Wednesday 15 March 2017

Video to Audio!!!

வீடியோவை AUDIOவாக மாற்றம் செய்வதற்கு…!!!
வீடியோ பாடல்களிலிருந்து சில சமயங்களில் நமக்கு பாடல்கள் மட்டும் தேவைப்படும். அந்த சமயங்களில் நமது வீடியோவிலிருந்து பாடல்களை பிரித்தடுக்க ஒரு சின்ன மென்பொருள் பயன்படுகின்றது.
இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்து உங்கள் கணணியில் நிறுவிக் கொள்ளவும்.
இதில் நீங்கள் எந்த வீடியோவின் பாடலைப் பிரிக்க விரும்புகின்றீர்களோ அந்த வீடியோவினை தெரிவு செய்யவும் அல்லது வீடியோவின் linkஐ கொடுக்கவும்.
அதன் பின் தேவையான audio format தெரிவு செய்யவும். சில நிமிடங்களில் நீங்கள் தெரிவு செய்த வீடியோவிற்கான audio format தயாராகி விடும்.
மென்பொருள் பதிவிறக்கம்செய்ய


Tuesday 14 March 2017

Appendicitis!!!

குடல்வால்*
*சிறுகுடலானது உடம்பின் இரைப்பையிலிருந்து தொடர்கின்றது. இக்குடலுக்குள் நுழையும் உணவானது மெல்ல மெல்ல தள்ளப்படுகின்றது. அதாவது கடல் அலையைப் போல் காற்றின் குவிதல் விரிதலால் உணவு தள்ளப்பட்டுச் சென்று சீரணமாகிச் சத்து உறிஞ்சப்பட்ட பின்னர சக்கை அல்லது மலம் பெருங்குடலின் மூலமாய் வெளியே கொண்டு போய்ச் சேர்க்கப் படுகின்றது.*
*அன்றாடம் உட்கொள்ளும் உணவில் நாம் அறியாமல் சேரும் சிறு கற்களும், குடலுக்குள் நுழைந்து பின் மலத்துடன் வெளிப்பட்டுவிடும்.*
*சிலசமயம் குடலுக்குள் சேரும் கற்களானவை குடலின் ஓரத்தில் பதிந்து விடுவதும் உண்டு. அப்படிப் படியுமானால் அந்த இடம் புண்ணாகும். பின் உணவைத் தள்ளும் காற்றின் மூலம் அக்கற்கள் குடலின் உட்புறம் படிந்துபோய் நின்றுவிடும். பின்னர் அது சிறிய வால் போல் வளர ஆரம்பிக்கும் இதைத்தான் குடல்வால் என்கிறோம். இதன்மேல் மேல் நாம் உண்ணும் உணவு தாக்கும் போதெல்லாம் ஈட்டியால் குத்தியது போன்ற வலி ஏற்படும்.*
*சிலருக்கு குடல் ஓரங்களில் உப்பு உறைந்து கல்லைப் போல் காரை கட்டிவிடும் இதனாலும் குடல்வால் ஏற்படும்.*
*சுத்தமான விளக்கெண்ணெய் 30 மில்லியும் வாழைக்கிழங்கு சாறு அல்லது வாழைத்தண்டு சாறு 30 மில்லியும் கலந்து காலை நேரத்தில் உணவிற்கு முன் கொடுக்க வேண்டும். இப்படி 3 நாட்கள் தரவேண்டும். பலன் குடல் வாலிலுள்ள கற்கள் வெளியேறிவிடும். முதல் நாளே வலி இருக்காது. 3 நாட்களில் பூரண குணம் தெரியும்.* *

https://goo.gl/photos/inf8rM65kh9j3wcSA

Sunday 5 March 2017

தீராத விக்க்ல்

தீராத விக்கல்!!!
* * * * * * * * * * *
 தீராத விக்கல் கூட கல்லீரல் சம்பந்தப்பட்ட வியாதிங்கறது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?
 உடனே இது பெரிய வியாதியான்னு பயந்துட வேணாம்.
விக்கல் நிறுத்த எளியவழி....
ஆப்ப சோடாவை (sodium bicarbonate)
ஒரு சிட்டிகை எடுத்து தேனோடு கலந்து கொடுக்க... விக்கல் உடனே நிற்கும்...😀

@@@@@@@@@@@@@@@@


நெல்லிக்காய், சுக்கு
* * * * * * * * * * * * * * *
300 கிராம் நெல்லிக்ககாய், 100கிராம் சுக்கு இரண்டையும் பொடி செய்து கலந்துகொண்டு அதனை ஒரு தேக்கரண்டி வீதம் நீரில் கலந்து காலையும் மாலையும் தொடர்ந்து அருந்தி வர கல்லீரலை நன்கு செயல்பட வைத்து ஜீரண சக்தியை அதிகரித்து நம் உடலில் தேங்கியுள்ள உள்ள கழிவுகளை முற்றிலும் வெளியேற்றும்.
மேலும் மூளைச் செல்களுக்கு நல்ல சக்தி அளித்து மனத்தெளிவு, புத்திக்கூர்மை மற்றும் ஞாபசக்தி உண்டாக்கும்.
உடலின் நோய் எதிர்ப்பு சக்தி பெருகும். உடல் எடையை கூடாமல் தசைகளுக்கு பலம் அளிக்கும் தன்மை நெல்லிக்காய்க்கு உண்டு. நீரிழிவை கட்டுப்படுத்தும் சக்தியுள்ளது.
நுரையீரலை பலப்படுத்தி சுவாச நோய்களான சளி, சைனஸ், மூக்கடைப்பு, இருமல் போன்ற வியாதிகளை கட்டுப்படுத்த உதவுகிறது. மற்றும் பித்தப்பையில் கல், போன்ற கோளாறுகளை சரி செய்து ஆரோக்கியமான வாழ்விற்கு வழி வகுக்கும்.
பக்கவிளைவுகள் ஏதுமில்லாத இந்த எளிய உணவை மருந்தாக்கி உடல் உறுப்புகளை பலப்படுத்துவோம். அனைவரும் ஆரோக்கியமாக வாழ்வோம். ஆரோக்கிய பாரதத்தை உருவாக்குவோம்.

Thursday 2 March 2017

Granny Medicine!!!

எலுமிச்சை பழ சாறை ஓரிரு துளி காதில் விட காது வலி நீங்கும்

*தும்மட்டி காய் சாற்றில் கருன்சீரகத்தை அரைத்து விலாவில் பூசினால் குடல் பூச்சிகள் வெளியேறி விடும்

*கொத்தமல்லியை சிறிது காடியில் அரைத்து கொடுக்க சாராய போதை நீங்கும்.

*வாய்புண் பல்வலி குணமாக கொள்ளுகாய் வேரை கொதிக்க வைத்து வாய் கொப்பளிக்க சரியாகும்.

*நுரையீரல் பலபட தேனில் ஊற வைத்த நெல்லிகாயை தினசரி ஒன்று சாப்பிட வேண்டும் 

*வாதநாராயண இலையை காய வைத்து தூளாக்கி 5 கிராம் சுடுநீரில் வெறும் வயற்றில் சாப்பிட்டு வர வாயு தொல்லை நீங்கும் 

*முற்றிய வெண்டைகாயை சூப் செய்து குடித்தால் இருமல் நீங்கும்மஞ்சள் தூள் 1 ஸ்பூன் தேன் 1 ஸ்பூன் கலந்து தினமும் 3 வேளை சாப்பிட்டு வர இரத்த சம்பந்த தொல்லை நீங்கும் 

*பெருங்காயத்தை வெந்நீரில் கரைத்து தெளிந்த நீரை கொடுத்து வர குழந்தைக்கு இருமல் குறையும் 

*புளியங்கொட்டை தோல் மாதுளம் பழ தோல் சம அளவு இடித்து தூள் செய்து பசும்பாலில் சாப்பிட சீதபேதி குணமாகும் 

*மாதுளம்பழம் படுக்கும் முன் சாப்பிட குடல் புழுக்கள் அழியும் 

*குடல் புண் குணமாக அகத்தி கீரை நல்ல உணவு 

*பிரண்டையை நெய் விட்டு வதக்கி துவையல் செய்து சாப்பிட்டு வர நல்ல பசி எடுக்கும், மூல நோய் வராது 

*தொடர் வயிற்று போக்கு உள்ளவர்கள் பப்பாளி பழம் சாப்பிட குணமாகும்

*குடல் வாதம் குணமாக பரச பட்டையை நீரில் காய்ச்சி சிறுவர்களுக்கு கொடுக்க தீரும் 

* மணத்தக்காளி கீரை அடிக்கடி சாப்பிட்டு வர வாய்புண் மற்றும் வயிற்று புண் குணமாகும்

*அதிமதுரம் கடுக்காய் திப்பிலி மிளகு இவை எல்லாம் சேர்த்து பொடி செய்து தேன் கலந்து சுடுநீரில் சாப்பிட கண் எரிச்சல் குணமாகும்

*கொத்துமல்லி இலையை சுத்தம் செய்து அரைத்து சிறு உருண்டை சாப்பிட்டால் சூட்டினால் கண்ணில் கோளை தள்ளுவது நிற்கும்

*பாதாம் பருப்பு வறுத்து அடிக்கடி உண்டு வர கண் பார்வை தெளிவாகும்

*பப்பாளி பாலை வெங்காய சாறுடன் கலந்து தடவி வர வேர்குரு சரியாகும்

*பித்தப்பை குணமாக வெப்பம் பூவுடன் மிளகு சீரகம் சேர்த்து சாப்பிட வேண்டும்

*வேப்பிலையை வறுத்து சூட்டோடு தலைக்கு வைத்து தூங்கினால் காய்ச்சல் நீங்கும்

*வெட்டு காயம் குணமாக இலந்தை இலையை அரைத்து போடலாம் 

*உடல் சதை போடுவதை தடுக்க - வாழைத்தண்டு சாறு அ பூசணி சாறு அ அருகம் புல் சாறு இவை மூன்றில் ஏதாவது ஒன்றை தொடர்ந்து சாப்பிட்டு வரவும் 

*மோகம் அதிகரிக்க முருங்கைபூவை பாலில் காய்ச்சி சாப்பிட வேண்டும்

*மேகரோகம் குணமாக ஆலம்பட்டையை பட்டுபோல பொடி செய்து வெந்நீரில் கருப்பட்டியுடன் சேர்த்து கொதிக்கவைத்து சாப்பிட்டு வரவேண்டும்

*சுகப்ரசவம் பெற, ஆப்பிள்,தேன்,ரோஜா இதழ், குங்குமபூ, ஏலக்காய் ஆகியவை தொடர்ந்து ஒரு மாதம் சாப்பிட வேண்டும் 

*சிவப்பான குழந்தை பெற குங்குமப்பூவை வெற்றிலை பாக்குடன் சாப்பிடலாம்

*ஆடுதீண்டா பாளை வேர் எடுத்து கஷாயம் செய்து குடிக்க பாம்புக்கடி விஷம் முறியும்