Monday 23 March 2015

For All Heart Troubles!!!

 Heart Problem:
heart2

இந்தப்பதிவை படிக்கும் முன்  இதயவலி ( Heart Attack) இதயஅடைப்பு நீக்கும் அபூர்வ மருந்து ! இந்தப் பதிவை படிக்கவும்.
இதயவலி நீக்கும் அபூர்வ மருந்தை நம் வலைப்பூவின் வாசகர்கள் பலரும் பயன்படுத்தி  முழுமையான குணம் அடைந்துள்ளனர் என்ற மகிழ்ச்சியான செய்தியை முதலில்  தெரியப்படுத்திக்கொள்கிறோம். எல்லாம் வல்ல இயற்கை அன்னைக்கும் நம் குருநாதருக்கும்  இந்த நன்றியை காணிக்கையாக்குகிறோம். 4 மாதங்களுக்கு முன் மதுரையில் ஒரு பிரபலமான  தனியார் மருத்துவமனையில் நம் நண்பரின் சகோதரிக்கு பிறந்த குழந்தையைப்பார்க்கச் சென்றோம். பார்த்துவிட்டு வரும் வழியில் மருத்துவமனையின் வாசலில் ஒரு பெண் இதயவலியால் துடித்துக்கொண்டிருக்கிறார் மருத்துவமனை ஊழியர்கள் அவரின் பெண் குழந்தையிடம் அட்மிசன் பார்ம் நிரப்பி கொடுத்துவிட்டு வரும்படி கூறினார், அந்த குழந்தைக்கு 14 வயது இருக்கும், தாய் வலியால் உயிருக்குப் போராடி  துடித்துக்கொண்டிருக்கும் போது கண்ணீருடன் அந்த குழந்தைக்கு என்னசெய்வதென்றே  தெரியவில்லை , நம் நண்பரும் உடனடியாக உதவி செய்து அந்த குழந்தையிடம் சென்று  தாயின் பெயர் மற்றும் முகவரியை கொடுத்து உடனடியாக மருத்துவமனையில் அட்மிசன் செய்தனர், 1 மாதமாகவே வலி இலேசாக இருந்து இன்று அதிகமாகி உள்ளதாக  அந்தப் பெண்மனி தெரிவித்தார், எல்லா சோதனைகளும் முடிந்தபின் இதயத்திற்குள் செல்லும்  குழாயின் அளவு சுருங்கி இருப்பதாக மருத்துவர் தெரிவித்தனர், குழந்தையின் பாட்டி மற்றும்  தாத்தா சில மணி நேரங்களில் மருத்துவமனைக்கு வந்தனர். தன் மகன் பிரான்சில் அலுவலக வேலை காரணமாக சென்றிருப்பதாகவும் தாங்கள் இன்று காலைதான் திருமண வீட்டிற்கு  சென்றதாகவும் அதற்குள் மருமகளுக்கு இப்படி இதயவலிவந்துவிட்டது என்றும் கூறினார்,  இதில் வேடிக்கை என்னவென்றால் அவர் அகத்தியரின் தீவிர பக்தர், அவர் கூறினார் நாங்கள் மண்டபத்தில் வண்டியில் ஏறியதிலிருந்து அவரைத்தான் வேண்டினோம் நல்லவேளை நீங்கள் உதவினீர்கள் என்றார், நம் நண்பர் அதன் பின் இயற்கை உணவு உலகம் பற்றி தெரியப்படுத்தினார்,  இந்தப்பிரச்சினைக்கு மருந்து இருக்கிறதா என்று அவர் கேட்டார். ஒரு மனிதனுக்கு இதயம் தொடர்பாக வரும் பிரச்சினை மொத்தம் 15 தான் அது அத்தனைக்கும் ஒரே மருந்து தான். நாம்  மருத்துவர் இல்லை என்பதையும் இதற்கு முன் இந்த மருந்து இதயக்குழாய் சுருங்கி இருக்கும்  எந்த நபருக்கும் கொடுக்கவில்லை விருப்பம் இருந்தால் உங்கள் மகன் மற்றும் மருமகளிடம்  கேட்டுத் தெரியப்படுத்துங்கள் என்று கூறினோம், சில நிமிடங்கள் இருங்கள் என்று கூறிச்சென்று  தன் மகனிடமும் ஐசிவியில் இருந்து வெளிவந்த மருமகளிடமும் கேட்டுவிட்டு சாப்பிடுவதாக  கூறினார். சரி உடனடியாக தாமரைப்பூ செய்து கொடுக்கும் நண்பரிடம் போன் செய்து மதுரை முகவரிக்கு அனுப்ப கூறினோம், அடுத்த நாள் காலை மற்றும் சாயங்காலம் இரண்டு வேளை  சாப்பிடுங்கள் என்று கூறினோம், அதே போல் சாப்பிட்டுள்ளார். வலி குறைவதை உணர்ந்திருக்கிறார். 25 நாட்களுக்கு பின் வலி சுத்தமாக இல்லை, 48 நாட்கள்  தொடர்ந்து சாப்பிட கூறினோம் இப்போது முழுமையான குணமுடன் உள்ளார், மறுபடியும் சோதித்துபார்ததில் இதயத்திற்கு செல்லும் குழாய் சுருங்கி இருந்தது சரியாகிவிட்டதாக  தெரிவித்தார். அவர் கூறிய நன்றியை குருநாதருக்கு சமர்பித்தோம்.
இதயவலி தொடர்பான  பதிவில் இமெயில் மூலம் தொடர்ந்து வரும் சில கேள்விகளும் அதற்கான பதிலையும் இனி
பார்க்கலாம்.
1. எங்களுக்கு சுகர் (sugar) இருக்கிறது நாங்கள் இந்த இதயவலி மருந்து எடுக்கலாமா ?
தாராளமாக எடுக்கலாம் தேனில் கலந்து குடிப்பதை விட, 1 ஸ்பூன் மருந்தை 2 டம்ளர்  தண்ணீரில் போட்டு நன்றாக கொதிக்க வைத்து 1 டம்ளராக வந்த பின் ஆறவைத்தும் குடிக்கலாம்.
2. சிறு குழந்தைகளுக்கு இந்தப்பொடி கொடுக்கலாமா ? பக்க விளைவுகள் உண்டா ?
5 வயது குழந்தையில் இருந்து யார் வேண்டுமானாலும் மருந்து சாப்பிடலாம். கூடுதல் தகவல் குழந்தை படிப்பிலும் படு சூட்டியாகிவிடுவர் வெள்ளைத்தாமரயில் வீற்றிருப்பவள் சரஸ்வதி அதனால் அறிவும் கூடும் தொடர்ந்து கொடுப்பதால் தப்பில்லை. மூலிகை மருந்துகளுக்கு எப்போதும் பக்கவிளைவுகள் கிடையாது.
3.ஆடுதிண்ணாப்பாளை வேர் கிடைக்கவில்லை ஆடுதிண்ணாப்பாளை பொடியை சேர்கலாமா ?
மருந்தில் தெரியப்படுத்தி இருப்பது ஆடுதிண்ணாப்பாளை வேர் தான், அதனால் ஆடுதிண்ணாப்பாளை இலையைச் சேர்க்க வேண்டாம், ஆடுதிண்ணாப்பாளை வேர் கிராமங்களில் எளிதாக கிடைக்கும்.
4. எங்களுக்கு இதயத்தில் எந்தப்பிரச்சினையும் இல்லை நாங்கள் இந்த மருந்து சாப்பிடலாமா ?
மூன்று மாதத்திற்கு ஒரு முறை தொடர்ந்து 20 நாட்கள் சாப்பிடலாம். நாம் பூமியில் வசிக்கும் நாட்கள் வரை இந்த உடலில் இதயம் சம்பந்தமான பிரச்சினைகள் வராது. ஒரு மனிதனுக்கு  இதயத்தில் வரும் 15 பிரச்சினைகளுக்கும் இந்த ஒரே மருந்து வேலை செய்யும். வருமுன் காப்பதே சிறந்தது.
5. நாங்களும் இதே போல் பொடியை வீட்டில் செய்து வைத்துள்ளோம் ஆனால் 1 மாதத்திலே  மருந்தில் வண்டு, பூச்சி விழ ஆரம்பித்துவிடுகிறதே என்ன செய்ய வேண்டும். ? மருந்து பொடியை எத்தனை நாள் பயன்படுத்தலாம் ?
பெரும்பாலான மக்கள் இந்த கேள்வியை கேட்டிருந்தனர் இவர்களுக்கு பதில் மருந்தின் முக்கியத்துவம் பூச்சிகளுக்கும் வண்டுகளுக்கும் தெரிகிறது நமக்குத்தான் தெரியவில்லை,  தாமரைப்பூவை நிழலில் உலர்த்துவதாலும் அதனுடன் ஆடுதிண்ணாப்பாளை வேரை  சேர்ப்பதாலும் பூச்சி விழுகிறது. நன்றாக மாவு அரிக்கும் அரிப்பில்(Filter) நன்றாக அரித்து பயன்படுத்தலாம். 1 வருடம் வரை மருந்தின் வீரியம் இருக்கும். வண்டை நீக்கி மறுபடியும்  பொடியை பயன்படுத்தலாம். அதில் உயிர்ச்சத்து இருக்கிறது என்று பூச்சிக்கு தெரிகிறது.!
6.குறிப்பிட்ட மிருகசிரீடம் நட்சத்திரம் உள்ள நாள் அன்று தான் வேரை எடுக்க வேண்டுமா ?
குறிப்பிட்ட மிருகசிரீட நட்சத்திரம் உள்ள நாளில் அந்த வேரின் மருத்துவ குணம் அதிகமாக இருக்கும் அதனால் அன்று எடுப்பதே சிறந்தது. பகல் வேலையில் மட்டுமே வேரை எடுக்க  வேண்டும் எக்காரணம் கொண்டும் சூரியன் மறைந்த பின் வேர் எடுக்கக்கூடாது.
7.மருந்து செய்து கொடுக்கும் நபர் அலைபேசி எண் கொடுக்கலாமா ?
உங்களை மருத்துவராக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் மருந்தை அப்படியே  வலைப்பூவில் தெரிவித்துள்ளோம், மருந்து செய்ய இயலாத சூழ்நிலையில் இருப்பவர்கள்  மட்டும் இந்த 91- 7667473724 அலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு அன்பையும்  நன்றியையும் தெரிவித்து மருந்து பெற்றுக்கொள்ளுங்கள். இவர்கள் வியாபாரிகள் அல்ல ஒரு சேவையாகவே செய்கின்றனர். [ 100 கிராம் பொடியின் விலை ரூ.400 கூரியர் கட்டணத்துடன் சேர்த்து ]H



---------------------------------------------------------------------------------------------------------------------------------


Another Natural Medicine for Heart Blocks:




இதனை கவனமுடன் படியுங்கள், நீங்களும் குணமடையலாம்.
இருதய இரத்தக் குழாய் அடைப்புகளை திறக்க அருந்தும் பானத்திற்கு உரிய மூலப்பொருள்கள்.
1 கப் எலுமிச்சை சாறு
1 கப் இஞ்சிச் சாறு
1 கப் புண்டு சாறு
1 கப் ஆப்பிள் சைடர் விநிகர்.
எல்லாச் சாறுகளையும் ஒன்றாக கலக்குங்கள். இலேசான இளஞ்சூட்டில் (சிம்மரில்) 60 நிமிடம் கொதிக்க வையுங்கள். நான்கு கப் மூன்றாக குறையும். சூடு ஆறியவுடன் சாறு இருக்கும் அளவுக்கு சம அளவு இயற்கைத் தேனை கலந்து ஜாரில் வைத்துக் கொள்ளுங்கள்.
நாள்தோறும் காலை உணவுக்கு முன் ஒரு டீ ஸ்புன் பானத்தை அருந்துங்கள்.
மகிழ்ச்சியுடன் பானத்தை அருதுங்கள்....சுவையாகவும் இருக்கும்.
நீங்களே உங்களை பைபாஸ் அறுவை சிகிச்சையிலிருந்து காப்பாற்றிக் கொள்ளுங்கள்.
- ஸ்ரீ சமஸ்கிருத ஆயுர்வேத சர்வதேச ஆய்வு இதழ்

Thursday 12 March 2015

அசத்தலான ஆன்லைன் கலைக்களஞ்சியங்கள்!!!

உலகில் உள்ள நாடுகளின் மொத்த எண்ணிக்கை தெரியுமா? 196!. இவற்றில் ஐ.நா சபையில் உறுப்பினராக உள்ள நாடுகள் 192. இந்த நாடுகளிலேயே இளைய நாடு, அதாவது மிகவும் சமீத்தில் உதயமான நாடு எது தெரியுமா? தெற்கு சூடான்!.2001 ம் ஆண்டு ஜூலை மாதம் ஆப்பிரிக்க தேசமான சூடானில் இருந்து பிரிந்து தெற்கு சூடான் தனி நாடானது.1990 ம் ஆன்டுக்கு பிறகு உலகில் 29 புதிய நாடுகள் உதயமாகியிருக்கின்றன.

 இது போன்ற தகவல்களை தெரிந்து கொள்ள விரும்பினால், ஃபேக்ட்மான்ஸ்டர் (http://www.factmonster.com/) இணையதளம் உங்களுக்கு வழிகாட்டும்.இந்த தளத்தை தகவல் சுரங்கம் என்று சொல்லலாம்.ஆன்லைன் கலைக்களஞ்சியம் என்றும் சொல்லலாம்.

 ஆன்லைன் களஞ்சியம் என்றதுமே விக்கிபீடியா உங்கள் நினைவுக்கு வரலாம்.விக்கிபீடியா பொதுவான களஞ்சியம் என்றால் ஃபேக்ட்மான்ஸ்டர் சிறுவர்களுக்கானது.ஆர்வம் உள்ள சுட்டீஸ் இந்த தளத்தை தங்கள் பொது அறிவை வளர்த்து கொள்ள பயன்படுத்தி கொள்ளலாம்.அதே போல மாணவர்கள் வரலாறு,பூகோளம் மற்றும் அறிவியல் பாடங்களில் வீட்டுப்பாடம் அல்லது அசைன்மென்டை செய்வதற்கான தகவல்களை திரட்ட இந்த தளத்தை பயன்படுத்தலாம்.


ஃபேகட்மான்ஸ்டர் தளத்தின் முகப்பு பக்கமே அசத்தலாக இருக்கிறது.வழக்கமான களஞ்சியங்கள் போல இதன் வடிவமைப்பு இல்லாமல், சிறுவர்களை கவரும் வகையில் அழகான சித்திரங்களோடு இதில் உள்ள கட்டுரைகள் மற்றும் தகவல்களுக்கான இணைப்புகள் கொடுக்கப்படுள்ளன.


முதலில் உலகம் பற்றிய விவரங்களும் தொடர்ந்து அமெரிக்கா பற்றிய விவரங்களும் இடம்பெற்றுள்ளன.உலகம் பகுதியை கிளிக் செய்து உள்ளே சென்றால் உலகில் உள்ள நாடுகள்,அவற்றின் தேசிய கொடிகள்,உலக வரலாறு,இடு வரை நடைபெற்ற போர்கள் உள்ளிட்ட தகவல்களை அவற்றுக்குறிய தலைப்புகளை கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம்.அதே போல அமெரிக்கா மாற்றிய விவரங்களை அமெரிக்கா பகுதியில் உள்ள தலைப்புகளில் தெரிந்து கொள்ளலாம்.


மூன்றாவதாக உள்ளது மனிதர்கள் பகுதி.இதில் புகழ் பெற்ற மனிதர்களை அறிந்து கொள்வதோடு சுயசரிதை எழுதுவது எப்படி என்றும் கற்றுக்கொள்ளலாம். புகழ் பெற்ற தலைவர்களின் சுய‌சரிதையை தேடும் வசதியும் இருக்கிறது.


தொடர்ந்து விளையாட்டு ,விஞ்ஞானம் ஆகிய பகுதிகள் இருக்கின்றன.இவ்வளவி ஏன் வீட்டுப்பாடத்திற்கு உதவுவதற்கு என்றே தனிப்பகுதியும் இருக்கிற‌து.சுட்டிசை உற்சாகத்தில் ஆழ்த்தக்கூடிய புதிர்கள் மற்றும் வினாடி வினா பகுதியும் இருக்கிறது.


பாடம் படிக்கும் போது அட்லெஸ் தேவைப்பட்டாலோ அல்லது புரியாத வார்த்தைக்கு அர்த்தம் தெரிந்து கொள்ள விரும்பினாலோ அட்லெஸ் மற்றும் இணைய அகராதியும் இதில் உள்ளது.இந்த தளத்தை நீங்களே ஒரு முறை சுற்றிப்பாருங்கள் இதன் அருமை எளிதாக புரியும்.


இதே போலவே கிட்ஸ்.நெட் (http://encyclopedia.kids.net.au/ ) தளமும் சிறுவர்களுக்கான களஞ்சியமாக விளங்கிறது.இதன் முகப்பு பக்கம் வண்ணமயமாக கவர்ந்திழுக்கிறது.இதில் இருந்து சிறுவர்களுக்கான இணையதளங்கள்,இணைய அகராதி ஆகியவற்றுக்கு செல்லாம்.கலைக்களஞ்சியத்திற்கான தனிபப்பகுதியும் இருக்கிறது.களஞ்சியத்தில் ஒவ்வொரு பிரிவாக தனித்தனி தலைப்புகளில் தகவலகள் தொகுக்கப்பட்டுள்ளன.தேவையானதை கிளிக் செய்து பார்க்கலாம்.தேடியந்திர வசதியும் தனியே இருக்கிற‌து.


அட்லாபீடியா தளமும் (http://www.atlapedia.com/ ) உங்களுக்கு தேவையான பொது அறிவு தகவல்களை தருகிறது.எளிமையாக காணப்படும் இந்த தளத்தில் உலக நாடுகள் மற்றும் அவற்றின் வரைப்படங்களை காணலாம்.


இவை தவிர உயிரியலுக்கு என்றே தனியே ஒரு களஞ்சியம் இருக்கிறது
http://www.botany.com/index.16.htm).இதில் தாவிரங்கள் பற்றிய அகராதியும் இடம் பெற்றுள்ளது.


பிடிக்ஷனரி ( http://www.pdictionary.com/) தளத்தில் எல்லாவற்றையும் புகைப்படங்களாக காணலாம்.


மேலும் புகழ்பெற்ற பிரிட்டானிகா கலைக்களஞ்சியத்தின்
http://kids.britannica.com/) இணையதளமும் இருக்கிறது.ஆனால் இது கட்டண சேவை.


இதே போலவே யாஹுபார்கிட்ஸ் தளமும் தகவல் சுரங்கமாக விளங்கிய‌து.இணைய உலகில் பிரபலமாக உள்ள போர்டலான யாஹூவின் சிறுவர் பகுதியாக செயல்பட்டு வந்த இந்த பிரிவு இப்போது இல்லை.ஆனால் இணைய தேடலில் இதில் இடம்பெற்றிருந்த தகவல்களை அணுகலாம்.
http://web.archive.org/web/20130426200557/http://kids.yahoo.com/)

Wednesday 11 March 2015

குழந்தை பாக்கியம் உண்டாகும்படியான அரியதொரு மந்திரம்!!!

சந்தான வித்தை - அகத்தியர்

குழந்தை இல்லாமல் வாடும் பல பெண்கள் நம் நாட்டில் மலடி 
எனவும், பிள்ளை இல்லாதவள் எனவும் பலவாராக இச்சமுகத்தாரால் 
பேசப்பட்டு அத்தகையோரின் உள்ளத்தை வாடச்செய்கின்றனர், 
குழந்தையின்மையின் காரணமாய் பல ஆண்கள் இன்னொரு 
திருமணம் செய்து கொள்வதும், பல மருத்துவர்கள் 
குழந்தையின்மைக்காக பல லட்சங்கள் பறிப்பது நம் சமுகத்தின் 
அவல நிலையைக்காட்டுகின்றது.
பல சகோதரிகள் குழந்தையின்மையால் மனம் நொந்து உயிரை 
விடவும் துணிகின்றனர் .அத்தகைய நிலைகள் மாறி நல்லமுறையில் 
குழந்தை பிறக்க அகத்தியர் தனது பரிபூரணத்தில் சந்தானம்(குழந்தை) 
இல்லாத மங்கையர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும்படியான 
அரியதொரு மந்திரத்தைஅருளியுள்ளார். அதைப்பற்றி 
இன்றைய பதிவில் பார்ப்போம்.                            
சந்தான கரணி 

இருந்து கொண்டு குருபரனைத் தியானம் பண்ணி
இன்பமுடன் ஓம் ரீங் அங்வங் கென்று
வருந்திமனக் கனிவதனால் தேனில் மைந்தா
மார்க்கமுடன் நூற்றெட்டு உருவே செய்து
அருந்தவமாய் தலைமுழுகும் போதில்மைந்தா
அன்புடன் பெண்களுக்கு யீய்ந்தாயானால்
திருந்தியந்த மங்கையர்க்குக் கெற்பமுண்டாம்
திட்டமுடன் கண்மணியைக் காண்பாய் பாரே.

பாரப்பா மலடாகி இருந்தாலென்ன
பக்குவமாய் வொன்பதுக்குள் கெர்பமுண்டாம்
நேரப்பா மணிமந்திர மிதுதானாகும்
ஆரப்பா அறிவார்கள் சந்தான கரணி
அறிந்துமன துருமையானா லடக்கம்பண்ணி
சதாகாலம் பூரணத்தில் சார்ந்து வாழே.
                            

                                       - அகத்தியர் பரிபூரணம் 1200
பொருள்:

வடக்கு நோக்கி அமர்ந்து கொண்டு கணபதி எண்ணி மந்திரம் சித்தி 
பெற வேண்டுமென தியானம் பண்ணி விட்டுபின்னர் கீழ்க்காணும் 
மந்திரத்தை செபிக்கவும்.
                                                                    பூசை முறை

கணபதியை முன்னால் வைத்து தேங்காய், பத்தி, சூடம், மஞ்சள்,
குங்குமம்,பால், பழம் வெல்லம், சர்க்கரைப்பொங்கல் முதலியன 
வைத்து இதன் நடுவில் சுத்தமான தேனை(original) வைத்துக்கொண்டு 
அத்தேனுக்கு கற்பூரம்,சாம்பிராணி கட்டி விட்டு அத்தேனைப் 
பார்த்தவாரே "ஓம் ரீங் அங்வங்" என்ற மந்திரத்தை 108 உரு 
செபித்தால் மந்திரம் சித்தியாகும்.
 இதனால் அத்தேன் மந்திரசத்தி உடையதாகிவிடும்.
பின்னர் இத்தேனை குழந்தை இல்லையென்று மனம் வருந்தும்
மங்கையர்க்கு மாதவிலக்கான சமயத்தில் உண்ணும்படி கொடுத்தால்
அத்தேனை உண்ட மங்கையர்க்கு உறுதியாக கெற்பம் உண்டாகி 
குழந்தை பிறக்கும்.
                 

அவள் மலடியாய் இருந்தாலும் இம்மந்திரத்தால் ஒன்பது மாதத்திற்குள் 
அவளுக்கு கெற்பம் உண்டாகும். இது குழந்தை செல்வத்தை தரும் 
அரிய மந்திரமாகும் என்பதே இதன் இரகசியமான உண்மை,
இதை சித்தர்கள் சந்தான வித்தை,சந்தான கரணி என்பார்கள்
இதை அறிந்தவர்கள் யாருமில்லை,நீ அறிந்து கொண்டாலும் 
இதைப்பற்றி வெளியில் சொல்லாமல் உன் மனதளவில் 
வைத்துக்கொண்டு ஆழ்நிலை தியானதின் மூலம் பிரபஞ்சத்தின் 
ஆற்றலை உன்னுள் பெருக்கிக் கொண்டு வாழ்வாயாக என்கிறார் 
அகத்தியர்.
                         

Sunday 8 March 2015

ஆண்ட்ராய்ட் போன்!!!

ஆண்ட்ராய்ட் போன்களைப் பழுதுபார்க்க

கேட்ஜெட் பிரியர்கள் மத்தியில் ஐபிக்ஸிட் (iFixit) இணையதளம் மிகவும் பிரபலமானது. இந்தத் தளம் நவீன் சாதனங்களை அக்குவேறு ஆணி வேறாகப் பிரித்து அதன் செயல்பாடுகளை விளக்கி, அவற்றைப் பயனாளிகளே பழுதுபார்த்துக்கொள்ள வழிகாட்டக்கூடியது.
இந்தத் தளத்தின் பின்னே பெரிய இணைய சமூகமே இருக்கிறது. எல்லோருமே கேட்ஜெட் செயல்பாடுகளை அறிவதில் ஆர்வம் கொண்டவர்கள். அவற்றைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறவர்கள். இந்தத் தளத்தில் உள்ள ஒரே குறை என்ன என்றால் இது ஐபோன், ஐபேடு சாதனங்களைப் பிரதானமாகக் கொண்டது என்பதுதான்.
ஆனால் இந்தக் குறை இனி இல்லை. ஆம், இப்போது ஐபிக்ஸ்டி ஆண்ட்ராய்டு சாதனங்களுக்காகவும் அறிமுகமாகியிருக்கிறது. ஆண்ட்ராய்டு போன்களே பிரபலமாக இருப்பதால் இந்த வகை சாதங்களுக்கான பகுதி தொடங்கப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக 252 சாதனங்களுக்கான டியர்டவுன் வழிகாட்டி இடம்பெற்றுள்ளது. அதாவது அந்தச் சாதனங்களைத் தலைகீழாகப் பிரித்துப்போட்டு அவற்றின் செயல்பாடுகள் விளக்கப்பட்டிருக்கும். ஸ்மார்ட் போன், டேப்லெட்கள் இதில் அடங்கும். இவற்றுக்கான பாகங்களை வாங்கும் வசதியும் இருக்கிறது.
 ஆண்ட்ராய்ட் சாதனம் தொடர்பாக எந்தச் சந்தேகம் என்றாலும் இந்த இணையதளத்துக்கு செல்லுங்கள். தகவல்களைத் தெரிந்துகொள்ளுங்கள், ஆனால் போனில் கை வைக்கும்போது நீங்கள்தான் பொறுப்பு. ஆண்ட்ராய்டுக்கான ஐபிக்ஸிட் தளம்: https://www.ifixit.com/android

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை இரசிக்க ஒரு மென்பொருள்!!!

உங்கள் கணனியின் மூலமாகவே தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை இலவசமாக பார்த்து இரசிக்க ஒரு மென்பொருள்
உங்கள் கணனியின் மூலமாகவே தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை இலவசமாக பார்த்து இரசிக்க ஒரு மென்பொருள் உள்ளது. இணையவசதி மட்டும் இதற்கு போதுமானது. இதில் நீங்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்ப்பது முற்றிலும் இலவசம் . இதில் நீங்கள் தமிழ் உட்பட உலகின் பல்வேறு மொழிகளில் நிகழ்ச்சிகளை நீங்கள் இலவசமாக பார்க்கலாம். இந்த மென்பொருளினை தரவிறக்கம் செய்து உங்கள் கணனியில் நிறுவிக்கொள்ள வேண்டும். இதில் ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உட்பட பல மொழி நிகழ்ச்சிகளை பார்க்கலாம். மேலும் முக்கியமாக உங்களுக்கு பிடித்த நிகழ்ச்சிகளை நீங்கள் உங்கள்கணனியில் சேமித்து வைத்து கொள்ளலாம்.
DOWNLAOD :- http://adf.ly/10aBMP


Saturday 7 March 2015

அதிர்ச்சியை ஏற்படுத்தும் ரகசிய கேமரா :

விண்ணப்பப்படிவங்கள்!!!

விண்ணப்பப்படிவங்கள்
அனைத்து விண்ணப்பப்படிவங்களும் இங்கே!
என்னதான் விண்ணப்பப் படிவங்கள் நம் கைகளில் இருந்தாலும் தேவையுள்ளோர்களுக்கு விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அவர்களின் இயலாமைக்கு உதவுவது பெரிய விஷயம். நமது வாசகர்கள் அதை சிறப்பாக செய்வார்கள் என்று நம்புகிறோம்.
சாதி சான்றிதழ் விண்ணப்பப் படிவம் – டவுன்லோட்
வருமானச் சான்றிதழ் வி்ண்ணப்பப் படிவம் – டவுன்லோட்
பிறப்பிட சான்றிதழ் விண்ணப்பப் படிவம் – டவுன்லோட்
பழையதை மாற்றி புதிய அடையாள அட்டை விண்ணப்பப் படிவம் – டவுன்லோட்
எல்லை அளந்து கொடுக்க கோரும் வி்ண்ணப்பம் – டவுன்லோட்
ஆதரவற்றோர் – விதவைகள் – கைவிடப்பட்டோர் – மாற்றுத் திறனாளிகள் உதவி விண்ணப்பம் – டவுன்லோட்
நலிந்தோர் குடும்ப நல நிதியுதவி கோரிக்கை விண்ணப்பம் – டவுன்லோட்
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் படிவம் – டவுன்லோட்
வெளிநாட்டில் வசிப்பவர்கள் வாக்களர் பட்டியலில் பெயர் சேர்க்கும் விண்ணப்பம் – டவுன்லோட்
பட்டா பதிவு – பட்டா பெயர் மாற்றம் கோரும் விண்ணப்பம் – டவுன்லோட்
குடும்ப அட்டை (ரேஷன்) பெறுவதற்கு விண்ணப்பம் – டவுன்லோட்
ரேஷன் பொருள் வாங்காமல் அட்டை பெறுவதற்கான விண்ணப்பம் – டவுன்லோட்
ஏழைப் பெண்கள் திருமண உதவி, குடும்ப நலன் – தொழில் இன்னும் பலவற்றிற்கு விண்ணப்பம் – டவுன்லோட்
வாக்காளர் பதிவை இடம் மாற்ற கோரும் விண்ணப்பம் – டவுன்லோட்
அனைத்து விண்ணப்பப்படிவங்களும் இங்கே! என்னதான் விண்ணப்பப் படிவங்கள் நம் கைகளில் இருந்தாலும் தேவையுள்ளோர்களுக்கு விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அவர்களின் இயலாமைக்கு உதவுவது பெரிய விஷயம். நமது வாசகர்கள் அதை சிறப்பாக செய்வார்கள் என்று நம்புகிறோம். சாதி சான்றிதழ் விண்ணப்பப் படிவம் -…
PNOTIMES.COM