Tuesday 23 January 2018

எந்த நேரம் உகந்தது! படியுங்கள்!!!

இன்று உலகம் முழுவதும் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளை பார்க்கிறோம்.

என்ன காரணம்..

எந்த நேரத்தில் உடலுறவு கொள்ளவேண்டும்..
எந்த நேரங்களில் உடலுறவு கொள்ளகூடாது என்பது தெரியாததால்  தான்...

அதைப்பற்றி அண்ணாமலையார் சாதகம் என்ற நூலில் சொல்லிருப்பதைப்  பாருங்கள்..

"இங்குள சரீரம் உண்டாகின்ற வயணம்

       ஏகாதசி இலங்கு பருவம்

எழில் அமாவாசை மாதப்பிறப்பு ஆகாது

          இருக்கு நாள்களை நீக்கியே

மங்கையர்கள் பூத்து நீராடிய தினந்தொட்டு

வரும் ஆறிரண்டு நாளில்

வாலாயமாய்க் கருக்குழிவாய் திறந்திடும்

மனவாலனோடு கலந்தால்

பொங்கு சுக்கிலமும் சுரோணிதத்தோடு சேர்ந்து

பூரிக்கும் உன் சிப்பியில்

பூத்த முத்தைப்போலவும் அருகு நுனி மேல்பனி

போலும் திரண்டு உருவமாம் .

இதன் அர்த்தம்

அமாவாசை,பௌர்ணமி உடலுறவு ஆகாது ..

ஏகாதசி நல்ல பருவம் ...

பூத்தது முதல் 12 நாள் கழித்து கருக்குழிவாய் திறக்கும் சமயமே உடலுறவுக்கு எற்ற நாள் ..என்று சதகம் கூறுகிறது

Wednesday 3 January 2018

Cholesterol

Menses Problem!!!

#மாதவிலக்கை #தள்ளிப்_போட #ஆரோக்கியமான #இயற்கை #வழிமுறை……

சில பெண்களுக்கு நேரம் காலம் தப்பி மாதவிலக்கு வரும்.

மறுநாள் வீட்டுல விசேஷம் இருக்கும்.

இந்த நேரத்தில் டென்ஷன் ஆகாமல் மாதவிலக்கை தள்ளி போட நான் சொல்லும் இயற்கை வழியை பின்பற்றலாம். இதற்காக கண்ட கண்ட  மருந்துகளை பயன்படுத்தாமல் இதை பயன்படுத்தி பாருங்கள்.

இந்தப் பிரச்சனையை சரி பண்ணக்கூடிய அருமருந்து.

‘#சப்ஜா_விதை’! இந்த சப்ஜா விதை நாட்டு மருந்துக் கடைகள்ல கிடைக்கும். இதை வாங்கிட்டு வந்து, ராத்திரி கால் டம்ளர் #தயிரில் ஒரு டீஸ்பூன் சப்ஜா விதையை ஊறப் போட்டு, மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டா உடனடியா பலன் கிடைக்கும்.
ரத்தப்போக்கு நிக்கும். வந்தது நிக்கறதுக்கு மருந்தை பார்த்தோம்.

இப்போது வரப் போறதைத் தள்ளி வைக்கறதுக்கும் மருந்து இருக்கு.

இதற்கும் இதே
#சப்ஜாவிதை தான்.

இந்த சப்ஜா விதை - தயிர் கலவையை சாப்பிட்டு, ரெண்டு மலை வாழைப்பழத்தை சாப்பிட்டு, ஒரு டம்ளர் தண்ணியைக் குடிக்க வேண்டும்.

கேரண்ட்டியா அன்னிக்கு மாதவிலக்கு ஆகாது!

தூரத்தைத் தள்ளிப் போட, இன்னொரு சூப்பரான - ஆரோக்கியமான வழி இருக்கு!

காலையில வெறும் வயித்துல கைப்பிடி #பொட்டுக்கடலையை (பொரி கடலை) மென்னு தின்னு, ஒரு டம்ளர் பச்சைத் தண்ணி குடிங்க. அதுக்கப்புறம் ஒரு மணி நேரம் கழிச்சுத்தான் காப்பியோ, டீயோ எதுவானாலும் குடிக்கணும்.

அப்படிச் செஞ்சா கட்டாயம் அன்னிக்கு மாதவிலக்கு வராது.

இப்படியே அஞ்சாறு நாள் கூட மாதவிலக்கைத் தள்ளிப் போடலாம்.

உடம்பை பாதிக்காத எளிய வழி! கூடவே, உடம்புல புரோட்டீன் சத்தும் சேரும்!

சில சமயம் ‘#சீக்கிரமே மாதவிலக்கு வந்துட்டா தேவலை’னு நினைச்சா, அதுக்கும் ஒரு கை வைத்தியம் இருக்கு!

கொஞ்சம் #எள்ளையும் #வெல்லத்தையும் சேர்த்துத் தின்னுங்க. பலன் நிச்சயம்!

எள், வெல்லம் ரெண்டுமே சூட்டைக் கிளப்பிவிட்டு, மாதவிலக்கையும் வர வச்சிடும்.

அதே மாதிரி, , #இஞ்சிச் சாறுல நிறைய வெல்லம் கலந்து வெறும் வயித்துல குடிச்சாலும் உடனடியாக பலன் கிடைக்கும்.