Friday 29 January 2016

Tips

குதிகால் வலிக்கு எளிய சிகிச்சை என்ன தெரியுமா?
நம்மில் பலர் காலையில் எழுந்தவுடன் செருப்பை தேடுகிறோம். காரணம் குதிகால் வலி. குதிகால் பகுதியில் தேலஸ், கேல்கேனியஸ் என 2 எலும்புகள் உள்ளன. இந்த 2 எலும்புகளுக்கிடையே உள்ள சப்தேலார் என்ற இணைப்பில் ஏற்படும் பிரச்னைகளால் குதிகால் வலி ஏற்படலாம்.
பாதத்தில் பிளான்றார் பேசியா எனப்படும் மெல்லிய சவ்வு உள்ளது. இது பாதத்தின் முன் பகுதியையும் பின்பகுதியில் உள்ள கேல்கேனியம் எலும்பையும் இணைத்து பாதத்தில் உள்ள வளைவுகளை (ஆர்ச்) தாங்குகிறது.
நாம் உட்கார்ந்து அல்லது படுத்திருக்கும் நிலையில் பாத வளைவுகளும் பிளன்றார் பேசியாவும் குறுகிய நிலையில் இருக்கும். நாம் எழுந்து நிற்கும் போது, உடல் பருமனாலோ அல்லது தவறான பாதணிகளை அணிவதாலோ பாதத்தில் உள்ள வளைவுகள் இழுக்கபடுகிறது. இவ்வாறு அது இழுக்க படுவதால் அதனை தாங்கும் பிளான்றார் பேசியா என்ற சவ்வானது அது இணைக்கபட்டுள்ள கேல்கேனியம் எலும்பிலிருந்து அறுக்கபடுகிறது. இவ்வாறு அறுக்கப்பட்ட சவ்வை இணைக்கும் நோக்கத்தில் நமது உடலானது கால்சியத்தை அதன்மீது படிய செய்கிறது.
இவ்வாறு அதிகமாக படிந்த கால்சியத்தால் அங்கு வீக்கம் ஏற்பட்டு நரம்புகள் அழுத்தப்பட்டு வலி ஏற்படுகிறது. இந்த பிரச்னையில் குதிகாலின் அடிபகுதியில் வலி உணரபடுகிறது. எக்ஸ்ரேவில் இவ்வாறு அதிகமாக படிந்த கால்சியத்தை ‘கேல்கேனியல் ஸ்பர்’ என குறிப்பிடுவர். சில வேளைகளில் ‘ஸ்கையாட்டிகா’ போன்ற இடுப்பு பிரச்னைகளிலும் குதிகால் நரம்புகள் அழுத்தப்பட்டு குதிகால் வலி ஏற்படுகிறது.
இதற்கு முதலில் இடுப்பு பிரச்னையை சரிசெய்தல் அவசியம். குதிகால் வலி இடுப்பு பிரச்னையால் ஏற்படுகிறதா? அல்லது குதிகால் பிரச்னையால் ஏற்படுகிறதா என்பதை சில எளிய ஆய்வுகள் மூலம் கண்டறியலாம்.
குதி காலில் வலி நீங்க என்ன வழி?
குதிகாலில் எலும்பின் வளர்ச்சி ஏதேனும் ஏற்பட்டடுள்ளதாக என்பதை எக்ஸ்ரே மூலம் தெரிந்து கொள்ளலாம். பொதுவாகவே, குதிகால் சதை, கணுக்கால் பூட்டு, உள்ளங்கால ஆகியவை உடலின் பாரத்தைத் தாங்கும் எலும்புகளும் சதைகளும் அதிகமாக உள்ள இடங்களாகும். உள்ளங்கால் மற்றும் கணுக்கால் தசைகள் வலுவிழுந்தால் நடக்க முடியாது. நிற்க முடியாது. குதிகால் வலி, இடுப்பு வலி ஆகியவை ஏற்படும். இவை வராமல் தடுக்க இரவு படுக்கும் முன்னும் காலையல் குளிப்பதற்கு முன்னும் உள்ளங்கால்களுக்கு எண்ணெய் தடவிக் கொள்ளுதல் அவசியம்.சஹசராதி தைலம் 100 மி.லி.யும் கர்ப்பூராதி தைலம் 100 மி.லி.யும் கலந்து ஒரு இரும்புக் கரண்டியில் சிறிது எண்ணெயை (10 M .L.) . சூடு செய்து இரவில் படுக்கும் முன் வலது கணுக்கால் பூட்டு, குதிகால் சதை ஆகிய இடங்களில் மசாஜ் செய்து (20 நிமிடங்கள் வரை ) வெந்நீர் நிரப்பிய பாத்திரத்தில் கால் முழ்குமளவு 5-10 நிமிடம் வரை வைத்திருந்து பிறகு துணியால் காலைத் துடைத்துவிட்டுப் படுக்கச் செல்லவும. காலையில் குளிப்பதற்கு முன்பும் இதுபோலச் செய்யலாம். கடினமான காலணியைத் தவிர்த்து மிருதுவான காலணியை உபேயாகிக்கவும். கால்களைத் தரையில் அதிகமாக அழுத்தி நடப்பதைத் தவிர்த்து மென்மையாக நடந்து செல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளவும்.
திராட்சைப் பழத்தில் அதிக அளவு ஆன்டிஆக்ஸிடென்டுகள் காணப்படுகின்றன. வலி ஏற்படும் போது திராட்சை ஜூஸ் சாப்பிடுவதன் மூலம் வலி கட்டுப்படுவதோடு நிவாரணம் கிடைக்கும்.
சித்தரத்தை, அமுக்காரா, சுக்கு மூன்றையும் சம அளவில் எடுத்து பொடி செய்து இரண்டு கிராம் அளவு பொடியை காலை, மாலை இரண்டு வேளையும் சாப்பிட்டால் மூட்டு வலி மற்றும் வாத நோய்கள் குணமாகும்.
முடக்கத்தானும், பிரண்டையும் மூட்டுவலிக்கு நிவாரணம் தரக்கூடியவை. பிரண்டைக்கீரை, முடக்கத்தான் கீரை மற்றும் சீரகம் சேர்த்து தலா 10 கிராம் அளவுக்கு எடுத்து அரைத்து காலை நேரத்தில் சாப்பிட்டு வந்தால் மூட்டு வலி குணமாகும்.
குப்பைக்கீரை, முடக்கத்தான் கீரை, சீரகம் மூன்றையும் சேர்த்து கஷாயம் வைத்துக் குடித்தால் மூட்டு வலிகள் குணமாகும்.
பாகற்காயை உணவில் சேர்த்துக் கொண்டால் மூட்டு வலி வருவதைத் தடுக்கலாம்.
அதிக உடல் எடையும் நாளடைவில் குதிகால் வலி வரக் காரணமாகின்றது.
ஹை ஹீல்ஸ் குதிகாலின் “லும்பார்” முள்ளெலும்பில் அழுத்தம் எற்படுத்தி, உங்கள் கீழ் முதுகில் தீவிரமான வலியை உண்டாகுகிறது.
உடல் எடையைக் குறைக்க என்ன வழி?
நீங்கள்உணவில் கொள்ளு, காராமணி, கம்பு, மொச்சை, பயறு போன்ற தானியங்களை அதிகம் பயன்படுத்த வேண்டும். குப்பை கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் அதிகப்படியான உடல் எடை குறையும்.
வராதி(Varadi) என்றொரு கஷாயம் ஆயுர்வேத மருந்துக் கடைகளில் கிடைக்கும். இவை 200 M .L அளவில் கிடைக்கும். 3 ஸ்பூன் மருந்து + 12 ஸ்பூன் (60 M .L) கொதித்து ஆறிய தண்ணீர் + கால் ஸ்பூன் தேன் கலந்து காலை, மாலை 6 மணிக்கு வெறும் வயிற்றில் சாப்பிடவும். காலையில் மருந்தைச் சாப்பிட்டதும் அரை மணி நேரம் இடது பக்கமாகச் சரிந்து படுத்திருக்கவும். பின்னர் 15 நிமிடங்கள் கழித்து வாய் கழுவி, சூடாகத் தண்ணீரைக் குடிக்கவும். உடல் பருமனைக் குறைக்க இது நல்ல கஷாயம்.
ஆயுர்வேத மருந்துக் கடைகளில் லோத்ராஸவம் (Lodhrasavam) எனும் மருந்து 450 M .L அளவில் கிடைக்கும். அதை 5 ஸ்பூன் அதாவது 25 M .L – 30 M .L வரை உணவிற்குப் பிறகு காலை, இரவு சாப்பிடவும்.
தயிரைத் தவிர்த்து தெளிந்த மோர் அருந்தவும். தேன் கால் ஸ்பூன் சிறிது தண்ணீரில் கலந்து அல்லது ‘திரிபலா’ எனும் கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் சூர்ணம் 1 ஸ்பூன் (5 கிராம்) 80 M .L தண்ணீரில் சிறிது கொதிக்கவிட்டு வடிகட்டி ஆறிய பிறகு, கால் ஸ்பூன் தேன் கலந்து காலை, இரவு உணவிற்குப் பிறகு உடனே அருந்த வேண்டும். அதன் பிறகு முன் குறிப்பிட்ட மருந்தைச் சாப்பிடலாம்.
உடற்பயிற்சி மிகவும் அவசியம். காலையில் கஷாயம் குடித்து ஒரு மணி நேரத்துக்குப் பிறகு 40 முதல் 45 நிமிடங்கள் வரை நடைப்பயிற்சியை மேற்கொள்ளவும். நன்கு வியர்வை வரும்படி நடந்தால்தான் எடை, குறையும். பகல் தூக்கம் தவிர்க்கவும்.
சில ஆசனங்களால் நிவாரணம்:
வஜ்ராசனம்
உஷட்டிராசனம்
சர்வாங்காசனம்
ஹலாசனம் மற்றும்
சிரசாசனமும் வலி குறைக்கும்.
கோடைக் காலத்தின் சூடு தணிந்த பிறகு, கொள்ளு தானியத்தை நன்கு கழுவி உலர்த்தி மாவாக அரைத்து வைத்துக் கொள்ளவும். புளித்த மோரைச் சிறிது சூடாக்கி 70-100 கிராம் வரை கொள்ளு மாவை அதில் குழைத்து உடலில் கூடுதல் சதை உள்ள இடங்களில் கீழிருந்து மேலாக சூடு பறக்கத் தேய்த்து அரை மணி நேரம் ஊறிய பிறகு சுடு தண்ணீரில் குளிக்கவும். கொள்ளு சதையை உருக்கிவிடும். சோப்புக்கு பதிலாக ‘ஏலாதி சூர்ணம்’ கடையில் கிடைக்கும், அதை வெந்நீருடன் குழைத்து மேல் தேய்த்துக் குளிக்க நல்ல நிறத்தைப் பெறவும், உடல் எடையைக் குறைக்கவும் முடியும். ‘இளைத்தவனுக்கு எள்ளு, கொழுத்தவனுக்குக் கொள்ளு’ என்பது பழமொழி.
புலால் உணவை முழுவதுமாக நிறுத்தி விடவும். குடலைச் சுத்தமாக வைத்திருத்தல் மிக அவசியம். திரிபலா சூர்ணம் 1 ஸ்பூன் அளவில் இரவில் படுக்கும் முன் தேனுடன் குழைத்துச் சாப்பிட்டால் மலச்சிக்ல் இல்லாமல் குடல் சுத்தமாக இருக்கும்.
அனுபவத்தில் சில:
தவிடும் உப்பும் வறுத்து ஒத்தடம் தரலாம்.
தினசரி மிதமான வென்னீரில் கல் உப்பு போட்டு கால்களை சிறிது நேரம் அமிழ்த்தி வைத்திருக்கலாம்.
வில்வக்காய் கிடைத்தால் அதை சுட்டு நசுக்கி எருக்கிலை பழுப்பை அதன் மேலிட்டு குதிகால்களை ஒத்தடம் கொடுக்கலாம். (வலி தீரும் வரை தினசரி செய்க)
மிகு பித்தம் குறைய மைக்கொன்றை இலைகளை காய்ச்சாத பசும் பால் சேர்த்து அரைத்து தினசரி காலை வெறும் வயிற்றில் சாப்பிட (சுமார் 48 நாட்கள்) வெகுவாய் வலியற்றுப் போகிறது மாயமாய்.
வெற்றிலை நெல்லி ரசம்
தேவையானவை:
முழு நெல்லிக்காய் – 10, வெற்றிலை – 20, கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை – தலா ஒரு கைப்பிடி, காய்ந்த மிளகாய் – 4, பூண்டு – 6 பல், வால் மிளகு, சீரகம் – தலா ஒரு டீஸ்பூன், மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன், நல்லெண்ணெய் – 2 டீஸ்பூன், உப்பு – தேவைக்கு.
செய்முறை:
நெல்லிக்காயை விதை நீக்கி சாறு எடுக்கவும். கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை, வெற்றிலை மூன்றையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். வெறும் சட்டியில் காய்ந்த மிளகாயைக் கிள்ளிப் போட்டு, பொடியாக அரிந்த பூண்டு, ஒன்றிரண்டாகத் தட்டிய வால்மிளகு, சீரகம் ஆகியவற்றைப் போட்டு இளவறுப்பாக வறுக்கவும். பின்னர், பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, வெற்றிலை, கொத்தமல்லி இலையை அதில் போட்டு, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும். நன்றாக வதங்கியதும் விழுதாக அரைத்துக்கொள்ளவும். ஒரு சட்டியில் சிறிது எண்ணெய் ஊற்றி, அரைத்துவைத்துள்ள விழுதைப் போட்டு வதக்கவும். அதில் நெல்லிக்காய் சாறு, தேவையான அளவு நீர் சேர்த்துக் கொதிக்கவைக்கவும். அடுப்பை மிதமாக எரியவிடவும். கொதிக்கும் பக்குவம் வந்ததும், தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொதிக்கவிடாமல் கீழே இறக்கவும்.
மருத்துவப் பயன்:
குதிகால், பாதம், கெண்டைக்கால், மூட்டு, தொடை ஆகிய இடங்களில் ஏற்படும் வலியைப் போக்கும். உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கும் இதய நோயாளிகளுக்கும் ஏற்ற உணவு. எலும்புப் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கும் ஆற்றல் இதற்கு உண்டு.
மேற்கண்ட குதிகால் பிரச்னையில் வலியையும், ரணத்தையும் குறைப்பதற்கு சைலீசியா லைக்கோபோடியம் போன்ற ஹோமியோபதி மருந்துகள் மிகுந்த பலனளிக்கிறது.
பிஸியோதெரபியில் அல்ட்ராசவுண்ட், ஷாட்வே டைய தெரபி மெழுகு போன்ற சிகிச்சை முறைகள் பயன்படுத்தபடுகிறது. உடல் எடை குதிகாலில் விழுந்து ரணமாவதை தடுக்க மைக்ரோ செல்லுலார் (எம்.சி.ஆர்) ரப்பரால் தயாரிக்கபட்ட காலணிகளை அணிதல் நல்லது. கால் பாதத்தில் உள்ள விளைவுகளை பராமரிக்க பாத தசைகளுக்கான உடற்பயிற்சி செய்வது அவசியம்.
இயற்கை முறைக்கு மாறுவோம்! ஆரோக்கியமாக வாழ்வோம்!
கடலூர் அரங்கநாதன்...
http://www.vkalathurexpress.in/2014/06/blog-post_4546.html

Tuesday 26 January 2016

Granny Medicine!!!

பாட்டி வைத்தியம் :-

1. காலையில் இருமல் வந்தால் கடுகை பட்டுப்போல் கரைத்து தேனில் 1 சிட்டிகை கலந்து 2 வேளை சாப்பிட குணமாகும்.

2. மறதி தொல்லையா? ஒரு தேக்கரண்டி தேனில் 5 மிளகு பொடியை குழைந்து சாப்பிட்டு வந்தால் மறதி மறைந்துவிடும்.

3. இருமலால் அவதியா? உலர்ந்த திராட்சையை பாலில் இட்டு காய்ச்சி குடித்து வந்தால் நீங்கும். ஒரு சிட்டிகை மஞ்சள், மிளகுப்பொடியை தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தாலும் குணமாகும்.

4. சளித் தொல்லையா? வெற்றிலை, 3 மிளகு, துளசி இலையை சேர்த்து மென்று விழுங்கவும் அல்லது உறங்கும் முன் சிறிது வெந்தயத்தை சாப்பிட்டு 1 டம்ளர் வென்னீர் அருந்தினால் குணமாகும்.

5. சீதபேதி கடுமையாக உள்ளதா? ஊறவைத்த வெந்தயத்தை அரைத்து தயிரில் கலந்து 3 வேளை கொடுக்க குணமாகும்.

6. அடிக்கடி ஏப்பம் வருகிறதா? வேப்பம்பூவை தூள் செய்து 4 சிட்டிகை எடுத்து இஞ்சி சாறுடன் கலந்து உட்கொண்டால் குணமாகும்.

7. உலர் திராட்சைப் பழத்தை வெது வெதுப்பான தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவைத்து காலையில் அருந்தினால் மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய் தீரும்.

8. வல்லாரைக் கீரையை நிழலில் காயவைத்து பொடித்து தினமும் ஒரு தேக்கரண்டி உண்டு வந்தால் நினைவாற்றல் பெருகும்.

9. வெந்தயத்தை மட்டும் ஊற வைத்து நன்கு அரைத்து தலையின் முடி வேர்க் கால்களில் தடவி வைத்து நன்கு ஊறியபின் தலைமுடியை அலசினால் முடி நன்கு வளருவதுடன் கண் எரிச்சல், உடல் சூடு தணியும்.

10. வயிற்றுக் கடுப்பு ஏற்பட்டால் புழுங்கல் அரிசி வடித்த தண்ணீரில் சிறிதளவு உப்பையும், வெண்ணெயையும் கலந்து குடித்துவிடுங்கள். சிறிது நேரத்திலேயே குணம் தெரியும்.

Sunday 24 January 2016

Popular Tamil Saying for Diseases!!!

காட்டுலே புலியும் , வீட்டுலே புளியும் ஆளைக் கொல்லும்.

* போன ஜுரத்தை புளி இட்டு அழைக்காதே

* பொங்குற காலத்தில் புளி.. மங்குற காலம் மாங்கா

* சீரகம் இல்லா உணவும் , சிறு குழந்தைகள் இல்லா வீடும் சிறக்காது.

* எண்னை குடத்தை சுற்றிய எறும்பு போல

* தன் காயம் காக்க வெங்காயம் போதும்

* வாழை வாழ வைக்கும்

* அவசர சோறு ஆபத்து

* ஆறிய உணவு மூட்டு வலி உண்டாக்கும்

* இரைப்பை புண்ணுக்கு எலுமிச்சை சாறு

* ரத்த கொதிப்புக்கு அகத்திக் கீரை

*இருமலை போக்கும் வெந்தயக் கீரை

* உண்ணா நோன்பு ஆயுளைக் கூட்டும்.

* உஷ்ணம் தவிர்க்க கம்பங் களி

* கல்லீரல் பலம் பெற கொய்யாப் பழம்

* குடல் புண் நலம் பெற அகத்திக்கீரை

* கொலஸ்ட்ரால் குறைக்க பன்னீர் திராச்சை

* சித்தம் தெளிய வில்வம்

* சிறுநீர் கடுப்புக்கு அன்னாசி

* சூட்டை தணிக்க கருணை கிழங்கு

* ஜீரண சக்திக்கு சுண்டக்காய்

* தலை வலி நீங்க முள்ளங்கி சாறு

* தேனுடன் இஞ்சி ரத்தத் தூய்மை

* பூண்டில் இருக்கு பென்சிலின் சக்தி

* மூல நோய் தீர வாழைப்பூ கூட்டு

* வாந்திக்கு மருந்து மணத்தக்காளி

* வாத நோய் தடுக்க அரைக் கீரை

* வாய் துர்நாற்றம் தீர்க்க ஏலக்காய்

* பருமன் குறைய முட்டைக்கோஸ்

* பித்தம் தணிக்க நெல்லிக்காய்

” உணவு மருந்தாக இருக்க வேண்டும்…. இல்லாவிட்டால் மருந்தே நமக்கு உணவாகும் நிலைமை உருவாகும் ”.

நலம் உடன் வாழ்வோம்

Why the Crime rate is low in Japan-Watch!!!

Crime

Apps. for Realtime Conversations!!!

The ability to have conversations on any page is deceptively brilliant. Instead of falling into the usual traps of linking to content, and then having a rather stale exchange of comments, Yapply lets conversations happen in real-time, without leaving the content of interest.

How often do you find yourself coming across something on Facebook that’s already old news? Or how often do you abandon Twitter because you don’t have the patience to sort through your feed, despite knowing there’s sure to be a lot of ideas and chatter worth your time?

Yapply gives everyone’s overworked filters a break. You don’t have to hunt down content or discussions. They’re right there in front of you, waiting for you to dive in – a lot like flesh and blood humans talking to one another.

For those who find that online relationships always feel a touch fabricated, Yapply is a handy tool to spark up conversations – or jump in on ongoing banter – more naturally.

Of course, you can still do all of the other stuff we’ve come to expect of social networking, such as share content or links on familiar social channels, drop your thoughts and opinions, and discover new content. Relax, all that activity is here to stay with us.

However, finding people on the same page as you (or bringing people on over) to have conversations is a refreshingly open and direct way to yap online. Less talking at one another and more talking to one another. Bravo!

If you’re ready for real-time conversations on any web page where you feel like talking, find out more at yapp.ly.

Wednesday 20 January 2016

Makeup!!!



https://www.facebook.com/RAJAN.NELLAII/videos/1105930502774547/சொட்டையை மறைக்க இவர்கள் கையாளும் வித்தையை பாருங்கள்..

Tuesday 19 January 2016

ஒற்றை தலைவலி(Migraine)

ஒற்றை தலைவலி ஓடியே போச்சு... டும்... டும்... டும்..!

தலைவலியும், கா‌ய்ச்சலும் தனக்கு வந்தால்தான் தெரியும்னு சொல்வாங்க. ஆனா தலைவலி வர்றதுக்கு பல காரணங்க‌ள் இருக்கு. அதிலும் இந்த ஒற்றை தலைவலி இருக்கே... அப்பப்பா அதை அனுபவிச்சு பார்த்தவங்களுக்குத்தான் தெரியும். இன்றைய அவசர உலகத்துல... வேலைப்பளு, மனஅழுத்தம் காரணமா வரக்கூடிய ஒற்றைத்தலைவலி பரவலா காணப்படுது.
இந்த ஒற்றைத்தலைவலி கம்ப்யூட்டரே கதினு கிடக்குறவங்களுக்கு மட்டுமில்ல... கடை வச்சிருக்கிற அண்ணாச்சிக்கும்கூட வரும். ஆமா... நான் வசிக்குற பகுதியில கடை வச்சிருக்குற நடுத்தர வயசுக்காரருக்கு ஒற்றை தலைவலி. ரெண்டு மூணு நாளா கடை பக்கம் போகும்போது அவர் தலையை குனிஞ்சுக்கிட்டே இருந்தாரு. சூரியனை அவரால பார்க்க முடியல, கண்ணுல இருந்து தண்ணி கொட்டிச்சி. சரி... வேற ஏதோ இருக்கும்னு நானும் என் வேலை அவசரத்துல போ‌ய்ட்டேன்.
ஒருநா‌ள் அவர் கடைக்கு வெளிப்புறமா தலையில கையை வச்சபடி நின்னாரு. அவரைச்சுத்தி நாலைஞ்சு பெரிய மனுஷங்க ஆளாளுக்கு ஏதோ சொல்லிட்டு இருந்தாங்க. நான் என்ன விஷயம்னு கேட்டேன், அப்போதான் அவருக்கு ஒற்றைத்தலைவலி வந்திருக்குற விஷயம் எனக்கு தெரியும். ஜலதோஷத்தால வரக்கூடிய தலைவலிக்கு நொச்சி இலையை வேது (ஆவி பிடித்தல்) பிடிச்சா சரியாயிரும் அந்த வைத்தியத்தை அந்த பெருசுங்க அவருக்கு சொல்லிட்டு இருந்தாங்க. நான் அதை எடுத்துச்சொல்லும்போது அந்த பெருசுங்க ஒருமாதிரி ஏளனமா பார்த்தாங்க.
கடைக்காரர் தனியா வந்ததும் அவரைக்கூப்பிட்டு விஷயத்தை சொன்னேன். அந்த மனுஷன் ஒற்றைத்தலைவலியால அவதிப்பட்டு வர்றதை என்னால பார்த்துட்டு சும்மா இருக்க முடியல. உடனடியா களத்துல இறங்குனேன். ஆரஞ்சுப்பழத்தோல் இருக்கான்னு கேட்டேன். பக்கத்து வீட்டுல இருந்திச்சி. அதை வாங்கி வந்து தோலை பிழிஞ்சி காதுல விட்டேன். தலைவலி எந்தப்பக்கம் இருக்கோ அதுக்கு எதிர்ப்புறம் உ‌ள்ள காதுல இந்த சாறை பிழியணும். சாறு ஊத்தின சில நிமிடங்க‌ள்ல அவருக்கு வலி கொஞ்சம் கொஞ்சமா விலகிப்போனது. அது தற்காலிகமான ட்ரீட்மெண்ட்தான்.
அடுத்து மூணு நா‌ள் ஒரு வைத்தியம் சொன்னேன். அதாவது, வெ‌ள்ளை எ‌ள்ளை எருமைப்பால் விட்டு அரைச்சு நெத்தியில பற்று போட்டு காலையில உதிக்குற சூரியனை பார்க்கச்சொன்னேன். கூடவே இன்னொரு வைத்தியமும் சொன்னேன். அதாவது, ஒரு டம்ளர் கேரட் சாறோட கால் டம்ளர் பசலைக்கீரைச்சாறு, கால் டம்ளர் பீட்ருட் சாறு சேர்த்து குடிக்கச்சொன்னேன். இப்போ ஒற்றை தலைவலி அவருக்கு இல்லை. அஞ்சு நா‌ள் செஞ்சார்.... வலி போயே போச்சு. ஆனா மனுஷன் என்ன சொன்னார்னா நீங்க சொன்னதை செஞ்சேன், ஆனா அது தானா சரியாகிட்டுனு சொன்னார். இந்த வைத்தியத்துக்கு நான் ஒரு பைசா வாங்கல. ஆனாக்கூட நம்ம வைத்தியத்தாலதான் சரியானதுனு அவர் சொல்ல முன்வராதது கொஞ்சம் வருத்தமே.
ஒற்றை தலைவலிக்கு இன்னொரு வைத்தியமும் சொல்றேன்... பூண்டையும், மிளகையும் தட்டிப்போட்டு நல்லெண்ணையில சேர்த்து கா‌ய்ச்சி ஆறின பிறகு தலையில தே‌ய்ச்சி குளிச்சாலும் நல்ல பலன் கிடைக்கும்
- மூலிகை வைத்தியர் தமிழ்குமரன்.

Friday 15 January 2016

Tips

வீட்டுக்குறிப்புக்கள்!
ஒரு தேக்கரண்டி சோப்புத்தூள், அரை தேக்கரண்டி மஞ்சள்தூள் இவை இரண்டையும் சிறிது தண்ணீரில் கொதிக்க வைத்து பிறகு தங்க நகைகளை இதற்குள் போட்டு ஐந்து நிமிடம் ஊற வைத்து சிறிய பிரஷ் (பழைய டூத் பிரஷ்) கொண்டு தேய்த்து தண்ணீரில் கழுவினால் தங்க நகைகள் புதிது போல் மின்னலடிக்கும்.
தண்ணீரில் சிறிது பாலை விட்டு துடைத்தால் வெள்ளி நகை பளிச்சிடும். அதே போல் டூத் பேஸ்டால் கழுவினாலும் வெள்ளி நகை பளபளக்கும். சிறிதளவு புளியை கரைத்து சிறிது உப்பு, சிறிது சமையல் சோடா உப்பு சேர்த்து கொதிக்க வைத்து, இதில் வெள்ளி நகைகளைப் போட்டு எடுத்தால் நகை பளிச்சென பளபளக்கும்.
மழைக் காலத்தில் தீப்பெட்டிக்குள் நான்கைந்து அரிசி மணிகளைப் போட்டு வைத்தால் தீக்குச்சி உரசியவுடன் பற்றிக் கொள்ளும்.
குளிர் சாதனப் பெட்டியில் (Fridge) எலுமிச்சம் பழத்தின் தோலை வைத்திருந்தால் உள்ளே உள்ள நாற்றம் நீங்கி மணமாக இருக்கும்.
ரத்தக்கறை படிந்த துணிகளை உப்புக் கலந்த தண்ணீரில் சிறிது நேரம் ஊற வைத்துத் துவைத்தால் கறைகள் நீங்கிவிடும்.
வெண்டைக்காயை நறுக்கி சமைத்தாலும் கூட, சிலது ஒன்றுடன் ஓட்டிக்கொண்டிரு
க்கும். அவ்வாறான வெண்டைக்காயை உதிரியாக சமைப்பதற்கு, சிறிதளவு தயிரையும் சேர்த்துக் கொள்ளலாம்.
குக்கரில் பருப்பை சமைப்பதற்கு முன் அதனுடன் சிறிதளவு எண்ணெய் மற்றும் மஞ்சள் தூளை சேர்த்தால், சீக்கிரமாக சமைத்துவிடலாம்
பருப்பை வேக வைக்கும் போது ஒரு காய்ந்த ‌மிளகாயை ‌கிள்ளிப்போ
ட்டால் ‌சீக்கிரமே வெந்து ‌விடும்.
கறியை விரைவாக சமைக்க, அத்துடன் சிறிதளவு மசித்த பப்பாளியை சேர்க்கவும்.
கீரையை சமைக்கும்போது பச்சை நிறம் மாறாமல் இருக்க ஒரு சிட்டிகை ஆப்பசோடாவை அல்லது பேக்கிங் சோடாவை சேர்க்கவும்.
பச்சை காய்கறிகள் சமைக்கும்போது மூடிபோட்டு சமைத்தால், சீக்கிரம் சமைக்கலாம். அத்துடன் அவற்றின் சத்தும் வெளியேராது.
தேங்காய் பர்ஃப்பி செய்கையில் இயற்கை வண்ணம் தேவைப்படுகிறது என்று நீங்கள் நினைத்தால், கேரட் அல்லது பீட்ரூட் துருவளை சேர்த்துக்கொள்ளலாம்.
சிக்கன் செய்வதற்கு முன் சிறிதளவு உப்பை ஃப்ரையிங் பேனில் தூவினால், சிக்கனை வழவழப்பாக கருகாமல் எளிதில் சமைத்து எடுக்கலாம்.
சப்பாத்தி சுவையாகவும், மிருதுவாகவும் இருக்க நன்கு பழுத்த வாழைப்பழம் ஒன்று அல்லது இரண்டு, மாவின் அளவிற்கு தகுந்தார்போல் எடுத்துக் கொள்ளவும்.
கோதுமை மாவை ‌‌பிசையும் போது வாழைப் பழத்தையும் சேர்த்து பிசையவும். மாவு பிசையும் போது சிறிது வனஸ்பதியும் சேர்த்து பிசையலாம்.
பிசைந்த மாவினை சிறிது நேரம் ஊறவிட்டு பிறகு சப்பாத்திகளாகத் தேய்க்கவும்.
தேய்த்த பிறகு நீண்ட நேரம் வைத்து இருக்கக் கூடாது. தேய்த்தவுடன் கல்லில் போட்டு வேக வைத்து எடுத்து விடவும்.
சென்னா போன்ற பருப்பு வகைகளை சமைப்பதற்கு முந்தின நாளே ஊற வைக்க மறந்துவிட்டீர்களா கவலை வேண்டாம்.
நன்றாக கொதிக்க வைத்த தண்ணீரில் சமைப்பதற்கு ஒரு மணிநேரத்திற்கு முன்னர் ஊற வைத்தால் ‌கூட போதும்.
இட்லிக்கு மாவை ‌மிக்சியில் அறைக்கும் போது ஊற வைத்த அரிசி, உளுந்தம் பருப்பை ‌சிறிது நேரம் குளிர்பதன பெட்டியில் வைத்துவிட்டு அரைத்தால் மாவு சூடாவது தவிர்க்கப்
படும்.
முட்டையை வேக வைக்கும் போது அதனுள் இருப்பவை வெளியில் வராமல் இருப்பதற்கு, வேக வைக்கும் தண்ணீரில் ஒரு தேக்கரண்டி வினிகரை விடவும். அவ்வாறு விட்டால், முட்டையின் ஓடு வெடித்தாலும் கூட உள்ளே இருப்பவை வெளியில் வராது.
ஒரு முட்டையானது கெடாமல் புதியதாக இருக்கிறதா என்பதை அறிவதற்கு, அந்த முட்டையை குளிர்ந்த உப்பு தண்ணீரில் முழுகும்படியாக வைக்கவும்.
முட்டையானது முழுகாமல் மேலே வந்தால் அதை நீங்கள் தூக்கி எறியலாம். அது தண்ணீரில் மூழ்கினால் அதை சமையலில் பயன்படுத்தலாம்.
முட்டையை வேக வைத்தாலும் சரி ஆம்லேட் போட்டாலும் சரி பயன்படுத்துவதற்கு முன்பு அதனை லேசாக கழுவி ‌விடவும்.
பால் பொங்கும் போது அதை அடக்க முடியவில்லை என்றால், சிரமப்படாமல் அதை அடக்குவதற்கு சிறிது துளிகள் குளிர்ந்த தண்ணீரை தெளிக்கவும்.
பாலை காய்ச்சுவதற்கு முன், அந்த பாத்திரத்தை நன்கு தண்ணீரால் சுத்தம் செய்த பின்னர் காய்ச்சினால், பால் பாத்திரத்தின் அடியில் பிடிப்பதை தவிர்க்கலாம்.
பால் காய்ச்சும் பாத்திரத்தை இரண்டு நாட்களுக்கு ஒரு முறையாவது வெயிலில் காய வைக்கவும்.
தினமும் ஒரே பாத்திரத்தில் பாலைக் காய்ச்சாமல் இரண்டு பாத்திரங்களை மாற்றி மாற்றி பயன்படுத்துவதும் நல்லது.
பாலைக் காய்ச்சும் முன்பு பாத்திரத்தில் ‌நீர் ஊற்றி ‌சிறிது கொதிக்க வைத்து, அந்த ‌நீரை ‌கீழே ஊற்றியதும் பால் காய்ச்சினால் பால் கெடுவதை தவிர்க்கலாம்.
பாயசம் செய்யும் முன்பு ஜவ்வரிசையை ‌சிறிது நேரம் தண்ணீரில் ஊற வைக்கலாம்.சே
மியாவை வாணலியில் போட்டு லேசாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
அவல் பாயாசம் செய்யும் போது ஒரு கப் பாலும், ஒரு கப் தேங்காய் பாலும் சேர்த்து செய்தால் சுவை அருமையாக இருக்கும்.
ஏலக்காயின் மேல் பகுதிகள் ‌சில குழந்தைகளுக்க
ுப் ‌பிடிக்காமல் போகலாம். எனவே பாயாசத்தில் ஏலக்காயின் ‌விதைகளை மட்டும் தட்டிப் போட்டால் போதும்
அரைத்து வைத்திருக்கும் மாவில் வண்டுகளோ, பூச்சிகளோ வராமலிருக்க ஒரு சிறு துணியில் உப்பை வைத்து கட்டி மாவுக்குள் போட்டுவிடவேண்டும்.
அரிசியில் பூச்சி ‌பிடிக்காமல் இருக்க அரிசி கொட்டும் பாத்திரத்தில் வேப்பிலைகளைப் போட்டு ‌பின்னர் அரிசி கொட்ட வேண்டும்.
எதையும் அப்படியே வைத்தால் பூச்சி ‌பிடித்துவிடு
ம்.அவ்வப்போது சூரிய ஒளியில் வைத்து எடுக்க வேண்டும்.
தோசை மாவுடன் கொஞ்சம் சோள மாவு சேர்த்து தோசை சுட்டால் உடம்பிற்கு நல்லது. சாப்பிடவும் ருசியாக இருக்கும்.
தோசைக்கு அரைக்கும் அரிசியில் அல்லது உளுந்தம் பருப்பில் ‌சிறிது வெந்தயத்தைப் போட்டு அரைத்தால் உடலுக்கும் நல்லது. தோசை நன்கு ‌சிவந்து வரும்.
இட்லி மாவில் உளுந்து மாவு அதிகமாகி போனால் இட்லி சரியாக வராது. அந்த சமயத்தில், ஒரு கைப்பிடி அரிசி மாவை (பவுடர்) இட்லி மாவில் கலந்து சுட்டால், இட்லி பஞ்சு போல் பம்மென்று உப்பிக் கொண்டு வரும்.தக்காளியை பத்திரமாக பாதுகாக்க ஒரு எளிய வழி உள்ளது. அதனை தண்ணீரில் போட்டு வைத்தால் போதும். எளிதில் அழுகாது.
தக்காளி காயாக இருந்தால் அதனை பச்சையாக உடனே ஃப்ரிஜிற்குள் வைக்காதீர்கள்.
தக்காளியின் காம்பு பாகம் பாத்திரத்தில் படும்படியாக வைத்து, அது பழுத்த பின்னர் ஃப்ரிஜிற்குள் வைக்கவும்.
பூரி நன்றாக உப்பி வர வேண்டும் என்றால், பூரி மாவில் வறுத்த ரவையை சேர்த்தால் போதும்.
பூரி செய்யும் போது ‌சிறிது மைதா மாவு, 1 தேக்கரண்டி ரவையை சேர்த்து செய்தால் பூரி அதிக நேரம் ‌மிருதுவாக இருக்கும்.
பூரி செய்யும் மாவில் ஒரு வாழைப்பழத்தைப் போட்டு ‌பிசைந்து செய்தால் சுவையும், ‌மிருதுத்தன்ம
ையும் கூடும்.
பச்சை மிளகாயை ஃபிரிட்ஜில் வைப்பதற்கு முன் அதன் காம்பை நீக்கிவிட்டால், நீண்ட நாட்கள் கெட்டுப் போகாமல் இருக்கும்.
பச்சை மிளகாயை ஃப்ரீஜருக்குள் வைத்தால் இரண்டு மாதங்கள் வரை கெடாமல் இருக்கும்.
ஒரு நிமிடம் தண்ணீரில் போட்டு வைத்து இதை பயன்படுத்தவும். இதே முறையில் தேங்காயையும் வைக்கலாம்.
குழம்பில் அதிகமாக உப்பு சேர்ந்துவிட்டால் கொதிக்கும் நிலையிலேயே அதில் கொஞ்சம் தண்ணீரும், மிளகாய் தூளும் போட்டு குழம்பிள் அளவை அதிகரித்துவிடலாம்.
குழம்பில் உப்பு அதிகமானது சாப்பிடும்போது தெரிந்தால், ஒரு கைப்பிடி சாதத்தை வெள்ளைத் துணியில் போட்டு கட்டி அதனை குழம்பில் போட்டு சிறிது நேரம் கழித்து எடுத்துவிட்டால் உப்பு குறைந்துவிடும்.
பொறியல், கூட்டு போன்றவற்றில் உப்பு அதிகரித்துவிட்டால் தேங்காய் துருவல் சேர்த்து விடலாம்.
வெங்காயம் அல்லது அசைவம் சமைத்த பின்னர் நமது கைகள் மற்றும் நறுக்கப் பயன்படுத்திய கத்தியில் அசைவ நாற்றம் இருக்கும்.
அந்த அசைவ நாற்றத்தைப் போக்க எளிய வழி உள்ளது. அதாவது எலுமிச்சைப் பழ சாறை ஊற்றி கை மற்றும் கத்தியைக் கழுவினால் போதும். நாற்றம் போய்விடும்.
வறுத்த வேர்கடலையை சிறிய துண்டுகளாக்கி பீன்ஸ், மற்ற காய்கறிகளுடன் சேர்த்து சமைத்தால் ருசியாக இருக்கும்.
டையாபெடிக்ஸ் (நீரிழிவு நோய்) இருப்பவர்கள் தினமும் வெந்தயப் பொடியை சாப்பிட்டால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைக்கலாம்.
தயிர் செய்ய வேண்டும். ஆனால் பாலில் போட தயிரோ, மோரோ இல்லையென்றால் மிளகாய் வற்றலை உடைத்து பாலில் போடவும். அடுத்த நாள் தயிர் ரெடி.வெங்காயம் கெட்டுப்போகாமல் இருப்பதற்கு, முதலில் அதை பிரீஸரில் வைத்து சிறிது நேரம் கழித்து தோலை எடுத்து சுத்தம் செய்த பின்னர் பிரிட்ஜில் வைக்கலாம்.
உருளைக் கிழங்குகள் முளைவிடாமலிருக்க, அவற்றை வைக்கும் பைக்குள் ஒரு ஆப்பிள் பழத்தையும் வைக்கவும்.
காலை உணவிற்கு பின் நூடுல்ஸ் மீதம் வந்தால், அதனுடன் சில பச்சை காய்களை நறுக்கி, தயிர் சேர்த்து ஒரு சாலட் தயாரிக்கலாம்.

Wednesday 13 January 2016

Kitchen tips!!!

பொங்கல் படையல்: பாரம்பரியம் பகரும் ஏழு காய் குழம்பு !!!
என்னென்ன தேவை?
சர்க்கரைவள்ளிக் கிழங்கு, சேனைக் கிழங்கு, கருணைக் கிழங்கு, சேப்பங்கிழங்கு, பூசணி, பரங்கி, வாழைக்காய், கேரட், கத்திரி, உருளைக் கிழங்கு (பெரிதாக நறுக்கிய துண்டுகள்) - இரண்டரை கப்
மொச்சைக் கொட்டை, பட்டாணி - கால் கப்
அவரை, கொத்தவரை, பீன்ஸ் (கால் இன்ச் நீள துண்டுகள்) - தலா அரை கப்
துவரம் பருப்பு - அரை கப்
மைசூர் பருப்பு- 6 டீஸ்பூன்
புளி - ஒரு பெரிய எலுமிச்சை அளவு
எண்ணை - 6 டேபிள் ஸ்பூன்
நெய் - 4 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
வறுத்து அரைக்க
பெருங்காயம் - 1 துண்டு
உளுத்தம் பருப்பு - 2 டீஸ்பூன்
கடலைப் பருப்பு - 4 டீஸ்பூன்
தனியா - 6 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 10 முதல் 15
மிளகு - 2 டீஸ்பூன்
வெந்தயம் - கால் டீஸ்பூன்
துருவிய தேங்காய் - அரை கப்
தாளிக்க
கடுகு - 4 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 4
நிலக்கடலை - 4 டீஸ்பூன்
கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை - சிறிதளவு
எப்படிச் செய்வது?
துவரம் பருப்பு, மைசூர் பருப்பை தேவையான தண்ணீர் ஊற்றி குக்கரில் வேகவையுங்கள். மூன்று டேபிள் ஸ்பூன் எண்ணெயில் முறையே பெருங்காயம், உளுந்து, கடலைப் பருப்பு, தனியா, காய்ந்த மிளகாய், மிளகு, வெந்தயம், தேங்காயைத் தனித்தனியே சிவக்க வறுத்து, ஆறியதும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரையுங்கள். புளியுடன் நான்கு கப் தண்ணீர் சேர்த்துக் கரையுங்கள். பூசணி, பரங்கி, கத்திரி, வாழைக்காய் தவிர மற்ற காய்கறித் துண்டுகளை சிட்டிகை மஞ்சள் பொடி, உப்பு சேர்த்து நசுங்கும் பதத்துக்கு வேகவைத்து, வடிகட்டுங்கள்.
புளிக் கரைசலில் பூசணி, பரங்கி, வாழைக்காய், கத்திரி துண்டுகளைச் சேர்த்து கொதிக்கவிடுங்கள். சற்று புளி வாசனை போனதும் பாதியளவு வெந்த காய்கறிகள், தேவையான உப்பு, மஞ்சள் பொடி சேர்த்துக் கொதிக்கவையுங்கள்.
நன்கு கொதித்து சேர்ந்து வந்ததும், அரைத்த கலவை, வேகவைத்த பருப்பு சேர்த்துக் கொதிக்கவிடுங்கள். பத்து நிமிடம் கொதித்ததும் இறக்கி, 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் மற்றும் நெய்யைச் சுடவைத்து கடுகு, நிலக்கடலை, கீறிய பச்சை மிளகாய் சேர்த்துத் தாளியுங்கள். இதில் சாம்பார் பொடி சேர்க்கக் கூடாது. விருப்பப்பட்டால் சிறிய துண்டு வெல்லம் சேர்க்கலாம். காரம் அதிகம் விரும்புபவர்கள் மிளகாய் வற்றலை அதிகமாக சேர்த்துக்கொள்ளலாம்.
முருங்கை, முள்ளங்கி, வெங்காயம் ஆகியவற்றை இதில் சேர்ப்பதில்லை. மேலே கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை சேர்த்தால் மணக்கும் ஏழு கறிக் குழம்பு தயார்.
நிறைய காய்கறிகள் சேர்ப்பதால் குழம்பு அதிகமாக இருக்கும். மீதியான குழம்பில் மறுநாள் சின்ன வெங்காயத்தை இரண்டாக நறுக்கி வதக்கிச் சேர்த்து கொதிக்கவிட்டுச் சாப்பிட மிக சுவையாக இருக்கும். இதனை எரித்த குழம்பு என்றும் சொல்வதுண்டு.
இந்தக் குழம்பில் ஏழு காய்கறிகள் சேர்ப்பது வழக்கம். ஆனால் இதற்கு மேலும் கூட்டியோ, அல்லது கிடைத்த காய்கறிகளைக் கொண்டும் இந்தக் குழம்பைச் செய்யலாம். ஆனால் காய்கறிகள் எண்ணிக்கை ஒற்றைப் படையாக இருக்க வேண்டும்.

Friday 8 January 2016

வாதம்,பித்தம்,கபம்-முக்குற்றம்!!!

வாதம்,பித்தம்,கபம்-முக்குற்றம்.

 வாதம், பித்தம், கபம்” -அல்லது ”வளி, அழல், ஐயம்” என்னும் மூன்று விஷயங்களும் நம்ம பாரம்பரிய மருத்துவத்தின் அடித்தளங்கள். 
         உடலின் ஒவ்வொரு அசைவையும் நகர்த்தும் உயிர்த் தாதுக்கள் அவை. . இந்த வாத பித்தம் கபம் குறித்த அடிப்படை அறிவு நம் ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டும்.
      “உருளைக்கிழங்கு போண்டா நமக்கு வேண்டா. அது வாயு கொடுக்கும். வாதக் குடைச்சல் வந்துடும்.
       மழை நேரத்தில தர்பூசணி எதுக்கு கபம் கட்டிக்க போகுது”-என்கிற மாதிரியான நம் தினசரி உணவும் அது அதிகரிக்க அல்லது குறைக்க வைக்கும் உடலின் இந்த மூன்று முக்கிய விஷயங்கள் குறித்த அறிவு தெரிந்திருக்க வேண்டும். .
          ”முத்தாது” என்று தமிழ் சித்தத்திலும் ”த்ரீதோஷா” என்று ஆயுர்வேதத்திலும் பேசப்படுகிறது.
          
            இந்த வாதம், நம் உடலின் இயக்கத்தை தசை, மூட்டுக்கள், எலும்பு இவற்றின் பணியை, சீரான சுவாசத்தை சரியான மலம் கழிப்பதை எல்லாம் பார்த்துக் கொள்ளும். 

        பித்தம், தன் வெப்பத்தால் உடலை காப்பது. இரத்த ஓட்டம், மன ஓட்டம், சீரண சுரப்புகள், நாளமில்லா சுரப்புகள் - போன்ற அனைத்தையும் செய்வது. 


         கபம் உடலெங்கும் தேவையான இடத்தில் நீர்த்துவத்தையும் நெய்ப்புத்தன்மையையும் கொடுத்து எல்லா பணியையும் தடையின்றி செய்ய உதவியாய் இருப்பது. 
       இந்த மூன்று வாத பித்த கபமும்
 ஒழுங்காய் வேலை செய்ய உணவு, ரொம்ப முக்கியம். மனமும் பணியும் கூட  அவசியமானது.
      ஒருவருக்கு மூட்டு வலி உள்ளது. கழுத்துவலி எனும் ஸ்பாண்டிலைஸிஸ் உள்ளதென்றால், வாதம் சீர் கெட்டு உள்ளது என்று பொருள்.
      இந்த வியாதிக்காரர்கள் வாதத்தை குறைக்கும் உணவை சாப்பிட வேண்டும். 
         . புளி, உருளைக்கிழங்கு, கொண்டைக்கடலை, துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, வாழைக்காய், கொத்தவரை, காராமணி, குளிர்பானங்கள், செரிமனத்திற்கு சிரமம் தரும் மாவுப்பண்டங்கள் வாயுவைத் தரும். வாதத்தைக் கூட்டும்.
        மூட்டுவலிக்காரர், மலக்கட்டு உள்ளோர், ஆஸ்துமாவில் அதிகம் அவதிப்படுவோர் இந்த உணவைக் கூடியவரை தவிர்க்க வேண்டும்.
        வாயுவை வெளியேற்றும் இலவங்கப்பட்டை, மிளகு, புதினா, பூண்டு சீரகம், மடக்கறுத்தான் கீரை, வாய்விடங்கம், இதனை உணவில்  சேர்ப்பது வாதத்தைக் குறைத்திட உதவும்.

          பித்தம் அதிகரித்தால் அசீரணம் முதல் டிப்ரஷன் வரை பல பிரச்னை வரக் கூடும். 
    அல்சர், இரத்தக்கொதிப்பு, ஆரம்பநிலை மதுமேகம் என பித்த நோய் பட்டியல் நீளும்..
   இன்றைய நவீன வேகமான வாழ்வியலில் பெருகும் பல நோய்க்கு இந்த பித்தம் ஒரு முக்கிய காரணம். 
      நாம் தான் இப்போது மனசை கல்லில் அடித்து துவைச்சு காயப் போடும் வேகத்தை தானே விரும்புகிறோம்! 
     பித்தம் அதிலும் அதிகம் வளர்கிறது. பித்தம் குறைக்க உணவில் காரத்தை எண்ணெயை குறைக்க வேண்டும் 
       கோழிக்கறி கூடவே கூடாது. கோதுமைகூட, அதிகம் சேர்த்தால் பித்தம் கூட்டம். 
    அரிசி சாப்பிடலாம்.கரிசலாங்கண்ணி கீரை, கறிவேப்பிலை, சீரகம், தனியா, எலுமிச்சை, மஞ்சள், இஞ்சி- என இவையெல்லாம் பித்தம் தணிக்கும்.
    பித்தம் குறைக்க கிச்சன் கவனம் மட்டும் போதாது. 
     மனம் குதூகலமாய் இருப்பது அவசியம். இன்றைக்கு சர்க்கரை வியாதி பெருக பலரும் அதிக அரிசி உணவைக் காரணமாய்ச் சொல்கிறோம். அளவுக்கதிகமான மனப்பளு, மனஅழுத்தம் தான் அதைவிட முக்கியக் காரணமாகப் படுகிறது.         அடுத்து கபம். சளி, இருமல், ஆஸ்துமா, மூக்கடைப்பில் இருந்து கபத்தால் வரும் நோய்கள் நிறைய. 
        பால், இனிப்புகள், நீர்க்காய்கறிகளான தர்பூசணி, மஞ்சள்பூசணி, சுரைக்காய், பீர்க்கு, வெள்ளரி, குளிர்பானம், மில்க் ஸ்வீட், சாக்லெட் என இவையெல்லாம் கபம் வளர்க்கும் காரணிகள்.
       மழைக்காலத்திலும், கோடைக் காலத்தில் கபநேரமான அதிகாலை மற்றும் இரவுநேரங்களில் தவிர்க்கலாம். 
      மிளகு, சுக்கு, திப்பிலி, ஆடாதொடை, துளசி, கற்பூரவல்லி, தூதுவளை- என இவையெல்லாம் கபம் போக்க உதவும். 
       தும்மிக்கொண்டே வரும் வீட்டுக்காரருக்கு கற்பூரவல்லி பஜ்ஜியும் சுக்கு காபியும் கொடுத்துப் பாருங்கள். 
        தும்மல் அன்றிரவின் தூக்கத்தைக் கெடுக்காது.

வாத பித்த கபம்-இந்த மூன்றினையும் காப்பதில், சமையல்கூடத்திற்கு  பங்கு உண்டு.
   அதற்கு பாரம்பரிய அனுபவம் அவசியம். பாரம்பரிய அனுபவங்கள் பாரம்பரிய சொத்தைக் காட்டிலும் பலம் பொருந்தியவை. 
      அதனை முட்டாள்தனம் என்றோ பழையது என்றோ ஒதுக்குவது கூடாது. அங்கே இங்கே தவறுகள் சேர்ந்திருக்கும். 
     ஆனால் இன்று சந்தையைக் குறிவைத்து ”2020-இல் இந்த நோயை உருவாக்க வேண்டும். 
      அப்பொது இந்த மருந்தை இங்கு விற்கலாம்,’ என திட்டமிடும் கேவலமான எண்ணங்கள் கண்டிப்பாய் அப்போது கிடையாது.
     இதை புரிந்து பாரம்பரிய அறிவை கவனமாய் பாதுகாப்போம். அது நம்மையும் நம் தலைமுறையையும் பாதுகாக்கும்!

புனித தீர்த்தம்!!!

ஆலய வழிபாட்டு முறைகளில் தலைசிறந்ததாகப் புனித தீர்த்தம் வழங்குதல் அமைந்துள்ளது.

வைணவ திருத்தலங்களில் வழங்கும் "துளசி தீர்த்தம்" இரத்தத்தை சுத்தம் செய்வதுடன், உடலில் பிராணசக்தி மற்றும் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலை வலுப்படுத்துகின்றது. துளசி தீர்த்தம் தொடர்ந்து அருந்தி வருபவர்களுக்கு கேன்சர் எனப்படும் புற்று நோய் வராது என்பது மருத்துவ உண்மையாகும்.

சைவத்திருத்தலங்களில் வழங்கும் "வில்வ தீர்த்தம்" குன்மம், வயிற்றுக் கடுப்பு, மேகவாயு, போன்றவைகளைப் போக்குகின்றது. அல்சர் எனப்படும் குடல்ப் புண்ணையும் போக்குகின்றது.

ஆலயங்களில் வழங்கப்படும் மேற்கண்ட இரண்டு தீர்த்தங்களும் முறைப்படி தயார் செய்தால் இம்மருத்துவ குணங்கள் நிச்சயம் உண்டு.

நாம் வீட்டிலேயே செய்து உண்டு பயன்பெறக்கூடிய ஒரு புனித தீர்த்தம் முறையை இப்போது பார்ப்போம். இப்புனித தீர்த்தம் காய கற்ப சஞ்சீவியைப் போல பற்பல நோய்களை நீக்கி நல்வாழ்வு அளிக்கும் குணம் கொண்டது.

புனித தீர்த்தம்

1 - ஏலம், 2 - இலவங்கம், 3 - வால்மிளகு, 4 - ஜாதிப்பத்திரி, 5 - பச்சைக் கற்பூரம் இவைகளில் முதல் நான்கும் வகைக்கு ஒரு பங்கும், பச்சைக் கற்பூரம் கால் பங்கு சேர்க்கவும்.

முதல் நான்கு பொருள்களையும் உலர்த்தி இடித்து பொடித்துக்கொள்ளவும். பிறகு பச்சைக் கற்பூரத்தையும் பொடித்து இதனுடன் கலந்து கொள்ளவும். இதனை பாட்டலில் பதனம் செய்து பூஜை அறையில் வைக்கவும்.

இந்த தீர்த்தப் பொடியை திரிகடி [மூன்று விரல் அளவு] அளவு எடுத்து ஒரு தாமிர தம்ளரில் தண்ணீரில் கலந்து முதல் நாள் இரவு வைத்து மறு நாள் காலை வெறும் வயிற்றில் பூஜை முடித்தவுடன் அருந்த சகல நோய்களும் எளிதில் நீங்கி உடல் பலம் பெறும்.

இதனுடன் சைவ வழிபாட்டில் உள்ளவர்கள் வில்வம் சேர்த்து அருந்தலாம். வைணவ வழி பாட்டில் உள்ளவர்கள் துளசி சேர்த்து அருந்தலாம்.

இருதயம், இரைப்பை பலம் பெரும்,கண்கள் பற்றிய நோய் யாவும் நீங்கும், நரம்புத்தளர்ச்சி, சளி, சுவாசகாசம் நீங்கும், இரத்தம் சுத்தியாகும், பித்த ரோகங்கள், வாந்தி, தலைசுற்றல், மயக்கம், வாய்க்கசப்பு, மூச்சடைப்பு, வயிற்று வலி, கழிச்சல், மார்புவலி, மாரடைப்பு, போன்றவைகள் நீங்கும். இரத்தம் பெருகும் .

இது உடலைப் பற்றிய நோய்களை நீக்கும் வல்லமை கொண்ட சஞ்சீவி மருந்து முறையாகும். இது அனுபவத்தில் கை கண்ட அரிய முறையாகும்.

அமிர்த சஞ்சீவி!!!

முதுமையை நீக்கி இளமை பெறச்செய்யும் அமிர்த சஞ்சீவி -
செய்முறை விளக்கம் 

கலையில் இஞ்சி கடும் பகல் சுக்கு
மாலையில் கடுக்காய் மண்டலம்
கொண்டிடில் கோலை ஊன்றி குறுகி
நடப்பவனும் கோலை வீசி குலாவி
நடப்பானே ...

சித்தர்கள் இது போன்ற பாடல்கள் வடிவில் எளிய முறையில் நோய் களைத் தீர்க்கும் வழிமுறைகளை வடித்துள்ளனர். ஆனால் இவைகளின் உண்மை விளக்கங்களை கண்டறிந்து அதன் படி உண்டோமானால் பாடல்களில் கண்டபடி உண்மையான பலன்களை அடைய முடியும்.

சித்த மருத்துவ முறையின் தத்துவமே அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் என்பதுதான் அதாவது அண்டம் என்ற பிரபஞ்சத்தில் உள்ள பஞ்ச பூதங் களின் ஒரு பகுதிதான் பிண்டமாகிய நமது உடலிலும் இயங்குகின்றது.

நிலம்,நீர்,நெருப்பு,காற்று,ஆகாயம்,என்ற ஐந்து பூதங்களில் நிலம் கீழே நாம் வாழ்வதற்கு ஆதாரமாகவும்,ஆகாயம் மேலே சாட்சியாகவும் இருப்பதால் நடுவில் உள்ள நீர்,நெருப்பு, காற்று என்ற மூன்று வித சக்திகளை மட்டும் இயங்கும் சக்திகளாக குறிப்பிட்டுள்ளனர்.

எனவேதான் சித்த மருத்துவ முறையில் நாடி பிடித்து நோய்களைக் கணிக்க மூன்று விரல்களைப் பயன்படுத்து கின்றனர். அவை வாதம், பித்தம், கபம் எனப்படும்.

வாதம் - காற்று - 1,மாத்திரை அளவு -
பித்தம் - நெருப்பு - 1/2,மாத்திரை அளவு-
கபம் - நீர் - 1/4-மாத்திரை அளவு -

இது நாடியின் அளவுகளாகும் இதன் படி கையில் நாடி துடித்தால் உடலில் நோய் இல்லை என அர்த்தம்.இந்த நாடி அளவுகளை கூடவோ குறையவோ அல்லாமல் சமன் படுத்தும் மருந்துகள் தான் மேற்கண்ட பாடலில் உள்ளவை.

வாதம் - காற்று - 1,மாத்திரை அளவு - -------- சுக்கு
பித்தம் - நெருப்பு - 1/2,மாத்திரை அளவு--------- இஞ்சி
கபம் - நீர் - 1/4-மாத்திரை அளவு -------- கடுக்காய்

இஞ்சி,சுக்கு,கடுக்காய் இந்த மூன்றும் தான் உடலில் உள்ள வாத,பித்த, கபம் மூன்றினையும் சமன் செய்பவை. அடுத்து ,

சித்த மருத்துவத்தின் அடிப்படையே ஒவ்வொரு மருத்துவ மூலப் பொருட்களிலும் அமிர்தமும் ,நஞ்சும் இணைந்துள்ளது என்பதுதான். எனவேதான் சித்தர்கள் இவைகளில் உள்ள நஞ்சுவை நீக்கி மருந்துகளை தயாரிக்க வேண்டுமென வலியுறுத்துகின்றனர்.சுத்தி முறை எனும் பிரிவு சித்த மருத்துவ முறையில் மட்டுமே உள்ளது.

சுக்குக்கு புற நஞ்சு - கடுக்காய்க்கு அக நஞ்சு எனும் விளக்கம் உள்ளது அதாவது சுக்கில் மேலே உள்ள தோல் பகுதி நஞ்சு எனவும் ,கடுக்காயில் உள்ளே உள்ள கொட்டை நஞ்சு எனவே இவைகளை நீக்கினால்தான் அமிர்தமாக வேலை செய்யும்.

சுக்கு சுத்தி ; தரமான சுக்கு தேவையான அளவில் வாங்கி சுக்கின் மேல் புறம் வெற்றிலைக்குப் போடும் சுண்ணாம்பு ஒரு போஸ்ட் கார்ட் கணத்தில் பூசி காயவிடவும்.பின்பு மிதமான நெருப்பில் வாட்டவும் சுண்ணாம்பில் நெருப்பு பிடிக்கும் சமயம் எடுத்து விடவும்.பிறகு நன்கு ஆரிய பின் ஒரு கத்தியால் சுண்ணாம்பை சுரண்ட சுக்கின் மேல் தோலுடன் வந்து விடும் .இதனை இடித்து சலித்து பதனம் செய்யவும்.

கடுக்காய் சுத்தி ;கடுக்காயை உடைத்து மேலே உள்ள சதைப் பகுதியை மட்டும் எடுத்துக்கொள்ளவும்.கொட்டை நஞ்சு எனவே நீக்கிவிடவும். சதைப் பகுதியை இடித்து தூள் செய்யவும்.

இஞ்சி சுத்தி ; இஞ்சியை சிறிது நீர் விட்டு அரைத்து பிழிந்து சாற்றை வடித்து வைக்கவும் இதை பத்து நிமிடம் கழித்து பார்க்க அடியில் சுண்ணாம்பு போல் வண்டல் இருக்கும் இதுதான் நஞ்சு எனவே மேலே உள்ள தெளிவை மட்டும் எடுத்துக் கொள்ளவும் .

இந்த முறையில் சுத்தி செய்த பிறகு அமிர்தமாக வேலை செய்யும்.

உண்ணும் முறை :
காலையில் இஞ்சிச்சாறு 15-மிலி (மூன்று டீஸ்பூன்)எடுத்து சுத்தமான தேன் அதே அளவு கலந்து வெறும் வயிற்றில் சாப்பிடவும்.இது பித்தத்தை சமன் செய்யும்.

மதியம் உணவிற்கு முன் சுக்குத்தூள் 1/2 டீஸ்பூன் அளவு சுடுநீரில் கலந்து சாப்பிடவும்.இது வாயுவை சமன் செய்யும்.

இரவில் படுக்கும் பொது கடுக்காய் தூள் ஒரு டீஸ்பூன் அளவு வெண்ணீ ரில் கலந்து சாப்பிடவும்.இது கபம் எனப்படும் சிலேத்துமத்தை சமன் செய்யும்.மலம் மிதமாக இளகிப் போகும்.

இதன்படி ஒரு மண்டலம் உண்ண உடலில் இளமை மிடுக்குடன் புத்துணர்ச்சி கிட்டும்.

பழமொழி :

கடுக்கை உண்டால் மிடுக்காய் வாழலாம்.
ஒரு கடுக்காய் பத்து தாய்க்கு சமம்.
சுக்குக்கு மிஞ்சிய மருந்தில்லை


நன்றி !
இமயகிரி சித்தர்

Mudras!!!

பலன் தரும் பத்து முத்திரைகள்

1. அறிவு முத்திரை:

ஆள்காட்டி விரல் நுனி கொண்டு கட்டை விரல் நுனியை தொடவும். மற்ற மூன்று விரல்களும் நேராக இருக்க வேண்டும். கட்டை விரல் நுனிகள் பிட்யூட்டரி மற்றும் எண்டாக்ரின் சுரப்பிகளுக்கு ஆதாரம். ஆள்காட்டி விரல் நுனியால் அழுத்தம் கொடுக்கும்போது மேற்கண்ட சுரப்பிகளின் இயக்கம் சுறுசுறுப்படையும். இந்த முத்திரையை நின்ற நிலை, உட்கார்ந்த நிலை, படுத்த நிலையிலும் செய்யலாம். அறிவை கூர்மையாக்கி நினைவாற்றலை அதிகரிக்கும். தூக்கமின்மையை போக்கும். கோபம் குறையும்.

2. பூமி முத்திரை:

மோதிர விரல் நுனி கொண்டு கட்டை விரல் நுனியை தொடவும். மற்ற மூன்று விரல்களும் நேராக இருக்க வேண்டும். சோர்வை இது குறைக்கும். இந்த முத்திரையை எப்போது வேண்டுமானாலும் செய்யலாம். சோர்வான எடை குறைந்தவர்களுக்கு உடல் எடை கூடும். மேனி அழகை கூட்டி பளபளப்பாக்கும். உடலை சுறுசுறுப்பாக்கி ஆரோக்கியத்தை நிலைப்படுத்தும்.
நடு விரலை சுக்கிர மேட்டின் மேல் வைத்து கட்டை விரலால் அழுத்தவும் – மற்ற மூன்று விரல்களும் நேராக இருக்க வேண்டும். உடல் சோர்வின்மையை இது நிவர்த்தி செய்யும். தினமும் இப்படி 40 முதல் 60 நிமிடங்கள் செய்து வந்தால் நோய் குணமாகும். காது வலியை 4 அல்லது 5 நிமிடத்தில் குணமாக்கும். காது கேளாதோர் மற்றும் மூளை பாதிக்கப்பட்டோர்க்கு இந்த முத்திரை உதவும். பிறவி நோயாக இருந்தால் பயன் தராது.

3. நீர் முத்திரை:

சின்ன விரல் நுனி கொண்டு கட்டை விரல் நுனியை தொடவும். மற்ற மூன்று விரல்களும் நேராக இருக்க வேண்டும். இது உடலில் உள்ள நீரை கட்டுப்பாட்டில் வைத்து நீர் குறைவால் ஏற்படும் குறைகளை நிவர்த்தி செய்யும். இதனை எப்போது வேண்டுமானாலும் செய்யலாம். ஜீரண கோளாறு மற்றும் சதை பிடிப்புகள் வராது.

4. வாயு முத்திரை:

ஆள்காட்டி விரலை கட்டை விரல் அடியில் வைத்து கட்டை விரலால் அழுத்தவும். மற்ற மூன்று விரல்களும் நேராக இருக்க வேண்டும். 45 நிமிடங்கள் தொடர்ச்சியாக செய்தால் வாயுவால் ஏற்படும் தொந்தரவை 24 மணி நேரத்தில் நிவர்த்தி செய்யும். தொடர்ந்து 2 மாதங்கள் செய்து வந்தால் வாயுப்பிடிப்பு, கீழ் வாதம், பாரிச வாயு போன்ற வியாதிகளை கட்டுப்படுத்தும். வயிறு சம்பந்தப்பட்ட வாயு உபாதைகளும் நீங்கும்.

5. சூன்ய முத்திரை:

நடு விரலை சுக்கிர மேட்டின் மேல் வைத்து கட்டை விரலால் அழுத்தவும். மற்ற மூன்று விரல்களும் நேராக இருக்க வேண்டும். உடல் சோர்வை இது நிவர்த்தி செய்யும். தினமும் 40 முதல் 60 நிமிடங்கள் செய்ய வேண்டும். காது தொடர்புடைய நோய்களை இந்த முத்திரை கட்டுப்படுத்தும்.

6. சூரிய முத்திரை:

மோதிர விரலை மடக்கி கட்டை விரலால் அழுத்தவும். தைராய்டு சுரப்பியை தூண்டும் சக்தி இந்த முத்திரைக்கு உண்டு. தினமும் இரு முறை 5 முதல் 15 நிமிடங்கள் பயிற்சி தரலாம். கொலஸ்ட்ராலை குறைக்க உதவும். நிம்மதியின்மை, ஜீரணமின்மை போன்ற குறைபாட்டை களைய வகை செய்யும்.

7. வாழ்வு முத்திரை:

சின்ன விரல் மற்றும் மோதிர விரலை மடக்கி கட்டை விரலால் அழுத்தவும். மற்ற இரு விரல்களும் நேராக இருக்க வேண்டும். பெயருக்கு ஏற்றார்போல் வாழ்வின் சிறப்பிற்கு வகை செய்யும். இந்த முத்திரையை எப்போது வேண்டுமானாலும் செய்யலாம். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். வைட்டமின் குறைபாடு நீங்கும். சோர்வு நீங்கும். கண்பார்வை சிறப்பாகும்.

8. ஜீரண முத்திரை:

நடு விரல் மற்றும் மோதிர விரல் நுனியின் மூலம் கட்டை விரல் நுனியை தொட வேண்டும். மற்ற இரு விரல்களும் நேராக இருக்க வேண்டும். தினமும் குறைந்தது 45 நிமிடங்கள் பயிற்சி தரவும். சர்க்கரை வியாதி, மலச்சிக்கல் போன்றவற்றை சீராக்கும்.

9. இதய முத்திரை:

நடு விரல் மற்றும் மோதிர விரல் நுனிகள் கட்டை விரல் நுனியை தொட வேண்டும். ஆள் காட்டி விரல் நுனி கட்டைவிரலின் அடியை தொட வேண்டும். சின்ன விரல் மட்டும் நேராக இருக்க வேண்டும். இது இதய நலத்துக்கு சிறந்தது. இதய நோய் உள்ளவர்கள் தினமும் இருமுறை தலா 15 நிமிடம் செய்தால் பலன் தெரியும்.

10. லிங்க சக்தி முத்திரை:

இரு கைகளையும் சேர்த்து விரல்கள் ஒன்றுக்கொன்று பின்னி இருப்பது போல் சேர்த்து கொள்ளவும். இப்படி செய்யும்போது இடது கை கட்டை விரல் நேராகவும் வலது கை கட்டை விரல் மற்றும் ஆள் காட்டி விரல் நடுவில் இருக்குமாறும் வைத்துக் கொள்ளவும். இது உடலில் உஷ்ணத்தை தரும். எனவே இதை பயிற்சி செய்யும்போது நெய், அதிக நீர் மற்றும் பழ ரசம் பருகவும். இதை அதிக நேரம் செய்யக் கூடாது. ஏனெனில் இந்த முத்திரை குளிர் காலத்தில் செய்தால் கூட வியர்வை வரும். கபம் மற்றும் சளி போன்ற சுவாச சம்பந்தப்பட்ட வியாதிகளை குணப்படுத்த வல்லது.
இந்த முத்திரைகளை செய்து உங்களில் மாற்றம் ஏற்படுகிறதா என்று பாருங்களேன்!

பூப்பெய்திய பெண்களுக்கான உணவு !!!

பூப்பெய்திய பெண்களுக்கான உணவு !!!
மகள் பூப்பெய்திய உடனேயே அவளது கல்யாணம் குறித்த கவலை பெற்றோரைப் பற்றிக் கொள்கிறது. மகளுக்கு பாத்திரங்களும் நகைகளும் சேர்ப்பதும், அவளது பெயரில் முதலீடு செய்வதும்தான் அவளது எதிர்காலப் பாதுகாப்புக்கான விஷயங்கள் என்பது பல பெற்றோரின் கருத்து. ஆனால், ஒரு பெற்றோருக்குக்கூட, மகளின் ஆரோக்கியம் எப்படியிருக்கிறது, அவளது உடல் திருமண வாழ்க்கைக்குத் தயாராக இருக்கிறதா என்கிற நினைப்புகூட இருப்பதில்லை. உண்மையில் உங்கள் மகளுக்கு நீங்கள் கொடுக்கும் மிகப் பெரிய சொத்து, நோயற்ற வாழ்க்கையும் ஆரோக்கியமும்தான்!
பூப்பெய்திய பெண்கள் எல்லோருக்கும் ஏதோ ஒரு பிரச்னை இருக்கவே செய்கிறது. ஆனால், ‘அந்த வயதில் அப்படித்தான் இருக்கும்... கல்யாணமானால் எல்லாம் சரியாகி விடும்’ என்கிற நினைப்பில் அதை அலட்சியம் செய்கிறவர்கள்தான் அதிகம். ஆகவே அம்மாக்களே... உங்கள் மகளுக்கு மாப்பிள்ளை பார்க்கத் தொடங்கும் முன், மாதவிலக்கு கோளாறுகளைக் கண்டுபிடித்து, சரி செய்யப் பாருங்கள்.
‘பெரும்பாடு’ எனப்படுகிற அதிகப்படியான ரத்தப் போக்கு பல இளம் பெண்களையும் பாடாகப் படுத்துகிறது. உடலில் ‘அழல்’ எனப்படுகிற சூடு அதிகமாவதன் விளைவே இது. இதை சரி செய்ய முதல் கட்டமாக உடலைக் குளிர்ச்சியாக்க வேண்டும். கன்னிப்பெண்களின் உடல்நலம் காப்பதிலும், அவர்களது கர்ப்பப்பையைப் பலப்படுத்துவதிலும் சோற்றுக்கற்றாழைக்குப் பெரும் பங்குண்டு.
சித்த மருத்துவத்தில் சோற்றுக்கற்றாழைக்கு ‘கன்னி’ என்றே பெயர்! சோற்றுக்கற்றாழையைப் பறித்து, மேல் தோலையும் முள்ளையும் நீக்கிவிட்டு, நடுவிலுள்ள நுங்கு போன்ற பகுதியை சுமார் பத்து முறைகள் தண்ணீரில் அலசுங்கள். பிறகு அதில் பனைவெல்லம் சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் உங்கள் மகளுக்குக் கொடுங்கள். பிற்பகலில் சோற்றுக் கற்றாழையை அரைத்து, நீர்மோரில் கலந்து கொடுங்கள். உடலுக்குள் குளிர்சாதன எந்திரம் பொருத்தினது போல அத்தனை குளுமையாக இருக்கும்.
உங்கள் வீடுகளில் எத்தனை நாளைக்கொரு முறை சமையலில் வாழைப்பூ இடம்பெறும்? 2-3 மாதங்களுக்கொரு முறை? அடுத்த முறை வாழைப்பூ வாங்கும் போது, ஒரு நிமிடம் அதை உற்றுக் கவனியுங்கள். கர்ப்பப்பையின் வடிவிலேயே இருப்பது தெரியும். வடிவில் மட்டுமின்றி, குணத்திலும் அது கர்ப்பப்பைக்கு நெருக்கமானது. வாழைப்பூவை அதன் துவர்ப்புச் சுவை மாறாமல் கூட்டாகவோ அல்லது வடையாகவோ செய்து வாரம் 2-3 முறை சாப்பிடுவது, அதிக ரத்தப்போக்கைக் கட்டுப்படுத்தும்.
யூடியூபிலும் இணையதளத்திலும் பார்த்துவிட்டு, வாயில் நுழையாத பெயர்களில் கிடைக்கிற வெளிநாட்டுக் காய்கறிகளை எல்லாம் தேடித் தேடி வாங்கி சமைக்கிறீர்கள்தானே? உங்கள் வீட்டுக்கு கீரை கொண்டு வரும் அம்மணியிடம், அடுத்த முறை ‘இம்பூரல்’ இலை எடுத்துவரச் சொல்லுங்கள். அதை லேசாக எண்ணெயில் வதக்கி, உளுத்தம் பருப்பு, மிளகு வறுத்துச் சேர்த்து, கல் உப்பு வைத்து அரைத்து, எலுமிச்சைச்சாறு சேர்த்து துவையலாக அரைத்துக் கொடுங்கள். மகளை மிரள வைக்கிற மாதவிலக்கு பிரச்னைகள் ஓடியே போகும்.
அடுத்தது மாதவிலக்கு நாள்களில் உண்டாகிற வலி. இதை ‘சூதக வலி’ என்கிறோம். கர்ப்பப்பையும், அதைச் சுற்றியுள்ள தசை நாண்களும் வலுவிழப்பதால், உண்டாகிற தசை இறுகல் வலி இது. இதற்கு மாதுளம் பழம் மிக அருமையான மருந்து. மாதுளம் பழமும் கிட்டத்தட்ட கர்ப்பப்பை வடிவிலும், அதன் பூ நுனியானது கருவாய் வடிவிலும் இருப்பதைக் கவனித்திருக்கிறீர்களா? மாதுளை மணப்பாகு, மாதவிலக்கின் போதான அழற்சியைத் தவிர்த்து, வலியை நீக்கும்.
இப்போதும் கிராமங்களில் பூப்பெய்தும் இளம் பெண்ணுக்கு, உளுத்தங்களியும் உளுந்து வடையும் தருவது ஒரு சடங்காகவே நடைபெறுகிறது. நாகரிகத்துக்கு மாறிப்போன நகரத்துப் பெண்களுக்கு அதெல்லாம் தெரியாமல் போனதன் விளைவுதான், ‘இடைப்பூப்பு’ எனப்படுகிற மாதவிலக்கு சுழற்சியின் இடையிடையே ஏற்படுகிற உதிரப் போக்கும், கர்ப்பப்பை பலவீனமும்... கருப்பையின் உள்வரிச் சுவர் முறையாக உருவாகாமையாலும், அது உதிர்ந்து, முறையாக வெளியேறாத ‘தோஷ நிலை’தான் இதற்குக் காரணம். உளுத்த கர்ப்பப்பையை உரமாக்கி, மேற்சொன்ன பிரச்னைகளை சரியாக்க ஒரே மருந்து உளுந்து.
மாதம் தவறாமல் மாதவிலக்கு வந்தால்தான் ஆரோக்கியம். சிலருக்கு 3 மாதங்களுக்கொரு முறை வரும். திடீரென நின்று போகும். சூதகத் தடை என்கிற இந்தப் பிரச்னைக்குக் காரணம் ரத்தமின்மை. பனைவெல்லம் சேர்த்த திராட்சைச்சாறும், பனைவெல்லப் பாகில் செய்த கருப்பு எள்ளுருண்டையும் இந்தப் பிரச்னையைக் குணப்படுத்தும். கடைசியாக வெள்ளைப்படுதல்... கர்ப்பப்பையை தூய்மையாக வைத்துக் கொள்ளாததே இதற்குக் காரணம். நமது உடலில் அமிலத்தன்மை, காரத்தன்மை என இரண்டு உண்டு.
இரண்டும் சம விகிதத்தில் இருக்க வேண்டும். அமிலத்தன்மை குறைந்து, காரத்தன்மை அதிகரித்தால், உடல் சூடும் அதிகமாகி, வெள்ளைப்பட ஆரம்பிக்கும். பாக்டீரியா, பூஞ்சைத் தொற்றுகளும் சீக்கிரமே பற்றிக் கொள்ளும். இதைத் தவிர்க்க, உணவில் அடிக்கடி வெண்பூசணி, சுரைக்காய், முள்ளங்கி சேர்த்துக் கொள்ள வேண்டும். ‘வயசுக்கு வந்த பொண்ணுங்களுக்கு இதெல்லாம் சகஜம்தானே...’ என இனி எந்தப் பிரச்னையையும் அலட்சியப்படுத்தாதீர்கள் அம்மாக்களே...
அந்த வயதில் நீங்கள் அலட்சியப்படுத்துகிற சின்ன விஷயம், உங்கள் மகளின் எதிர்காலத்தோடு விளையாடுவதற்கு சமம்... பூப்பெய்திய மகளிடம் மனது விட்டுப் பேசுங்கள். அவளது மாத சுழற்சி எப்படியிருக்கிறது எனக் கேளுங்கள். எது இயல்பானது, எது இயல்புக்கு மாறானது என எடுத்துச் சொல்லுங்கள்.
டாக்டர் தெ.வேலாயுதம் சொன்ன செய்முறைப்படி, 3 உணவுகளை இங்கே செய்து காட்டியிருக்கிறார் ‘ரெசிபி ராணி’ சந்திரலேகா ராமமூர்த்தி.
உளுத்தங்களி
என்னென்ன தேவை?
கருப்பு உளுந்து - கால் கிலோ,
பனைவெல்லம் - கால் கிலோ,
நல்லெண்ணெய் - 200 மி.லி.
எப்படிச் செய்வது?
உளுந்தை வெறும் கடாயில் வறுத்துக் கரகரப்பாகப் பொடித்துக் கொள்ளவும். பனைவெல்லத்தில் தண்ணீர் விட்டு, பாகு காய்ச்சி, வடிகட்டி, மறுபடி அடுப்பில் வைக்கவும். அதில் உளுந்து பொடியை சிறிது, சிறிதாகச் சேர்த்துக் கிளறவும். நன்கு வெந்ததும், நல்லெண்ணெய் விட்டுக் கிளறி, இறக்கவும்.
வயதுக்கு வந்த பெண்களுக்குக் கொடுத்தால் இடுப்பு எலும்பு வளர்ச்சி பெறும். உடல் மெருகடையும். ரத்தப் போக்கு சிக்கல்கள் தீரும்.
முள்ளங்கி துவையல்
என்னென்ன தேவை?
முள்ளங்கி - 2,
புதினா இலை - 1 கைப்பிடி,
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்,
மிளகு - அரை டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கேற்ப,
நெய் - சிறிது.
எப்படிச் செய்வது?
முள்ளங்கியைத் தோல் நீக்கி, நறுக்கி, நெய் விட்டு வதக்கித் தனியே வைக்கவும். அதே கடாயில் இன்னும் சிறிது நெய் விட்டு புதினா இலை, உளுத்தம் பருப்பு, மிளகு சேர்த்து வறுக்கவும். முள்ளங்கியுடன் சேர்த்து, உப்பு வைத்து அரைக்கவும். இந்தத் துவையலை சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட, மாதவிலக்கு நாள்களில் ஏற்படுகிற வயிற்றுவலியும் சிறுநீர் எரிச்சலும் சரியாகும்.
வாழைப்பூ கூட்டு
என்னென்ன தேவை?
ஆய்ந்து, சுத்தம் செய்து,
நறுக்கிய வாழைப்பூ - 2 கப்,
பயத்தம் பருப்பு - அரை கப்,
வெங்காயம் - 1,
பச்சை மிளகாய் - 2,
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்,
தேங்காய்த் துருவல் - கால் கப்,
சீரகம் - அரை டீஸ்பூன்,
கறிவேப்பிலை,
கொத்தமல்லி - சிறிது, உப்பு,
எண்ணெய் - தேவைக்கேற்ப,
கடுகு - கால் டீஸ்பூன்.
எப்படிச் செய்வது?
பயத்தம் பருப்பை மலர வேக வைக்கவும். தேங்காய், சீரகத்தை நைசாக அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு தாளித்து, கறிவேப்பிலை, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் தாளிக்கவும். பிறகு அதில் வாழைப்பூ, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும். வெந்ததும் பருப்பு சேர்க்கவும். உப்பும், அரைத்த விழுதும் சேர்த்து, அளவாகத் தண்ணீர் விட்டுக் கொதித்ததும் இறக்கி, கறிவேப்பிலை, கொத்தமல்லி தூவிப் பரிமாறவும்.மாதவிலக்கு தொடர்பான அத்தனை பிரச்னைகளுக்கும் இது மருந்து.

Baskar Jayaraman's photo.

அக்குபங்சர்!!!

அக்குபங்சர் மருத்துவம் .!!!


இன்றைய நவீன மருத்துவத்தில், அறுவை சிகிச்சை சிறந்த மருத்துவ பிரிவாக மதிக்கப் படுகிறது. பாதிக்கப்பட்ட மக்கள் மனதிலும், அறுவை சிகிச்சை பற்றி ஒர் உயர்வான மதிப்பீடு உள்ளது என்பதனை மறுக்க இயலாது.
நமது மண்ணின் மருத்துவமான, சித்த மருத்துவத்தில் அறுவை சிகிச்சை பயன்பாட்டில் இருந்ததற்கான குறிப்புகள் உள்ளன. அகத்தியர் குணபாடம் எனும் சித்த மருத்துவ நூலில் அறுவை சிகிச்சைக் கருவிகள் குறித்து குறிப்புகள் உள்ளன. அதேபோல் ஆயுர்வேத மருத்துவர் சுஸ்ருதர் இன்றைய நவீன அழகு சிகிச்சையான ‘பிளாஸ்டிக் சர்ஜரி’க்கான மூலவர் என்று நவீன மருத்துவம் குறிப்பிடுகிறது. இதிலிருந்து பல்வேறு மருத்துவ முறைகளிலும் அறுவை சிகிச்சை பயன்பாட்டில் இருந்துள்ளது என்பது வெள்ளி டைமலை. இருப்பினும் நமது நாட்டில் ஏற்பட்ட அரசியல் நிகழ்வுகள் நமது மருத்துவத்தை வளர்த்தெடுக்க பெருந்தடையாக இருந்து மண்ணுக்குள் புதைத்து விட்டது என்பதனை நாம் உணரவேண்டும். இன்றும் அதே நிலை தொடர் கிறது என்பதுதான் வேதனைக்குரிய செய்தி...
சீன நாட்டின் மக்கள் மருத்துவமான அக்குபங்சர் மருத்துவம் பஞ்சபூத கோட்பாடின் அடிப்படையில் உடலியக்கதை சீர்படுத்தும் ஒரு முழுமையான மருத்துவமுறையாகும். அதாவது உடலில் பரவிச் செல்லும் சக்திபரிமாற்றத்தை ஒழுங்கு செய்து. அதன் வழி உடல் உள்ளுறுப்புகளின் இயக்கத்தை செம்மைபடுத்தி நோய்களைக் களையும் ஒர் அற்புத இயற்கை வழி அறிவியலாகும்.
உடல் உள்ளுறுப்புக்களின் இயக்கத்தை இரு பெரும் பிரிவாகப் பிரிக்காலம். 1. உள்வாங்குதல் 2.வெளித்தள்ளுதல். அதாவது நாம் உள்ளிழுக்கும் காற்று, உணணும் உணவு, அருந்தும் நீர் ஆகிய வற்றிலுள்ள சதுதுகளையும், சக்தியையும் உள்வாங் குதல் முதல்பணி, அடுத்து இரண்டாவதாக உள்ளி ழுக்கப்பட்ட பொருட்களில் இருந்து கிடைக்கும் சக்தி மற்றும் சத்துகள் தவிர்த்து பொருட் களையும், அணுக்களில் நடந்த வேதிமாற்றங்களுக் குப் பின் உண்டாகும் கழிவுகள் (Toxins), அணுக் களின் அழிவு (Dead cells), ஆகியவற்றால் உண்டா கும் அனைத்துக் கழிவுகளையும் சளி, மலம், சிறுநீர், வியர்வை ஆகிய வழிகளில் உடல் வெளித்தள்ளுகிறது.
இவ்விரு பெரும் பணிகளில் ஏற்படும் தடை கள், சுணக்கம், சத்து அல்லது சக்தி பற்றாக்குறை, சக்தி அல்லது கழிவுகள் தேக்கம் ஆகியன நோய்நிலையை தோற்றுவிக்கறது உள்வாங்குதல் மற்றும் வெளித்தள்ளுதல் ஆகிய இருபணி களையும் மேற்கொள்ளும் உறுப்புகளை பட்டி யலிடுவோம்.
1. நுரையீரல் - பெருங்குடல்
2. சிறுநீரகம் - சிறுநீர்ப்பை
3. கல்லீரல் - பித்தப்பை
4. இருதயம் - சிறுகுடல்
5. இருதயஉறை - மூவெப்பக்குழி
6. மண்ணீரல் - இரைப்பை
6 இணை உறுப்புகள் தம்முள் இணைந்து செயலாற்றிய முன் குறிப்பிட்ட இரு பெரும் பணிகளை மேற்கொள்கின்றன.
அக்குபங்சர் மருத்துவத்தின் அடிப்படை விதிகளின்படி இந்த 12 உறுப்புகளை உடலின் மேற்புறம் அமைந்துள்ள அக்குபங்சர் புள்ளிகளை தூண்டுதல் அளிப்பதன் வாயிலாக உள்ளுறுப்புகள் தம் பணிகளை இயல்புப் போக்கில் மேற்கொண்டு, உள்வாங்கலும், வெளித்தள்ளுதலும் ஒருங்கே நடைபெற்று உடலானது தம்மை ஒழுங்கு செய்துகொள்கிறது இதன்வழி, உடல் முழுமையும் தன்னை அனைத்து நிலைகலும் புதுப்பித்துக் கொள்கிறது. அதனால் நோய்நிலை மறைந்து விடுகிறது.
இவ்வாறு உடல் இயக்கத்தை சீர் செய்வதன் வழியாக அறுவை சிகிச்கை செய்துதான் குணப் படுத்த இயலும் எனக் கருதப்படும் நோய்களை அக்குபங்சர் மருத்துவம் செய்தே குணப்படுத்தி விடலாம்.
1) கண்புரை நோய் (Cataract):
உடலின் அமிலத்தன்மை அதிகரிப்பில் தோன்றும் கண் வெண்படலமே இந்நோய். இதனை கண் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை யின் மூலம் படலத்தை அகற்றுகின்றனர். துவக்க நிலை கண்புரை நோயினை அக்குபங்சரில் சிகிச்சை மேற்கொண்டு குணப்படுத்தலாம். தீட்டிய வெள்ளை அரிசி, மைதா, வெள்ளைரவை, வெள் ளைச் சீனி உணவுப்பட்டியலுக்கு வந்த பின்பே இந்த நோய் அதிகரித்திருக்கிறது.
புள்ளிகள் : ST1,GB2,ST43,SP10,GB14,GB21,SP9,ST37,EX2,UB2,LI4,LI11,LIV3
2) டான்சில் கோள அழற்சி ( Tonsititis) :
ஒழுங்கற்ற உணவுப்பழக்கம், பருவ மாறுதலை தாங்கும் திறன் இன்மை ஆகிய காரணங்களால் வாயின் உட்பகுதியில் அமைந் துள்ள டான் சில் கோளம் தனது பணி யான நோய் எதிர்ப்பு செயலை அதீத அள வில் மேற் கொள்ளும் போது வேக் காடு அடைந்து வீங்கி, சிவந்து வலி, விழுங்குவதில் சிரமம் ஆகிய குறிகளோடு, காய்ச்சல், தூக்க மின்மை ஆகிய தொந்தரவுகளும் காணப்படும். அதாவது நோய் எதிர்ப்புப் பணிகளை மேற் கொள்ளும் டான்சில் கோளம் பலவீனமடைந்துள்ள நிலையில், தேவை என்பது அதனை பலப்படுத்துவதே. ஆனால் நவீன மருத்துவம் அதனை அறுவை செய்து நீக்க பரிந்து ரைப்பதை என்ன சொல்வது? செரிமான மண்ட லத்தின் நுழைவாயிலில் அமைந்துள்ள இக்கோளம், மண்ணீரலின் அதீத பணியினால் ஏற்படு கிறது. எளிமையான கூழ்வடிவ உணவினை எடுத்துக் கொண்டு கீழ்க்கண்ட புள்ளிகளை தூண்டு வதன் வழி அறுவை சிகிச்சையினை தவிர்க்கலாம்.
புள்ளிகள் : ST43,SP6,SP9,SP10,LI11,LI18,DU14
3) தைராய்டு கோள வீக்கம் :
கழுத்துப் பகுதியில், தொண்டையின் உட்பகுதியில் தீர்மானிக்கும் தைராக்சின் சுரப்பை உருவாக்கக் கூடியது. இதன் ஏற்றத்தாழ்வுகளின் விளைவாக பெருத்த உடலாகவோ, மெலிந்த தேகமாகவோ மாற்றிவிடும். இக்கோளம் வீங்கி பெருத்து தொண்டையின் செயல்பாட்டிற்கு பெரிதும் இடையூறாக மாறும் போது அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்படுகிறது.
புள்ளிகள் : LI18,GB21,LI4,SP9,SP6,ST36,UB20.
4) குடலிறக்கம் ( Hernia) :
வயிற்றுத் தசைகள் பலவீனமடைந்து தளர்ந்து போகும்போது, உள்ளிருக்கும் உறுப்புக்கள் வெளித்தள்ளும் சூழல் ஏற்படுகிறது. இதற்கு மெல்லிய வலை போன்ற பொருளைவைத்து அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. இதன் தொடர் நிகழ்வாக அறுவை சிகிச்சை செய்யப்பட்ட இடத்தை தவிர்த்து மற்ற வயிற்றுப் பகுதிகள், தொப்பூள் ஆகிய பகுதிகளில் இக்குறை பாடு தோன்ற பெரிதும் வாய்ப்பு உள்ளது. அச்சமயத்தில் அறுவை செய்ய இயலாது. போய் விடுகிறது என்பதே எதார்த்த நிலை. எனவே வயிற்றுத் தசைகளை வலுவூட்டும்படியாக அக்கு பங்சர் சிகிச்சை மேற்கொள்வதே சிறந்த வழி.
புள்ளிகள் :Ren12,Ren17,ST21,ST25,UB18,UB21 LIV8,GB21,ST36,UB25
5) வயிற்றுப் புண் (Gastric Ulcer) :
வயிற்றின் செரிமானத் தன்மையை சீர்குலைக்கும்படியாக தொடர்ந்து தின்பண்டங் கள் உண்பது, பசியற்ற நிலையிலும் உணவுண்பது, நேரம் தவறி உண்பது ஆகிய பழக்கத்தால் உணவு இரைப்பகுதியில் நீண்டநேரம் தங்கி, உடலின் வெப்பத்தால் புளித்து அதன் விளைவாக இரைப்பை, குடல் பகுதிகளின் சுவர்களின் மேல் படிந்துள்ள சளிச்சவ்வுப் படலம் பாதிக்கப்பட்டு உறுப்புக்களின் சுவர்களில் புண்கள் ஏற்படுகின்றன. கடுமையான நிலைக்கு மாறும்போது நவீன மருத்துவத்தால் புண்னை ஆற்ற இயலாததால் அறுவைக்கு பரிந்துரைக்கப்படுகிறது.
எளிய திரவ வடிவ உணவுகளை எடுத்துக் கொண்டு அக்குப்பங்சர் சிகிச்சை மேற்கொண்டு குணமானவர்கள் பலர். குறிப்பாக பால் உணவுகள், காரமற்ற மாவுப் பண்டங்கள் வயிற்றுப் புண் நோய்க்கு உணவாக பரிந்துரைக்கப்படுகிறது. இவை பாதிக்கப்பட்ட பகுதிகளில் மென்மேலும் புண்களை அதிகப்படுத்தவே உணவும், மாவுப் பண்டங்களையும், புளித்த உணவுகளையும் தவிர்த்தலே இந்நோய் குணமாக உணவும்.
புள்ளிகள் :Ren12,ST21,ST25,UB20,UB21,SP6,ST36,ST43,GB43,ST34,P6
6) குடல்வால் அழற்சி ( Appendicitis) :
பெருங்குடலின் ஒரு பகுதியான குடல் வால் தம்முள் தேங்கும் அழுக்குகளால் வேக்காடு அடைந்து வீங்கி பெருத்துவிடுகிறது. இது கடுமையான வயிற்றுவலியை தோற்றுவித்துஇ நோயாளி யை மிகவும் சிரமத்துள்ளாக்கக் கூடியது. நவீன மருத்துவம் அறுவை சிகிச்சை செய்யாவிடில் உயிர் பிழைப்பது கடினம் என்கிறது.
பழங்கள்( குறிப்பாக பப்பாளி), பழச்சாறுஇ இளநீர்இ காய்கறி சூப் ஆகிய உணவுகளை மட்டும் எடுத்துக்கொண்டு அக்குபங்சர் சிகிச்சை செய்து குணமடையலாம். அதோடு, இளஞ்சூடான வெந்நீரில் உப்பு கலந்து இயற்கை இனிமா மூலம் தினமும் காலை மாலை என இருவேளை இனிமா எடுத்தல் அவசியம்.
புள்ளிகள் : Ex33,ST36,LI4,DU14.LI11,SP6,Ren12,ST25,ST29.
7) மூலம் (Piles) :
மலச்சிக்கல் தொடர்ந்து நீடிப்பதும், உணவில் எந்த ஒழுங்கும் இல்லாதோருக்குத்தான் மூல நோய் ஏற்ப்படுகிறது. மலம் தேங்குவதால் மலக்குடல் வேக்காடு அடைந்து குடற்சுவரின் மேற்புற அடுக்கு வீங்குவதால்ட ஏற்படும் நோயே மூல நோயாகும். இரத்தபோக்கு இருந்தோ இல்லாமலோ இந்நோய் நீடிக்கலாம். மலச் சிக்கலை சரிசெய்து வேக்காடு அடைந்த பெருங் குடல் பகுதிகள் இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு உதவியாக, மலம் தேங்காமலிருக்கும் வகையில் நார்ச்சத்து மிகுந்த உணவுகள், பழங்கள் என உணவு மாற்றம் செய்து அக்குபங்சர் சிகிச்சை மூலம் இந்நோயை குணப்படுத்தலாம்.
புள்ளிகள் : DU1,Ren1,UB32,UB54,SP6,DU6,UB57,GB34,ST42
8) மண்ணீரல் வீக்கம் (Spleenomogaly) :
புளிப்பான உணவுகள், பழையை உணவுகள், எந்நேரமும் நொறுக்குத்தீனி இவையே உணவுப் பழக்கமாக உள்ளோருக்கு மண்ணீரல் வீக்கம் ஏற்பட பெரிதும் வாய்ப்பு உள்ளது . இவ்வீக்கத்தை குணப்படுத்த நவீன மருத்துவத்திற்கு வழி தெரியாததால் அறுவை சிகிச்சை செய்து மண்ணீரலை அகற்ற பரிந்துரைக்கிறது.
நம் உடலின் செரிமான மண்டலத்தினை கட்டுப்படுத்தவும், இரத்தம் உருவாகவும், நோய் எதிர்ப்புப் பணிகளுக்கான செல்களை உருவாக்கவ்ம் மண்ணீரல் பெரிதும் அவசியமான உறுப்பு என்பதை இங்கு கறிப்பிடுவது நல்லது. புள்ளிகள் : LIV13,LIV14,GB24,GB26,ST21,UB20,SP6,SP9,SP4,ST36.
9) கருப்பை நீர்கட்டிகள் (Cyst) : சினைப்பை நீர்க்கட்டிகள்
மாதவிடாய் நீண்ட இடைவெளியில் வருதல், மாதவிடாயின் போது வலி, அதிக நாட்கள்நீடித்தல் ஆகிய குறிகளோடு காணப்படும் இக்கோளாறுகளுக்கு அறுவை சிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது.
புள்ளிகள் : Ren6,Ren4,UB32,SP6,ST36,DU14,UB23,GB26.
10) தொப்பை (Tammy) :
வயிற்றுத் தசைப்பகுதியில் கொழுப்பு சேர்ந்து வயிறு பானை போல் பெருத்து நபரின் தோற்றத்தை மாற்றிவிடுகிறது. மாவுப்பண்டங்கள் , மதுபானங்கள், நாட்பட்ட உணவுகள், நேரந்தவறி உண்ணுதல், இரவு உணவு காலந்தாழ்த்துதல், உழைப்பின்மை ஆகிய காரணங்களால் தொப்பை பெருத்துவிடுகிறது. இன்று கொழுப்பைக் கரைத்து வெளியேற்றும் சிகிச்சை, வயிற்றுத் தசை அடுக்குகளை நீக்குதல் போன்ற அறுவை சிகிச்சை செய்து வயிறு குறைக்கப்படுகிறது. ஆனால் அக்குபங்சர் சிகிச்சையில் கத்தி தேவையில்லை என்பதை நீருபித்திருக்கிறது.
புள்ளிகள் : LIV13,Ren12,GB34,UB20,SP6,SP9,ST36,GB21.
11) கருப்பை நழுவுதல் (Prolapsed Uterus) :
கருப்பையின் தசைப்பகுதி வலுவிழந்து, அதன் இருப்பிடததை விட்டு நழுவி வெளியேறும் நிலை. இளவயது திருணமம், அடிக்கடி கருக் கலைதல், வயிற்றுப்புண்ணை குணப்படுத்தாது விடுவதால் அதன் தொடர்ச்சியாக, கருப்பைபுண் ஏற்பட்டு வலுவிழ்ந்துவிடுதல் சிசேரியன் பிள்ளைப்பேறுக்குப்பின் கருப்பை பலமிழத்தல் ஆகிய நிலைகளில் கருப்பை நழுவுதல் அல்லது வெளித்துருத்துதல் ஏற்படுகிறது.
புள்ளிகள் : Ren1,Ren6,UB31,UB32,UB33,UB34,SP6,ST36,GB34,GB21,UB18,UB23.
12) மூட்டு மாற்று அறுவை (Knee Replacement Surgery) :
மூட்டு எலும்பு சந்திப்புக்களில் ஏற்படும் வலி, அசைப்பதில் சிரமம், இறுக்கம் என தொந்தரவுகள் துவங்கி, எலும்புத் தேய்மானம் வரை சென்று விடுகிறது. துவக்கநிலை தொந்தரவு களுக்கு நவீன மருத்துவம் வலி நிவாரணிகளை பரிந்துரை செய்து தப்பித்துக்கொள்கிறது. நோயாளிகளும் வலி மறைந்தவுடன் நோய் குண மடைந்ததாக கருதி விடுகின்றனர். ஆனால் உடல் நிலையில் ஏற்படும் தொடர் பலவீனங்கள் மூட்டு எலும்புகள் சேதமடையும் வரை செல்வதை வலி நிவாரணிகள் தடுக்கப் போவதில்லை என்பதை உணரும் வாய்ப்பில்லை.
உடலில் தேங்கும் அமிலத்தன்மை, மூட்டு சந்திப்புகளில் உயவு எண்ணெய்க்கு சமமான திரவத்தை வற்ற வைத்துவிடுகிறது. அதன் விளை வாக மூட்டுச் சவ்வுகள் பலவீன மடை கின்றன. மேலும் மூட்டுக்களின் சந்திப்புகளில் உள்ள குறுத் தெலும்புப் பகுதிகள் எளிதல் சேதமடைகின்றன. அதன் விளைவாக எலும்புத் தேள்மானம் அடைந்து அறுவைசிகிச்சைக்கு வாய்ப்பளிக்கிறது.
ஆனால் அக்குபங்சர் சிகிச்சையின் மூலம் எலும்பு சந்திப்புகளில் இயல்பாக இரலுக்க வேண்டிய திரவத்தை சுரக்கச் செய்து. சேதமுற்ற எலும்புகளை வளரச் செய்து குணமடையசந் செய்யலாம்.
புள்ளிகள் : ST43,LI4,UB18,UB23,SP10,ST34,UB40,LIV8,GB 21.
அறுவை சிகிச்சையினை தவிர்க்க விரும்புவோர், குறிப்பிட்ட நடைமுறைகளை கடைபிடித்தல் மிகவும் அவசியமானது.
எளிதில் செரிக்கக்கூடிய உணவுகளையே உண்ணுதல் வேண்டும்.
பழங்கள் காய்கறிகள் உணவில் அதிகம் இருத்தல் வேண்டும்.
தேவையற்ற பானங்களான பால் கலந்த தேநீர், காபி குளிர்பானங்கள் ஆகியவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
உணவு தானியங்களில் அரிசி உணவினை மிகவும் குறைத்து கோதுமை, கேழ்வரகு, கம்பு, வரகு, சாமை போன்ற நார்ச்சத்து மிகுந்த தானியங்களை உணவில் அடிக்கடி சேர்த்து கொள்ளுதல் விரைவில் குணமடைய உதவும்.
இஞ்சி, மிளகு ஆகிய காரத்தன்மை (Alkaline) மிகுந்த பொருட்களை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இரவு உணவினை 7 மணி அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
பசிக்காத போது உணவினை தவிர்த்து விட்டு, இளநீர், கரும்புச்சாறு, பதநீர், போன் இயற்கை பானங்களை குடிக்கவோ, பழங்கள் உண்ணவோ செய்தல் நல்லது.
அறுவை சிகிச்சை ஒரு குறிப்பிட்ட கால எல்லையில் நடந்தேறிவிடும். ஆனால் அதன் பக்க விளைவுகள் ஆண்டுக்கணக்கில் துயரத்தை தரும். நமது அக்குபங்சர் மருத்துவம் செய்து குணமடைய கால எல்லையை எளிதில் வகுக்க இயலாது. ஆனால் பக்க விளைவு என்ற பயமின்றி குணமடைதல் உறுதி.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள நோய்நிலை களுக்கு குறிப்பிட்டுள்ள அக்குபங்சர் புள்ளிகளை, அக்குபங்சர் மருத்துவர் அல்லாதார் பயன்படுத்து வதை தவிர்த்தல் வேண்டும் .
அக்குபங்சர் மருத்துவத்தை வேறு மாற்று மருத்துவத்துடன் இணைத்து பார்ப்பது விரைவில் குணமடைய உதவலாம்.

Kneepain!!!

    மூட்டுவலியிருந்து விடுதலை வேண்டுமா?


இலவங்கப்பட்டையும், தேனும் நமது நல்வாழ்வுக்கு எவ்வளவு
உறுதுணையாக இருக்கிறது என்பதை இதன் மூலம் அறியலாம்.
முடக்கு வாதத்திலிருந்து விடுபட...
* இலவங்கப்பட்டைப் பொடி- ஒரு தேக்கரண்டி
* தேன் - இரண்டு தேக்கரண்டி
இவற்றை ஒரு டம்ளர் வெந்நீரில் கலந்து,
தினமும் காலை, இரவு குடித்து வர,
ஆர்த்ரிரைட்டீஸ் என்கிற முடக்கு வாதத்தால் பாதிக்கப் பட்டு,
நடக்க முடியாமல் சிரமப்படுகிறவர்கள் குணம் பெறுவார்கள்.

Toothache & Tooth Decay!!!

   பல்வலி, பல்சொத்தை, பல்புழு நீங்க !
சித்தமருத்துவர். திரு. சொக்கலிங்கம் அவர்கள் பல்வலி, பல்சொத்தை, பல்புழு போன்றவைகளிலிருந்து விடுபட ஒரு அருமையான மருத்துவத்தை கூறியுள்ளார்.
ஒரு கைப்பிடியளவு தும்பை இலைகளுடன்,(Leucas aspera)
நான்கு சின்ன வெங்காயங்களைச் சேர்த்து,
வாயில் போட்டு நன்றாக மென்று துப்ப
பல் சொத்தை, பல் புழு சரியாகும்.

Tuesday 5 January 2016

பஞ்சர் - பாருங்க வீடியோவை!!!

#பைக் ஓட்டுபவர்களுக்கு ஓர் #ஐடியா.பைக்கில் செல்லும் போது #பஞ்சர் ஆகிட்டுன பாருங்க வீடியோவை பகிருங்கள்..

Posted by எங்களுக்கும் தெரியும். on 3 January 2016