மஞ்சள் பொடி போட்டு சர்க்கரை சேர்த்தும் இரவில் குடிக்கலாம். //பேன், ஏசிக்கு நேரா படுக்காதீர்கள் படுக்கும் போது தலைக்கு சிறிது உயரம் வைத்து சரிந்து படுக்கவும். தொண்டை, இரு காது மடலுக்கு பின், முதுகு நடு தண்டில் தைலம் தேய்க்கவும் அழுத்தி தேய்க்காமல் மென்மையாக தேய்க்கவும்/ ஆவி பிடிக்கவும். சூடான வெண்ணிரில் சுக்கு (அ) சிறிது தைலம் சேர்த்து ஆவி பிடிக்கவும். ( பெரியவர்கள் துளசியும் சளிக்கு நல்லது துளசி டீ, சுக்கு, மிளகு டீ, வெரும் மிளகு டீ, சாப்ரான் டீ இது போல் குடிக்கலாம்) மிளகு , அக்கரா, இஞ்சி சாறு ரொம்ப அதிகமாக கொள்ளவேண்டாம் வயிற்றுக்கு ஒத்துக்கொள்ளாமல் லூஸ்மோசஷன் ஆகும்

சின்ன சின்ன வீட்டுக் குறிப்புகள் !!!

1. தரையில் எண்ணை கொட்டி விட்டால் அரிசி மாவு அல்லது கோதுமை மாவு
ஏதாவது ஒன்றை சிறிது நேரம் தூவி பிறகு திரட்டி எடுத்தால் எண்ணை கறை
நீங்கிவிடும்.
2. குளிர் நாளில் தயிர் சீக்கிரம் உறையாது. தயிறை தோய்த்து ஃப்ரிட்ஜுக்கு பின்புறம் வைத்தால் சீக்கிரம் உரையும்.
இட்லி மாவு ரொம்ப பொங்கும் போது ஃப்ரிட்ஜ் எல்லாம் நாச்தி ஆகி விடும்.
சிம்பிள் ஐடியா...ஒரு வெற்றிலையை மாவு மீது போட்டு விட்டால் அதிகமாக
பொங்காது
1.கல் நகைகளில் எண்ணை இறங்கி விட்டால் வெள்ளை பூசணிக்காயில் நகைகை
புதைத்து வைத்து ஒரு சில மணி நேரம் கழித்து எடுத்து கழுவவும் நகை பளபள
என்று இருக்கும்.
2. வீட்டில் அதிகமாக ஈ தொல்லை இருந்தால், சிறிது கற்பூரத்தை தண்ணீரில் கலந்து வீட்டை துடைத்தால் ஈ போய்விடும்.
3. ஏறும்பு அதிகமாக இருக்கும் இடத்தில் மஞ்சள் தூள் போட்டால் ஏறும்பு போய்விடும்.
4. பெருங்காயம், இஞ்சி, பூண்டு மூன்றையும் சேர்த்து அரைத்து தண்ணீரில்
கலந்து செடிகளில் தெளித்தால், செடிகளில் உள்ள பூச்சிகளும் போய்விடும்,
பாதிப்பும் ஏற்படாது.
5. கற்பூரத்தை ககிதத்தில் சுற்றி சக்கரை டப்பாவில் போட்டு வைத்தால் ஏறும்பு வராது.
இட்லிப்பாத்திரம் கரை படிந்து விட்டதா?
தண்ணீருடன் பாதி எழுமிச்சைப்பழம் போட்டு கொதிக்கவைத்தால் கரையா அப்படினா என்னன்னு கேட்பீங்க
உங்கள் புத்தக அலமாரியில் கரையான் வரும் என்ற கவலை வேண்டாம்..சிறிது
வசம்பு போட்டு வைத்தால் போதும் கரையான் அண்டாதுகல் உப்பைக் கரைச்சு அந்த
தண்ணியைத் தெளிச்சா கொஞ்சம் நிம்மதி இருக்கும்
ஃப்ரிஜ்ஜில் உள்ள ஃப்ரீசரில், ஐஸ்கட்டிகள் தோன்றாமலிருக்க கல் உப்பை உட்பகுதியில் தடவவும்.
.நன்கு பாலீஷ் செய்யப்பட்ட மரச் சாமான் களில் கறை படிந்துள்ளதா?
அரை லிட்டர் சுடுநீரில், இரண்டு ஸ்பூன் வினிகர் கலந்து, நல்ல சுத்தமான
துணியை இதில் நனைத்து கறை உள்ள இடத்தை துடைக்கவும். ஆயில் அல்லது கிரீஸ்
கறை உள்ள இடத்தில் இவ்வாறு சுத்தம் செய்தால் கறை எங்கே? என்று நீங்களே
தேடுவீர்கள்.
கதவு கிரீச் கிரீச் என சத்தமிடுகிறதா? கரித்துண்டை,அல்லது ஆயில் சத்தம் வரும் இடத்தில் தேய்க்கவும்.
செடிகள் மனதிற்கு அமைதியைத் தருவதோடு, சுற்றுச்சூழலுக்கு அழகை
ஏற்படுத்தும். உங்கள் வீட்டில் நீங்கள் தூக்கி எறியும் சில பொருட்களை,
செடிகளுக்கு உரமாக போடலாம்.
உங்கள் வீட்டில் டீ போடும் போது டீ இலைகள் அல்லது டீத்தூளை குப்பையில்
போடாமல், நீங்கள் வளர்க்கும் செடிகளின் தொட்டிகளில் போட்டால், செடிக்கு அது
நல்ல உரமாக இருக்கும்.
அக்குவாகார்ட் உள்ள வீடுகளில், அதனை சுத்தப்படுத்திய பின் அதிலுள்ள
கரியை தூக்கிப்போடாமல் செடிக்கு போடுங்கள். செடியின் வளர்ச்சிக்கு மிக
உதவியாக இருக்கும்.
பாட்டில்களை மலர்கள் வைத்து அழகுபடுத்தலாம். அறையின் ஓரத்தில் 3அல்லது4
பாட்டில்களை ஒன்றாக வைத்து, அதில் மலர்களை வையுங்கள், வீட்டிற்கு
வருபவர்கள் ஒருமுறைக்கு இருமுறை திரும்பிப் பார்ப்பார்கள்.
பட்டுப்புடவைகளை பாலித்தீன் பைகளுக்குள் போடுவதைவிட துணிப்பைகளுக்குள் போட்டுவைய்பது மிகவும் நல்லது.
புடவைகளை தனித்தனியாக பிரித்து வைக்கவேண்டும்
பட்டுகள்.சிபான்.காட்டன்.பூணம்.சில்க்.ஆர்ட்டட். ஜரிகை.ஸ்டோன் ஒர்க்.ஹேன் ஒர்க் மற்றுமுள்ளவைகள்,எனபிரித்து வைக்கவேண்டும்.
முடிந்தவரை புடவைகளை ஹேங்கரில் தொங்கவிடுங்கள் ஏனென்றால் எடுப்பதற்கும் ஈசியாக இருக்கும் நீண்ட நாளைக்கும் உழைக்கும்
வீட்டில் முகம் பார்க்கும் கண்ணாடி அழுக்காக இருக்கிறதா : ?
வேற ஏதும் தேவை இல்லை நீங்கள் பல் துலக்கும் எந்த பேஸ்டாக
இருந்தாலும் சரி அதை கொஞ்சம் யடுத்து கண்ணாடியில் தேய்த்து
கழுவி பாருங்கள் உங்கள் கண்ணாடி பளிச் பளிச் யன்று மின்னும்
கேசரி
அல்லது பொங்கல் செய்த பாத்திரத்தில் அடி பிடிக்கும் அதை நீக்குவது கடினம்
அதற்கு அந்த பாத்திரத்தில் நீர் விட்டு அடுப்பில் கொதிக்க விடுங்கள் பின்பு
தேய்தால் இலகுவாக இருக்கும்
ஒரு பெரிய பக்கெட் தண்ணீரில் "பிளீச்சிங் பவுடரை" கரைத்து, அதில், கரை
படிந்த பாத்திரத்தைப் போட்டு சிறிது நேரம் ஊற வைக்கவும். பிறகு சோப்பு
பவுடரால் பாத்திரத்தைத் தேய்த்தால் பாத்திரம் சுத்தமாகி விடும்.
அதிக எண்ணெய் பிசுக்குள்ள பாத்திரத்தில் நான்கு சொட்டு வினிகரை ஊற்றித் தேய்த்தால் பிசுக்கு போய் விடும்.
பிளாஸ்டிக் பாத்திரத்தில், சூடு இல்லாத சாம்பார், ரசம், பொரியலைப்
போட்டு வைத்தால் கூட, பிளாஸ்டிக்கில் கரை ஏறும். இதைத் தவிர்க்க,
பிளாஸ்டிக் பாத்திரத்தின் உள் பக்கம் முழுவதும் எண்ணெய் தடவிவிட்டு, உணவு
வகைகளைப் போட்டால் கரை ஏறாது.
.வாழைக்காயை தண்ணீரில் போட்டு வைத்தால் பழுக்காமல் இருக்கும்..
2 .துளசி விதையுடன் உப்பு ,மிளகு சேர்த்து பொடி செய்து சாபிட்டால் அஜீரனம் நீகும்.
3 .இள நரை என்றால் இலேசாக இருக்கும்போதே வெண்ணை தடவி வந்தால் அதை தடுக்கலாம்.
4 .சூடான cooffee இல் தேன் கலந்து குடித்தால் சளி குறைந்து மூக்கடைப்பு நிற்கும்.
5 .வெங்காயத்தை விழக்கெனைஇல் வதக்கி சாப்பிட்டால் மலச்சிக்கல் நீகும்,வயறு சுத்தமாகும்.
6 .பாசிபயறு மாவுடன் சந்தனம் கலந்து முகத்தில் பூசினால் கரும்புள்ளி நீகும்.
7 .வாரம் ஒரு முறை இஞ்சி,தேன் கலந்த சாரை சூடாக்கி குடித்தால் உடல் சுறுசுறுப்பு வரும்.
8 .தேங்காய் எண்ணை,வெந்தையம்,கற்பூரம்,இவைகளை கலந்து தலைஇல் தேய்த்தால் பொடுகு தொல்லை நீகும்.